Wednesday, May 12, 2010

ஓல்ட் பிரண்ட் நெவெர் சேஞ்சிங் பெர்சொனலிட்டி

நான் பக்கமா எங்க Industrial Visit Photographs-a Orkut-la share பண்ணி  இருந்தேன்.
அப்போ எல்லாம் எங்ககிட்டே digicam எதுவும் கிடையாது. பிலிம் ரோல் போட்டோ எடுத்து, அத develop பண்ணி maxi - snaps ஆல்பமா வச்சுக்குவோம். ,

எனக்கு பொழுது போகல-ன்னு அந்த பழைய ஆல்பத்துல இருக்கற போட்டோ-வை எல்லாம் என்னோட மொபைல் காமரல capture பண்ணி அதைத்தான் ஆர்குட்ல அப்லோட் பண்ணினேன்.

அதுக்கு, கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது.

ஒரு காலேஜ் மேட், அந்த போடோஸ் எல்லாத்தையும் பார்த்துட்டு, ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி, எனக்கு அந்த ஒரிஜினல் நேகடிவேஸ் எல்லாம் வேணும்-ன்னு கேட்டாள். (கிட்டத்தட்ட, ஒரு பத்து முறை கால் பண்ணி request  பண்ணினாள்)

சரி, பாவம் இந்த பொண்ணு ரொம்ப ஆசையா கேட்குது-ன்னு, நானும், என்னோட பழைய மூட்டைகளை எல்லாம் அலசி அந்த negatives i தேடி கண்டுபுடிச்சு கொண்டு வந்தேன்,

நாங்க 2 பேரும், பெங்களுருல வொர்க் பண்றதால, ஒரு நல்ல இடத்துல மீட் பண்ணலாம்-ன்னு யோசிச்சு, மாரத்தஹள்ளி -ல ஒரு ரெஸ்டாரன்ட்ல சந்திச்சோம்.

நல்லாத்தான் பேசிட்டு இருந்தாள். ஒரு அரை மணி நேரம் சாப்புட்டோம்.
:-)
பில்லு வந்துச்சு.

நான் இந்த பக்கம் திரும்பிட்டு, அந்த பக்கம் பார்த்தேன், ஆளைக்காணோம்!
ஹோடெலோட gate-kku வெளில போயி நின்னுகிட்டு இருந்தாள்.

அடி 7 1/2 , நீ இன்னும் திருந்தவே இல்லையா?

Tuesday, May 11, 2010

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ!..... part 1

எனக்கு வடை கொடுத்த பெண்கள் ஏராளம் ஏராளம்!....

அவர்கள் அனைவரையும் என் மனதில் நிறுத்தி நடந்ததை எல்லாம் என்னால் இங்கே கொட்ட முடியாது.

அதனால ரொம்ப ரீசண்டா நடந்த ஒரு இன்சிடன்ட்-அ இங்கே அனத்துறேன்.
(டேய், எங்கேடா எல்லாம் எஸ்கேப் ஆக ட்ரை பண்றீங்க., என்னை கொஞ்சம் அனத்த விடுங்க...)
       
           என்னோட ஆபீஸ் ல புதுசா ஒரு 4 பொண்ணுங்கல பார்த்தேன். அதுல பெஸ்ட்ஆ இருந்த ஒரு பொண்ணை கொஞ்சம் நல்லா உத்து பார்த்தேன்.

           அது லஞ்ச் டைம்-ன்றதுனால எனக்கு முன்னாடி அவளோட குரூப் போயிட்டு இருந்துச்சு., நான் என்னோட குரூப்போடா அவங்களுக்கு பின்னாடி போயிட்டு இருந்தேன்.
      
          அவள் சிரிச்சு சிரிச்சு அவளோட பிரண்ட்ஸ் கிட்டே பேசிகிட்டே போயிட்டு இருந்தா., பட் என்னை மட்டும் அவளோட ஓரக்கண்ணால எவ்ளோ தூரம் பார்க்க முடியுமோ அவ்ளோ பார்த்துகிட்டே பேசிட்டு போயிட்டு இருந்தாள்.

 நாம யாரு?.... சிங்கமுல்ல?.....

கண்கள் இரண்டால்., உன் கண்கள் இரண்டால்..... பாட்டுல ஜெய் பண்ற மாதிரி , ஈ-ன்னு பல்லை இளிச்சுகிட்டே போயிட்டு இருந்தேன்.

அடுத்து நாளும் இதே மாதிரி தான் நடந்துச்சு.

சரி., கொஞ்சம் பேசி பார்க்கலாம்-ன்னு ஒரு ஸ்டெப் எடுத்து வச்சேன்; அப்போதான் அவளை நேருக்கு நேரா பார்த்தேன். லைட் ஆ ஒரு ஸ்மைல் விட்டேன்.

அவள் ரொம்ப கேவலமா முறைச்சு பார்த்துட்டு போனாள்.
இது என்ன, புதுக் கொடுமை-ன்னு நானும் பேசாம விட்டுட்டேன்.

