Tuesday, May 4, 2010

மூணாறு பயணம் முடிவிலா பயணம்

         ஊரே கேளு, நாடே கேளு-ன்னு நானும் என்னோட பிரண்ட்ஸ்-ம் முன்னார் டூர் போனோம். வெள்ளி கிழமை சாயும்காலம் கிளம்பி, டிரைன புடிச்சு, ஹோசூர் போயி, அங்கே அருசுவை உணவகத்துல வயிறு முட்ட தின்னுபுட்டு, ஒரு கேவலமான டெம்போ டிராவலர்ல ஏறி, எங்களோட பயணத்தை தொடர்ந்தோம்.

         எங்க நேரம் உச்சியில இருந்திருக்கணும். நாங்க வண்டி எறுனவுடனே, மழை கொட்டோ கொட்டு-ன்னு கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. எங்களுக்கு வாச்ச  டிரைவர் ஒரு அவிஞ்ச மண்டையன். அவனுக்கு பகல்லயே பசு மாடு தெரியாது, இதுல இருட்டுல எங்கே எருமை மாட்டை பாராது வண்டி ஓட்டப்போறான்?
        டவுன் பஸ்-அ விட, ஸ்லோவா ஒட்டிகிட்டே போய், ராத்திரி ஒன்றை மணிக்கு, எங்க வீட்டுல நிறுத்தினான். நான் எங்க வீட்ல தூங்கிட்டு இருந்த எல்லோரையும் எழுப்பி, இதுதான் என்னோட சினேகிதிகள், சிநேகிதர்கள்-ன்னு அறிமுகம் செஞ்சு வச்சு, அவங்க போட்டு தந்த டிதண்ணிய குடிச்சுபுட்டு, மறுபடியும், அதே வண்டியில ஏறினோம். அவனோட வண்டியில உருப்புடியா வெளில சொல்ற அளவுக்கு ஒண்ணுமே இல்ல. ஆடியோ செட்-அ போட்டா, தலை வலி மட்டும் தான் வருது, பாடு வர்ற மாட்டேனுது, வீடியோ-வ பார்த்தா, வாந்தி வருது, டான்ஸ் வர்ற மாட்டேங்குது. அதா, இத-ன்னு ஒரு வழியா உடுமலை போய் விடிய காலைல சேர்ந்தோம். 
           
          அப்புறம் தான் அவன் சொல்றான், நாம பொள்ளாச்சி போய், போர்டர்-க்கு போய் கேரளா பெர்மிட் போட்டுட்டு வரணும்-ன்னு. சரிட போய்த்தொலை-ன்னு சொன்னேன். அதுக்கு ஒரு முப்பத்தஞ்சு கிலோமீட்டர் வேஸ்ட். அப்புறம் போன வழியிலே திரும்பி வந்து, பார்டர கடந்து, கேரளா-வுல கால் வைக்கலாம்-ன்னா அதுக்கு வரிசையா 3 செக் போஸ்டு. அவனவனுக்கு ஒரு 50 ரூபாவா அழுதுட்டு, அப்புறம் மெதுவா, அந்த ஒத்தை ரோட்ல காட்டை கடந்தோம்.

           மலை ஏற ஆரம்பிக்கும் போதே, மணி பத்துக்கு மேல ஆய்டது. அந்த அவிஞ்ச மண்டையன் எங்களை மூனு மணிக்கு தான் கொண்டு போய் முன்னார்ல விட்டான். அப்புறம் எங்களுக்காக எங்க கைடு காத்துகிட்டு இருந்தாரு. அவரு இன்னும் ஒரு 13 கிலோமீட்டர் எங்களை கொட்டிட்டு போய், ஒரு ஹோம் ஸ்டேல விட்டாரு. 

