Monday, August 25, 2014

அமேஸான் காடுகளில் இருந்து...

இயற்கை நமக்கு பல அரிய மூலிகைகளைக் கொடுத்து இருக்கிறது.. ஆனால் அவை யாவும் பொய் என்று போலி சித்த மருத்துவர்கள் நிராகரிக்க வைத்து விட்டார்கள்.

உடலில் ஜீரன மண்டலத்தில் இருந்துதான் எந்த நோயாக இருந்தாலும் ஆரம்பிகின்றன..

பெரும்பான்மையான நோய்களுக்கு முறையான மருத்துவம் சித்த மருத்துவ மூலிகைகளில் இருக்கிறது, அவை உடலுக்கு பக்க உபாதைகள் ஏதும் கொடுக்காது.,

ஆனால் நவீன / ஆங்கில மருத்துவ முறை இதனைக் குப்பை என்று நிராகரிக்கிறது. சித்த மருத்துவ மூலிகைகளை அங்கீகரித்தால், கொள்ளை விலையில் விற்கும் ரசாயன மருந்துகளின் விற்பனை படுத்துவிடும் என்ற ஒரே காரணம்தான்.

இன்று அரைகுறை ஆடையில் ஒரு பெண் வலம் வந்து, அவளைவிட கவர்சிகரமான வார்த்தைகளில், என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக இருக்கிறோம்.

அமேஸான் காடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சில அறிய வகை மூலிகைகளால் ஆன தைலத்தை விரும்புகிறோம், [மேலும் விபரங்களுக்கு மிடாஸ் டச் - எம்.எல்.எம் காட்சிகளை சதுரங்க வேட்டை எனும் படத்தில் பார்க்க] ஆனால், நமது பாரம்பரிய மூலிகைத் தைலங்களை வசதியாக மறந்து விட்டோம்.

ஆங்கில / ரசாயன மருந்துகளில் போலிகளைப் பிரித்தறிவது கடினம், ஏனெனில் அவை உடலில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களில் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதில்லை. ஆனால் சித்த மருந்துகளில் நீங்கள் பரிச்சயம் அடைய ஒரு சில முயற்சிகள் தேவை. பின் போலிகளை எளிதில் கண்டு கொள்ளலாம்.

சித்த மருந்துகளால், உடனடி நிவாரணம் கிடைக்காது, ஆனால் நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.

வளம் பெறுவோம்., வாழ்க வளமுடன்.




No comments: