Wednesday, November 18, 2015

செர்லாக் கோம்சும் (Sherlock Holmes) தனி ஒருவனும்

யாரிந்த ஷெர்லாக் ஹோம்ஸ்?
ஏதோ எல்லாமே தெரிஞ்ச மாதிரியே பேசிக்கறானுங்களே...

சிங்கத்தின் பார்வையில் ஷெர்லாக் ஹோம்ஸ் இதோ...

18ம் நூற்றாண்டின் பின் பாதிகளில், சர் ஆதர கொனன் டயல் எனும் பிரேத பரிசோதனை மருத்துவர்,  அவருக்குள்ள ஒளிஞ்சிட்டு இருந்த படைப்பாளிய ஒரு நாள் தட்டி எழுப்பினார்.

Sherlock Holmes (/ˈʃɜrlɒk ˈhmz/) is a fictional character created by British author and physician Sir Arthur Conan Doyle. A London-based "consulting detective" whose abilities border on the fantastic, Holmes is known for his astute logical reasoning, his ability to adopt almost any disguise, and his use of forensic science to solve difficult cases.

பிரேதங்களைப் பற்றிய அனைத்தும் அவருக்கு அத்துப்படி ஆனதால, மிக மிக சிறிய ஆதாரங்களை வைத்து பெரிய கடின குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கலாம் என்பது டாயல் கருத்து.


அதன்படியே, அவரும் ராஜேஷ் குமார் மாதிரி க்ரைம் நாவல எழுத ஆரம்பிச்சாரு. அவர் எழுதின கதைகள்ல வரும் நாயகனின் பாத்திரமே இந்த ஷெர்லாக் ஹோம்ஸ். மற்றும் சந்தானம் மாதிரி ஒரு ஜான் வாட்சன். சும்மா சில்றத் தனமா வெறும் கொலை கொள்ளைகள கண்டுபிடிச்சா நம்ம ஹீரோவுக்கு என்ன வித்தியாசம்? அதனால உலகப் போரை உருவாக்கும் வல்லமை படைத்த ஒரு வில்லன் மொரியார்ட்டி. அவனோட புத்திசாலித் தனமான போர்த் தந்திரங்களை, ஷெர்லாக் தனது தடயவியல் நுணுக்க அறிவைக் கொண்டு எப்படி முறியடிக்கறார் போன்ற கதை.  

இமைகள் வலிக்கறது கூட தெரியாம படிக்க வைக்கும் அளவு சுவாரஸ்யம் மிக்க கதைகளா எழுதி தள்ளிட்டு,டாயல்  செத்து போயிட்டாரு.



ஆனா, அவரோட கதைகள, பாகவதர் காலத்திலும் படமா எடுத்தாங்க.
ரஜினி கமல் காலத்திலும் எடுத்தாங்க.
விஜய் அஜித் காலத்திலும் எடுத்தாங்க.
இன்னும் எடுத்திட்டு இருக்காங்க.

இது மட்டும் இல்லாம, மெட்டி ஒலி  நாதஸ்வரம் காலத்திலும் சீரியல்களா பிபிஸி எடுத்து தள்ளி இருக்கு.


ஆனா, நம்ம ரீமேக் ராஸா, எல்லாத்துக்கும் ஒரு படி மேல போய்,

ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தையே தமிழ்ல தன்னோட பாணில சொந்தமா தனி ஒருவன்-ன்னு ஒரு படமா எடுத்து கொடுத்திருக்காரு.


மித்ரனாக வலம் வரும் ஸ்பைடர் வெப் அனாலசிஸ், அல்டிமேட் ஐ பி எஸ் ரீமேக் ரவி, தமிழில் ஷெர்லாக்-ன் பாத்திரத்தை கன கச்சிதமாக செய்து இருக்கிறார்.


சித்தார்த் அபிமன்யுவே, நமது உலகத்தரம் வாய்ந்த கிருமினல் மொரியார்டி.

ஐரின் அட்லாராக நயன்.

டின் டிங்ட டின்.. எனும் தீம் அப்படியே சிறிது பட்டி டிங்கரிங் பார்த்து செருகப் பட்டிருக்கிறது.

மீதமுள்ள இனம் புரியாத பொருத்தங்களை நீங்களே பாத்து கண்டறிய விடுகிறேன்.

எப்படி த்ருஷ்யம் பாத்ததால எனக்கு பாபநாசம் பிடிக்கலையோ, அதே மாதிரி, ஷெர்லாக் படம் ஒன்னு விடாம பாத்ததால, தனி ஒருவன் படத்த என்னால பாராட்டாம இருக்க முடில. தமிழில் ஒரு நல்ல முயற்ச்சியே என்று கூறுவேன்.

படம் நல்ல படம்தான்.
பார்க்கலாம்.

ஆனால் இது சுட்ட பழம்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், தனி ஒருவன் நல்ல பிரிண்ட் இணையத்தில் வராமல் பார்த்துக் கொண்ட [ஒரு மாத அளவில்] ராஜா அவர்களுக்கு பாராட்டுக்கள்.





  

Thursday, October 1, 2015

நாடுமாறி

தென் மாவட்டங்களில் புழக்கத்தில் இருக்கும் கெட்ட வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

அவசாரி
வேசி
சவத்த மூதி... போன்ற பொன்மொழிகளைக் கேட்டாலே அர்த்தம் புரியும். ஆனால் இது சற்றே வித்யாசம்.

ஆண்களின் நாடுதலை மாறி மாறி விரும்புபவள் என்று பொருள். Source: @kryes

சரி நாம மேட்டருக்கு வருவோம்.

தாக்க தாக்க -ன்னு சமீபத்துல ஒரு படம் வந்துச்சி.,
அத நான் நேத்து ராத்திரி பாத்து தொலைச்சிட்டேன்.

கெரகம் புடிச்ச எழவு மாதிரி இந்த படம் என்னைய தூங்கவே விடல.

பெத்த அப்பனே  15 வயசு பொண்ண விலைக்கு விக்குறான்.
அந்த பொண்ண கொடுமைப் படுத்தி, பாலியல் தொழில்ல ஈடு படுத்தி சம்பாதிக்கரானுங்க.
அவளுக்கு ஒரு பையன் பொறக்குறான்.
அவன் செத்து பொழைக்குறான்.
பின்னாளில் பழி வாங்குறான்.



உலக சினிமா வரலாற்றிலேயே, இதுவரைக்கும் எடுத்திடாத படமோ, தளமோ, கதையோ கிடையாது...

இருந்தாலும், வசதிக்கு இல்லன்னாலும், அசதிக்கு இருக்கட்டுமேன்னு கள்ளக் காதல் புரியும் பிராணிகள் உலாவும் இவ்வுலகத்தில்,

வாழ வேண்டிய சில அப்பாவிப் பெண்கள் இப்படி விலை போகிறார்களே என்ற ஆதங்கம் என் மனதை உறுத்த ஆரம்பித்தது.

தனி மனிதனா, விலை போகும் பெண்களையும், ஆடு, மாடு உட்பட இதர பல பாலூட்டிகளையும் பார்த்து என்னால் வருத்தம் மட்டுமே பட முடிகிறது.

முடிஞ்சா, உங்க கண்ணு முன்னாடி நடக்குற அநியாயத்த கீழ்க்கண்ட நம்பர்களுக்கு தெரியப் படுத்துங்க.

உங்க நண்பர்கள் கிட்டேயும் பகிர்ந்துக்கோங்க.

ஹாட் லைன்ஸ் 9470001390
CHILDLINE (call toll free 1098) 
Call on 24x7 Helpline No. 011 - 24368638 for reporting "Illegal Human Trafficking especially Trafficking of Children & Women" 


முக்கியமான கட்டம்.
யாரையும் நாடுமாறி, தேவ​​__ பையன், போன்ற கெட்ட வார்த்தைகளால் திட்டாதீர்கள்.

அம்மா பாவம். அம்மா பாவம்.





பெண்மை எவ்ளோ பெரிய சக்தி என்பது காதலில் தோற்ற ஆண்களுக்கே தெளிவாய் தெரியும்.

ஒரு பெண் நினைத்தால், 
அழகான குடும்பத்தை உருவாக்கவும் முடியும். 
உருக்குலைக்கவும் முடியும்.

பெண்களாலே குடிக்க வந்தவர்கள் ஏராளம் ஏராளம்.

காதலில் ஜெயித்தாலும் குடிக்கிறான், தோத்தாலும் குடிக்கிறான்,
கலியாணம் ஆனாலும் குடிக்கிறான், ஆகலண்னாலும் குடிக்கிறான்.
எதுக்கு எடுத்தாலும் குடிக்குறான்.


சரி அவ்ளோ நல்ல மனுஷன் எதுக்குப்பா பெண்களை கடத்தி விபச்சாரத்துல ஈடுபடுத்துறான்?

இது ஒரு நல்ல கேள்வி.

ஆண்களே குழந்தைகளை, பெண்களைக் கடத்துகிறார்கள். அந்த மொன்ன நாயிங்கள நான் ஆண்கள் என்று அழைக்க விரும்பல..
சரி, அவுனுங்க ஏன் கடத்துறாங்க?
டிமாண்ட் சப்ளை செயின்தான்.

பெண்களுக்கான தேவை அதிகமா இருக்கு.
ஏன்?

இதுக்கு நாம சுஜாதா மாதிரி மனச விசாலப் படுத்தி ஆராயணும்.


1. எதனால விபச்சாரத் தொழில் இன்னும் உயிரோட இருக்கு?
2. தோராயமா எத்தன பெண்கள் இதுல ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க?
3. எந்தெந்த பிரிவினர்கள் (வயது, தொழில், நாடு.. etc) யார் யாரெல்லாம் அவர்களோட வாடிக்கையாளர்கள்?
4. ஏன் மேற்சொன்ன நபர்கள் விலை மகள்களை நாடுகிறார்கள்?
5. இந்த தொழிலுக்கு வந்த சில வருடங்களுக்குப் பிறகு, பெண்களின் நிலை என்ன?
6. அரசு தடை விதிக்கப் பட்டாலும், ஏன் இன்னும் ஒழிக்க முடியல?

இன்னும் பல கேள்விகள் நீண்டுகிட்டே போகும்.
நமக்குத் தெரிஞ்ச விடைகளை தேடலாம்.

நிஜ வாழ்க்கையின் சில யதார்த்த உண்மைகள்.


  1. Approximately 75-80% of human trafficking is for sex.There are more human slaves in the world today than ever before in history.
  2. There are an estimated 27 million adults and 13 million children around the world who are victims of human trafficking.
  3. Human trafficking not only involves sex and labor, but people are also trafficked for organ harvesting.

விபச்சாரம் இல்லையெனில் குற்றங்கள் அதிகரிக்கும் போன்ற கருத்துக்களை ஆர். பார்த்திபன் போன்ற மாற்றுக் கருத்து இயக்குனர்கள் தங்கள் படைப்புகளில் காலம் காலமாக சொல்லி வருகின்றனர்.


ஆடு, மாடு, பசு எருமைய கொல்லுறது பாவம்தான், ஆனா கறியும் தோலும் வேணுமே. என்ன செய்யுறது?

அடல்ட் ட்ராபிக்கிங் பாவம்தான், ஆனா நாட்டுல குற்றங்கள் குறையனுமே என்ன செய்யுறது?

- என்பது போன்ற கருத்துக்களும், கண்ட மேனிக்கு பரவி வரும் நாத்திக உலகத்தில், நான் மட்டும் புதுசா என்னத்த சொல்லிடப் போறேன்.