           சும்மா சொல்லக் கூடாது. that was really lovable place to relax.
எங்களுக்கு அந்த இடம் ரொம்ப புடிச்சு போச்சு. நாங்க உள்ளே போனவுடனே மழை பெய்ய ஆரம்பிச்சது. ஒரு மூணு மணி நேரம். விடாம கொட்டுச்சு. அப்புறம் சிறு தூறல். நாங்க அதுக்குள்ள, குளிச்சுட்டு ரெடி ஆயிட்டோம். அப்புறம் அந்த சிறு தூறல் மழைல வெளில வந்து கொஞ்ச நேரம் விளையாடிட்டு இருந்தோம். அப்புறம் மறுபடியும் மூணாருக்கு போய் டின்னெர் சாப்புடலாம்-ன்னு போனோம். அன்னபுர்ணா-ன்னு ஒரு ஹோட்டெல பார்த்து உள்ளே போனோம்.
            உள்ளே போனவாட்டி தான் தெரிஞ்சது, அது ஒரு மார்வாடி நடத்துற ஹோட்டல்-ன்னு. சரி, இதை விட்டா வேற வழி இல்லன்னு ஏதோ சாப்புட்டு, ஹோம் ஸ்டே-க்கு போயி சும்மா குப்பு-ன்னு படுத்ததுதான் தெரியும். அப்புறம் ஞாயிற்று கிழமை காலையில 6 மணிக்கு தான் சுய நினைவே வந்துச்சு. குளிச்சுட்டு, மூனாரை சுத்தி பார்கலாம்-ன்னு கிளம்பினோம்.

            அந்த கொடுமைய எப்படி என் வாயால சொல்லுவேன். எங்கே போனாலும் கூட்டம். எந்த பக்கம் பார்த்தாலும் கூட்டம். யானை சவாரி செய்யலாம்-ன்னு முதல்ல மாட்டுபட்டி ரூட்டுல கிளம்பினோம். அங்கே போய் கூட்டம் அதிகமா இருக்கு-ன்னுட்டு, டேம் பார்த்துட்டு, போட் ரைடிங் பண்ணிட்டு பிறகு யானை மேல சவாரி செய்யலாம்-ன்னு டேம்-க்கு போனோம். அங்கே போய் பார்த்தா, ஒட்டு மொத ஊரே திரண்டு வந்து, நானும் போட்ல போறேன்-ன்னுட்டு நின்னுக்கிட்டு இருந்துச்சு. என்னடா கொடுமை இது-ன்னு எக்கோ பாயிண்டுக்கு கிளம்பினோம். அங்கே ரொம்ப டிராபிக் அதிகமா இருந்ததால, வேண்டாம்-ன்னுட்டு யானை சவாரி செய்யற இடத்துக்கே திரும்பி வந்தோம்.
           எங்க நேரம் நல்ல இருந்ததால, கூட்டம் அவ்வளவா இல்லை. ரூ. 350 தலைக்கு மொய் எழுதிட்டு, எல்லாரும் யானை மேல ஏறி அரை மணி நேர சவாரி செஞ்சோம். அது ஒரு சூப்பரான எக்ஸ்பிரியன்ஸ். யானையோட முதுகெலும்பும், என்னோட இடுப்பு எழும்பும் சேர்ந்து ஒரே நேரத்துல ஆடுச்சு. லைட்டா வலி. பட் ஓகே. நான் அதை என்ஜாய் பண்ணினேன்.
அப்புறம், ஷாப்பிங் பண்ணலாம்-ன்னு மூணு மணிக்கு எல்லோரும் மூணாறு பஸ் ஸ்டாண்ட்ல புறப்பட்டோம். 4 , நாலரைக்குதான் கொஞ்சமா ஒரு 4  கிலோ சாக்லேட் வாங்கிட்டு திரும்பி வந்து, எங்களோட வீணாப்போன வண்டியில மறுபடியும் ஏறினோம். தேனீ வழியா போங்க, போறப்ப, வியு நல்ல இருக்கும்-ன்னு எங்க கைடு சொன்னாரு. சரி ஓகே-ன்னு நாங்களும் தேனீ ரூட்டுல மலைய விட்டு கீழே இறங்கினோம்.

              ரொம்ப அருமையா இருந்துச்சு. எங்கெங்கு காணினும் பசுமை. தேநீர் தோட்டங்கள் நிறைந்த பாதை. ஒரு சில இடங்களில் நீர் வீழ்ச்சிகள். ஒரு வழியா 3 மணி நேர பயணத்துக்கு அப்புறம் போடி-(போடிநாயக்கனூர் )-க்கு வந்தோம்.
               அப்புறம் தேனிக்கு போய் டின்னெர் முடிச்சுட்டு கிளம்பினோம். அங்கே ஒரு கூத்து. 
             ஒரு வயசான ஆளு, எங்களை இளநீர் சாப்புட சொல்லி வற்புறுத்தி சீவி சீவி கொடுத்துகிட்டே இருந்தான். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்கலை அவன் பாட்டுக்கு சீவிகிட்டே இருந்தான். அப்புறம் நான் போயி, அந்த ஆள்கிட்டே., போதும். எவ்வளவு ஆச்சு-ன்னு கேட்டேன்.  200 கொடுங்க-ன்னு சொன்னான்.  எனக்கு வந்தது பாருங்க கோவம்,  மொத்தம் 8 இளநீர் தான் குடிச்சு இருக்கோம், எதுக்கு இவ்ளோ கேட்குறீங்க-ன்னு கேட்டேன். இப்போ எல்லாம் சீசன் இல்லீங்க, இளநீர் கிடைக்குறதே கஷ்டமா இருக்கு. சரி, ஒரு இளநீர் 15 மேல போட்டு, 150  கொடுங்க-ன்னு கேட்டான். நாங்க உன்கிட்டே இளநீர் வேணும்னு கேட்டோம, நீயா வந்து எங்களை வற்புறுத்தி கொடுத்துட்டு, எதுக்கு இப்படி காசு கேட்குரே-ன்னுசத்தம்
  போட்டுட்டு, 100 ரூபா கொடுத்துட்டு வந்து வண்டி ஏறினோம்.

             அப்புறம் தேனீ பஸ்-ஸ்டான்ட்ல வண்டிய நிறுத்திட்டு, போய், நல்ல CD, DVD வாங்கி வந்தோம். டிராவலர் அதிர்ர மாதிரி குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடிகிட்டே எங்களோட பயணத்தை தொடர்ந்தோம். அதுவும் கொஞ்ச நேரம் தான். ஹிந்தி பாட்டு போடா சொல்லி நார்த் இந்தியன்ஸ் எல்லாம் கம்பல் பண்ணினாங்க. சரி-ன்னு ஹிந்தி பாட்டை போட்டால், எந்த பாடும் டான்ஸ் ஆடுற மாதிரி இல்லை. சோ, ஒரு அரை மணி நேரம் டான்ஸ் ஆடிட்டு, அப்புறம் எல்லாம் பிளாட் ஆயடுசுங்க.
           அந்த அவிஞ்ச மண்டையன், ஒழுங்காவே வண்டி ஓட்டுல, ரொம்ப கேவலமான ஸ்பீட்ல பை பாஸ் ரோட்ல வந்துட்டு இருந்தான். அதிகபட்சமான வேகம் அவன் போனது 70 kmph  கூட இருக்காது.
அந்த மாட்டு வண்டிய கிருஷ்ணகிரி வரைக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு இழுத்துட்டு வந்து, ஒரு கால் மணி நேரம் ரெஸ்ட் எடுத்துகிட்ட-ன்னு கேட்டான். சரி போய்த்தொலை-ன்னு நாங்களும் சரி-ன்னு சொன்னோம். ஒரு மணி நேரம் நல்லா தூங்கிட்டான். அப்பறோம் நாங்க அவனை எழுப்பி, மறுபடியும் அவனை வண்டி ஓட்ட சொல்லி, பெங்களுருக்கு இழுத்துட்டு வந்தோம்.
இங்கே இல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போகறதுக்கு, 7 மணியாயிடுச்சு.
அப்புறம் வழக்கம் போல, ஒரு 3 மணி நேரம் குட்டி தூக்கம் போட்டுட்டு, ஆபீஸ்-க்கு எழுந்து ஓடிட்டோம்.
  
will include the photographs soon.

No comments: