Friday, December 26, 2014

டிவிட்டரும் நானும்

சரி, எல்லாரும் சமூக வலைத்தளம் facebook, twitter -ன்னு பேசிக்குறாங்க,
அப்படின்னா என்ன?
அதுல அப்டி என்னதா இருக்கு?

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த மக்களை, ஒன்று சேர்க்கும் இடம்-ன்னு சொல்லலாம்.
நீங்க மொதல்ல
https://www.facebook.com/
http://www.twitter.com/
... etc போன்ற ஏதாவது ஒரு சமூக வலைத்தளத்துல
உங்களுக்குன்னு ஒரு கணக்க [Account] உருவாக்கணும், பிறகு, நீங்க விருப்பப் பட்டால், உங்களைப் பத்தின விபரமெல்லாம், வெளி உலகத்துக்கு சொல்லலாம்.

அண்ணன் நல்லவர்,
வல்லவர்,
படித்தவர்,
கலியாணம் ஆனவர்,
புள்ள குட்டிகாரர்,
குடும்பஸ்தர்,
ஞாயமானவர்,
புளியம்பட்டில இருக்காரு,
புண்ணாக்கு யாவாரம் பின்னுவார்,

அப்படி இப்படி-ன்னு நீங்க உங்க அருமை பெருமைகள எல்லாம் உங்க கணக்கு மூலமா,  உலகத்துக்கு சொல்லலாம்...

என் பையன் என் மேல ஒன்னுக்கு விட்டான்-ன்னு உங்க மொபைல் கேமரால இருந்து, நனைஞ்ச சட்டையோட போட்டோ புடிச்சி போடலாம், அத ஊரே சேந்து பாத்து சிரிச்சி, 200 லைக் போட்டு காறித்துப்பும்.

இதனால என்ன கிடைக்குது?
ஒன்னும் இல்ல.

"தகவல் பகிர்தல்"
உங்க வாழ்க்கைல நடக்குற விஷயங்கள் எல்லாத்தையும், நண்பர்கள், சொந்தங்கள் மற்றும் முன்னால் காதலிகள் உட்பட அனைவருக்கும் ஒரே ஒரு பதிவு மூலமா தெரிவிக்கலாம்.

நான் மறுபடியும் சொல்றேன், நீங்க விருப்பப்பட்டால் மட்டுமே தெரிவிக்கலாம்..

நானும் இந்த மூஞ்சி புத்தகத்துல [facebook] ரொம்ப நாளா இருக்கேன்., இது என்ன அவ்வளவா பாதிச்சது இல்ல.,
அப்பப்போ ஏதோ போட்டோ போடுவேன், ஏதாவது காமெடி கீமெடி வந்தா அத பகிர்ந்துக்குவேன்..

இப்படி நல்லா போயிட்டு இருந்த என்னோட வாழ்கைல ஒரு நாள் அவ வந்தா,

ஏய் கட்டம் போட்ட சட்ட, பாலாப் போன டிவிட்டரே உன்னாத்தாண்டி சொல்றேன்., எங்கே ஓடுற?

நண்பன் மொபைல்-ல இருந்து சில ட்விட்டர் பதிவுகள (கீச்சு) காமிச்சான்...
ஊரே சேந்து ஒருத்தன ரவுண்டு கட்டி அடிச்சிட்டு இருந்தாங்க, (வேற யாரு நம்ம விஜய்னாவைத்தான்.)
ரொம்ப ரசனையா, நகைச்சுவையா  இருந்தது, சிரிக்கவும் வச்சது.,

ஆனா, ட்விட்டர் வந்தப்புறம் தான் தெரிஞ்சது, இவுனுங்க வச்சி செய்யறானுங்கன்னு.

சமீப மாதங்களில்தான் நான் டிவிட்டரில் பிரவேசிக்க ஆரம்பித்தேன்.,

பெரும்பான்மை மனிதர்களின் "மனசாட்சி" அவர்களின் ஏதோ ஒரு முகமூடியுடன் உலவும் இடம் இந்த ட்விட்டர்.

ஒரு சின்ன உதாரணம் விலைமகள் எனும் ஐடி, அதன் பதிவுகள் என் மனநிலையை பாதித்தது.

நீங்க யாருன்னு காட்டிக்காமையே, என்ன வேணாலும் எழுதலாம் என்பதே ட்விட்டரின் சுதந்திரம். 

முகநூலில் உங்களுடைய  குறைந்த பட்ச அடையாளமாவது தெரியும், [முகநூலிலும் போலிக்  கணக்குகள் உண்டு ஆனால் அவை ட்விட்டர்  அளவில் பிரபலம் ஆவதில்லை] உங்களுக்கு தெரிந்தவர்களே பெரும்பாலும் நட்பு வட்டத்தில் இருப்பார்கள்.

ஆதலால், கூட்டத்துல நாம கட்டுசோற பிரிப்பதில்லை. நானும் ரொம்ப டீசண்டு என்ற போர்வையில், சொல்ல நினைச்சத சொல்லாம போய்டுவோம்.

ஆனால், ட்விட்டரில் மிகமிகக் குறைவான நபர்களே, தங்களின் சொந்த முகத்தில், சொந்தப் பெயர்களில் கீச்சுகிறார்கள். [@Singamulla என்பது என்னுடைய அன்அபிசியல் ஐடி. என்னுடைய பெருன்பான்மை மைண்ட் வாய்ஸ் counter கொடுக்க சந்தானம் முகம் தேவைப் பட்டது.]

ட்விட்டர் உங்ககிட்டே ஆதார் அட்டை கேக்காது, நீங்க என்ன கொடுத்தாலும் வாங்கிக்கும்.,

ராமசாமி மவன் முனியன் பேருல ஒரு ஐநூறு ரூவா எழுதிக்க-ன்னு சொன்னா கூட ட்விட்டர் அத வாங்கிக்கும்.

போலிக் கணக்குகளே ட்விட்டரில் பிரபலங்கள்.

உங்களுடைய சொந்த அடையாளம் வெளியே தெரியாது-ன்னு உங்களுக்கு ஒரு தைரியம் வந்துடும்., மனசுக்கு பட்டத அப்படியே பதிவுகளா, விமர்சனங்களா, கவிதைகளா, கிசுகிசுக்களா, கெட்ட வார்த்தைகளா, கொச்சை வரிகளா.,
உங்கள் மனசாட்சி பிரதிபலிக்கத் தொடங்கும்.

உடனுக்குடன் செய்தி,
பொறணி பேசுறது,
கலை, கவிதை, விமர்சனம், கலாய்ப்பு -ன்னு பொண்ணுங்கள எத்தன வகையா பிரிக்க முடியுமோ அதைவிட அதிகமான வகையறாக்கள் ட்விட்டரில் உண்டு.

எனக்குத் தெரிந்த வரை, நடிகர் விஜயின் முக்கிய எதிரிகள் இங்கேதான் இருக்காங்க.

பெரும்பான்மை பெண் ஐடிக்கள் போலி.
மொச புடிக்கற நாய மூஞ்சப் பாத்தா தெரியாது?

கவுண்டமணி, வடிவேலு போன்ற காமெடி நடிகர்களின் முகமூடிகளையும் மாட்டிகிட்டு கண்டபடி எழுதிக் கிழி கிழின்னு கிழிக்குறாங்க.

டிவிட்டர்ல ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னான்னா, 140 எழுத்துக்களுக்கு மிகாமல் உங்களுக்கு என்ன தோணுதோ நீங்க ஒரு பதிவுல எழுதலாம். அதனால அலுப்பு தட்டாது.

நானே ஒரு சில ஹைக்கூ கவிதைகள டிவிட்டர்ல கீச்சி இருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.

சரி என்ன பிரச்சன, ஏன் இப்ப அழற?

நான்தான் சொன்னேன் இல்ல, மனசாட்சி எப்பவும் உண்மையே பேசும். ஒருத்தன் சொல்றது உங்களுக்கு புடிக்காது, உடனே நீங்க அவன காறித் துப்புவீங்க,

அவன் உடனே கூட்டமா சேந்து உங்கள காறித் துப்புவான்... இப்படி தினசரி சண்டைகள் ஏராளம்.

நாள்பட, அடிமையாகி விடுவீர்கள். டிவிட்டரே கதி என்று எந்நேரம் பார்த்தாலும் மொபைலையே நோண்டிக்கொண்டே இருப்பீர்கள்.

ட்விட்டரில் எதிரிகள் அதிகம்.

ஏன் என்னை பின்தொடர்வதை நிறுத்துனீர்கள்-ன்னு அழுவார்கள்.

உனக்குப் பிடிச்சா follow செய், இல்லான்னா போ-ன்னு நீங்க சொல்றது கேக்குது.

ஆனா, இங்கே நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு சுலபமா தெரியாது.,
ஒரே பதிவுல ஒருத்தன வெறுத்திட முடியாது, அவன் மனசாட்சி என்ன எழுத சொல்லுதோ, அத அவன் அப்படியே எழுதுறான்.

நிறைய பாலோவர்ஸ் வேண்டும் என நானும் ஆசைப்பட்ட சில நாட்கள்  உண்டு.

இப்படி நானும் இந்த டிவிட்டருக்கு அடிமையாகிட்டேனோ-ன்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு.

சரி சோதிப்போம்-ன்னு ஒரு வாரம் ட்விட்டர் பக்கமே போகாம இருந்தேன்.

மனசு முன்னைவிட ஓரளவு அமைதியாவே இருப்பத உணர முடிஞ்சது.

சோ, இந்த வலைப்பூவின் மூலமா நான் சொல்ல வர்றது என்ன-ன்னா..

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
#சஸ்பெண்ஸ்சோடவே சாவு..






Wednesday, November 12, 2014

கட்டாடை சிற்றாடைபெண்ணியம்

ஒரு நாள் ஆபிஸ்க்கு கொஞ்சம் டைட்டான பேன்ட் அணிந்து வந்தேன்.

துணி சுருங்கிடுச்சு-ன்னு நினைச்சேன்., ஆனா நிலைக் கண்ணாடில தொப்பைய பார்க்கும் போது கொஞ்சம் சங்கடமாதான் இருக்கு.,
நாளை முதல் யோகா-ன்னு மனசுல நினைச்சிட்டு நகர்ந்தேன்.

மழைக் குட்டைய கொஞ்சம் வேகமா தாண்டுனதுல டர்ர்ர்

டைட் பேன்ட் கிழிஞ்சி போச்சு., தொடை தெரிய ரம்பா மாதிரி எனக்கு ஒரு உணர்ச்சி.

ஒரே  கூச்சமா இருந்தது, உடனே நண்பனுடன் போய் வேற புது பேன்ட் வாங்கி மாத்திட்டு வந்தேன்.,

கொஞ்சூண்டு தொடை தெரிஞ்சதால வெட்கி வேதனையடஞ்சு வெம்பிப் போனேனே.,

இந்த நவ யுவதிகள் எப்படித்தான் கவர்ச்சிகரமான கட்டாடை/ சிற்றாடை உடுத்திட்டு வராங்களோ தெரில.

எம்ம்மா உங்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா?

இதை ஆதரித்துப் பெண்ணியம் பேசுவர்களின் பொதுவான பதில்:
"காமம் எங்கள் உடையில் இல்லை, உங்கள் கண்களில் உள்ளது"

உங்கள் கவர்ச்சியைப் பார்த்து காமம் எழா விட்டால், ஆண்கள் சித்த மருத்துவரைத்தான் போய் பாக்கணும்.

Monday, November 10, 2014

விளம்பரம்

எங்களால, எந்த ஒரு கருமாந்திரத்தையும் உங்க தலைல கட்ட முடியும்-ன்னு நிரூபிக்கறது தான்  இந்த விளம்பரங்களோட உச்ச கட்ட சாதன.