ஒழுக்கமா வளந்த பையன், அப்பா அம்மா பாக்குற பொண்ண கட்டிக்கறான், இல்லன்னா காதலிச்சி கலியாணம் செஞ்சிக்கறான். அவனுக்கு விலை மகளைத் தேடும் தேவை எதுவும் இல்லை.

தறிகெட்டுத் திரியுற பணக்கார திமிர் பிடிச்ச பசங்களே  விலைமகள்களின் முதன்மை வாடிக்கையாளர்கள். பின்னாளில் அவர்களே பொழுது போக்கிற்காகவும் விலைமகள்களை தேடுகின்றனர்.
புதுசு புதுசா தினுசு திணுசா தேடி அலையறதும் இவனுங்கதான்.
இவனுங்க கிட்டே இருக்குற காசுக்குதான், குழந்தைகளையும், குமரிப் பெண்களையும் கடத்துறாங்க, விக்குறாங்க.

சபலப் பட்டவன் எவனா இருந்தாலும், சுயக் கட்டுப்பாடு இல்லைன்னா தேடுவான்.

கேட்பதற்கு யாரும் இல்லாதவர்கள் (உதாரணம்..வேலைக்காக வெளியூர்ல இருக்கறவங்க) தேடலாம்.

சமகாலத்துல [2015] கல்லூரி மாணவ வாடிக்கையாளர்கள் அதிகரிச்சு வர்றதா உலக சுகாதார மையம் தெரிவிக்குது.

இவ்ளோ இருந்தும் திரும்புன பக்கம் எல்லாம் கற்பழிப்பு ஏன் நடக்குது?

[அது வேற டிபார்ட்மெண்ட்]

சரி, எங்கெங்க எல்லாம் விலை மாதர்கள் அதிகமா இருக்காங்க?

அப்வியஸ்லி  சிட்டில தான் அதிகமா இருப்பாங்க.

சிட்டிலதான், கேக்கறதுக்கு யாரும் இல்ல, குடும்பப் பெண்களே அதிகமா கவர்ச்சி காட்டுறாங்க!

கிராமங்களில் சபலப் படுபவர்களை விட, நகரங்களில் சபலப் படுபவர்களே அதிகம்.

காமம் எங்க நெஞ்சுல இல்ல உங்கக் ....


.
.
.
கண்ணுலதான் இருக்கு-ன்னு பெண்ணியம் பேசிட்டு வந்துடாதீங்க. :-)

கண்ணாடி உடைந்தால், கல் எறிஞ்சது யாருன்னு பாப்பீங்களா?  கல்லு கிட்டே போய் கேள்வி கேப்பீங்களா?

ஒருத்தன் ஏன் ஒரு பெண்ணை கற்பழிக்கிறான்? ஏன் ஒரு விலை மகளை நாடுகிறான்?

அவனுக்குள்ள அந்த சபலத்த உருவாக்கினது யாரு?

அவனோட காமத்தீ கொழுந்து விட்டு எரியுது ஒத்துக்கறேன். அது தப்புதான். ஆனா தீப்பொறி எங்கிருந்து பறந்து வந்தது?

இந்த பிரச்சனன்னு இல்ல, எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனோட வேர் எங்க இருக்கு? மூல காரணம் என்ன என்று ஆராயணும். அப்படி ரூட் காஸ் அனலிசிஸ் செஞ்சாதான், அதுக்கான முழுமையான தீர்வு கிடைக்கும் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை.

ஆனா இது பெண்ணியம் பேசும் ஆப் பாயில்களுக்கு எங்க புரியப் போவுது?



நீங்க பெண்ணியம் பேசி, அடுத்தவன சூடேத்தி, அவன் கேரக்டர் சரியில்ல-ன்னு குறை கூறிட்டே சாவுங்க.

தெரிந்தோ தெரியாமலோ, அப்பாவிப் பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் மூல காரணம் ஏதோ ஒரு வகையில் பெண்களே என்று கூறி, இந்த வழக்கிற்கான தீர்ப்பை வரும் பிப்ரவரி மாதம் 30ம் தேதி தள்ளி வைக்கிறேன்.




Monday, July 13, 2015

மொன்னையன்ஸ்.. To whom ever it may concerns

அதாகப் பட்டது என்னவென்றால்,

நம்ம ஊருல ஒரு அற்புதமான மூலிகை விளையுது, அதோட ரெண்டு படி மாட்டுக் கோமியத்த ஊத்தி காய்ச்சுனா கிடைக்குற திரவத்த, மண் குடுவைல போட்டு, மூணு நாலு மூடி வச்சி, தேங்கி நிக்குற கசட காய வச்சி பொடியாக்கி, அத பசும் பால்ல கலந்து ஒரு மண்டலம் குடிச்சி வந்தா அது கேன்சர பரிபூரணமா குணப் படுத்துது-ன்னு வச்சிக்கோங்க,   

நாம எவ்ளோ பெருமையா சொல்லிக்குவோம்?

நாம எவ்ளோ விலை வச்சி விப்போம்?

நாம தலை நிமிர்ந்து வாழ்வோம்...

உலகத்தையே நம்ம கைல போட்டு வச்சிக்குவோம்.

படிச்ச சில விஞ்ஞானிகள் இத ஒத்துக்க மாட்டங்க, இல்லாத நொட்ட  சொல்லி கழிச்சு விட பாப்பாங்க. அதப் பத்தி நமக்கு கவலை இல்ல.

மக்களே ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க, வருசா வருஷம் புற்று நோய் மக்கள் மத்தில பெருக்கிட்டுதான் வருது,
உலக சுகாதார மையம் தடை விதிச்ச எல்லா பொருளும் இந்தியாவுக்கு இறக்குமதி ஆகிட்டேதான் இருக்குது.

நாமளும் தரம் கெட்ட  உணவா பார்த்து பார்த்து ரசிச்சு ருசிக்குறோம்.

புற்று நோய முற்றிலுமா அழிக்கும்  சக்தி வாய்ந்த மூலிகை நம்ம எல்லோர் தோட்டத்திலும் இருக்கு., அதுதான் இயற்கை உரம்.

எந்தக் கருமமும் சேர்க்காத உணவை நாம எடுத்துக்கிட்டாலே போதும், புற்று நோய் உட்பட பல நோய்கள் வராம நம்மள நாமே பாதுகாக்கலாம்.


பன்னாட்டு நிறுவனங்களோட கழிவ சாப்புடுறத நிறுத்திட்டு, இயற்கையா பார்த்து நம்ம ஊருல என்ன விளையுதோ, அத போட்டி பொறாம  இல்லாம, நாம பகிர்ந்து சாப்பிட்டாலே போதும்.

இத சொன்னா நம்மள...


Thursday, July 2, 2015

காக்கா முட்டை - தற்போதைய இந்திய நிலவரம்

அரசியல் பேசும் எத்தனையோ படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இது அதில் ஒரு தனி ரகம்.

இந்தியாவின் நிலைமையை எண்ணி கண்ணீர் சிந்தும் ஒவ்வொரு தமிழனும் காண வேண்டிய படம் காக்கா முட்டை.

இந்த படத்தில் வரும் எந்த கதா பாத்திரத்திற்கும் இயக்குனர் மணிகண்டன் பெயர் சூட்டவில்லை. ஏனெனில்,

இப்படத்தில் வரும்,
வெட்டப் பட்ட மரம் - நமது பாரம்பரியம்
இரண்டு சிறுவர்கள் - நீயும் நானும்.
அம்மா - பாரத மாதா.
சிறையில் இருக்கும் தந்தை - நமது வீரமும் ஆண்மையும்.
இறக்கும் பாட்டி - நமது கலாச்சாரம்.

காவல் துறை - நமது காவல் துறை,
மீடியா - நமது மீடியா,
அரசியல்வாதிகள் - நமது அரசியல்வாதிகளே..

மெசேஜ்:
இதுக்கும் மேல உங்கள யாராலும் காறித் துப்ப முடியாது..
திருந்துங்கடா டேய்.





Wednesday, March 25, 2015

MLM & so called Its not MLM - Business Opportunity

சமீப காலமாகவே வெறி பிடித்துத் திரியும் நம்மில் பலரைப் பற்றிய சிறு பதிவு.

சாப்புடலாம்-ன்னு தனியா கடைக்கு போனேன்.
ரொம்ப நல்லவன் மாதிரி ஒருத்தன் வந்து பேச்சு கொடுத்தான்.,

ஹாய் நான் இந்த ஏரியாலதான் இருக்கேன்., நீங்க எங்க இருக்கீங்க? என்ன பண்றீங்க?
ஓ அந்த கம்பெனியா, அங்கேதான் என்னோட நண்பன் வேலைல இருக்கான்.. அது இது-ன்னு நல்லா நேரம் போற மாதிரி பேசுனான்.

கடைசில கிளம்புபும் போது நட்பு நிமித்தமா நம்பர வாங்குனான்.

ஒரு ரெண்டு நாள் கழிச்சு போன் வந்தது..

நான் உங்களுக்கு ஒரு பிஸினஸ் வாய்ப்பு கொடுக்கலாம்-ன்னு இருக்கேன். வேலை நேரம் போக மீதி ஓய்வு நேரத்துல நீங்க இதுல கொஞ்ச நேரம் வேலை செஞ்சா பொதும், மாசம் 25ஆயிரம் வரை சம்பாரிக்கலாம்-ன்னு பில்டப் எல்லாம் கொடுத்தான்.
நாம யாரு, ஏற்கனவே MLM அது இது-ன்னு பார்த்துருக்கோம்-ல்ல

இல்லப்பா எனக்கு சைடு பிஸினஸ் ல எல்லாம் விருப்பம் இல்ல-ன்னு சொல்லி போன வைக்கப் போனேன்.,
அவன் விடுறதா தெரியல...

நீங்க எனக்கு ஒரு 10 நிமிஷம் கொடுங்க, நான் இந்த ப்ராடக்ட்ட பத்தி உங்ககிட்டே சொல்றேன்., அதுக்கு அப்புறம் செய்யுறதும், செய்யாததும் உங்க விருப்பம்..-ன்னு கால்ல விழாத குறையா கெஞ்சுனான்...

சரி போய் தொலை நாயே-ன்னு அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, நல்ல புத்தி சொல்லி திருத்தி அனுப்பலாம்-ன்னு நினைச்சு அவன வரச் சொன்னேன்.

என்னமோ எழவு வென்ச்சர் கம்பெனியாம்.,
30000 ரூபா ட்ராவல் பேக்கேஜ்
நீங்க ரெண்டு பேர சேத்தி விட்டா, உங்களுக்கு 5000 கமிஷன்
நீங்க சேத்தி விட்ட ரெண்டு பேரு 4 பேர சேத்து விட்டா, உங்களுக்கு 10000 கமிஷன்

அப்படி இப்படி-ன்னு அளந்தான்.


என்ன ஒரு வார்த்த கூட பேச விடல.,
ஒரு கட்டத்துல, நிறுத்துடா..ன்னு கத்தி

எனக்கு கீழ 10 லெவல் இருக்கு, அதுல பத்தாவதா வாங்குற ஒருத்தன் கொடுக்கறதே 30000 ரூபா இதுல பத்து லெவலுக்கும் கமிஷன் மட்டுமே 45000 ரூபா போவுது.,  இது எந்த விதத்துல சாத்தியம்?
அப்படியே அந்த கமிஷன் கிடைச்சாலும் எனக்கு அப்படி கிடைக்கற வருமானம் வேண்டாம் மூடிட்டு போ-ன்னு திட்டி அனுப்பினேன்.

உனக்கு ஸ்கில் இல்ல, ஆளுமை இல்ல, அது இல்ல இது இல்ல, நீ பயப்படுற.. அதா இதா-ன்னு சொன்னான்.

அதப் பத்தி கவலை பட வேண்டியது நீ இல்ல -ன்னு ஒருசில கெட்ட வார்த்தைகள்ல அவனுக்கு புரிய வச்சு விரட்டி அடிச்சேன்.

என்னோட நேரம் வீணானதுதான் மிச்சம்.
எவ்ளோ டென்ஷன் இவனுங்களால...

பார்க்-ல நிம்மதியா ஒரு அஞ்சு நிமிஷம் உக்கார முடியல.

பஸ்ல சக பயனியா உட்காந்தும் இம்சை கொடுக்கறானுங்க.

பொது இடங்கள்ள தனியா போறதுக்கே யோசிக்க வேண்டியதா இருக்கு.,

இது Tree Business -ன்னு சொன்னா, இல்லவே இல்லைன்னு சாதிக்குரானுங்க.

பணம் சம்பாதிக்கணும்-ன்ற பேராசை இவனுங்களோட அறிவுக் கண்ணை எவ்ளோ தூரம் மறைசிருக்கு பாருங்க?

இவுனுங்க வெறும் அம்புதான், இவுனுங்கள எய்த ஒரு சதுரங்க வேட்டை காந்தி பாபு, அடையாளமே இல்லாம திரியறான். அவன் மட்டும் என் கைல கிடைச்சான், வகுந்துருவேன்...

நீ வாழு, சாவு., என்ன வேணும்னாலும் செய்., ஆனா என்னை மாதிரி சும்மா இருக்கற சாதாரண மனிதர்கள பிசினஸ் வாய்ப்பு-ன்ற பேர்ல இம்சை பண்ணாதே....


Don't approach me for showing your expertise in Convincing Skills.
I know you are well trained., but my answer for all your business opportunity is.... 

Piss off.


Thursday, January 8, 2015

எதோ தோணுது எழுதுறேன்...

பண சக்தி எந்த ஒரு தேர்தலிலும் முக்கிய பங்கு வகிக்குது.

மக்களால், மக்களை, மக்களே ஆட்சி செய்யும் மக்களாட்சி என்று நடைமுறைக்கு வரும்?

நான் கூட அரசியலுக்கு வரலாம், ஆனா எனக்கு உயிர் மேல ஆசை வந்துடுச்சி...

கறுப்புப் பணம்தான் எல்லாத்துக்கும் மூலம்.
ஷாப்பிங் மால் எல்லாம் யார் கட்டுறா?
அபார்ட்மெண்ட் எல்லாம் யார் கட்டுறா?
அதில இருந்து கோடி கோடியா வரும் வாடகை யாருக்கு போவுது...?
கறுப்புப் பணத்தை ஒழிச்சே ஆகணும்.
சரி, யாரு ஒழிக்கறது?

மோதி அரசு ஒழிக்குமா?
தெரியல.

வேற அரசு வந்தால் ஒழிக்குமா?
தெரியாது.

பெருக்கெடுத்து ஓடும் காட்டாறு போல சமூக நடைமுறை ஓடிட்டு இருக்கு.
அதுவே தானா ஆடி, அடங்கினால் உண்டு.

ஜாதி மத சண்டை ஒரு பக்கம்
இன வெறி அரசியல்வாதிகள் ஒரு பக்கம்
கருப்பு பணம் ஒரு பக்கம்
நீ ஒரு பக்கம்..

எல்லாரும் சேந்து இந்தியாவ பாடா படுத்துங்க...