Thursday, January 28, 2016

ஊழ்

யாதும் ஊரே - எல்லாமே ஊர்தான்
யாவரும் கேளிர் -எல்லோருமே உறவினர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா,
-ஒருவருக்கு நல்லதும் கெட்டதும் பிறர் தருவதில்லை. 
நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்கிறோம். 
தினை விதைத்தவன் தினை அறுப்பான் ,வினை விதைத்தவன் வினை அறுப்பான். 
 -நமக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும் நாமே காரணமும் பொறுப்புமாவோம்.  புறக்காரணிகளை குறைகூறுவதில் பயனில்லை.
நாம் என்ன செய்தோமோ, அதைப்போறுத்தே இன்பமோ, துன்பமோ நம்மை சேரும், அல்லது அற்றுப்போகும்.


நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;  
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை.
சாதலும் புதுவது அன்றே ; 
-இறந்து போவது ஒன்றும் புதிது அல்லவே.

வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; 
-ஆகையால் வாழ்வதிலும் பெரிய இன்பம் கிடையாது.

முனிவின், இன்னா தென்றலும் இலமே; 
அதற்காக அதை வெறுத்து ஒதுக்குவதும் எங்களிடம் இல்லை
-எனவே துன்பம் வரும்போது வருந்துவதோ, இன்பம் வரும்போது மகிழ்வதோ இங்கில்லை.

‘மின்னொடு வானம் தண்துளி தலைஇ, 
ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று 
நீர்வழிப் படூஉம் புனை போல, 

மின்னல் கொண்டுள்ள வானம் பெய்யும் மழையை தலைமேல்
கொள்ளாதெனில், கணத்த கல்-மலை மேலிருந்து, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி, அதன் தடத்திலே போகும் புனை
[மரம்]யைப்  போல,
 
ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது 
திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், 

உயிரா னதுமுன்னர் இட்ட முறைவழியே அகப்பட்டு தன்வழி செய்யும் (பிறவி வழிப் படும்) என்று 
 -எவ்வாறு வான்மழை வெள்ளத்தால் நிரம்பிய ஆற்றில் தோணியானது தன்பாட்டில் கொண்டுசெல்லப்படுகிறதோ, அதுபோலவே வாழ்க்கையால் நாம் கொண்டுசெல்லப்படுகிறோம் என்பதையும் நாம் மிக நன்றாக அறிவோம்.

மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

-

எனவே பெருமைமிக்கவர்களாகவுள்ள பெரியோரை பார்த்து நாம் வியப்பதுவுமில்லை, அதைவிட, சிறியோரைப்பார்த்து நாம் இகழ்வதுமில்லை.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய
புறநானூறு. 192 - பாடியவர்: கணியன் பூங்குன்றன் 

 

பொருண்மொழிக் காஞ்சியில்

  • உலகைக் கணித்துப் பார்த்து யாதும் ஊரே என்றார்.
  • மக்களைக் கணித்துப் பார்த்து யாவரும் கேளிர் என்றார்.
  • நன்மை தீமைகளைகு கணித்துப் பார்த்து அவை பிறர் தர வாரா என்றார்.
  • சாதலைக் கணித்துப் பார்த்து அது புதிதன்று என்றார்.
  • வாழ்தலைக் கணித்துப் பார்த்து அது பிறவியால் வந்தது என்றார்.
  • பிறந்ததால் வரும் வாழ்க்கையில் வரும் இன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை இனிது என மகிழக் கூடாது என்றார்.
  • வாழ்க்கையில் வரும் துன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை முனிந்து வாழ்க்கையே இன்னாது(துன்ப மயமானது) என வெறுக்கக் கூடாது என்றார்.
  • பிறவியைக் கணித்துப் பார்த்து அது மின்னல் போன்றது என்றார். மின்னல் எப்போதாவது எங்கோ மழை பொழிவது போன்றது என்றார்.
  • வாழ்க்கையைக் கணித்துப் பார்த்து அது மல்லல் பேர் யாறு போன்றது என்றார். (வளமான பெரிய ஆற்று நீரோட்டம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலச் சாவை நோக்கி ஓடும் - என்பதைப் பிறிது மொழிதல் அணியின் பாற்படுத்து உய்த்துணர வைத்தார்)
  • வாழ்க்கையில் எதிர்ப்புகள் இருப்பதைக் கணித்துப் பார்த்து ஆறு பாறைகளில் மோதிக்கொண்டு ஓடுவதை எண்ணிப் பாரக்கும்படி நம்மைத் தூண்டினார்.
  • நமது உயிரோட்டத்தைக் கணித்துப் பார்த்து ஆற்று நீரோட்டத்தில் செல்லும் புணை போன்றது என்றார். (ஊழ் = 'முறை' என்பது ஆற்று நீரின் ஓட்டம். முயற்சி என்பது உயிர்படகைச் செலுத்தும் துடுப்பு)
இந்த உலகியல் உண்மைகளைத் (பொருண்மொழிக் காஞ்சியைத்) திறம்பட வாழ்ந்த பெருமக்கள் காட்டிய வாழ்க்கை நெறியில் தாம் கண்டு தெளிந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.
இந்தத் தெளிவின் பயன் யாது?
மாண்புள்ள பெரியோரைக் கண்டு நாம் வியப்படைய வேண்டுவதில்லை. அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல் கூடவே கூடாது.



உலகின் படைப்பை உணர்ந்து, ஒன்றிலிந்து வந்ததை அறிந்து யாதும் ஊரே என்றார்.

    உலகின் எல்ல உயிரைகளையும் ,(எல்ல உயிர்களும் ஒரே ஆற்றல் என்பதை)
          உணர்ந்து,யாவரும்கேளிர் என்றார்.

    நன்மை தீமைகளை உணர்ந்து அவை பிறர் தர வாரா என்றார்.

         துன்பத்தை உணர்தலும் பிறகு தணிதலும் அவரவர் உடலுக்குதான் (மனதினால்)
         என்பதனையும் அறிவிக்கிறார்.

         சாதலை உணர்ந்து அது வேறு பரிமாணத்தில் புகுவது என்றார்.
       
     வாழும் இன்பத்தை இனிது என மகிழாமல் இருப்பதும் இலமே.

     முனிவில் இல்லை வாழ்வின்பம் என்பதும் இலமே.

     மின்னல்(அருள்ஒளி) கொண்டுள்ள வானம்(மறை ) பெய்யும் மழையை தலைமேல்
          (முதன்மையானதாக)கொள்ளாதெனில்,
.
         கணத்தகல் (தூலஉடல்) மலைமேலிருந்து,

         பெருகி வரும் ஆற்று நீரில் (உயிராகிய நீர்) சிக்கி,

         அதன் தடத்திலே போகும் புனையைப் [மரம்] போல,

          உயிரா னதுமுன்னர் இட்ட முறைவழியே அகப்பட்டு தன்வழி

          செய்யும் (பிறவி வழிப் படும்) என்று

          மறைபொருளறி திறன் பெற்றேர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் .

          மறையறிந்த பெரியோரை கண்டு வியத்தலும் இலமே.

          மறையறியா சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே,

  

இந்த உலகியல் & வாழ்வியல் உண்மைகளைத் திறம்பட வாழ்ந்த பெருமக்கள் காட்டிய
வாழ்க்கை நெறியில் தாம் கண்டு தெளிந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.
                                                                                                                                  (பொருண்மொழிக் காஞ்சி)

        இந்தத் தெளிவின் பயன் இதுவேயாம்.

        மறையறிந்த பெரியோரை கண்டு நாம் வியப்படைவது சமநிலையற்ற மனதின் நிலை..
        அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் அவரை அடையாது.
        மறையறியா சிறியோரை தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல்
        சமநிலையற்ற மனதின் நிலையினும் கீழாம்.

இதனையுரைத்த பேறறிஞர் தன்னுடைய பெயரை குறிப்பிடா காரணம் ,
இந்த உருவும் அதற்க்கான பெயரும் பொய்யென உணர்ந்த்தேயாம்.
எந்த ஒரு உருவாக்கமும், உருவாக்கியவரை விட சற்று குறைவானதாகவே இருக்கும்.
இது ஒரு விதியேயாம்.இதில் மாற்றுகருத்தே இல்லை.
இங்குரைக்கப்பட்டதெல்லாம் படைத்தல் பற்றியதாம்.
ஆதலால் படைக்கப்பட்டதானது,படைப்பைவிட
தாழ்ந்ததாக உணர்ந்த்தால், தன் பெயரை முன்னிலை படுத்தவில்லை.
இங்கு சொல்லப்பட்டதனைத்தும் மெய்மையை பற்றியதாம். விஞ்ஞானமே
அதனாலேயே மற்றவைபற்றி சொல்லப்படவில்லை.
இதனை பொதுவாகவே தொண்மையான நூல்களில் மேலும்
திருக்குறள் எழுதியமுறையிலும் காண்க.


 -மேற்கண்ட பாடலும், பாடல் வரிகளைப் பற்றி எழுத ஒரு தகுதி வேண்டும், அது இல்லாத காரணத்தினால், இணையத் தளத்தில் இருந்து நகலெடுத்து இந்தப் பதிவை ஏற்றுகிறேன்.

தெளிவதும், கலங்குவதும் அவரவர் (த்தூ)கர்மம்.

Wednesday, November 18, 2015

செர்லாக் கோம்சும் (Sherlock Holmes) தனி ஒருவனும்

யாரிந்த ஷெர்லாக் ஹோம்ஸ்?
ஏதோ எல்லாமே தெரிஞ்ச மாதிரியே பேசிக்கறானுங்களே...

சிங்கத்தின் பார்வையில் ஷெர்லாக் ஹோம்ஸ் இதோ...

18ம் நூற்றாண்டின் பின் பாதிகளில், சர் ஆதர கொனன் டயல் எனும் பிரேத பரிசோதனை மருத்துவர்,  அவருக்குள்ள ஒளிஞ்சிட்டு இருந்த படைப்பாளிய ஒரு நாள் தட்டி எழுப்பினார்.

Sherlock Holmes (/ˈʃɜrlɒk ˈhmz/) is a fictional character created by British author and physician Sir Arthur Conan Doyle. A London-based "consulting detective" whose abilities border on the fantastic, Holmes is known for his astute logical reasoning, his ability to adopt almost any disguise, and his use of forensic science to solve difficult cases.

பிரேதங்களைப் பற்றிய அனைத்தும் அவருக்கு அத்துப்படி ஆனதால, மிக மிக சிறிய ஆதாரங்களை வைத்து பெரிய கடின குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கலாம் என்பது டாயல் கருத்து.


அதன்படியே, அவரும் ராஜேஷ் குமார் மாதிரி க்ரைம் நாவல எழுத ஆரம்பிச்சாரு. அவர் எழுதின கதைகள்ல வரும் நாயகனின் பாத்திரமே இந்த ஷெர்லாக் ஹோம்ஸ். மற்றும் சந்தானம் மாதிரி ஒரு ஜான் வாட்சன். சும்மா சில்றத் தனமா வெறும் கொலை கொள்ளைகள கண்டுபிடிச்சா நம்ம ஹீரோவுக்கு என்ன வித்தியாசம்? அதனால உலகப் போரை உருவாக்கும் வல்லமை படைத்த ஒரு வில்லன் மொரியார்ட்டி. அவனோட புத்திசாலித் தனமான போர்த் தந்திரங்களை, ஷெர்லாக் தனது தடயவியல் நுணுக்க அறிவைக் கொண்டு எப்படி முறியடிக்கறார் போன்ற கதை.  

இமைகள் வலிக்கறது கூட தெரியாம படிக்க வைக்கும் அளவு சுவாரஸ்யம் மிக்க கதைகளா எழுதி தள்ளிட்டு,டாயல்  செத்து போயிட்டாரு.



ஆனா, அவரோட கதைகள, பாகவதர் காலத்திலும் படமா எடுத்தாங்க.
ரஜினி கமல் காலத்திலும் எடுத்தாங்க.
விஜய் அஜித் காலத்திலும் எடுத்தாங்க.
இன்னும் எடுத்திட்டு இருக்காங்க.

இது மட்டும் இல்லாம, மெட்டி ஒலி  நாதஸ்வரம் காலத்திலும் சீரியல்களா பிபிஸி எடுத்து தள்ளி இருக்கு.


ஆனா, நம்ம ரீமேக் ராஸா, எல்லாத்துக்கும் ஒரு படி மேல போய்,

ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தையே தமிழ்ல தன்னோட பாணில சொந்தமா தனி ஒருவன்-ன்னு ஒரு படமா எடுத்து கொடுத்திருக்காரு.


மித்ரனாக வலம் வரும் ஸ்பைடர் வெப் அனாலசிஸ், அல்டிமேட் ஐ பி எஸ் ரீமேக் ரவி, தமிழில் ஷெர்லாக்-ன் பாத்திரத்தை கன கச்சிதமாக செய்து இருக்கிறார்.


சித்தார்த் அபிமன்யுவே, நமது உலகத்தரம் வாய்ந்த கிருமினல் மொரியார்டி.

ஐரின் அட்லாராக நயன்.

டின் டிங்ட டின்.. எனும் தீம் அப்படியே சிறிது பட்டி டிங்கரிங் பார்த்து செருகப் பட்டிருக்கிறது.

மீதமுள்ள இனம் புரியாத பொருத்தங்களை நீங்களே பாத்து கண்டறிய விடுகிறேன்.

எப்படி த்ருஷ்யம் பாத்ததால எனக்கு பாபநாசம் பிடிக்கலையோ, அதே மாதிரி, ஷெர்லாக் படம் ஒன்னு விடாம பாத்ததால, தனி ஒருவன் படத்த என்னால பாராட்டாம இருக்க முடில. தமிழில் ஒரு நல்ல முயற்ச்சியே என்று கூறுவேன்.

படம் நல்ல படம்தான்.
பார்க்கலாம்.

ஆனால் இது சுட்ட பழம்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், தனி ஒருவன் நல்ல பிரிண்ட் இணையத்தில் வராமல் பார்த்துக் கொண்ட [ஒரு மாத அளவில்] ராஜா அவர்களுக்கு பாராட்டுக்கள்.





  

Thursday, October 1, 2015

நாடுமாறி

தென் மாவட்டங்களில் புழக்கத்தில் இருக்கும் கெட்ட வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

அவசாரி
வேசி
சவத்த மூதி... போன்ற பொன்மொழிகளைக் கேட்டாலே அர்த்தம் புரியும். ஆனால் இது சற்றே வித்யாசம்.

ஆண்களின் நாடுதலை மாறி மாறி விரும்புபவள் என்று பொருள். Source: @kryes

சரி நாம மேட்டருக்கு வருவோம்.

தாக்க தாக்க -ன்னு சமீபத்துல ஒரு படம் வந்துச்சி.,
அத நான் நேத்து ராத்திரி பாத்து தொலைச்சிட்டேன்.

கெரகம் புடிச்ச எழவு மாதிரி இந்த படம் என்னைய தூங்கவே விடல.

பெத்த அப்பனே  15 வயசு பொண்ண விலைக்கு விக்குறான்.
அந்த பொண்ண கொடுமைப் படுத்தி, பாலியல் தொழில்ல ஈடு படுத்தி சம்பாதிக்கரானுங்க.
அவளுக்கு ஒரு பையன் பொறக்குறான்.
அவன் செத்து பொழைக்குறான்.
பின்னாளில் பழி வாங்குறான்.



உலக சினிமா வரலாற்றிலேயே, இதுவரைக்கும் எடுத்திடாத படமோ, தளமோ, கதையோ கிடையாது...

இருந்தாலும், வசதிக்கு இல்லன்னாலும், அசதிக்கு இருக்கட்டுமேன்னு கள்ளக் காதல் புரியும் பிராணிகள் உலாவும் இவ்வுலகத்தில்,

வாழ வேண்டிய சில அப்பாவிப் பெண்கள் இப்படி விலை போகிறார்களே என்ற ஆதங்கம் என் மனதை உறுத்த ஆரம்பித்தது.

தனி மனிதனா, விலை போகும் பெண்களையும், ஆடு, மாடு உட்பட இதர பல பாலூட்டிகளையும் பார்த்து என்னால் வருத்தம் மட்டுமே பட முடிகிறது.

முடிஞ்சா, உங்க கண்ணு முன்னாடி நடக்குற அநியாயத்த கீழ்க்கண்ட நம்பர்களுக்கு தெரியப் படுத்துங்க.

உங்க நண்பர்கள் கிட்டேயும் பகிர்ந்துக்கோங்க.

ஹாட் லைன்ஸ் 9470001390
CHILDLINE (call toll free 1098) 
Call on 24x7 Helpline No. 011 - 24368638 for reporting "Illegal Human Trafficking especially Trafficking of Children & Women" 


முக்கியமான கட்டம்.
யாரையும் நாடுமாறி, தேவ​​__ பையன், போன்ற கெட்ட வார்த்தைகளால் திட்டாதீர்கள்.

அம்மா பாவம். அம்மா பாவம்.





பெண்மை எவ்ளோ பெரிய சக்தி என்பது காதலில் தோற்ற ஆண்களுக்கே தெளிவாய் தெரியும்.

ஒரு பெண் நினைத்தால், 
அழகான குடும்பத்தை உருவாக்கவும் முடியும். 
உருக்குலைக்கவும் முடியும்.

பெண்களாலே குடிக்க வந்தவர்கள் ஏராளம் ஏராளம்.

காதலில் ஜெயித்தாலும் குடிக்கிறான், தோத்தாலும் குடிக்கிறான்,
கலியாணம் ஆனாலும் குடிக்கிறான், ஆகலண்னாலும் குடிக்கிறான்.
எதுக்கு எடுத்தாலும் குடிக்குறான்.


சரி அவ்ளோ நல்ல மனுஷன் எதுக்குப்பா பெண்களை கடத்தி விபச்சாரத்துல ஈடுபடுத்துறான்?

இது ஒரு நல்ல கேள்வி.

ஆண்களே குழந்தைகளை, பெண்களைக் கடத்துகிறார்கள். அந்த மொன்ன நாயிங்கள நான் ஆண்கள் என்று அழைக்க விரும்பல..
சரி, அவுனுங்க ஏன் கடத்துறாங்க?
டிமாண்ட் சப்ளை செயின்தான்.

பெண்களுக்கான தேவை அதிகமா இருக்கு.
ஏன்?

இதுக்கு நாம சுஜாதா மாதிரி மனச விசாலப் படுத்தி ஆராயணும்.


1. எதனால விபச்சாரத் தொழில் இன்னும் உயிரோட இருக்கு?
2. தோராயமா எத்தன பெண்கள் இதுல ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க?
3. எந்தெந்த பிரிவினர்கள் (வயது, தொழில், நாடு.. etc) யார் யாரெல்லாம் அவர்களோட வாடிக்கையாளர்கள்?
4. ஏன் மேற்சொன்ன நபர்கள் விலை மகள்களை நாடுகிறார்கள்?
5. இந்த தொழிலுக்கு வந்த சில வருடங்களுக்குப் பிறகு, பெண்களின் நிலை என்ன?
6. அரசு தடை விதிக்கப் பட்டாலும், ஏன் இன்னும் ஒழிக்க முடியல?

இன்னும் பல கேள்விகள் நீண்டுகிட்டே போகும்.
நமக்குத் தெரிஞ்ச விடைகளை தேடலாம்.

நிஜ வாழ்க்கையின் சில யதார்த்த உண்மைகள்.


  1. Approximately 75-80% of human trafficking is for sex.There are more human slaves in the world today than ever before in history.
  2. There are an estimated 27 million adults and 13 million children around the world who are victims of human trafficking.
  3. Human trafficking not only involves sex and labor, but people are also trafficked for organ harvesting.

விபச்சாரம் இல்லையெனில் குற்றங்கள் அதிகரிக்கும் போன்ற கருத்துக்களை ஆர். பார்த்திபன் போன்ற மாற்றுக் கருத்து இயக்குனர்கள் தங்கள் படைப்புகளில் காலம் காலமாக சொல்லி வருகின்றனர்.


ஆடு, மாடு, பசு எருமைய கொல்லுறது பாவம்தான், ஆனா கறியும் தோலும் வேணுமே. என்ன செய்யுறது?

அடல்ட் ட்ராபிக்கிங் பாவம்தான், ஆனா நாட்டுல குற்றங்கள் குறையனுமே என்ன செய்யுறது?

- என்பது போன்ற கருத்துக்களும், கண்ட மேனிக்கு பரவி வரும் நாத்திக உலகத்தில், நான் மட்டும் புதுசா என்னத்த சொல்லிடப் போறேன்.

ஒழுக்கமா வளந்த பையன், அப்பா அம்மா பாக்குற பொண்ண கட்டிக்கறான், இல்லன்னா காதலிச்சி கலியாணம் செஞ்சிக்கறான். அவனுக்கு விலை மகளைத் தேடும் தேவை எதுவும் இல்லை.

தறிகெட்டுத் திரியுற பணக்கார திமிர் பிடிச்ச பசங்களே  விலைமகள்களின் முதன்மை வாடிக்கையாளர்கள். பின்னாளில் அவர்களே பொழுது போக்கிற்காகவும் விலைமகள்களை தேடுகின்றனர்.
புதுசு புதுசா தினுசு திணுசா தேடி அலையறதும் இவனுங்கதான்.
இவனுங்க கிட்டே இருக்குற காசுக்குதான், குழந்தைகளையும், குமரிப் பெண்களையும் கடத்துறாங்க, விக்குறாங்க.

சபலப் பட்டவன் எவனா இருந்தாலும், சுயக் கட்டுப்பாடு இல்லைன்னா தேடுவான்.

கேட்பதற்கு யாரும் இல்லாதவர்கள் (உதாரணம்..வேலைக்காக வெளியூர்ல இருக்கறவங்க) தேடலாம்.

சமகாலத்துல [2015] கல்லூரி மாணவ வாடிக்கையாளர்கள் அதிகரிச்சு வர்றதா உலக சுகாதார மையம் தெரிவிக்குது.

இவ்ளோ இருந்தும் திரும்புன பக்கம் எல்லாம் கற்பழிப்பு ஏன் நடக்குது?

[அது வேற டிபார்ட்மெண்ட்]

சரி, எங்கெங்க எல்லாம் விலை மாதர்கள் அதிகமா இருக்காங்க?

அப்வியஸ்லி  சிட்டில தான் அதிகமா இருப்பாங்க.

சிட்டிலதான், கேக்கறதுக்கு யாரும் இல்ல, குடும்பப் பெண்களே அதிகமா கவர்ச்சி காட்டுறாங்க!

கிராமங்களில் சபலப் படுபவர்களை விட, நகரங்களில் சபலப் படுபவர்களே அதிகம்.

காமம் எங்க நெஞ்சுல இல்ல உங்கக் ....


.
.
.
கண்ணுலதான் இருக்கு-ன்னு பெண்ணியம் பேசிட்டு வந்துடாதீங்க. :-)

கண்ணாடி உடைந்தால், கல் எறிஞ்சது யாருன்னு பாப்பீங்களா?  கல்லு கிட்டே போய் கேள்வி கேப்பீங்களா?

ஒருத்தன் ஏன் ஒரு பெண்ணை கற்பழிக்கிறான்? ஏன் ஒரு விலை மகளை நாடுகிறான்?

அவனுக்குள்ள அந்த சபலத்த உருவாக்கினது யாரு?

அவனோட காமத்தீ கொழுந்து விட்டு எரியுது ஒத்துக்கறேன். அது தப்புதான். ஆனா தீப்பொறி எங்கிருந்து பறந்து வந்தது?

இந்த பிரச்சனன்னு இல்ல, எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனோட வேர் எங்க இருக்கு? மூல காரணம் என்ன என்று ஆராயணும். அப்படி ரூட் காஸ் அனலிசிஸ் செஞ்சாதான், அதுக்கான முழுமையான தீர்வு கிடைக்கும் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை.

ஆனா இது பெண்ணியம் பேசும் ஆப் பாயில்களுக்கு எங்க புரியப் போவுது?



நீங்க பெண்ணியம் பேசி, அடுத்தவன சூடேத்தி, அவன் கேரக்டர் சரியில்ல-ன்னு குறை கூறிட்டே சாவுங்க.

தெரிந்தோ தெரியாமலோ, அப்பாவிப் பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் மூல காரணம் ஏதோ ஒரு வகையில் பெண்களே என்று கூறி, இந்த வழக்கிற்கான தீர்ப்பை வரும் பிப்ரவரி மாதம் 30ம் தேதி தள்ளி வைக்கிறேன்.




Monday, July 13, 2015

மொன்னையன்ஸ்.. To whom ever it may concerns

அதாகப் பட்டது என்னவென்றால்,

நம்ம ஊருல ஒரு அற்புதமான மூலிகை விளையுது, அதோட ரெண்டு படி மாட்டுக் கோமியத்த ஊத்தி காய்ச்சுனா கிடைக்குற திரவத்த, மண் குடுவைல போட்டு, மூணு நாலு மூடி வச்சி, தேங்கி நிக்குற கசட காய வச்சி பொடியாக்கி, அத பசும் பால்ல கலந்து ஒரு மண்டலம் குடிச்சி வந்தா அது கேன்சர பரிபூரணமா குணப் படுத்துது-ன்னு வச்சிக்கோங்க,   

நாம எவ்ளோ பெருமையா சொல்லிக்குவோம்?

நாம எவ்ளோ விலை வச்சி விப்போம்?

நாம தலை நிமிர்ந்து வாழ்வோம்...

உலகத்தையே நம்ம கைல போட்டு வச்சிக்குவோம்.

படிச்ச சில விஞ்ஞானிகள் இத ஒத்துக்க மாட்டங்க, இல்லாத நொட்ட  சொல்லி கழிச்சு விட பாப்பாங்க. அதப் பத்தி நமக்கு கவலை இல்ல.

மக்களே ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க, வருசா வருஷம் புற்று நோய் மக்கள் மத்தில பெருக்கிட்டுதான் வருது,
உலக சுகாதார மையம் தடை விதிச்ச எல்லா பொருளும் இந்தியாவுக்கு இறக்குமதி ஆகிட்டேதான் இருக்குது.

நாமளும் தரம் கெட்ட  உணவா பார்த்து பார்த்து ரசிச்சு ருசிக்குறோம்.

புற்று நோய முற்றிலுமா அழிக்கும்  சக்தி வாய்ந்த மூலிகை நம்ம எல்லோர் தோட்டத்திலும் இருக்கு., அதுதான் இயற்கை உரம்.

எந்தக் கருமமும் சேர்க்காத உணவை நாம எடுத்துக்கிட்டாலே போதும், புற்று நோய் உட்பட பல நோய்கள் வராம நம்மள நாமே பாதுகாக்கலாம்.


பன்னாட்டு நிறுவனங்களோட கழிவ சாப்புடுறத நிறுத்திட்டு, இயற்கையா பார்த்து நம்ம ஊருல என்ன விளையுதோ, அத போட்டி பொறாம  இல்லாம, நாம பகிர்ந்து சாப்பிட்டாலே போதும்.

இத சொன்னா நம்மள...


Thursday, July 2, 2015

காக்கா முட்டை - தற்போதைய இந்திய நிலவரம்

அரசியல் பேசும் எத்தனையோ படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இது அதில் ஒரு தனி ரகம்.

இந்தியாவின் நிலைமையை எண்ணி கண்ணீர் சிந்தும் ஒவ்வொரு தமிழனும் காண வேண்டிய படம் காக்கா முட்டை.

இந்த படத்தில் வரும் எந்த கதா பாத்திரத்திற்கும் இயக்குனர் மணிகண்டன் பெயர் சூட்டவில்லை. ஏனெனில்,

இப்படத்தில் வரும்,
வெட்டப் பட்ட மரம் - நமது பாரம்பரியம்
இரண்டு சிறுவர்கள் - நீயும் நானும்.
அம்மா - பாரத மாதா.
சிறையில் இருக்கும் தந்தை - நமது வீரமும் ஆண்மையும்.
இறக்கும் பாட்டி - நமது கலாச்சாரம்.

காவல் துறை - நமது காவல் துறை,
மீடியா - நமது மீடியா,
அரசியல்வாதிகள் - நமது அரசியல்வாதிகளே..

மெசேஜ்:
இதுக்கும் மேல உங்கள யாராலும் காறித் துப்ப முடியாது..
திருந்துங்கடா டேய்.





Wednesday, March 25, 2015

MLM & so called Its not MLM - Business Opportunity

சமீப காலமாகவே வெறி பிடித்துத் திரியும் நம்மில் பலரைப் பற்றிய சிறு பதிவு.

சாப்புடலாம்-ன்னு தனியா கடைக்கு போனேன்.
ரொம்ப நல்லவன் மாதிரி ஒருத்தன் வந்து பேச்சு கொடுத்தான்.,

ஹாய் நான் இந்த ஏரியாலதான் இருக்கேன்., நீங்க எங்க இருக்கீங்க? என்ன பண்றீங்க?
ஓ அந்த கம்பெனியா, அங்கேதான் என்னோட நண்பன் வேலைல இருக்கான்.. அது இது-ன்னு நல்லா நேரம் போற மாதிரி பேசுனான்.

கடைசில கிளம்புபும் போது நட்பு நிமித்தமா நம்பர வாங்குனான்.

ஒரு ரெண்டு நாள் கழிச்சு போன் வந்தது..

நான் உங்களுக்கு ஒரு பிஸினஸ் வாய்ப்பு கொடுக்கலாம்-ன்னு இருக்கேன். வேலை நேரம் போக மீதி ஓய்வு நேரத்துல நீங்க இதுல கொஞ்ச நேரம் வேலை செஞ்சா பொதும், மாசம் 25ஆயிரம் வரை சம்பாரிக்கலாம்-ன்னு பில்டப் எல்லாம் கொடுத்தான்.
நாம யாரு, ஏற்கனவே MLM அது இது-ன்னு பார்த்துருக்கோம்-ல்ல

இல்லப்பா எனக்கு சைடு பிஸினஸ் ல எல்லாம் விருப்பம் இல்ல-ன்னு சொல்லி போன வைக்கப் போனேன்.,
அவன் விடுறதா தெரியல...

நீங்க எனக்கு ஒரு 10 நிமிஷம் கொடுங்க, நான் இந்த ப்ராடக்ட்ட பத்தி உங்ககிட்டே சொல்றேன்., அதுக்கு அப்புறம் செய்யுறதும், செய்யாததும் உங்க விருப்பம்..-ன்னு கால்ல விழாத குறையா கெஞ்சுனான்...

சரி போய் தொலை நாயே-ன்னு அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, நல்ல புத்தி சொல்லி திருத்தி அனுப்பலாம்-ன்னு நினைச்சு அவன வரச் சொன்னேன்.

என்னமோ எழவு வென்ச்சர் கம்பெனியாம்.,
30000 ரூபா ட்ராவல் பேக்கேஜ்
நீங்க ரெண்டு பேர சேத்தி விட்டா, உங்களுக்கு 5000 கமிஷன்
நீங்க சேத்தி விட்ட ரெண்டு பேரு 4 பேர சேத்து விட்டா, உங்களுக்கு 10000 கமிஷன்

அப்படி இப்படி-ன்னு அளந்தான்.


என்ன ஒரு வார்த்த கூட பேச விடல.,
ஒரு கட்டத்துல, நிறுத்துடா..ன்னு கத்தி

எனக்கு கீழ 10 லெவல் இருக்கு, அதுல பத்தாவதா வாங்குற ஒருத்தன் கொடுக்கறதே 30000 ரூபா இதுல பத்து லெவலுக்கும் கமிஷன் மட்டுமே 45000 ரூபா போவுது.,  இது எந்த விதத்துல சாத்தியம்?
அப்படியே அந்த கமிஷன் கிடைச்சாலும் எனக்கு அப்படி கிடைக்கற வருமானம் வேண்டாம் மூடிட்டு போ-ன்னு திட்டி அனுப்பினேன்.

உனக்கு ஸ்கில் இல்ல, ஆளுமை இல்ல, அது இல்ல இது இல்ல, நீ பயப்படுற.. அதா இதா-ன்னு சொன்னான்.

அதப் பத்தி கவலை பட வேண்டியது நீ இல்ல -ன்னு ஒருசில கெட்ட வார்த்தைகள்ல அவனுக்கு புரிய வச்சு விரட்டி அடிச்சேன்.

என்னோட நேரம் வீணானதுதான் மிச்சம்.
எவ்ளோ டென்ஷன் இவனுங்களால...

பார்க்-ல நிம்மதியா ஒரு அஞ்சு நிமிஷம் உக்கார முடியல.

பஸ்ல சக பயனியா உட்காந்தும் இம்சை கொடுக்கறானுங்க.

பொது இடங்கள்ள தனியா போறதுக்கே யோசிக்க வேண்டியதா இருக்கு.,

இது Tree Business -ன்னு சொன்னா, இல்லவே இல்லைன்னு சாதிக்குரானுங்க.

பணம் சம்பாதிக்கணும்-ன்ற பேராசை இவனுங்களோட அறிவுக் கண்ணை எவ்ளோ தூரம் மறைசிருக்கு பாருங்க?

இவுனுங்க வெறும் அம்புதான், இவுனுங்கள எய்த ஒரு சதுரங்க வேட்டை காந்தி பாபு, அடையாளமே இல்லாம திரியறான். அவன் மட்டும் என் கைல கிடைச்சான், வகுந்துருவேன்...

நீ வாழு, சாவு., என்ன வேணும்னாலும் செய்., ஆனா என்னை மாதிரி சும்மா இருக்கற சாதாரண மனிதர்கள பிசினஸ் வாய்ப்பு-ன்ற பேர்ல இம்சை பண்ணாதே....


Don't approach me for showing your expertise in Convincing Skills.
I know you are well trained., but my answer for all your business opportunity is.... 

Piss off.


Thursday, January 8, 2015

எதோ தோணுது எழுதுறேன்...

பண சக்தி எந்த ஒரு தேர்தலிலும் முக்கிய பங்கு வகிக்குது.

மக்களால், மக்களை, மக்களே ஆட்சி செய்யும் மக்களாட்சி என்று நடைமுறைக்கு வரும்?

நான் கூட அரசியலுக்கு வரலாம், ஆனா எனக்கு உயிர் மேல ஆசை வந்துடுச்சி...

கறுப்புப் பணம்தான் எல்லாத்துக்கும் மூலம்.
ஷாப்பிங் மால் எல்லாம் யார் கட்டுறா?
அபார்ட்மெண்ட் எல்லாம் யார் கட்டுறா?
அதில இருந்து கோடி கோடியா வரும் வாடகை யாருக்கு போவுது...?
கறுப்புப் பணத்தை ஒழிச்சே ஆகணும்.
சரி, யாரு ஒழிக்கறது?

மோதி அரசு ஒழிக்குமா?
தெரியல.

வேற அரசு வந்தால் ஒழிக்குமா?
தெரியாது.

பெருக்கெடுத்து ஓடும் காட்டாறு போல சமூக நடைமுறை ஓடிட்டு இருக்கு.
அதுவே தானா ஆடி, அடங்கினால் உண்டு.

ஜாதி மத சண்டை ஒரு பக்கம்
இன வெறி அரசியல்வாதிகள் ஒரு பக்கம்
கருப்பு பணம் ஒரு பக்கம்
நீ ஒரு பக்கம்..

எல்லாரும் சேந்து இந்தியாவ பாடா படுத்துங்க...

Friday, December 26, 2014

டிவிட்டரும் நானும்

சரி, எல்லாரும் சமூக வலைத்தளம் facebook, twitter -ன்னு பேசிக்குறாங்க,
அப்படின்னா என்ன?
அதுல அப்டி என்னதா இருக்கு?

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த மக்களை, ஒன்று சேர்க்கும் இடம்-ன்னு சொல்லலாம்.
நீங்க மொதல்ல
https://www.facebook.com/
http://www.twitter.com/
... etc போன்ற ஏதாவது ஒரு சமூக வலைத்தளத்துல
உங்களுக்குன்னு ஒரு கணக்க [Account] உருவாக்கணும், பிறகு, நீங்க விருப்பப் பட்டால், உங்களைப் பத்தின விபரமெல்லாம், வெளி உலகத்துக்கு சொல்லலாம்.

அண்ணன் நல்லவர்,
வல்லவர்,
படித்தவர்,
கலியாணம் ஆனவர்,
புள்ள குட்டிகாரர்,
குடும்பஸ்தர்,
ஞாயமானவர்,
புளியம்பட்டில இருக்காரு,
புண்ணாக்கு யாவாரம் பின்னுவார்,

அப்படி இப்படி-ன்னு நீங்க உங்க அருமை பெருமைகள எல்லாம் உங்க கணக்கு மூலமா,  உலகத்துக்கு சொல்லலாம்...

என் பையன் என் மேல ஒன்னுக்கு விட்டான்-ன்னு உங்க மொபைல் கேமரால இருந்து, நனைஞ்ச சட்டையோட போட்டோ புடிச்சி போடலாம், அத ஊரே சேந்து பாத்து சிரிச்சி, 200 லைக் போட்டு காறித்துப்பும்.

இதனால என்ன கிடைக்குது?
ஒன்னும் இல்ல.

"தகவல் பகிர்தல்"
உங்க வாழ்க்கைல நடக்குற விஷயங்கள் எல்லாத்தையும், நண்பர்கள், சொந்தங்கள் மற்றும் முன்னால் காதலிகள் உட்பட அனைவருக்கும் ஒரே ஒரு பதிவு மூலமா தெரிவிக்கலாம்.

நான் மறுபடியும் சொல்றேன், நீங்க விருப்பப்பட்டால் மட்டுமே தெரிவிக்கலாம்..

நானும் இந்த மூஞ்சி புத்தகத்துல [facebook] ரொம்ப நாளா இருக்கேன்., இது என்ன அவ்வளவா பாதிச்சது இல்ல.,
அப்பப்போ ஏதோ போட்டோ போடுவேன், ஏதாவது காமெடி கீமெடி வந்தா அத பகிர்ந்துக்குவேன்..

இப்படி நல்லா போயிட்டு இருந்த என்னோட வாழ்கைல ஒரு நாள் அவ வந்தா,

ஏய் கட்டம் போட்ட சட்ட, பாலாப் போன டிவிட்டரே உன்னாத்தாண்டி சொல்றேன்., எங்கே ஓடுற?

நண்பன் மொபைல்-ல இருந்து சில ட்விட்டர் பதிவுகள (கீச்சு) காமிச்சான்...
ஊரே சேந்து ஒருத்தன ரவுண்டு கட்டி அடிச்சிட்டு இருந்தாங்க, (வேற யாரு நம்ம விஜய்னாவைத்தான்.)
ரொம்ப ரசனையா, நகைச்சுவையா  இருந்தது, சிரிக்கவும் வச்சது.,

ஆனா, ட்விட்டர் வந்தப்புறம் தான் தெரிஞ்சது, இவுனுங்க வச்சி செய்யறானுங்கன்னு.

சமீப மாதங்களில்தான் நான் டிவிட்டரில் பிரவேசிக்க ஆரம்பித்தேன்.,

பெரும்பான்மை மனிதர்களின் "மனசாட்சி" அவர்களின் ஏதோ ஒரு முகமூடியுடன் உலவும் இடம் இந்த ட்விட்டர்.

ஒரு சின்ன உதாரணம் விலைமகள் எனும் ஐடி, அதன் பதிவுகள் என் மனநிலையை பாதித்தது.

நீங்க யாருன்னு காட்டிக்காமையே, என்ன வேணாலும் எழுதலாம் என்பதே ட்விட்டரின் சுதந்திரம். 

முகநூலில் உங்களுடைய  குறைந்த பட்ச அடையாளமாவது தெரியும், [முகநூலிலும் போலிக்  கணக்குகள் உண்டு ஆனால் அவை ட்விட்டர்  அளவில் பிரபலம் ஆவதில்லை] உங்களுக்கு தெரிந்தவர்களே பெரும்பாலும் நட்பு வட்டத்தில் இருப்பார்கள்.

ஆதலால், கூட்டத்துல நாம கட்டுசோற பிரிப்பதில்லை. நானும் ரொம்ப டீசண்டு என்ற போர்வையில், சொல்ல நினைச்சத சொல்லாம போய்டுவோம்.

ஆனால், ட்விட்டரில் மிகமிகக் குறைவான நபர்களே, தங்களின் சொந்த முகத்தில், சொந்தப் பெயர்களில் கீச்சுகிறார்கள். [@Singamulla என்பது என்னுடைய அன்அபிசியல் ஐடி. என்னுடைய பெருன்பான்மை மைண்ட் வாய்ஸ் counter கொடுக்க சந்தானம் முகம் தேவைப் பட்டது.]

ட்விட்டர் உங்ககிட்டே ஆதார் அட்டை கேக்காது, நீங்க என்ன கொடுத்தாலும் வாங்கிக்கும்.,

ராமசாமி மவன் முனியன் பேருல ஒரு ஐநூறு ரூவா எழுதிக்க-ன்னு சொன்னா கூட ட்விட்டர் அத வாங்கிக்கும்.

போலிக் கணக்குகளே ட்விட்டரில் பிரபலங்கள்.

உங்களுடைய சொந்த அடையாளம் வெளியே தெரியாது-ன்னு உங்களுக்கு ஒரு தைரியம் வந்துடும்., மனசுக்கு பட்டத அப்படியே பதிவுகளா, விமர்சனங்களா, கவிதைகளா, கிசுகிசுக்களா, கெட்ட வார்த்தைகளா, கொச்சை வரிகளா.,
உங்கள் மனசாட்சி பிரதிபலிக்கத் தொடங்கும்.

உடனுக்குடன் செய்தி,
பொறணி பேசுறது,
கலை, கவிதை, விமர்சனம், கலாய்ப்பு -ன்னு பொண்ணுங்கள எத்தன வகையா பிரிக்க முடியுமோ அதைவிட அதிகமான வகையறாக்கள் ட்விட்டரில் உண்டு.

எனக்குத் தெரிந்த வரை, நடிகர் விஜயின் முக்கிய எதிரிகள் இங்கேதான் இருக்காங்க.

பெரும்பான்மை பெண் ஐடிக்கள் போலி.
மொச புடிக்கற நாய மூஞ்சப் பாத்தா தெரியாது?

கவுண்டமணி, வடிவேலு போன்ற காமெடி நடிகர்களின் முகமூடிகளையும் மாட்டிகிட்டு கண்டபடி எழுதிக் கிழி கிழின்னு கிழிக்குறாங்க.

டிவிட்டர்ல ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னான்னா, 140 எழுத்துக்களுக்கு மிகாமல் உங்களுக்கு என்ன தோணுதோ நீங்க ஒரு பதிவுல எழுதலாம். அதனால அலுப்பு தட்டாது.

நானே ஒரு சில ஹைக்கூ கவிதைகள டிவிட்டர்ல கீச்சி இருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.

சரி என்ன பிரச்சன, ஏன் இப்ப அழற?

நான்தான் சொன்னேன் இல்ல, மனசாட்சி எப்பவும் உண்மையே பேசும். ஒருத்தன் சொல்றது உங்களுக்கு புடிக்காது, உடனே நீங்க அவன காறித் துப்புவீங்க,

அவன் உடனே கூட்டமா சேந்து உங்கள காறித் துப்புவான்... இப்படி தினசரி சண்டைகள் ஏராளம்.

நாள்பட, அடிமையாகி விடுவீர்கள். டிவிட்டரே கதி என்று எந்நேரம் பார்த்தாலும் மொபைலையே நோண்டிக்கொண்டே இருப்பீர்கள்.

ட்விட்டரில் எதிரிகள் அதிகம்.

ஏன் என்னை பின்தொடர்வதை நிறுத்துனீர்கள்-ன்னு அழுவார்கள்.

உனக்குப் பிடிச்சா follow செய், இல்லான்னா போ-ன்னு நீங்க சொல்றது கேக்குது.

ஆனா, இங்கே நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு சுலபமா தெரியாது.,
ஒரே பதிவுல ஒருத்தன வெறுத்திட முடியாது, அவன் மனசாட்சி என்ன எழுத சொல்லுதோ, அத அவன் அப்படியே எழுதுறான்.

நிறைய பாலோவர்ஸ் வேண்டும் என நானும் ஆசைப்பட்ட சில நாட்கள்  உண்டு.

இப்படி நானும் இந்த டிவிட்டருக்கு அடிமையாகிட்டேனோ-ன்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு.

சரி சோதிப்போம்-ன்னு ஒரு வாரம் ட்விட்டர் பக்கமே போகாம இருந்தேன்.

மனசு முன்னைவிட ஓரளவு அமைதியாவே இருப்பத உணர முடிஞ்சது.

சோ, இந்த வலைப்பூவின் மூலமா நான் சொல்ல வர்றது என்ன-ன்னா..

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
#சஸ்பெண்ஸ்சோடவே சாவு..






Wednesday, November 12, 2014

கட்டாடை சிற்றாடைபெண்ணியம்

ஒரு நாள் ஆபிஸ்க்கு கொஞ்சம் டைட்டான பேன்ட் அணிந்து வந்தேன்.

துணி சுருங்கிடுச்சு-ன்னு நினைச்சேன்., ஆனா நிலைக் கண்ணாடில தொப்பைய பார்க்கும் போது கொஞ்சம் சங்கடமாதான் இருக்கு.,
நாளை முதல் யோகா-ன்னு மனசுல நினைச்சிட்டு நகர்ந்தேன்.

மழைக் குட்டைய கொஞ்சம் வேகமா தாண்டுனதுல டர்ர்ர்

டைட் பேன்ட் கிழிஞ்சி போச்சு., தொடை தெரிய ரம்பா மாதிரி எனக்கு ஒரு உணர்ச்சி.

ஒரே  கூச்சமா இருந்தது, உடனே நண்பனுடன் போய் வேற புது பேன்ட் வாங்கி மாத்திட்டு வந்தேன்.,

கொஞ்சூண்டு தொடை தெரிஞ்சதால வெட்கி வேதனையடஞ்சு வெம்பிப் போனேனே.,

இந்த நவ யுவதிகள் எப்படித்தான் கவர்ச்சிகரமான கட்டாடை/ சிற்றாடை உடுத்திட்டு வராங்களோ தெரில.

எம்ம்மா உங்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா?

இதை ஆதரித்துப் பெண்ணியம் பேசுவர்களின் பொதுவான பதில்:
"காமம் எங்கள் உடையில் இல்லை, உங்கள் கண்களில் உள்ளது"

உங்கள் கவர்ச்சியைப் பார்த்து காமம் எழா விட்டால், ஆண்கள் சித்த மருத்துவரைத்தான் போய் பாக்கணும்.

Monday, November 10, 2014

விளம்பரம்

எங்களால, எந்த ஒரு கருமாந்திரத்தையும் உங்க தலைல கட்ட முடியும்-ன்னு நிரூபிக்கறது தான்  இந்த விளம்பரங்களோட உச்ச கட்ட சாதன.


100 பேர் கிட்டேகேட்டா, 10 பேரு வாங்குவான் - இதுதான் மார்க்கெட்டிங் (கு)யுத்திகளின் தாரக மந்திரம்.

நம்மில் பலருக்கு கண்ட நம்பர்களில் இருந்து, நேரம் கெட்ட நேரத்துல கால் வரும்,
என்ன-ன்னு கேட்டா,

நாங்க இந்த ஹேர் கிளப்-ல இருந்து கூப்புடுறோம், உங்களுக்கு சூப்பரான ஸ்கீம் இருக்கு வேணுமா?

கிரிடிட் கார்டு வேணுமா?

பெர்சனல் லோன் வேணுமா?

வீடு/ ப்ளாட் வேணுமா?

கரப்பான் பூச்சி விரட்ட கூட எங்க கிட்டே ஒரு ஆபரேசன் இருக்கு வேணுமா?


சலிச்சு போய், DND அக்டிவேட் செய்தால், அதை ஆரம்பிக்க கால அவகாசம் 49 நாள்.

நாங்க அப்படி என்னடா பாவம் செஞ்சோம்?

வேலை வாய்ப்பு தேடி, ஒரு இணையத் தளத்துல எங்க மொபைல் நம்பர பதிஞ்சது குத்தமா?

அடுத்த நாளே சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனில இருந்தும் டெலி மார்கெட்டிங் செய்றாங்களே?

எந்த ஒரு மொக்கை படத்தையும் வெற்றிப் படமாக்குற சக்தி சன் டிவி-க்கு இருக்கு.

எந்த ஒரு வெளங்காத பொருளையும் நம்ம தலைல கட்டுற சக்தி, விளம்பரங்களுக்கு இருக்கு.,

இது பத்தாது-ன்னு  நம்ம கலாசாரத்தையே குலைக்குற மாதிரி ட்ரென்ட் செட்டிங் இந்த விளம்பரங்கள்..

எ.கா:
அம்மா மகனிடம், உன் மனைவி ரொம்ப ஹாட்ஆ இருக்குறா-ன்னு சொல்லும் ஒரு Dominos Pitza விளம்பரம்.

வொய் திஸ் கொலவெறி?





Monday, August 25, 2014

இஸ்லாமும் ஈஸ்வரனும்...

ஜிப்ரேல் என்ற இறை தூதர் (நபி), அண்ணல் முகம்மது அவர்களுக்கு கூறிய வேதமே குர்ரான். இறைவன் ஒருவனே என்ற தத்துவம், எளிமையான வாழ்க்கை முறை, நோன்பு, மற்ற உயிர்களிடம் அன்பு காட்டுதல் மற்றும் தினசரி கட்டாயத் தொழுகை.. ஜிப்ரேல் ஒரு நாளுக்கு 52 முறை தொழ சொன்னாராம், ஆனால் நடைமுறை சாத்தியம் கருதி, முகம்மது 5 முறையாகக் குறைத்ததாக ஒரு வரலாறு உள்ளது., [மேலும் விபரங்களுக்கு நிலமெல்லாம் ரத்தம் என்னும் நூலை படிக்கவும்]

அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்தவன் ஈஸ்வரன். தவ யோகத்தை வழிகாட்டுகிறது சைவம். உலக உயிர்கள் அனைத்திற்கும் படியளப்பவர் ஈஸ்வர். ஆரம்பம் மற்றும் முடிவு இல்லாத இறைவன் ஈஸ்வரன்.

நீள அகல உயரம், ஆரம்பம் மற்றும் முடிவு நிலை இல்லாத ஒரே ஒரு உதாரணம் இந்த பிரபஞ்சமே... விண்வெளி, பால்வெளி...காலக்ஸி .. என்று வல்லுனர்களால் பல்வேறு வார்த்தைகளில் விளக்கப் பட்டு வந்த இந்த பிரபஞ்சமே இறைவன் என்ற தத்துவம் சைவத்தில் உள்ளது.

எந்த ஒரு மதமும் உருவான காலத்தில் மிக சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கிறது, ஆனால் காலப் போக்கில் மத குருக்கள், மற்றும் மத அரசியல்வாதிகள் அவர்களின் வசதிக்கேற்ப ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள், ஆதலால், மதத்தின் போக்கு மாறி இருக்கிறது.

மதம் என்பது மக்களின் அபின் - என்று ஒரு மார்க்சீய வாக்கியம் உள்ளது. இதை மறுக்க என்னால் இயலவில்லை.

இன்று இருக்கும் சூழலில் மதமே இல்லாமல் இருப்பது உத்தமம் என்றே தோன்றுகிறது. [நம் ஆதி தமிழர்கள் போல].


அமேஸான் காடுகளில் இருந்து...

இயற்கை நமக்கு பல அரிய மூலிகைகளைக் கொடுத்து இருக்கிறது.. ஆனால் அவை யாவும் பொய் என்று போலி சித்த மருத்துவர்கள் நிராகரிக்க வைத்து விட்டார்கள்.

உடலில் ஜீரன மண்டலத்தில் இருந்துதான் எந்த நோயாக இருந்தாலும் ஆரம்பிகின்றன..

பெரும்பான்மையான நோய்களுக்கு முறையான மருத்துவம் சித்த மருத்துவ மூலிகைகளில் இருக்கிறது, அவை உடலுக்கு பக்க உபாதைகள் ஏதும் கொடுக்காது.,

ஆனால் நவீன / ஆங்கில மருத்துவ முறை இதனைக் குப்பை என்று நிராகரிக்கிறது. சித்த மருத்துவ மூலிகைகளை அங்கீகரித்தால், கொள்ளை விலையில் விற்கும் ரசாயன மருந்துகளின் விற்பனை படுத்துவிடும் என்ற ஒரே காரணம்தான்.

இன்று அரைகுறை ஆடையில் ஒரு பெண் வலம் வந்து, அவளைவிட கவர்சிகரமான வார்த்தைகளில், என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக இருக்கிறோம்.

அமேஸான் காடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சில அறிய வகை மூலிகைகளால் ஆன தைலத்தை விரும்புகிறோம், [மேலும் விபரங்களுக்கு மிடாஸ் டச் - எம்.எல்.எம் காட்சிகளை சதுரங்க வேட்டை எனும் படத்தில் பார்க்க] ஆனால், நமது பாரம்பரிய மூலிகைத் தைலங்களை வசதியாக மறந்து விட்டோம்.

ஆங்கில / ரசாயன மருந்துகளில் போலிகளைப் பிரித்தறிவது கடினம், ஏனெனில் அவை உடலில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களில் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதில்லை. ஆனால் சித்த மருந்துகளில் நீங்கள் பரிச்சயம் அடைய ஒரு சில முயற்சிகள் தேவை. பின் போலிகளை எளிதில் கண்டு கொள்ளலாம்.

சித்த மருந்துகளால், உடனடி நிவாரணம் கிடைக்காது, ஆனால் நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.

வளம் பெறுவோம்., வாழ்க வளமுடன்.




Friday, August 22, 2014

மரம் நடுவோம்..


இயற்கை நியதிப்படி ஒன்றை சார்ந்தே ஒன்று உயிர் வாழ்கிறது, இயற்கையின் விதிப்படி, உலகம் முழுவதும் வெறும் காடுகளாகவும் மரம் செடி கொடி புதர்களாகவும், பாலைகளாகவும், சோலைகளாகவும், கடலாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனும் மற்ற உயிரினங்களைப் போலவே இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான்.
அவனுக்கு வேண்டியது எல்லாம் உணவு மட்டுமே., மரங்களில் இருந்து பழங்களையும் கீரை கிழங்குகளையும் தேவைப் பட்டால் ஒரு சில சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்ந்தான்.

மாற்றம் ஒன்று மட்டுமே நிலையான இயற்கை நியதிக்கு மனிதனும் விதி விலக்கல்ல., விங்குகளின் தோலை உன்ன முடியாது, ஆகையால் அதை வைத்து சுகாதாரத்திற்காக குறிகளை மறைக்கப் பழகினான். இது வாய் மூலமே குடிக்க உண்ண முடியும் என்று தோன்றிய அனிச்சை செயல்.

சிக்கி முக்கி கற்களின் மூலம் நெருப்பைக் கண்டு பிடித்தான், பின்னர் அதை வைத்து குளிர் காய்ந்தான்., இவை எல்லாம் இயற்கையே மனிதனுக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

நெருப்பின் பின் சக்கரம், வண்டி, வண்டியை இழுக்க மற்ற ஆநிரைகளை அடிமைப் படுத்தினான்.. இங்குதான் மனிதனின் முதல் தவறு ஆரம்பிக்கிறது.

அடிமைத் தனம் என்ற ஒன்றை மனித விலங்கு மற்ற விலங்குகளிடம் செலுத்த ஆரம்பித்தது... அன்று தொட்டு, இயற்கையின் போக்கு இந்த மனித விலங்குகளினால் பெரிதும் பாதிக்கப் பட்டு, மொழி, மதம் இனம் வன்மம், நாகரீகம் நகரமயம், முதலாளித்துவம், தொழிலாளித்துவம், அடிமைத் தனம், தீவிரவாதம்... என்று மனித சமுதாயம் அடைந்த பாதிப்புகளை விட இயற்கை சீரழிந்துள்ளது.

ஒட்டு மொத்த இயற்கையையும் துவம்சம் செய்து மனித விலங்கு அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக போகங்கள் கூடிய விரைவில் முடியப் போகின்றன.

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை எந்த அளவிற்கு மாசுபடுத்த முடியுமோ அதை விட அதிகமாகவே மாசுபடுதுகிறோம்.

இயற்கை தன்னை உருமாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்தது...
வறண்ட ஏரிகளில் மீண்டும் தண்ணீர் சுரக்க ஒரு சில தலைமுறைகள் ஆகலாம், ஆனாலும் ஏரி என்பது ஏரி தான். அதில் மண் கொட்டி மாடி வீடு கட்டுவது மனிதனின் முட்டாள்தனம்.

கடைசி சொட்டு தண்ணீரும் நச்சுண்டு, அமெரிக்காவின் ஆயுத பலமும், அரேபியாவின் எண்ணெய்  வளமும், ஆசியாவின் தங்க வளமும் ஒரு சொட்டு மழை நீருக்காக ஏங்கும் தருணம் மிகத் தொலைவில் இல்லை...

இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகாமல் இயற்கையை பேண நம்மால் முடிந்த ஒரு சில காரியங்களைச் செய்வோம்.


மரம் நடுவோம், மழை நீர் சேமிப்போம்...
வேதாத்திரி மகரிஷி பாணியில்,

எரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய,
மாரி அளவாய் பொழிய,
மக்கள் வளமாய் வாழ்க.

ஜென்ம ஆசை...

பொன்னியின் செல்வனில் இருந்து சில வரிகள்...


என் வாழ்நாளில் ஒரு முறையேனும் இப்படி, தமிழரின் பாரம்பரிய உணவை ருசிக்க ஆசைப் படுகிறேன். இது அந்தக் காலத்து ஏழை வீட்டு உணவு... மிக்க ஆரோக்கியம் நிறைந்தது.



பண்ணித் தமிழ்


ஏய், இதைக் கொஞ்சம் ஓபன் பண்ணிக் கொடேன் ப்ளீஸ்? [தமிங்கலம்]

தோழியே, கொஞ்சம் தயை கூர்ந்து இதைத் திறந்து தருகிறயா? [தூய தமிழ்]

இதைக் கொஞ்சம் திறந்து தரியா? [என்னுடைய எதிர்பார்ப்பு..]

இனிய உளவாக இன்னாத கூறல், கனி இருப்பக் காய் கவர்ந்தற்று... என்று வள்ளுவர் ஒரே குறளில் சொல்லி விட்டார்.



எங்கிருந்து வந்தது இந்த "பண்ணி"
பண் என்றால் பாடல் என்று பொருள்., சாமானியர்களின் வட்டாரச் சொல்லாக வழங்கி வந்த இந்த பண்ணி, இன்று தமிழ் பேசும் அத்தனை வாய்களிலும் விளையாடுகிறதே அது எப்படி?

முழு முதற் காரணம்: "ஷோ ஆங்கர்" என்று அழைக்கப் படும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்.

யூஸ் பண்ணி, ஓபன் பண்ணி, அதைப் பண்ணி, இதைப் பண்ணி...
இவங்க யாருமே தமிழ்நாட்ல  பிறக்கலையா? தமிழே கற்காதவர்களா?

கால் பண்ணுங்க... கால் பண்ணதுக்கு ரொம்ப நன்றி.. எதற்கெடுத்தாலும் ஒரு பண்ணி யை சேர்த்து தமிழ் வழக்கத்தில் "பண்ணி" எனும் பன்றியை சேர்த்த இவர்களை என்ன செய்யலாம்?

இரண்டாவது காரணம் "ரேடியோ ஜாக்கி" என்று அழைக்கப் படும் பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்.

தமிழை எவ்வாறெல்லாம் கற்பழிக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து பேசுவதில் கில்லாடிகள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சில நூறு வார்த்தைகள், அவற்றில் இலக்கணம் இல்லாத தமிழ் ஏராளம், மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிச் சொற்கள் ஏராளம், இவை மட்டும் இல்லாது, வழமையான பண்ணி -ச் சொற்களும் ஏராளம்.

மூன்றாவது காரணம் நான் [நாம்]
உனக்கு எங்க போச்சு புத்தி, எவனோ ஒருத்தன் கூவறான், அதைக் கேட்டுட்டு நீயும் எதுக்கு கூவுற? [என்னை நானே கேட்டுக் கொள்கிறேன், உங்களுக்கும் உரைத்தால் மன்னிக்கவும்.]

பேச்சுரிமை உங்கள் பிறப்புரிமை., தாய்த் தமிழ் மொழியை நீங்கள் புறக்கணியுங்கள்., படிக்காதீர்கள், பேசாதீர்கள் கற்காதீர்கள்.. உங்கள் மொழி உங்கள் உரிமை.  அதைச் சாட நான் யார்?

ஆனால், மொழியைக் கலக்காதீர்கள் கெடுக்காதீர்கள் கற்பழிக்காதீர்கள். மொழிக்கலப்பு மொழிகளின் தன்மையை, வீச்சைக் கெடுத்து விடும், உங்கள் புலமையும் கெட்டு விடும்.

ஒன்று தமிழில் பேசுங்கள், அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் 

பி.கு: இந்த பண்ணி வழக்காடு என்னையும் ஆட்கொண்டு விட்டது, அதிலிருந்து வெளிப்பட நானும் முயற்சிக்கிறேன்.

Tuesday, August 19, 2014

காதல் அறிகுறி.

காணும் பொழுது ஏற்படும் மெல்லிய சலனம்,
இதயம் இருப்பது போன்ற சிறு உணர்வு,
மனதில் சிறு நடுக்கம்,
இனம் புரியாத சோகம்.

இன்னும் எத்தனயோ விவரிக்க முடியாத உணர்ச்சிகளின் வெளிப்பாடு.

இயற்கை நியதிப் படி, உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளும் வாழ்க்கை எனும் ஒரு பயணத்தை மேற்கொள்கின்றன. அதற்கு இயற்கையே பருவத்திற்கு ஏற்றாற்போல்,  ஒவ்வொரு ஜீவராசியின் உடலிலும் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு காற்றில் பரவும் வாசனை, வண்டுகளை ஈர்த்து, மகரந்தச் சேர்கை நடைபெற எதுவாய் செய்துள்ளது.

சற்றே பரிணாம வளர்ச்சி கண்ட ஜீவராசிகளிடம், ஆண் பெண் என்ற வெவ்வேறு உடலமைப்புகளைக் கொடுத்து அவைகளை களிப்புறச் செய்கிறது...

எல்லா உயிரினங்களும் பிறக்கின்றன, பருவத்தே இனப்பெருக்கம் செய்கின்றன, மடிகின்றன. ஆனால் மனிதன் மட்டும் தனது யோசிக்கும் திறனை வைத்து காதலிக்கிறான், காதலால் செய்யக்கூடாத காரியங்களை எல்லாம் செய்கிறான்.

இனப் பெருக்கத்திற்கு தயாரான பெண் மனித விலங்கு பூப்படைகிறாள். [பூ]
மீசை அரும்பிய ஆண் மனித விலங்கு சைட் அடிக்கிறான். [வண்டு].
இந்த ஒரு ஈர்ப்பு விசைக்கு காதல் என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர், அதற்கு ஆண்டுதோறும் விழாவும் எடுக்கின்றனர்.

இதை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வெட்கம் கெட்டு வினோத வினோதமான ஒலி ஒளி காட்சி அமைப்புகளை வைத்து காலம் காலமாக பாடியும் படமெடுத்தும் வருகின்றனர்.

மற்ற உயிரினங்களை விட மனிதன் சற்றே மேம்பட்டு மொழிப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம் என்று பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதால், தலைவன் - தலைவி ஊடல், காதல் கத்திரிக்காய் என்று சில இலக்கியங்களைப் படைத்துவிட்டான். காலம் மற்றும் கலாச்சார கட்டுக் கோப்புகளுக்காக திருமணம், சொந்தம் பந்தம் என்று ஒரு சில நிபந்தனைகளை தனக்குத்தானே விதித்துக் கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்.

பசி தூக்கம், ஏக்கம் போன்று காதலும் ஒரு உணர்ச்சியே., காலம் கடந்து  ஏற்படும் உணர்சிகளால் ஏற்படும் விபரீதங்களைத் தவிர்க்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகிறது.

இரண்டு குழந்தைகளைப் பெற்ற தாய், கள்ளக் காதலனுடன் தலை மறைவு, சோகத்தில் தந்தை தற்கொலை... போன்ற செய்திகள் சம காலத்தில் மலிந்து வருகின்றன.

இல்லறம் சிறக்க கணவன் மனைவி தாம்பத்ய உறவு அவசியம். சரியான உணவு பழக்கம் இல்லாததாலும், அளவுக்கு அதிகமான புகை மற்றும் குடிப் பழக்கத்தினாலும் பெரும்பான்மை ஆண் மனித விலங்குகள் ஆண்மையை இழந்து தங்களது துணைவி /மனைவிகளை திருப்த்தி படுத்த முடியால் இருக்கின்றனர். மேலும் நரம்புத் தளர்ச்சி, பதட்டம் போன்ற நோய்களும் இலவச இணைப்புகளாக ஒட்டிக் கொள்கிறது... இதனால் சோகமடைந்த பெண் மனித விலங்கு வாய்ப்பு கிடைத்தவுடன் உறவுக்காக யாருடனோ ஓடி விடுகிறது...

கள்ளக் காதலுக்கு ஆண் மனித விலங்குகள் மட்டுமே காரணம் என்று ஒருதலையாக வாதிக்க முடியாது. சுத்துக் கொழுப்பு அதிகம் உள்ள சோரம் போகும் இயல்புடைய பெண் மனித விலங்குகள் ஏராளம். ஒரு குறிப்பிட்ட ஆண் மனித விலங்குடன் அவைகளால் நீண்ட நாட்கள் வாழ முடியாது. போரடித்து வேறு ஒரு ஆண்  விலங்குடன் ஓடி விடும். அவர்களைத் தடுக்க / திருத்த யாராலும் முடியாது.

சதா சர்வ காலமும் தனது துணையை கண்காணிப்பது என்பது முட்டாள்தனம், அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன்னை அவதானிக்கிறார்கள் என்ற உணர்ச்சி காட்டிக் கொடுத்து நல்ல குடும்பத்தைப் பிரித்து விடும்.

கள்ளக் காதல் அறிகுறி இல்லாத வாழ்க்கைத் துணை வேண்டுமா?
என்னதான் வழி?

உடைந்த கண்ணாடியை ஒட்ட முடியாது, ஆனால் புதிய கண்ணாடியை வேண்டுமானால் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் துணை ஒழுக்கத்துடன் இருக்க நினைகிறீர்களா? நீங்கள் ஒழுக்கத்துடன் இருங்கள்.

கடந்த கால பாவங்களை மாற்ற முடியாது, உங்கள் வினைப்பயன் உங்களையும் உங்கள் சந்ததியையும் தொடரும். ஆகையால் உங்களது கணக்கில் உள்ள பாவப் பதிவுகளின் மீது புண்ணிய செயல்களினால் நல்ல பதிவுகளை உருவாக்குங்கள்.

தனிமையில் உன்னில் எழும் எண்ணங்களே உன் வாழ்க்கைத் தரத்தை நிர்மாணிக்கிறது - விவேகானந்தர்.
ஆகையால் நல்ல விஷயங்களைசிந்தியுங்கள் செயல்படுங்கள், உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைநிலையை வேண்டுகிறேன்.

Monday, August 18, 2014

மாட்டுக்கறியும் கொலை வெறியும் - என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்.

மாட்டுக்கறியும் கொலை வெறியும் - என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்.

நான் யார் சொல்வதையும் விளக்கவில்லை... என்னில் எழும் ஒரு கேள்வி...
எந்த ஒரு பாலூட்டியும் இன்னொரு பாலூட்டியின் குட்டிக்கு பால் கொடுக்காது.,
உதாரணம்., ஒரு மனிதப் பெண் இன்னொரு மனிதப் பெண்ணின் குழந்தைக்குப் பால் கொடுக்க முகம் சுழிப்பாள்.,

பசுவே உங்கள் இல்லம் வந்து, இந்தா குடி என்று பால் கொடுப்பதில்லை.... பால் நிறைய சுரக்கிறது என்று பசுவிடம் இருந்து மனிதன் பாலைத் திருடுகிறான்.  ஏன் பன்றியிடம் இருந்து பால் திருடவில்லை என்றால், பசுவின் பால் உடலுக்கு சத்து, மற்றும் எந்த பக்க விளைவுகளும் இல்லாதது...

பசுவிற்கு செயற்கையாக சினையேற்றுகிறான், தீவனமிட்டு ஒன்றுக்கு பல மடங்காக பால் கறக்கிறான், கொள்ளை லாபம் பார்கிறான், மடி வற்றிய பின் கறிக்காக விற்று விடுகிறான்...

பசுவின் கன்றுக்காக சுரந்த பாலைத் திருடி விட்டு, நன்றி உணர்ச்சியே இல்லாமல் பசுவைக் கொல்வது நியாமா?

Tuesday, August 5, 2014

"ஜிகிர்-தண்டா" திரை விமர்சனம்


தமிழில் வெளியாகும் அத்தனை படங்களையும் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதால், மிகவும் தேர்ந்தெடுத்து படங்களைப் பார்ப்பது என் நிலைப்பாடு.
படத்தின் 30 % காட்சிகள் நகைச்சுவை மிகுந்தது...
முதல் பாகம் சற்றே இழுவை...
இரண்டாவது பாகம் மிதமான வேகம்... அவ்வளவே..

தமிழ்பட வெறியர்களுக்கு இது ஒரு வித்தியாசமான முயற்சி.,
என்னை பொறுத்த மட்டில், இது ஓகே வொர்த் வாட்சிங் படம்.. அவ்வளவுதான். அடுத்த சீன் என்ன என்று என்னால் எளிதாகக் கணிக்க முடிந்தது...

ஆனால், RED (English Movie) படத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு விறுவிறுப்பான அனுபவம், அந்தக் கதா நாயகியின் முகபாவத்தில் ஈர்ப்பு, இந்தப் படத்தில் ஏற்படவில்லை.
லட்சுமி மேனனுக்கு செயற்கையாக ஒரு பாத்திரம்... தேவையே இல்லை, செலவைக் குறைத்து இருக்கலாம்.



Monday, June 23, 2014

அன்புத் தொல்லை..

குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்....

ஆ..உவே.... உர்ர்ர்..  என் மகனின் மனம் நான் அறிவேன். அவனுக்கு பிஸ்கட் வேண்டும்,

உப்பூ [UBBU] மம்மி....
...ம்ம் 
யாரு எங்க உப்பு மம்மி..
நான்தான் என்று மார்தட்டுவான்...ம்ம்ம்..ம்ம்.ம்ம் 

கூல புஜ்ஜி மம்மி..
தரணிஷ் குட்டி..
ஒப்புட்டு..
ஜின்ஜி..
சிங்கம்..

என்று எண்ணற்ற அடைமொழியில் நாங்கள் அவனை அழைத்தாலும், எங்களுக்கு பெயர்கள் போதவே இல்லை.. தினமும் அவனுக்கு ஒரு செல்லப் பெயர் வைக்கிறோம். 

யார் சொல்லியும் காலையில் நான் சீக்கிரம் எழுந்ததில்லை... ஆனால், எங்கள் உப்பு மம்மிகாக, ஆறு மணியளவில் எழுந்து டெய்ரி-க்குச் சென்று புத்தம் புதிய பசும்பால் வாங்கி வருவேன்.. சமீப காலத்தில், ஏதோ மாட்டுத் தீவனம் சேரவில்லை போலும், ஆதலால், மீண்டும் பாக்கெட் பாலுக்கு மாறி இருக்கிறோம்...

அவனுடன் கொஞ்சிப் பேச, எவ்வளவு நேரம் இருந்தாலும், போதவில்லை... 

அவனுக்கு என் கண் கண்ணாடியின் மேல் அலாதிப் பிரியம்... எப்போது வேண்டுமானாலும், பிடுங்கி எரியுவான்...

பொது இடங்களில், கடைகளில், ஓடிப் பிடித்து விளையாட அழைப்பான்...

என் மடியில் அமர்ந்து கார் ஓட்டுவான், ஆனால், நான் ஸ்டீரிங் பிடிக்கக் கூடாது... என் கைகளைத் தட்டி விடுவான்..

கையில் எது கிடைத்தாலும் என் முகத்தில் எரியுவான்....

மொபைல் போன் அவனுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அடிக்கடி தண்ணீர் வாளியில் வைத்து விளையாடுவான்..

அவனே எடுத்து சாப்பிட வேண்டும் என்று எதைக் கொடுத்தாலும், கீழே பாதி வாயில் கொஞ்சம், சட்டையில் மீதி என்று கொட்டுவான்... நான் ஊட்டி விடுவது ஏனோ அவனுக்குப் பிடிக்கவில்லை..

நான் எத்தனை  முறை, என் மகனிடம் அடி வாங்கினாலும், அவன் மீது எவ்வளவோ கோபம் வந்தாலும், அனைத்தும் மறந்து போகிறது அவனுடைய ஒரே ஒரு புன்சிரிப்பில்..


மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்..
குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்....

Tuesday, June 17, 2014

Equinox.....THE TEMPLE OF TRIVANDRUM--AN UNKNOWN FACET.

The sun goes down along the middle portion of Gopuram of Sree Padmanabha Swamy Temple on equinox. 


Sree Padmanabha Swamy temple is so well constructed that on Equinox sun passes exactly through
 the middle of Gopuram passing through all the doors. An engineering marvel indeed !!

An Equinox is an astronomical event that happens twice, once in spring and once in autumn, each year when the tilt of the Earth’s axis is inclined neither away from nor towards the Sun. During Equinoxes the tilt of the Earth 
(with respect to the Sun) is 0° and because of it duration of the day and the night are
 almost equal on Equinox day i.e. 12 hours.

Equinoxes occur on 20th or 21st March and 22nd or 23rd September each year and 
both days has equal length of the day and the night. 
-------------------------------------------------------------------
 
When the Sethu Samudram Channel Project was on, well known political leaders like Karunanidhi etc wondered whether Lord Sri Rama had obtained an "Engineering degree" and from which institution?  Looking at the degree of accuracy in designing this (Padmanabhaswamy temple), it is proven that Indians at that time were quite proficient in their studies and use of it - for this is the proof that higher quality education did exist at that time. Apparently over a period of time we have lost it. We should really be keen to regain that lost  splendor  and move along...