100 பேர் கிட்டேகேட்டா, 10 பேரு வாங்குவான் - இதுதான் மார்க்கெட்டிங் (கு)யுத்திகளின் தாரக மந்திரம்.

நம்மில் பலருக்கு கண்ட நம்பர்களில் இருந்து, நேரம் கெட்ட நேரத்துல கால் வரும்,
என்ன-ன்னு கேட்டா,

நாங்க இந்த ஹேர் கிளப்-ல இருந்து கூப்புடுறோம், உங்களுக்கு சூப்பரான ஸ்கீம் இருக்கு வேணுமா?

கிரிடிட் கார்டு வேணுமா?

பெர்சனல் லோன் வேணுமா?

வீடு/ ப்ளாட் வேணுமா?

கரப்பான் பூச்சி விரட்ட கூட எங்க கிட்டே ஒரு ஆபரேசன் இருக்கு வேணுமா?


சலிச்சு போய், DND அக்டிவேட் செய்தால், அதை ஆரம்பிக்க கால அவகாசம் 49 நாள்.

நாங்க அப்படி என்னடா பாவம் செஞ்சோம்?

வேலை வாய்ப்பு தேடி, ஒரு இணையத் தளத்துல எங்க மொபைல் நம்பர பதிஞ்சது குத்தமா?

அடுத்த நாளே சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனில இருந்தும் டெலி மார்கெட்டிங் செய்றாங்களே?

எந்த ஒரு மொக்கை படத்தையும் வெற்றிப் படமாக்குற சக்தி சன் டிவி-க்கு இருக்கு.

எந்த ஒரு வெளங்காத பொருளையும் நம்ம தலைல கட்டுற சக்தி, விளம்பரங்களுக்கு இருக்கு.,

இது பத்தாது-ன்னு  நம்ம கலாசாரத்தையே குலைக்குற மாதிரி ட்ரென்ட் செட்டிங் இந்த விளம்பரங்கள்..

எ.கா:
அம்மா மகனிடம், உன் மனைவி ரொம்ப ஹாட்ஆ இருக்குறா-ன்னு சொல்லும் ஒரு Dominos Pitza விளம்பரம்.

வொய் திஸ் கொலவெறி?





Monday, August 25, 2014

இஸ்லாமும் ஈஸ்வரனும்...

ஜிப்ரேல் என்ற இறை தூதர் (நபி), அண்ணல் முகம்மது அவர்களுக்கு கூறிய வேதமே குர்ரான். இறைவன் ஒருவனே என்ற தத்துவம், எளிமையான வாழ்க்கை முறை, நோன்பு, மற்ற உயிர்களிடம் அன்பு காட்டுதல் மற்றும் தினசரி கட்டாயத் தொழுகை.. ஜிப்ரேல் ஒரு நாளுக்கு 52 முறை தொழ சொன்னாராம், ஆனால் நடைமுறை சாத்தியம் கருதி, முகம்மது 5 முறையாகக் குறைத்ததாக ஒரு வரலாறு உள்ளது., [மேலும் விபரங்களுக்கு நிலமெல்லாம் ரத்தம் என்னும் நூலை படிக்கவும்]

அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்தவன் ஈஸ்வரன். தவ யோகத்தை வழிகாட்டுகிறது சைவம். உலக உயிர்கள் அனைத்திற்கும் படியளப்பவர் ஈஸ்வர். ஆரம்பம் மற்றும் முடிவு இல்லாத இறைவன் ஈஸ்வரன்.

நீள அகல உயரம், ஆரம்பம் மற்றும் முடிவு நிலை இல்லாத ஒரே ஒரு உதாரணம் இந்த பிரபஞ்சமே... விண்வெளி, பால்வெளி...காலக்ஸி .. என்று வல்லுனர்களால் பல்வேறு வார்த்தைகளில் விளக்கப் பட்டு வந்த இந்த பிரபஞ்சமே இறைவன் என்ற தத்துவம் சைவத்தில் உள்ளது.

எந்த ஒரு மதமும் உருவான காலத்தில் மிக சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கிறது, ஆனால் காலப் போக்கில் மத குருக்கள், மற்றும் மத அரசியல்வாதிகள் அவர்களின் வசதிக்கேற்ப ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள், ஆதலால், மதத்தின் போக்கு மாறி இருக்கிறது.

மதம் என்பது மக்களின் அபின் - என்று ஒரு மார்க்சீய வாக்கியம் உள்ளது. இதை மறுக்க என்னால் இயலவில்லை.

இன்று இருக்கும் சூழலில் மதமே இல்லாமல் இருப்பது உத்தமம் என்றே தோன்றுகிறது. [நம் ஆதி தமிழர்கள் போல].


அமேஸான் காடுகளில் இருந்து...

இயற்கை நமக்கு பல அரிய மூலிகைகளைக் கொடுத்து இருக்கிறது.. ஆனால் அவை யாவும் பொய் என்று போலி சித்த மருத்துவர்கள் நிராகரிக்க வைத்து விட்டார்கள்.

உடலில் ஜீரன மண்டலத்தில் இருந்துதான் எந்த நோயாக இருந்தாலும் ஆரம்பிகின்றன..

பெரும்பான்மையான நோய்களுக்கு முறையான மருத்துவம் சித்த மருத்துவ மூலிகைகளில் இருக்கிறது, அவை உடலுக்கு பக்க உபாதைகள் ஏதும் கொடுக்காது.,

ஆனால் நவீன / ஆங்கில மருத்துவ முறை இதனைக் குப்பை என்று நிராகரிக்கிறது. சித்த மருத்துவ மூலிகைகளை அங்கீகரித்தால், கொள்ளை விலையில் விற்கும் ரசாயன மருந்துகளின் விற்பனை படுத்துவிடும் என்ற ஒரே காரணம்தான்.

இன்று அரைகுறை ஆடையில் ஒரு பெண் வலம் வந்து, அவளைவிட கவர்சிகரமான வார்த்தைகளில், என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக இருக்கிறோம்.

அமேஸான் காடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சில அறிய வகை மூலிகைகளால் ஆன தைலத்தை விரும்புகிறோம், [மேலும் விபரங்களுக்கு மிடாஸ் டச் - எம்.எல்.எம் காட்சிகளை சதுரங்க வேட்டை எனும் படத்தில் பார்க்க] ஆனால், நமது பாரம்பரிய மூலிகைத் தைலங்களை வசதியாக மறந்து விட்டோம்.

ஆங்கில / ரசாயன மருந்துகளில் போலிகளைப் பிரித்தறிவது கடினம், ஏனெனில் அவை உடலில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களில் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதில்லை. ஆனால் சித்த மருந்துகளில் நீங்கள் பரிச்சயம் அடைய ஒரு சில முயற்சிகள் தேவை. பின் போலிகளை எளிதில் கண்டு கொள்ளலாம்.

சித்த மருந்துகளால், உடனடி நிவாரணம் கிடைக்காது, ஆனால் நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.

வளம் பெறுவோம்., வாழ்க வளமுடன்.




Friday, August 22, 2014

மரம் நடுவோம்..


இயற்கை நியதிப்படி ஒன்றை சார்ந்தே ஒன்று உயிர் வாழ்கிறது, இயற்கையின் விதிப்படி, உலகம் முழுவதும் வெறும் காடுகளாகவும் மரம் செடி கொடி புதர்களாகவும், பாலைகளாகவும், சோலைகளாகவும், கடலாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனும் மற்ற உயிரினங்களைப் போலவே இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான்.
அவனுக்கு வேண்டியது எல்லாம் உணவு மட்டுமே., மரங்களில் இருந்து பழங்களையும் கீரை கிழங்குகளையும் தேவைப் பட்டால் ஒரு சில சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்ந்தான்.

மாற்றம் ஒன்று மட்டுமே நிலையான இயற்கை நியதிக்கு மனிதனும் விதி விலக்கல்ல., விங்குகளின் தோலை உன்ன முடியாது, ஆகையால் அதை வைத்து சுகாதாரத்திற்காக குறிகளை மறைக்கப் பழகினான். இது வாய் மூலமே குடிக்க உண்ண முடியும் என்று தோன்றிய அனிச்சை செயல்.

சிக்கி முக்கி கற்களின் மூலம் நெருப்பைக் கண்டு பிடித்தான், பின்னர் அதை வைத்து குளிர் காய்ந்தான்., இவை எல்லாம் இயற்கையே மனிதனுக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

நெருப்பின் பின் சக்கரம், வண்டி, வண்டியை இழுக்க மற்ற ஆநிரைகளை அடிமைப் படுத்தினான்.. இங்குதான் மனிதனின் முதல் தவறு ஆரம்பிக்கிறது.

அடிமைத் தனம் என்ற ஒன்றை மனித விலங்கு மற்ற விலங்குகளிடம் செலுத்த ஆரம்பித்தது... அன்று தொட்டு, இயற்கையின் போக்கு இந்த மனித விலங்குகளினால் பெரிதும் பாதிக்கப் பட்டு, மொழி, மதம் இனம் வன்மம், நாகரீகம் நகரமயம், முதலாளித்துவம், தொழிலாளித்துவம், அடிமைத் தனம், தீவிரவாதம்... என்று மனித சமுதாயம் அடைந்த பாதிப்புகளை விட இயற்கை சீரழிந்துள்ளது.

ஒட்டு மொத்த இயற்கையையும் துவம்சம் செய்து மனித விலங்கு அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக போகங்கள் கூடிய விரைவில் முடியப் போகின்றன.

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை எந்த அளவிற்கு மாசுபடுத்த முடியுமோ அதை விட அதிகமாகவே மாசுபடுதுகிறோம்.

இயற்கை தன்னை உருமாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்தது...
வறண்ட ஏரிகளில் மீண்டும் தண்ணீர் சுரக்க ஒரு சில தலைமுறைகள் ஆகலாம், ஆனாலும் ஏரி என்பது ஏரி தான். அதில் மண் கொட்டி மாடி வீடு கட்டுவது மனிதனின் முட்டாள்தனம்.

கடைசி சொட்டு தண்ணீரும் நச்சுண்டு, அமெரிக்காவின் ஆயுத பலமும், அரேபியாவின் எண்ணெய்  வளமும், ஆசியாவின் தங்க வளமும் ஒரு சொட்டு மழை நீருக்காக ஏங்கும் தருணம் மிகத் தொலைவில் இல்லை...

இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகாமல் இயற்கையை பேண நம்மால் முடிந்த ஒரு சில காரியங்களைச் செய்வோம்.


மரம் நடுவோம், மழை நீர் சேமிப்போம்...
வேதாத்திரி மகரிஷி பாணியில்,

எரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய,
மாரி அளவாய் பொழிய,
மக்கள் வளமாய் வாழ்க.

ஜென்ம ஆசை...

பொன்னியின் செல்வனில் இருந்து சில வரிகள்...


என் வாழ்நாளில் ஒரு முறையேனும் இப்படி, தமிழரின் பாரம்பரிய உணவை ருசிக்க ஆசைப் படுகிறேன். இது அந்தக் காலத்து ஏழை வீட்டு உணவு... மிக்க ஆரோக்கியம் நிறைந்தது.



பண்ணித் தமிழ்


ஏய், இதைக் கொஞ்சம் ஓபன் பண்ணிக் கொடேன் ப்ளீஸ்? [தமிங்கலம்]

தோழியே, கொஞ்சம் தயை கூர்ந்து இதைத் திறந்து தருகிறயா? [தூய தமிழ்]

இதைக் கொஞ்சம் திறந்து தரியா? [என்னுடைய எதிர்பார்ப்பு..]

இனிய உளவாக இன்னாத கூறல், கனி இருப்பக் காய் கவர்ந்தற்று... என்று வள்ளுவர் ஒரே குறளில் சொல்லி விட்டார்.



எங்கிருந்து வந்தது இந்த "பண்ணி"
பண் என்றால் பாடல் என்று பொருள்., சாமானியர்களின் வட்டாரச் சொல்லாக வழங்கி வந்த இந்த பண்ணி, இன்று தமிழ் பேசும் அத்தனை வாய்களிலும் விளையாடுகிறதே அது எப்படி?

முழு முதற் காரணம்: "ஷோ ஆங்கர்" என்று அழைக்கப் படும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்.

யூஸ் பண்ணி, ஓபன் பண்ணி, அதைப் பண்ணி, இதைப் பண்ணி...
இவங்க யாருமே தமிழ்நாட்ல  பிறக்கலையா? தமிழே கற்காதவர்களா?

கால் பண்ணுங்க... கால் பண்ணதுக்கு ரொம்ப நன்றி.. எதற்கெடுத்தாலும் ஒரு பண்ணி யை சேர்த்து தமிழ் வழக்கத்தில் "பண்ணி" எனும் பன்றியை சேர்த்த இவர்களை என்ன செய்யலாம்?

இரண்டாவது காரணம் "ரேடியோ ஜாக்கி" என்று அழைக்கப் படும் பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்.

தமிழை எவ்வாறெல்லாம் கற்பழிக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து பேசுவதில் கில்லாடிகள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சில நூறு வார்த்தைகள், அவற்றில் இலக்கணம் இல்லாத தமிழ் ஏராளம், மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிச் சொற்கள் ஏராளம், இவை மட்டும் இல்லாது, வழமையான பண்ணி -ச் சொற்களும் ஏராளம்.

மூன்றாவது காரணம் நான் [நாம்]
உனக்கு எங்க போச்சு புத்தி, எவனோ ஒருத்தன் கூவறான், அதைக் கேட்டுட்டு நீயும் எதுக்கு கூவுற? [என்னை நானே கேட்டுக் கொள்கிறேன், உங்களுக்கும் உரைத்தால் மன்னிக்கவும்.]

பேச்சுரிமை உங்கள் பிறப்புரிமை., தாய்த் தமிழ் மொழியை நீங்கள் புறக்கணியுங்கள்., படிக்காதீர்கள், பேசாதீர்கள் கற்காதீர்கள்.. உங்கள் மொழி உங்கள் உரிமை.  அதைச் சாட நான் யார்?

ஆனால், மொழியைக் கலக்காதீர்கள் கெடுக்காதீர்கள் கற்பழிக்காதீர்கள். மொழிக்கலப்பு மொழிகளின் தன்மையை, வீச்சைக் கெடுத்து விடும், உங்கள் புலமையும் கெட்டு விடும்.

ஒன்று தமிழில் பேசுங்கள், அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் 

பி.கு: இந்த பண்ணி வழக்காடு என்னையும் ஆட்கொண்டு விட்டது, அதிலிருந்து வெளிப்பட நானும் முயற்சிக்கிறேன்.

Tuesday, August 19, 2014

காதல் அறிகுறி.

காணும் பொழுது ஏற்படும் மெல்லிய சலனம்,
இதயம் இருப்பது போன்ற சிறு உணர்வு,
மனதில் சிறு நடுக்கம்,
இனம் புரியாத சோகம்.

இன்னும் எத்தனயோ விவரிக்க முடியாத உணர்ச்சிகளின் வெளிப்பாடு.

இயற்கை நியதிப் படி, உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளும் வாழ்க்கை எனும் ஒரு பயணத்தை மேற்கொள்கின்றன. அதற்கு இயற்கையே பருவத்திற்கு ஏற்றாற்போல்,  ஒவ்வொரு ஜீவராசியின் உடலிலும் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு காற்றில் பரவும் வாசனை, வண்டுகளை ஈர்த்து, மகரந்தச் சேர்கை நடைபெற எதுவாய் செய்துள்ளது.

சற்றே பரிணாம வளர்ச்சி கண்ட ஜீவராசிகளிடம், ஆண் பெண் என்ற வெவ்வேறு உடலமைப்புகளைக் கொடுத்து அவைகளை களிப்புறச் செய்கிறது...

எல்லா உயிரினங்களும் பிறக்கின்றன, பருவத்தே இனப்பெருக்கம் செய்கின்றன, மடிகின்றன. ஆனால் மனிதன் மட்டும் தனது யோசிக்கும் திறனை வைத்து காதலிக்கிறான், காதலால் செய்யக்கூடாத காரியங்களை எல்லாம் செய்கிறான்.

இனப் பெருக்கத்திற்கு தயாரான பெண் மனித விலங்கு பூப்படைகிறாள். [பூ]
மீசை அரும்பிய ஆண் மனித விலங்கு சைட் அடிக்கிறான். [வண்டு].
இந்த ஒரு ஈர்ப்பு விசைக்கு காதல் என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர், அதற்கு ஆண்டுதோறும் விழாவும் எடுக்கின்றனர்.

இதை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வெட்கம் கெட்டு வினோத வினோதமான ஒலி ஒளி காட்சி அமைப்புகளை வைத்து காலம் காலமாக பாடியும் படமெடுத்தும் வருகின்றனர்.

மற்ற உயிரினங்களை விட மனிதன் சற்றே மேம்பட்டு மொழிப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம் என்று பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதால், தலைவன் - தலைவி ஊடல், காதல் கத்திரிக்காய் என்று சில இலக்கியங்களைப் படைத்துவிட்டான். காலம் மற்றும் கலாச்சார கட்டுக் கோப்புகளுக்காக திருமணம், சொந்தம் பந்தம் என்று ஒரு சில நிபந்தனைகளை தனக்குத்தானே விதித்துக் கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்.

பசி தூக்கம், ஏக்கம் போன்று காதலும் ஒரு உணர்ச்சியே., காலம் கடந்து  ஏற்படும் உணர்சிகளால் ஏற்படும் விபரீதங்களைத் தவிர்க்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகிறது.

இரண்டு குழந்தைகளைப் பெற்ற தாய், கள்ளக் காதலனுடன் தலை மறைவு, சோகத்தில் தந்தை தற்கொலை... போன்ற செய்திகள் சம காலத்தில் மலிந்து வருகின்றன.

இல்லறம் சிறக்க கணவன் மனைவி தாம்பத்ய உறவு அவசியம். சரியான உணவு பழக்கம் இல்லாததாலும், அளவுக்கு அதிகமான புகை மற்றும் குடிப் பழக்கத்தினாலும் பெரும்பான்மை ஆண் மனித விலங்குகள் ஆண்மையை இழந்து தங்களது துணைவி /மனைவிகளை திருப்த்தி படுத்த முடியால் இருக்கின்றனர். மேலும் நரம்புத் தளர்ச்சி, பதட்டம் போன்ற நோய்களும் இலவச இணைப்புகளாக ஒட்டிக் கொள்கிறது... இதனால் சோகமடைந்த பெண் மனித விலங்கு வாய்ப்பு கிடைத்தவுடன் உறவுக்காக யாருடனோ ஓடி விடுகிறது...

கள்ளக் காதலுக்கு ஆண் மனித விலங்குகள் மட்டுமே காரணம் என்று ஒருதலையாக வாதிக்க முடியாது. சுத்துக் கொழுப்பு அதிகம் உள்ள சோரம் போகும் இயல்புடைய பெண் மனித விலங்குகள் ஏராளம். ஒரு குறிப்பிட்ட ஆண் மனித விலங்குடன் அவைகளால் நீண்ட நாட்கள் வாழ முடியாது. போரடித்து வேறு ஒரு ஆண்  விலங்குடன் ஓடி விடும். அவர்களைத் தடுக்க / திருத்த யாராலும் முடியாது.

சதா சர்வ காலமும் தனது துணையை கண்காணிப்பது என்பது முட்டாள்தனம், அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன்னை அவதானிக்கிறார்கள் என்ற உணர்ச்சி காட்டிக் கொடுத்து நல்ல குடும்பத்தைப் பிரித்து விடும்.

கள்ளக் காதல் அறிகுறி இல்லாத வாழ்க்கைத் துணை வேண்டுமா?
என்னதான் வழி?

உடைந்த கண்ணாடியை ஒட்ட முடியாது, ஆனால் புதிய கண்ணாடியை வேண்டுமானால் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் துணை ஒழுக்கத்துடன் இருக்க நினைகிறீர்களா? நீங்கள் ஒழுக்கத்துடன் இருங்கள்.

கடந்த கால பாவங்களை மாற்ற முடியாது, உங்கள் வினைப்பயன் உங்களையும் உங்கள் சந்ததியையும் தொடரும். ஆகையால் உங்களது கணக்கில் உள்ள பாவப் பதிவுகளின் மீது புண்ணிய செயல்களினால் நல்ல பதிவுகளை உருவாக்குங்கள்.

தனிமையில் உன்னில் எழும் எண்ணங்களே உன் வாழ்க்கைத் தரத்தை நிர்மாணிக்கிறது - விவேகானந்தர்.
ஆகையால் நல்ல விஷயங்களைசிந்தியுங்கள் செயல்படுங்கள், உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைநிலையை வேண்டுகிறேன்.

Monday, August 18, 2014

மாட்டுக்கறியும் கொலை வெறியும் - என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்.

மாட்டுக்கறியும் கொலை வெறியும் - என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்.

நான் யார் சொல்வதையும் விளக்கவில்லை... என்னில் எழும் ஒரு கேள்வி...
எந்த ஒரு பாலூட்டியும் இன்னொரு பாலூட்டியின் குட்டிக்கு பால் கொடுக்காது.,
உதாரணம்., ஒரு மனிதப் பெண் இன்னொரு மனிதப் பெண்ணின் குழந்தைக்குப் பால் கொடுக்க முகம் சுழிப்பாள்.,

பசுவே உங்கள் இல்லம் வந்து, இந்தா குடி என்று பால் கொடுப்பதில்லை.... பால் நிறைய சுரக்கிறது என்று பசுவிடம் இருந்து மனிதன் பாலைத் திருடுகிறான்.  ஏன் பன்றியிடம் இருந்து பால் திருடவில்லை என்றால், பசுவின் பால் உடலுக்கு சத்து, மற்றும் எந்த பக்க விளைவுகளும் இல்லாதது...

பசுவிற்கு செயற்கையாக சினையேற்றுகிறான், தீவனமிட்டு ஒன்றுக்கு பல மடங்காக பால் கறக்கிறான், கொள்ளை லாபம் பார்கிறான், மடி வற்றிய பின் கறிக்காக விற்று விடுகிறான்...

பசுவின் கன்றுக்காக சுரந்த பாலைத் திருடி விட்டு, நன்றி உணர்ச்சியே இல்லாமல் பசுவைக் கொல்வது நியாமா?

Tuesday, August 5, 2014

"ஜிகிர்-தண்டா" திரை விமர்சனம்


தமிழில் வெளியாகும் அத்தனை படங்களையும் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதால், மிகவும் தேர்ந்தெடுத்து படங்களைப் பார்ப்பது என் நிலைப்பாடு.
படத்தின் 30 % காட்சிகள் நகைச்சுவை மிகுந்தது...
முதல் பாகம் சற்றே இழுவை...
இரண்டாவது பாகம் மிதமான வேகம்... அவ்வளவே..

தமிழ்பட வெறியர்களுக்கு இது ஒரு வித்தியாசமான முயற்சி.,
என்னை பொறுத்த மட்டில், இது ஓகே வொர்த் வாட்சிங் படம்.. அவ்வளவுதான். அடுத்த சீன் என்ன என்று என்னால் எளிதாகக் கணிக்க முடிந்தது...

ஆனால், RED (English Movie) படத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு விறுவிறுப்பான அனுபவம், அந்தக் கதா நாயகியின் முகபாவத்தில் ஈர்ப்பு, இந்தப் படத்தில் ஏற்படவில்லை.
லட்சுமி மேனனுக்கு செயற்கையாக ஒரு பாத்திரம்... தேவையே இல்லை, செலவைக் குறைத்து இருக்கலாம்.



Monday, June 23, 2014

அன்புத் தொல்லை..

குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்....

ஆ..உவே.... உர்ர்ர்..  என் மகனின் மனம் நான் அறிவேன். அவனுக்கு பிஸ்கட் வேண்டும்,

உப்பூ [UBBU] மம்மி....
...ம்ம் 
யாரு எங்க உப்பு மம்மி..
நான்தான் என்று மார்தட்டுவான்...ம்ம்ம்..ம்ம்.ம்ம் 

கூல புஜ்ஜி மம்மி..
தரணிஷ் குட்டி..
ஒப்புட்டு..
ஜின்ஜி..
சிங்கம்..

என்று எண்ணற்ற அடைமொழியில் நாங்கள் அவனை அழைத்தாலும், எங்களுக்கு பெயர்கள் போதவே இல்லை.. தினமும் அவனுக்கு ஒரு செல்லப் பெயர் வைக்கிறோம். 

யார் சொல்லியும் காலையில் நான் சீக்கிரம் எழுந்ததில்லை... ஆனால், எங்கள் உப்பு மம்மிகாக, ஆறு மணியளவில் எழுந்து டெய்ரி-க்குச் சென்று புத்தம் புதிய பசும்பால் வாங்கி வருவேன்.. சமீப காலத்தில், ஏதோ மாட்டுத் தீவனம் சேரவில்லை போலும், ஆதலால், மீண்டும் பாக்கெட் பாலுக்கு மாறி இருக்கிறோம்...

அவனுடன் கொஞ்சிப் பேச, எவ்வளவு நேரம் இருந்தாலும், போதவில்லை... 

அவனுக்கு என் கண் கண்ணாடியின் மேல் அலாதிப் பிரியம்... எப்போது வேண்டுமானாலும், பிடுங்கி எரியுவான்...

பொது இடங்களில், கடைகளில், ஓடிப் பிடித்து விளையாட அழைப்பான்...

என் மடியில் அமர்ந்து கார் ஓட்டுவான், ஆனால், நான் ஸ்டீரிங் பிடிக்கக் கூடாது... என் கைகளைத் தட்டி விடுவான்..

கையில் எது கிடைத்தாலும் என் முகத்தில் எரியுவான்....

மொபைல் போன் அவனுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அடிக்கடி தண்ணீர் வாளியில் வைத்து விளையாடுவான்..

அவனே எடுத்து சாப்பிட வேண்டும் என்று எதைக் கொடுத்தாலும், கீழே பாதி வாயில் கொஞ்சம், சட்டையில் மீதி என்று கொட்டுவான்... நான் ஊட்டி விடுவது ஏனோ அவனுக்குப் பிடிக்கவில்லை..

நான் எத்தனை  முறை, என் மகனிடம் அடி வாங்கினாலும், அவன் மீது எவ்வளவோ கோபம் வந்தாலும், அனைத்தும் மறந்து போகிறது அவனுடைய ஒரே ஒரு புன்சிரிப்பில்..


மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்..
குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்....

Tuesday, June 17, 2014

Equinox.....THE TEMPLE OF TRIVANDRUM--AN UNKNOWN FACET.

The sun goes down along the middle portion of Gopuram of Sree Padmanabha Swamy Temple on equinox. 


Sree Padmanabha Swamy temple is so well constructed that on Equinox sun passes exactly through
 the middle of Gopuram passing through all the doors. An engineering marvel indeed !!

An Equinox is an astronomical event that happens twice, once in spring and once in autumn, each year when the tilt of the Earth’s axis is inclined neither away from nor towards the Sun. During Equinoxes the tilt of the Earth 
(with respect to the Sun) is 0° and because of it duration of the day and the night are
 almost equal on Equinox day i.e. 12 hours.

Equinoxes occur on 20th or 21st March and 22nd or 23rd September each year and 
both days has equal length of the day and the night. 
-------------------------------------------------------------------
 
When the Sethu Samudram Channel Project was on, well known political leaders like Karunanidhi etc wondered whether Lord Sri Rama had obtained an "Engineering degree" and from which institution?  Looking at the degree of accuracy in designing this (Padmanabhaswamy temple), it is proven that Indians at that time were quite proficient in their studies and use of it - for this is the proof that higher quality education did exist at that time. Apparently over a period of time we have lost it. We should really be keen to regain that lost  splendor  and move along...

Tuesday, June 3, 2014

Lenovo P780 Mobile, My Son & Water

I was proud enough to show case my mobile phone in my friends circle, whenever any debates for new mobile purchase. I was, kind of unknowingly market Lenovo P780 for its long battery backup and good picture quality.

Due to last night rain, Bangalore morning was so bleak, I was half awake, My son was playing around near me, he usually speak / shout and pretending talking in mobile phone like how we speak.

I could not recollect anything more from my conscious. after few moments, what I heard, his cough from bathroom. I suspect, he would have dunk my mobile in the bucket or pouring water on it.

Spouse noticed this scene lately and did not want to upset me in the morning, so simply she told me that the mobile was slightly wet & asked me to clean...

while cleaning I realized there were plenty of water drops coming out.

I haven't studied mobile first aid or mobile life saving do's and don'ts. so, I tried to keep it dry and kept outside in sunlight for a while.

My intelligent spouse, switched it on and found low battery, she plugged in for charge. [she's BE-ECE graduate]

The bill amount 16k change and accessories cost came in my mind for a while.

passing clouds.

Monday, May 12, 2014

புதிய தலைமுறைக்கு என் கடிதம்.

ஆசிரியர் மாலன் அவர்களே,
மாறி வரும் சமுதாயத்தில், ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இயக்கம், உண்மையானவர்.. என்ற நம்பிக்கையில் புதிய தலைமுறையை வாசிக்க ஆரம்பித்தேன்...
நான் எதையும் அதிகமாக எதிர்பார்த்தது இல்லை...
கடைசியில், புதிய தலைமுறையும் ஒரு சாதாரண தொழில் சார் நிறுவனம்தான் என்று என்னை நினைக்க வைத்து விட்டார்கள்...


அடச்சீ அரசியல்-ன்னு ஒரு கவர் ஸ்டோரி போட்டுட்டு, அப்புறம் எதுக்கு கடந்த ரெண்டு மாசமா வெறும் அரசியலாவே எழுதுறீங்க?

பொதுமக்கள் பாதி பேருக்கு யாருக்கு ஒட்டு போடணும்-ன்னு தெரியாது. அவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி ஏதாவது செஞ்சா அத வரவேற்கலாம்.

எந்த குப்பையை வேண்டுமானாலும் இந்தியாவில் விற்கலாம், ஏனென்றால், இங்கு விளம்பரம் ஒன்று மட்டுமே போதும், மக்கள் அதிகம் யோசிப்பது இல்லை. இப்படிப்பட்ட நாட்டுல இருந்துகிட்டு, அவர் அப்படி சொன்னாரு, இவரு இப்படி சொன்னாரு,  நல்லவரா இல்ல கெட்டவரா.... நூறு வருசத்துக்கு முன்னாடி இது இப்படி நடந்துச்சு.. கடந்த தேர்தல்-ல இப்படி ஆனது.. அதுக்கு முந்தைய தேர்தல்-ல இது இப்படி ஆகல... இந்திரா காந்தி காலகட்டத்துல இருந்து இது நடக்குது...சதா புள்ளி விவரமும், கருத்துக்கணிப்பும், அடச்சீ புதிய தலைமுறை-ன்னு நினைக்க வச்சிடுச்சு...

ஒரு சாமானியனை, யோசிக்க வைத்து, ஓட்டு போடக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு மாதிரி அட்டவணையை கொடுக்க வேண்டும். போட்டியிடும் அணைத்து வேட்பாளர்களுக்கும் தரம் சார் மதிப்பெண் இடும் ஒரு ஆசிரியனாக அந்த சாமானியனை மாற்றுவதே ஒரு இயக்கத்துக்கு அழகு.

கட்சிக்காக, சின்னதிற்காக, கூட்டணிக்காக ஓட்டு போடுபவர்கள் பழைய தலைமுறை... புதிய கோடி தலைமுறை-க்கு நீங்கள் எவ்வாறு ஓட்டு போட வேண்டும் என்று ஏதாவது வழி காட்டி இருக்கிறீர்களா?

பேசுறதுக்கு, எழுதுறதுக்கு, எவ்வளவோ, நல்ல விஷயம் நிறைஞ்சு இருக்குற இந்த உலகத்துல, வெறும் அரசியல் பத்தி எழுதி, உங்க பேர்ல இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பேரையும் கெடுத்துக்க வேண்டாம்.

- நான் என்ன சொன்னாலும், நீங்க யாரும் கேக்கப் போறது இல்ல.. நடத்துங்க... எவ்ளோ தூரம் போறதுன்னு பாக்கலாம்.

Friday, April 18, 2014

Few Facts about my Dad




  • He's a Chess player & History teacher
  • His historical hero is Akbar 
  • He don't teach you lessons, he prefer to let you learn from your attempts
    • e.g.., He never taught me driving cycle, so I hit one old guy's cycle with his scooter.
  • Sometimes he advice me which I would not follow anyway, but still he never stops reminding it.
  • He's silent in most of the occasions since my mom talks :-)
  • He has lot of secrets & clever enough to hide it
  • He stick with his decisions, he hardly change his mind.,(adamant)but relaxed few for me
  • His goals are short term, but he would want his result to last for lifetime
  • Mom scolds him everyday, but never see him convince her
  • He spends a lot, like me.... Wild River.
He's still fighting with me come and stay in my home. I have even asked him to pay my rent and stay. he still keep refusing. Such a tough guy.

Friday, March 21, 2014

MONEY....life expectancy

I have been worrying a lot about India nowadays....
we have had enough wealth but still begging for economic crisis.. poverty, food, shelter... etc.

Just let me ask one simple question.

why are we working for?
-Food...isn't it? 
at end of the day, all we need is just Food to fill our stomach. 
once hunger is over, we need a shelter to sleep, then to think of running a family, kids, education, work life balance, status symbol, savings, spending.. blah..blah.. blah...

what the hell is going on?
everyday, I confront lot of beggars...
everyday, I see small kids starving for food...
everyday, I read violent deaths in one or another corner of country...


scams... enormous crimes... Corruption in people mindset, corruption in lifestyle, corruption in government, corruption in law and order.. Corruption everywhere..

its all because of MONEY... MONEY... MONEY..

Here is my thought/ might be some adjustments required based on real life possibilities...

what if we give up the concept of paper currency / money and work for trading with grains and other commodities? 

what would I get as my paycheck?
2 sacks of Rice, 2 sacks of Wheat & other organic grains + special allowances 200 gm of dry fruits + incentive 500 gm of walnuts 

Let me go and buy vegetables in trade with grains

Let me pay his rent by 20kg of wheat

Let me save his grains in any bank and pay for his kids education

I am eligible to build only one house / flat. 

I am eligible for LPG, Gas and water with my ration card.

none could save more than certain limits of life expectancy.

we still work in an office, 
but our company would pay us in terms of grains/ fruits & vegetables / or some metals like gold, silver, copper. 

BUT NO PAPER Currency OR ELECTRONIC MONEY CONCEPT HERE

Here the first problem rings bell in our brain... 

-What does the Government would do? 

its a million dollar question, but my answer is simple and many fold. 
Government owns governance of activities, since we had taken out the concept of money, there wont be any crimes which are related to money.

of course, there would be crimes with respect to sexual harassment!... since police do not have any work with related to money and assets related crimes, they could handle these cases. 

-Still there are lot of clever people in our crowd, they never work, always escape from work and come only to get wages.
let them live in their way... managers would take care of them since there is no Money to buy such waste resources ;-)

-What if I fall in sick, What if I need to undergo a surgery?
same way., Since Government is taking care of all our activities, they could arrange a better treatment for us.

- No I don't trust Government hospitals, I want to do it in a reliable hospital...
Yeah, go ahead and do it, by trading few gold coins or diamonds...

-Where will I get gold and diamond?
That's the common men's mentality... What does bank do man?.. Go and apply a medical loan with doctor's certificate & bank could lend you... later to your operation come back and pay your loan.. Cool isn't it?

-No, I'm sorry I'm not comfortable with your statements... I would want to live in my luxurious way which i deserve now... Only money could make me feel safe, that's why I'm earning for
Neither Do I... but considering top most rich people and bottom most poor people, we have to do something to fix it.

let us trust government once, and see!.. they would own hospitals & staffs.. etc  there are no money.. so they are free from corruption.

those who really like to be doctor, and want to serve the people would only become doctor, they would save you... don't worry.

-OK, what about sex workers? alcoholics, drug addicts, tobacco consumers..?
since Government Owns governance of activities, it will Ban country wide tobacco, drugs, alcohols.. etc and of course will make a way to live for those sex workers... 

-No.......! I live in a cold place with less temperature, I need alcohol to survive
well in that case, you could get approval from your local collector and alcohol would be distributed in ration (which is the shop owned by government)

-What does other people will do? I have a work, I'm doing it. there are plenty of people who doesn't have any work... they simply stay in the street watching us
well, as I said early, Government owns governance of activities, it will initiate lot of projects & it will create employment for all its citizen. & moreover there is no free meals. if you want grains, you need to work.. so you would work and get your wages in terms of gold or grains...
  
-OK, what the hell we do with our current corrupted big fat politicians?
rule is a rule. its applicable for every living species in the planet. they would have to surrender every asset they hold to the government and start working with us. there wont be any election or change in government, since Army is executing the operations. one board of well versed team would control army with defined process (we can include six sigma or cmmi here no offense).

friends.. I want to address these such questions and analyze practical difficulties to get rid of money related issues. 
Kindly post your questions and lets discuss and try to address. one or other day, may be after a big natural disaster, human beings would realize, Money has no value to stop any disaster, it can only create more.

Thursday, March 20, 2014

புரியாத கேள்வி -1

இந்தியாவில் உற்பத்தியாகும் நெல்லும் கோதுமையும், ஆரியமும், கம்பும்.. இன்னும் இதர பல தானியங்களும், காய்கறிகளும், பழங்களும், நமது நாட்டில் உள்ள நூற்று முப்பது கோடி மக்களின் பசியைப் போக்க வல்லது...

இருந்தாலும் ஏன் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உணவில்லாமல் பிச்சை எடுக்கின்றனர்?

எனக்கு சத்தியமாக புரியவில்லை...
தயை கூர்ந்து விளக்குங்கள்

  

வசி...வசதி...அவதி

பெங்களூர்.
இன்றைய தேதி 20-மார்ச்-2014, நான் அறிந்த வரையில், ஒரு அடுக்கு மாடி குடி இருப்பிற்கு கொடுக்கப் படும் அதிக பட்ச வாடகை 40000/- ஒரு சில பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கலாம்.
குறைந்த பட்ச வாடகை 9000/- ஒரு சில பகுதிகளில் இன்னும் சற்றே குறைவாக இருக்கலாம். இது மட்டுமல்லாது பராமரிப்புக் கட்டணம் தனி.

அவரவர் வசதிக்கேற்ப சொகுசு வாழ்க்கை விற்பனைக்கு உள்ளது.
இந்திய பொருளாதாரமே உலகத்தின் சிறந்த பொருளாதாரம் என்று வர்த்தக மேதைகள் போற்றி உள்ளனர்.
-இதற்கான  தாரக மந்திரம் "சேமித்தது போக செலவு செய்" - இந்தியாவின் முதுகெலும்பு, நமது மக்களின் சேமிப்புக் கணக்கில் உள்ளது.

அதனால்தான் அனைவரும் பணத்தை தங்கத்தை வெள்ளியை, வைரத்தை, சொத்தை பதுக்குகின்றனர்.

அறியாமையும் சோம்பலும் புகுந்த கூட்டில் தெரியாமல் தோன்றுமே நோய் என்ற வள்ளுவரின் வாக்கு பிரதிபலிப்பதை எங்கும் காணலாம்.

ஒரு மென் தொழில்நுட்ப ஊழியரின் வங்கிக் கணக்கை நோக்கினால், வரிப்பணம், செலவு, ஆடம்பரம் மற்றும் இதர செலவுகள் போக மீதம் உள்ள தொகை சொற்பமே...

அனுபவித்து ஆண்ட வாழ்கையில் திருமணம் ஒரு திருப்பு  திருப்புகிறது....அவருடைய ஆசை கோபம் தாபங்கள் அனைத்தும் மாறி சேர்த்து வைக்க முனைகிறார்... (நான் இருபாலரையும் சாடுவதால் பன்மையில் அழைக்கிறேன்).

வாழ்க்கைத் துணையும் பெரும்பாலும்  ஒரே துறையில் இருப்பதால், பணப் புலக்கதிற்கும் சேமிப்பிற்கும் பங்கம் இல்லை.
வீடு வாசல் உரிமை கொண்டாடும் வெறித்தாண்டவம் ஆரம்பமாகிறது...
விளைவு நாற்பது லட்சம் கடன் வாங்கி அதனை முப்பத்தி ஆறு வருடம் என்பது லட்சமாக திருப்பி செலுத்துகின்றனர்.

நகரங்களில் வாழும் பெரும்பான்மை தம்பதியினர் மேற்கண்ட பிரிவில் உள்ளனர்.

ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு இன்னும் இதர பல உயர்வுகள் வீட்டுக் கடனை குறைந்த காலத்தில் முடிக்க உதவுகின்றது...
இங்கே மனிதனின் பேராசை ஆரம்பமாகிறது... அடுத்த முதலீட்டை ஆரம்பிக்கிறார்... தங்கம் வெள்ளி, வைரம், வீட்டு மனை அல்லது இரண்டாவது சொந்த வீடு.. என்று வாய்ப்புகளுக்கு குறைவே இல்லை.

என் படிப்பு,
என் வாய்ப்பு,
என் சம்பளம்,
நான் செலவு செய்கிறேன்...
இதை விமர்சனம் செய்ய நீ யார் என்று கேட்டால்,  என் பதில் பின்வருமாறு

சமீப காலத்தில் தாறுமாறாக உருளும் பணச்சரிவிற்கு காரணம் ஆயிரம் இருக்கலாம். அதில் மிகப் பெரிய ஒன்று நகர மக்களின் அசையாத சொத்துக் குவிப்பு.

நகர்புற வாசிகள், தற்சமயம் நகரின் ஓரப் பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளிலோ, அல்லது நகரின் வெளியே எழும் அடுக்கு மாடி குடியிருப்புகளிலோ, மிகக் குறைந்த விலையில் முதலீடு செய்கின்றனர். கண்டிப்பாக ஒரு சில வருடங்களில், முதலீட்டின் லாபம் முதலீட்டை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு ஆகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், பெருகி வரும் நகரமயமாகலும், மக்களின் பாதுகாப்பான முதலீட்டு பயமும்தான்.

ரத்தினச் சுருக்கமாக சொன்னால், எழுந்து நிற்கும் ஒவ்வொரு அடுக்கு மாடி கட்டிடமும், இந்திய பணவீக்கத்தின் அடையாளமே.

முடியும் என்பதற்காக சொத்துக்களை குவிப்பது,  நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரங்களை கொள்ளை அடிப்பதற்கு சமம்.

ஒரு  பகுதியில் குடியிருப்புகளின் விலை மதிப்பைப் பொறுத்தே, வீட்டு வாடகை நிர்ணயிக்கப் படுகிறது.

மேற்கண்ட சொத்துக் குவிப்புகளினால், குடியிருப்புகளின் தேவை அதிகமாகிறது, அதனால் விலை ஏறுகிறது, வாடகையும் விண்ணைத் தொடுகிறது.

வசிப்பதற்காக குடியிருப்பு ஒன்றை கட்டுங்கள், வாங்குங்கள்... ஆனால், முதலீடு செய்யாதீர்கள்...

உங்கள் முதலீடு இன்னொரு நடுத்தர குடும்பத்தினை பாதிக்க வேண்டாமே?...
 

-நான் நாட்டின் மேல் அக்கறை உள்ள குடிமகன்.  

Wednesday, March 19, 2014

அப்பாவின் அறிவுரைகள்

அடுத்தவர் மனம் புண்படும் வார்த்தைகளைப் பேசாதே..

அடுத்தவர் பொருளுக்கு ஆசை கொள்ளாதே...

உடற்பயிற்சி செய்... உணவைத் தவிர்க்காதே...

இழப்பிற்காக வருந்தாதே, பணம் ஒரு பொருட்டல்ல... பாடத்தைக் கற்றுக்கொள்!

எல்லோரையும் நம்பாதே... உலகில் நல்லவர்கள் மிக குறைவு!...

பேரழிவின் பிரதிபலிப்பு கடன்-வட்டி, கொடுக்காதே.. வாங்காதே... 

புண்ணியம் தேடு... ஊரோடு ஒத்து வாழ் விதண்டாவாதம் தவிர்.

தர்மத்திற்கு கட்டுப்படு, கண்ணியம் தவறாதே...

வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்... குடும்பம் தழைக்கும்!

பொது வாழ்வில் உதவி செய், உபத்திரம் உருவாகாமல் பார்த்துக்கொள்.

அவுரு இன்னும் என்னென்னமோ சொல்லி இருக்காரு... 

எங்க அப்பா சொன்னபடி கேட்டு நடக்கணும்-ன்னு எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. பட் என்ன பண்றது..? ஊழ்வினை அதோட போக்குலதான் இழுத்துட்டு போவுது. 

Tuesday, March 11, 2014

மதம்- மனிதன்- மக்கள்தொகை

இன்ன தேதியில் இது நடந்தது என்ற பதிவே வரலாறு.. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், நேற்றைய நிகழ்ச்சி இன்றைய வரலாறு... ஆனால், ஒருவனின் வாழ்க்கை சாதனைகளே சரித்திரம்...

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ?
பதில் சொல்லுங்க மக்களே...


சமீப காலமாக, நமது நாட்டின் மீதான வருத்தம் எனக்கு அதிக அளவில் எழுகிறது..
தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று எல்லோரைப் போலவும் என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை..

நாட்டில் நடக்கும் அத்துணை பிரச்சனைகளுக்கும் அரசியல் நிலவரம் தான் காரணம்..
சாதி மதம் இனம் மொழி என்ற எதை வைத்து வேண்டுமானாலும் அரசியல் நடக்கிறது...

மதம் என்பது மனிதனை ஒழுக்க நெறியில் செலுத்த உதவும் கொள்கைகளை உள்ளடக்கியது... ஆனால், இதில் வருத்தம் என்னவென்றால், கொள்கைகள் யாவும் மனிதர்களால் எழுதப் பட்டது.

உலகத்தில் எங்கும் இல்லாத வளம் இந்தியாவில் இருந்திருக்கிறது...
நம் முன்னோர்கள் கொண்ட ஆசையினால் உலகெங்கும் உள்ள செல்வங்களை இங்கே கொண்டு குவித்தார்கள்.

ஆனால், நாம் கடுமையான சாபத்திற்கு ஆளாகி இருக்க வேண்டும். இல்லையேல் தற்சமயம் இவ்வளவு துயரத்திற்கு அவதிப்பட வேண்டியது இல்லை. இந்திய தீபகற்பம் மிகவும் மோசமான சூழலில் உள்ளது.

மதம் என்ற பெயரில் தீவிரவாத சக்தியை சொந்த நாட்டிலே வளர்க்கும் கும்பல் ஒரு பக்கம்.

உலகெங்கும் எங்கள் மதம் மட்டுமே இருக்க வேண்டும்.. என்று கண்டோர், கேட்போரையெல்லாம் மத மாற்றம் செய்யும் கும்பல் ஒரு பக்கம்.

மதமே இல்லை என்று, இருக்கும் மத நம்பிக்கைகளை எல்லாம் வாயில் வந்த மொழியில் தூற்றும் கூட்டம் ஒரு பக்கம்.

நாடு இழந்து, வீடு இழந்து, சாலையோரங்களில் வாழும் ஏராளமான கூட்டங்கள் ஒரு பக்கம்...

அறிவே இல்லாமல் வெறும் கூலிப்படைகளையும் பண பலத்தையும் விதண்டா வாதம் செய்யும் திறமையும் மட்டுமே உள்ள அரசியல்வாதிகள் கொண்ட கூட்டம் ஒரு பக்கம்...

நடப்பதை எல்லாம் பார்த்தும், நாளை வெட்டப்படுவோம் என்று தெரிந்திருந்தும், ஆட்டு மந்தைகளாய் வாழும் சாதாரன அப்பாவி [ஓட்டு போடுவதற்கே பிறந்த] மக்கள் ஒருபக்கம்.. 

வயிறை மட்டும் நிரப்பி, தனக்கென ஒரு கூட்டை கடன் வாங்கி வாழ்நாள் முழுதும் வரி செலுத்தும் கணினித் துறை சார்ந்த இயந்திரங்கள் ஒரு பக்கம்..

மேற்கண்ட தொந்தரவுகளினால், என்ன செய்வது என்றே தெரியாமல், எனக்கும் இதற்கும் சமந்தம் இல்லை, நான் பிறப்பால் மட்டுமே இந்தியன்.. ஆனால் உண்பது, உடுப்பது, உறவு கொள்வது என்று அனைத்திற்கும்  மேலை நாட்டை பின்பற்றும் பெரும்பான்மையினர் கூட்டம் ஒரு பக்கம்...



செல்லும் திசையறியாது திக்குமுக்காடும் இளங் கன்றிற்கும் மேற்கண்ட பிரிவைச் சார்ந்த கூடங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

வளர வேண்டிய குழந்தைகள் வாடிக் கிடக்கின்றன...
உணவுப் பற்றாக் குறை..
கல்லாமை..
கடன் வறுமை...
அரசியல் வன்முறைகள்... அத்துமீறல்கள் 
இது எல்லாத்தையும் கூட பொறுத்துக்கலாம்....

ஆனா வீட்ல குழந்தைக்கு சோறு இருக்காது... பொண்டாட்டி ஏதோ வேலை செஞ்சு சம்பாதிக்கற காசையும்  புடுங்கி, கொண்டுபோய்  குடிக்கிறான் பாருங்க.. என்னால தாங்க முடியல...

தட்டி கேக்க வேண்டிய அரசாங்கமே ஊத்திக் கொடுக்குது...

என்னுடைய இயலாமைய நினைச்சு வருத்தப் படுறேன்...
இந்த மாதிரி ஒரு மோசமான நாட்ல பிறந்ததிற்காக வருத்தப் படுறேன்.

நான் கால வெள்ளத்தில் பின்னோக்கிச் சென்று, ப்ருத்விராஜனுக்கும் சம்யுக்தாவிற்கும் நல்ல முறையில் திருமணம் ஏற்பாடு செய்ய ஆசைப் படுகிறேன்... அவர்களின் கந்தர்வத் திருமணம், பின்னாட்களில் நடந்த சரித்திரச் சரிவிற்கு மிகப் பெரிய காரணிகளாக இருக்கின்றன.

சும்மா இருக்குற சங்கை ஊதி  கெடுத்த மாதிரி, உள்ளூர் வைஸ்ராய்களே சேர்ந்து, இந்திய கலாச்சாரம் என்ன என்று அறியாத ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தனர், வீரம் பொருந்திய மன்னனாகவே இருக்கட்டும், சொந்தமா நாடே இல்லாமல் நாடோடியாய் வாழும் வெளிநாட்டு மன்னனுக்கு ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க வைத்திருக்காங்க.

ஒரு சின்ன உதாரணம்... தற்சமயம் 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருக்கும் சட்ட திட்டங்களோ, அரசியல் நிலைமையோ, பொருளாதாரமோ சரிஇல்லை என்பதற்காக, அமெரிக்காவை இங்கே வந்து ஆட்சி அமைக்க கூப்புடுவீங்களா?

உள்ளூர் நிலவரம் சரியில்லை... அதற்காக இந்திய கலாச்சாரம் என்ன என்று அறியாத ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தல் ஒரு சரியான தீர்வு அல்ல.. அதற்கான பின்விளைவுகளைத்தான் நாம் இப்போது நேரிட்டுக் கொண்டிருக்கிறோம்...

மதம் சார்ந்த மக்கள்தொகை பெருகி வருகிறது... இதற்கு, மதவாத, மதப் பெருக்கக் கொள்கைகளை இயற்றிய மதவாதிகளே காரணம்...

மதம் என்பது மனிதனின் மனதில் பரவ வேண்டியது...
விதவிதமான உணவுப் பண்டங்களாலும், கல்வி, கல்லூரி, மருத்துவ சலுகைகளாலும் ஈர்க்கப் பட வேண்டியது அல்ல.

மேலை நாட்டு மதத்தலைவர்களின் பேச்சுத் திறமை அபார சக்தி வாய்ந்தது... சாதாரன குடிகளின் பலகீனத்தை நல்லா தெரிஞ்சவங்க...
ரொம்ப சாமர்த்தியமா அப்பாவி ஏழை எளிய மக்களை ரொம்ப சுலபமா மதம் மாற வச்சாங்க... இன்னும் மாத்திட்டுதான் இருக்காங்க..

இந்து மதம் ஆயிரம் காலத் தொன்மை வாய்ந்தது...
அதில் இருக்கும் சாதிகளுக்கும், கிளை சாதிகளுக்கும் அளவே இல்லை எண்ணிக்கையில் அடங்காது...
நீங்கள் செய்வது எல்லாம் மூட நம்பிக்கை...
எங்கள் மதத்தை தழுவுங்கள்...
உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்...
நீங்கள் அனைவரும் சமமாகக் கருதப் படுவீர்கள்.. என்று கூறி பெரும்பான்மையான இந்துக்களை வேறு மதத்திற்கு மாற்றினார்கள்..,
கடைசியில், அந்த மேலை நாட்டு மதத்திலும் மேற்கூறிய சாதிகளும், கிளை சாதிகளும், சாதி உட்பிரிவுகளும்... எண்ணிக்கையில் அளவிட முடியாத அளவில் உருவாகி இருப்பதை சாதிச் சான்றிதல்கள் பறை சாற்றுகின்றன..

ஊரில் வசிக்கும் ஆயிரம் மக்களில் வருடத்தில் நூறு குழந்தை பிறக்கும் நாற்பது பெரியவர்கள் இறப்பார்கள்.
2001-ம் ஆண்டில் இருந்த 80% இந்துக்கள் தற்பொழுது இந்தியாவில் பாதிக்கும் மேல் வேறு மதங்களுக்கு மாறி விட்டார்கள் என்று சொன்னால், நம்பாமல் இருக்க முடியவில்லை.
இல்லை என்று வாதாடினால், 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின், மத வாரியான அறிக்கையை இந்திய அரசாங்கம் ஏன் இன்னும் வெளியிட மறுக்கிறது என்று பதில் கூறுங்கள்...

போனத பேசி ஒரு புண்ணியமும் இல்ல. இனி என்ன செய்ய-ன்னு பருப்பு மாதிரி கேள்வி மட்டும் கேக்குறாங்கயா.. பதில் தெரிஞ்சா பண்ணி இருப்போமல்ல...

இந்தியாவின் மாபெரும் சக்தியான மக்கள்தொகையே இந்தியாவை முன்னேற விடாமல் தடுக்கும் தொல்லையாக இருக்கின்றது..

மக்கள் தொகையைக் குறைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்....

ஒரு மனிதனுக்கு எத்தனை மனைவி-ன்னு கணக்கு எடுக்கறத விட்டுட்டு, ஒரு தாய்க்கு எத்தனை குழந்தைகள் இருக்கலாம்-ன்னு சட்டம் போடுங்க...

ஒரே குழந்தை போதும்-ன்னு குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கரவங்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் கொடுங்க... சிறப்பு சலுகைகளுக்கு உங்களுக்கு சொல்லியா தரணும் ?

அங்க சுத்தி, இங்க சுத்தி, எங்க வந்தாலும்., கடைசில அது இ.பி.கோ -வை மாத்தி எழுதுரதுலதான் வந்து முடியுது...

ஆமா... மாத்திதான் ஆகணும்.... வருஷம் ஒரு முறை காதலிய மாத்துறதுக்கு யாரும் இங்கே வருத்தம் தெரிவிக்கல... கடந்த நூற்றாண்டில் இயற்றிய சட்ட திட்தத்த மாத்த சொன்னா மட்டும் கோவம் வருதோ?

என்னால முடீலப்பா.....
எவ்வளவோ கஷ்டம் இருந்தாலும், வேதாத்திரி மகரிஷி இதுக்கு ஒரு மருந்து கொடுத்துட்டு போயிருக்காரு... தினமும் வாழ்த்துங்க..-ன்னு கீழ்க்கண்ட ஸ்லோகத்தை அருளிட்டு அவுரு போயிட்டாரு... அவர் போட்டுக்கொடுத்த ரூட்ல தான் என்னால நடக்க முடீல.

உலகப் பொது நல வாழ்த்து 
உலகமெல்லாம் பருவமழை ஒத்த படி பெய்யட்டும்...
உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்...
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்..
பகுத்தறிவில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கழகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும்..
கல்லாமை, கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்..
நல வாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி  வீசட்டும்...
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்...
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்...
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்...

மறந்த சரித்திரம்... மறைத்த தந்திரம்

சுமார் ஐயாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு...
இந்திய மன்னர்கள் தங்களின் பராக்ரமங்களை உலகம்தோறும் விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்த்திக் கொண்டிருந்த காலம்..

 மழை என்றால் என்ன? செழுமை எப்படி இருக்கும் என்று தன வாழ்நாளிலே காணாமல் தவித்த மக்கள் கூட்டம் ....இந்தியா தவிர மற்ற நிறைய நாடுகள்ல இருந்துச்சு..  இவிங்க எல்லாத்துக்கும் இந்தியா மேல ஒரு கண்ணு..
நம்முளுக்குன்னு ஒரு சமயம் கிடைக்கும்.. அப்போ இந்தியாவ நாம கைப்பற்றி ஆளலாம்..ன்னு தினம் தினம் கனவு கண்டுட்டே இருந்தாங்க..

அதுல ஒருத்தன்தான் இந்த சரித்திர சாகச நாயகன்-ன்னு விஜய் மாதிரி காசு கொடுத்து பட்டப் பெயர் வாங்கின ஹீரோ. அலெக்ஸாண்டர்


எத்தனையோ வம்சங்களாக கிரேக்கர்கள் அடிபட்டு அவர்க்கள் இந்தியாவை பழி வாங்குவதற்காக பல வழிகளில் சிந்தித்துக் கொண்டிருந்தனர்...
அவர்களின் வம்சாவளி வந்த அலெக்ஸாண்டர் அரிஸ்டாட்டிலடம் சூளுரைத்தான்... [in the year 336 B.C.E]
நான் ஒரு நாள் இந்தியாவை என் காலடியில் கொண்டு வருவேன்...

பாவம், பயபுள்ள, கஷ்டப்பட்டு வந்து போரஸ் என்ற பஞ்சாப் மன்னர்ட்டே தர்ம அடி வாங்கி ,  இந்திய மண்ணில் விளைந்த ஒரு புண்ணிய அம்பினால் அடிவயிற்றில் தைக்கப்பட்டு, உசரு உனக்காச்சு கொசுரு எனக்காச்சு-ன்னு ஓடினான்..
ஓடுனவன் செத்தான்-ன்னும் தெரியல, பொலைசான்-ன்னும் தெரியல..

ஆனா, அதப்போயி நம்ம வரலாற்று ஆசிரியர்கள் அவனை ஒரு மாவீரனா சித்தரிச்சு பிரபலப் படுத்திட்டாங்க...

இந்தியா எவ்ளோ பெருசு-ன்னு யாருக்குமே தெரியாது..

சமீப காலத்துல (ஒரு அம்பது அறுவது வருசத்துக்கு) பாகிஸ்தான் பிரிஞ்ச மாதிரி நிறைய அண்டை நாடுகளின் தொகுப்பே இந்தியா..

வெறும் வாயில சொன்னா நம்ப மாட்டோம்.. எனக்கு ஆதாரம் வேணும்-ன்னு நீ கேட்டீன்னா,  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..

Prof. Dinesh Agrawal 
Address: 156 Aberdeen lane, State College, PA 16801 USA 
Tel: (814)-234-3558 (Home), (814)-863-8034 (Office) 

Who had written the post "Alexander, The Ordinary"


போனத பேசி புண்ணியமில்ல,
பொறாம புடிச்சா கண்ணியம் இல்ல..
ஆனால் மக்களே,

நம் பண்டைய மன்னர்களின் வரலாறு மறுக்கப் படுகிறது.. மறைக்கப் பட்டிருக்கிறது.

எங்கே இவனுங்களோட முன்னோர்களைப் பாத்து இவனுங்களுக்கும் வீரம் வந்துட்டா, நாம அவ்ளோதான்-ன்னு பயந்து,
வரலாற்றை மாத்தி எழுத முடியாது, அதனால, புறக்கணிச்சுட்டாங்க..

பள்ளிப் புத்தகங்கள், ஒரு பாடத் திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு இருக்கும். அந்தப் பாடத்திட்டத்தில், ஒரு தமிழ் மன்னரைக் கூட நான் படித்ததாக ஞாபகம் இல்லை. ஏன் என்று ஆராய்ந்தால், பாடத் திட்டம் ஆங்கிலேயர்களால் வகுக்கப் பட்டது, அதை யாரும் இன்னும் மாற்ற முன்வரவில்லை..
விடிய விடிய தமிழ், தமிழ்-ன்னு கூவி என்ன புண்ணியம்... தமிழ் வரலாறு பாடப் புத்தகத்தில் இல்லையே?

ஒரு சின்ன உதாரணம்..
சோழர் கொடி பறக்காத போர்க் கப்பல் இல்லை,
அவை போகாத தீவும் இல்லை...

இராசேந்திர சோழர் உலகத்தையே ஆட்டிப் படிச்சவர்.. அவருக்கு இல்லாத வீரமும் கௌரவமும் அலெக்ஸாண்டருக்கு வழங்கப் பட்டு இருக்கு.
இதுக்கு காரணம் யாரு-ன்னா, நமது பெயரும் புகழும் வாய்ந்த, பொறுப்பில்லாத, கல்வி கேள்வி இல்லாத, ஒரு தொலைநோக்கு சிந்தனை இல்லாத அரசியல்வியாதிகளே..

தஞ்சை-ல இராஜராஜ சோழர் ஒரு கோயில் கட்டாம விட்டிருந்தா, சோழர்-ன்னு ஒரு வம்சம் இருந்ததையே மறைச்சு இருப்பாங்க..

வடக்கில் ஹர்ஷவர்த்தனர் என்ற பெயரைக் கேட்டாலே கதி கலங்க வைத்த வீரர் பிறந்த புண்ணிய பூமி இது..

சத்ரபதி சிவாஜி வர்றார்-ன்னு சொன்னாலே ஒன்னுக்கு போற மன்னர்கள் ஏராளம்..

அடுத்தவன் நாட்டை கெடுக்கரதுல கை தேர்ந்த ஆங்கிலேயர்கள்.. இந்தியாவை விட்டு வெளியேறும் பொழுது, சும்மா போகல,
இவனுங்க காலத்துக்கும் அடிசுகிட்டே இருக்கட்டும்-ன்னு ரெண்டு நாடா பிரிவினைய  உண்டு பணிட்டு போயிட்டானுங்க..

அப்போ அவனுங்க பத்த வச்ச கொல்லி இன்னும் கொழுந்து விட்டு எரிஞ்சுட்டுதான் இருக்கு..
அவனுங்க அன்னைக்கு போட்ட விதைதான் இன்னைக்கு வெறுப்பு-ன்னு ஒரு பெரிய மரமா வளந்து காய் காத்து, கணியல, ஆனா ஊருபட்ட குட்டி போட்டு அங்கங்கே வெடிச்சு கிட்டே இருக்கு..


நீங்களும் ஆடுங்கடா, அதை வைத்து நாங்க அரசியல் பண்ணிக்கறோம்-ன்னு சாமர்த்தியமா, ஆட்சிக்கு வர்ற எல்லா கட்சிகளுமே.. டாஸ்மாக் மாதிரி உறுதியா இருக்காங்க..

இல்ல-ன்னு சொன்னா, மத நல்லிணக்கத்துக்காக, எந்த அரசாவது,  ஏதாவது ஒரு நடவடிக்கையாவது எடுத்து இருக்குதா? எங்கே, எந்த ஒரு பிரச்னை நடந்தாலும், அதுல கட்சிக்கு என்ன லாபம், எனக்கு என்ன லாபம், என் சின்ன வீட்டுக்கு என்ன லாபம்-ன்னு நினைக்கும் ஆட்கள் இருக்கும்வரை, இந்தியாவ, இன்னும் 2000 சுபாஸ் சந்திர போஸ் வந்தாலும் காப்பாத்த முடியாது..


Conclusion:

  1. தமிழ் மற்றும் இந்திய சரித்திர நாயகர்களின் பராக்ரமங்கள், பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட வேண்டும்.
  2. பொய்யான, வரலாறு பதிவுகள் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப் பட வேண்டும்.
  3. பள்ளிகளில் மாணவர்களுக்கு மதம் சார்ந்த பிரார்த்தனை திணிக்கப் படக் கூடாது.

Thursday, March 6, 2014

தேன்மொழி

எனக்கு தமிழில் எவ்வளவோ எழுத வெண்டுமென்று ஆசை...
ஆனால் எழுதக் கொடுத்து வைக்கவில்லை..
[எனக்கு கூடதான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிக்கணும்-ன்னு ஆச... ]

அதாகப் பட்டது என்னவென்றால், ஒரு தமிழ்க் குடிமகனாகப் பிறந்தவன், தன்னுடைய வாழ்நாளில் சாதிக்க வேண்டிய சில ...
[டேய்.. நிறுத்து..இப்போ என்னா சொல்ல வர்ற?]

தேன்மொழி என் தேன்மொழி அவள் மொழி, தேன்மொழி...
[உன்னோட படைப்புத் தொல்லைக்கு ஒரு அளவே இல்லையாடா?]

என் தேன்மொழி, அவள் விழி மலர்விழி
காதலி அவள் என் காதலி..

மைவிழி, அவள் என்னைப் பார்க்கும் மார்கழி
பைங்கிளி பஞ்சை ஒத்த, பருவத்து சங்கிலி
[நீ ஒரு பெருச்சாளி.. அவ ஒரு செத்த எலி..]

என்னவள்..
தீராத வானத்தில் தினம் ஒரு நட்சத்திரம்...
காணாத வண்ணத்தில் தீட்டாத பெண் சித்திரம்...

தேன் தெவிட்டி, வாய் கசந்த உயிருக்கு
வாடாத வெண்ணிலா வெள்ளம்.
[ஸ்ட்ராபெர்ரி , பட்டர் ஸ்காட்ச் எல்லாம் இல்லையா?]

....இந்தக் கவிதை தொடரும்...

[இந்த உலகத்துலேயே, கவிதைக்கு டெலி சீரியல் மாதிரி தொடரும்...போட்ட ஒரே ஆளு நீதாண்டா.. எழுத முடீல-ன்னு ஒத்துக்கோ...  ]

Tuesday, March 4, 2014

நாட்டு நடப்பு...

ஒரு சாதாரணனின் அன்றாட மனநிலை-பிரதிபலிப்பு..

அதாவது மஹா ஜனங்களே... 
[யாருடா இவனுக்குள்ள தூங்கிட்டு இருந்த மிருகத்த எழுப்பி விட்டது..?]

நான் என்ன சொல்ல வர்றேன்னா...
[நீ ஒண்ணுமே சொல்ல வேணாம்..]

சமுதாயத்துல ஏகப்பட்ட அட்டூழியம் நடக்குது..
[ஆமா நீ எழுதுறது உட்பட]

நிம்மதியா தூங்க முடியல..
நல்லா சாப்புட முடியல 
[ஆங்... எங்கேடா இன்னும் மேட்டருக்கு வரலியே-ன்னு நினைச்சேன்..]

யார் யாரெல்லாமோ அரசியல்ல நிக்குறாங்க.. புதுசு புதுசா கட்சி ஆரம்பிக்குறாங்க..

பேஸ்புக்கு-ங்குறாங்க, டேட்டிங்-ங்கறாங்க..
[டேய், உனக்கே ஓவரா தெரியல.. நீயே  200 fake அக்கவுண்ட் வச்சிட்டு திரியுற..]

கலாசாரம் சீரழியுது..
மனைவிகளை கட்டுப் படுத்தவே முடீல... அடங்க மாட்டேன்குறாங்க..
[நீ எதுக்குடா அடுத்தவன் மனைவிய கட்டுப்படுதுற?]

விஜய் டிவி பாத்து நிறைய கெட்டு போறாங்க.. (மாமி)யாருக்கும் மரியாதை கொடுக்கறது இல்ல. 
எதிர்த்து பேசுறாங்க.. 
வீட்டு வேலைகளை எதுமே செய்ய மாட்டேங்குறாங்க... 
சினிமா, பார்க், பீச், ஷாப்பிங் கூட்டிட்டு போக சொல்லி தொந்தரவு கொடுக்குறாங்க..
கார், வீடு வச்சிருந்தா மட்டுமே கல்யாணம் பண்ணிக்குறாங்க..
இல்லைன்னா வாங்க சொல்லி உயிரை எடுக்குறாங்க..
[நீ எப்பவுமே ஞாயித்து கிழமை மட்டும்தான இப்புடி பொலம்புவ, இன்னைக்கு உனக்கு ன்னா வந்துச்சு?]

எல்லா விலையும் ஏறுது, விலைவாசிய கட்டுப்படுத்த முடியல..
[டாபிக்க மாத்தாத, மேட்டர் என்னன்னு மட்டும் சொல்லு  ]

.......என் பொண்டாட்டி, நான் சொல்ற பேச்சை கேக்க மாட்டேன்றா.. அவ அம்மா பேச்சை தான் கேக்குறா..
....
[இவ்ளோதானா... இது உனக்கு மட்டும் இல்ல சாணி மண்ட, தாலி கட்டுனவன் எல்லாருக்குமே இதே சிச்சுவேசன்தான்.. 
பொலம்பறத விட்டுட்டு, போய் மூஞ்சி கழுவீட்டு வந்து வேற வேலை ஏதாவது இருந்தா பாரு...]

....சிறிது நேரம் கழித்து ...

படிக்குற பசங்க எல்லாம் இப்போ அதிகமா காதலிக்குறாங்க...
[டேய், எங்கே அந்த மூஞ்சிய காட்டு...9-ம் கிளாஸ் லேயே 12 பொண்ணுங்க பின்னாடி சுத்தின நாயி இது, இப்போ வருத்தப் படுறியா...] 

இளைய சமுதாயம் சீர் குழையுது... அவங்கள வழி நடத்த யாரும் இல்ல..
[அதான், நீ இருக்கியே..]

சமுதாயம் உருப்படனும்-ன்னா அதுக்கு உடனடியா சில சட்டதிட்டங்கள மாத்தியே  ஆகணும்..
[எங்கே, என் கன்னுகுட்டி, நீ போயி மாத்து பாக்காலாம்.. ஜட்டி பணியன கூட மாத்த முடியாது, இவன்லாம் வாய் பேசுறான்..]

எந்த ஒரு மாற்றமும் மீடியா கிட்டே இருந்துதான் ஆரம்பிக்குது.. அதனால, சின்னத்திரை, வெள்ளித்திரை, விளம்பரம், தினசரி மற்றும் நாள், வார, மாதஇதழ்கள் உட்பட அணைத்து ஊடகத்திற்கும் டிரஸ் கோடு உடை கட்டுப்பாடு கொடுக்கணும்.. 
பெண்களை கவர்ச்சிகரமா, தரக்குறைவா எந்த ஒரு ஊடகமும் காட்டக் கூடாது... 
[அப்படீனா, சினி-மினி இண்டஸ்ட்ரில யாருமே பொழைக்க முடியாது...]

இந்த சட்டம் இந்தியநாடு முழுவதும் நடைமுறைப் படுத்தனும்.. நம்ம கலாசாரத்தை மீடியா சீர்குலைக்காம இருந்தாலே போதும்... மத்தது எல்லாம், தன்னால விடியும்..



Thursday, February 27, 2014

சமீபத்தில் நான் விரும்பி ரசித்த குறுங்கதை..

தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வரை.

நான் வீட்டிலிருந்து பெங்களுருக்கு கிளம்பினேன்.
ஒரே பஸ்-ல் ஏறாமல், தர்மபுரி வந்து, கிருஷ்ணகிரி வந்து, ஓசூர் வந்து பெங்களூர் வந்தேன்.
தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வண்டியில் ஏறினேன். இடம் இல்லாத காரணம் ஒன்று, தனியார் வாகன மோகம் இரண்டு, வேகமாக செல்லக்கூடிய வாகனங்களில் பயணம் செய்ய எனக்கு ஆசை.....
பாதி தூரம் சென்றவுடன் ஒரு பெண் வாந்தி எடுத்து விட்டாள். நான் சற்றே தூரமாக நின்று கொண்டிருந்ததால் என் மீது படவில்லை.
ஆனால்., அப்பெண்ணைச் சுற்றியுள்ளவர்களின் மீது நல்லாவே பட்டுடுச்சு. அதுல ரொம்ப அதிகமா பாதிக்கப் பட்டவர், ஒருவர்.,
அவர் தன் மனைவி குழந்தைகளுடன் உட்கார்ந்து இருந்தார். அந்த வாந்திப் பெண்மணி அடுத்த ஸ்டாப் லையே இறங்கி விட்டார். நம்ம ஆளு கொஞ்ச நேரம் பொருத்து பார்த்தாரு, அப்புறம் காலை கொஞ்சம் சுத்தம் பண்ணலாம்-ன்னு அடுத்த ஸ்டாப் ல இறங்குனாரு., பட், அவரு சுத்தம் பண்ணிட்டு ஏற்றதுக்குள்ள டிரைவர் வண்டிய எடுத்துட்டாரு.... அவரோட மனைவி கொஞ்ச நேரம் கழிச்சு தான் ரியலஸ் பண்ணி சவுண்ட் கொடுத்தாங்க. பட் வி ஹவே க்ராசுடு சம் கிலோ மீட்டர்'ஸ். குழந்த வேற அழுதுகிட்டே இருனுன்தது.. நாங்க எல்லாம் சேர்ந்து கொஞ்சம் சமாதானப் படுத்தி கிருஷ்ணகிரி வரைக்கும் கூட்டிட்டு போயிட்டோம். பஸ் ஸ்டான்ட் வந்த வுடனே., எல்லோரும் சட்டு புட்டுன்னு இறங்கி ஓடிட்டாங்க., நான் அந்த அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணி., பிளாட் போரம் ல இறக்கி விட்டேன். அவங்க கணவர் வரும் வரை கூட இருந்து வழியனுப்பலாம்-ன்னு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினேன். 30 மினுட்ஸ் ஆகியும் அந்த ஆளைக் காணோம். அப்புறம் மைக் ல அவர் பேரு சொல்லி கூப்பிடு பார்த்தேன். அந்த அம்மா-கிட்டே அவரோட போன் நம்பர் இல்லே. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு, அவங்க, அவங்களை சைக்கிள் ஸ்டான்ட் ல கொண்டு பொய் விட சொன்னாங்க. நானும் சரி-ன்னு அவங்களை கூட்டிட்டு நடந்தேன்.
கொஞ்ச தூரம் நடந்தவுடன், யாரோ யாரையோ அடிக்கற மாதிரி சத்தம் கேட்டது. நான் என்னடா-ன்னு திரும்பி பார்த்த., அந்த அம்மாவோட வீட்டுக்காரன் அவங்களை அடிச்சுட்டு கண்டபடி திட்டிட்டு இருந்தான். அந்த வார்த்தைகளை என்னால் இங்கே சொல்ல முடியாது. அப்புறம், என்கிட்டேய நடந்ததை சொன்னான். நான் அவன்கிட்டே, "நானும் அதே பஸ் ல தான் இருந்தேன்"-ன்னு சொல்லி அவங்க கிட்டே குழந்தைய ஒப்படைச்சுட்டு பஸ் ஏறினேன்.

என்ன உலகம்டா இது?
யாருமே கண்டுக்காம இருந்தவங்களுக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணினேன். எனக்கு நன்றி சொல்லலன்னாலும் பரவாஇல்லை ஆனா, அந்த ஆள்-ன்னால கண்டு புடிக்க முடியலன்னு அந்த அம்மாவை கண்டபடி திட்டுனது, எனக்கு புடிக்கல.
காரணம் என்னன்னா?, நாங்க பஸ் இறங்குன இடத்துலேயே, உட்காந்துட்டு இருந்தோம், ஆனா அந்த ஆளு சைக்கிள் ஸ்டான்ட் + பஸ் ஸ்டான்ட்-க்கு வெளியல எல்லாம் தேடிட்டு இருந்து இருக்கான்....
சரி வாழ்க வளமுடன்னு அவங்களை என் மனசுக்குள்ளே வாழ்த்திட்டு நான் என்னோட பயணத்தை தொடர்ந்தேன்.
இதுல ஒரு மணி நேரம் எனக்கு செலவானது தான் மிச்சம்.

சிறைகளும் சிறகுகளும்


இந்த வார புதிய தலைமுறை இதழில் வெளிவந்த சிறைகளும் சிறகுகளும் -கட்டுரைக்கு என்னுடைய கருத்து...

ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் அறைகிறான்?  நாட்டில் பெரும்பாலும் ரத்தக் கொதிப்பு ஆண்களுக்கே அதிகம்..... 
பெரும்பான்மையான காரணம்: குடும்ப மன அழுத்தம். 
ஒரு பெண்- தாய் தான் செய்ய வேண்டிய கடமையில் சரியாக இருந்து, அவளை அரசு மதுபானக் கடையில் குடித்து விட்டு வந்து அடிப்பது வன்முறை! 
அதற்கான சட்ட திட்டங்களைத் தெளிவு படுத்தியதற்கு நன்றி.  
ஒரு ஆண்/ அப்பா  சரியாக, பொறுப்பாக, மரியாதையாக, மானத்துடன் இருந்து,  அவருடை மனைவி கலாச்சார சீரழிவுடன், கற்பை மறந்து சமுதாயத்தைக் கெடுத்தால் ஏதாவது சட்டம் அவளை தடுத்து நிறுத்துகிறதா? தயை கூர்ந்து மன உளைச்சலுடன் வாழும் மணமகன்களுக்குத்  தெரிவு படுத்துங்கள்...

என்னுடைய பார்வையில் 
நிறைய  ஆண்களும் சரியில்லை; நிறைய பெண்களும் சரியில்லை... ! 
- ஒரு யதார்த்தமான உண்மை!... 
இதில் அவ்வையாரின் கல் உண்ணும் பழக்கைத்தை புலிகளின் புதல்வர்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்த கவிஞரும்., சமுதாய சீர்கேடுக்கு ஒரு சிறு  பங்கு வகிக்கிறார். 
ஆதி  காலம் முதல் ஒருவனைப் பார்த்தே ஒருவன் கற்கிறான், வாழ்கிறான் -  இதுதான் நாகரீகம்... 
அந்த காலத்து ஒளவையாரே தண்ணி அடிச்சிருக்காங்க, நாம ஏன் அடிக்கக் கூடாது-ன்னு நம்ம வீட்டு வயசுப் பொண்ணுங்க எல்லாம் கிளம்பிட்டாங்க- ன்னா என்ன பண்றது? 
டிவி சீரியலில் வரும் கூத்துக்கள் எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடக்கின்றது. நகர குடும்பங்களில் [கடந்த 5 ஆண்டு அளவில் திருமணமான வீடுகளில்] முடிந்தால் ஒத்து வாழ்வது, இல்லையேல் விவாகரத்து... இதுதான் இப்போ ட்ரெண்டு.. 
நீ வேலைக்குப் போறியா? நானும் வேலைக்குப் போறேன்!.. நீ ஊர் சுத்துறியா? நானும் ஊர் சுத்துறேன்!... நீ அடிக்கறியா? நானும் அடிக்குறேன்!... எல்லா விதங்களிலும் எல்லா வேலைகளும் பெண்கள் செய்யறாங்க...

பத்து பொண்ணுங்களை லவ் பண்ணிட்டு, ஊர் சுத்திட்டு ட்டேடிங் போயிட்டு, நாம நல்ல பிரண்ட்ஸ் ஆவே இருக்கலாம்-ன்னு பிரிஞ்ச பையனும், ஊருக்கு குறைந்த பட்சம் இருபது பேர்  கூட ட்டேடிங் போன பெண்ணும் கலியாணம் கட்டிக்குறாங்க... அப்புறம் எப்புடி விளங்கும்? 
எந்த ஒரு மாற்றத்திலும் பயனும் இருக்கு. பங்கமும் இருக்கு... உதாரணம்:  கணினி, உலா பேசி, இன்டர்நெட், மக்களாட்சி, நாகரீக வளர்ச்சி, .. இன்னும் எத்தனையோ இப்புடி மாற்றங்கள் இருக்கு.
எல்லாம் கலி படுத்துற பாடு-ன்னுட்டு போக வேண்டியதைத் தவிர, எங்களால் வேற எதையும் செய்ய முடியல. 
ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம்  எடுக்கனும்-ன்னு நான் விரும்புறேன் 
  • மது ஒழிப்பு
  • கள்ள நோட்டு ஒழிப்பு
  • விலை மகள் விடுதிகள் ஒழிப்பு 
  • எந்த ஒரு மக்கள் தொடர்பு சாதனத்திலும் கவர்ச்சி [ஆடைக்குறைப்பு] ஒழிப்பு 
எப்படியும் யாரும் என்னோட இந்த அறைகூவல மதிக்கப் போறது இல்ல.. இருந்தாலும் எழுதி வைக்கிறேன்....