அடுத்த நாள்-தான் எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது.....

அவள் அதே பிரண்ட்சோட, கெக்கே கெக்கே-ன்னு சிரிச்சு பேசிட்டு போயிட்டு இருந்தாள். நான் கொஞ்ச தூரத்துல இருந்து நோட் பண்ணினேன்.

        அவள் பக்கத்துல இருக்கற அந்த அரை லுசைத்தான் பார்த்துட்டு பேசிட்டு வந்து இருந்தாள். ஆனா, அவளோட கண்ணு பின்னாடி வர்றவங்களை பாக்குற மாதிரி இருந்தது.

அடி கிராதகி., உனக்கு மாறுகண்ணா?


என்ன கொடுமை சார் இது?....

Monday, May 10, 2010

முதல் கதை(கலை)ப்பயணம்

ன்னுடைய 21 வது வயதில், என்னுடைய முதல் சிறுகதையை எழுதினேன்.
(டேய் நீ இது வரைக்கும் அவ்வளவுதான்டா எழுதி இருக்கே!)

அந்த கதைய ஆனந்த விகடன் கட்டுரைப்போட்டி-க்கு அனுப்பினேன்.
(review பண்ணினவங்க பாவம்)

என்ன காரணத்தாலையோ அவங்களால அதை அங்கீகரிக்க முடில.
(டேய் வேணாம்., வயிதேரிச்ச்ள கிளப்பாதே!)

ஆனா அதனால நான் மனசு உடைஞ்சு போகல, மறுபடியும் வேற ஒரு போட்டி-க்கு அனுப்பினேன்.
(நல்ல மாட்டுக்கு ஒரு சூடு)

          மறுபடியும் எனக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கலாம்-ன்னு அவங்க நினைச்சு இருப்பாங்க போல, ஆனா நான் இந்த சில்லி மேட்டருக்கெல்லாம் கலங்குற ஆளா?
(மனுசனா பொறந்தா மானம், சூடு சொரணை எல்லாம் இருக்கணும், பட் நீ 2 unlimited  மீல்ஸ்- சாப்புடுற ஆளாச்சே!)

அடுத்த கட்ட நடவடிக்கையா, நானே என்னோட கதைய பிரசுகரிக்கலாம்-னு முடிவு பண்ணி, எங்க அப்பா கிட்டே பணம் கேட்டேன். 
(விழுந்து விழுந்து சிரிச்சு இருப்பாரே?)

ஒரு கதை மட்டும் பிரசுகரிக்க முடியாது, நீ இன்னும் நிறைய கதைகள் எழுது, எல்லாத்தையும் சேத்து  (பத்த வச்சரலாம்-ண்ணார?) பிரசுகரிக்கலாம் -ன்னு சொன்னாரு.
அந்த ஒரு கதைய எழுதவே நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். (படிக்கறவங்களோட பாடு யாருக்கு தெரியும்?) அதனால, மறுபடியும் ஒரு பெரிய நாவலா எழுதலாம்-ன்னு புது கருத்து தேட ஆரம்பித்தேன்.
(என்ன கொடுமை சார் இது?)

      அதுல எனக்கு ஒரு சின்ன confusion , crime novel  ஆ? இல்ல குடும்ப நாவலா? எழுதலாமன்னே எனக்கு தெரியல.
(டேய் உனக்கு முதல்ல எழுத தெரியுமா?)  

வீட்டுல உட்காந்து யோசிச்சா, ஐடியா கிடைக்காது-ன்னுட்டு ஏற்காடு போய், மான்போர்ட் ஸ்கூல் வாசல் முன்னாடி உட்காந்து, படுத்து, விழுந்து, பொரண்டு எல்லாம் யோசிச்சேன்!
(ஐயோ..யாரு பெத்த புள்ளையோ.. காப்பாத்துங்க சார்)

     நாலு டு ஐஞ்சு மணி நேரம் யோசிச்சவாட்டி, எனக்கு ஒரு புது ஐடியா தோனுச்சி. (ஆரம்பிச்சுடாண்டா)


முதல்ல குட்டி கதை எழுதி, அப்புறம் பெரிய கதை எழுதி, அப்புறம் நாவலா எழுதி, அப்புறம், .. அப்புறமா எப்படியும் பெரிய ஆள்ஆகத்தான் போகிறோம், அப்புறம் இந்த மணிரத்தினம், கெளதம் மாதிரி சின்ன சின்ன directors எல்லாம் என்னோட கதைகளை படமா எடுக்கறேன்--னு ஆடப் போறாங்க 
(இதை கேட்கறதுக்கு இங்கே யாருமே இல்லையா?)

        அதுக்கு பதிலா, நாமலே ஒரு படம் எடுத்தா என்ன? (சுத்தம்..)
ஹீரோவா யாரை போடலாம்? இப்போ சினி பில்டுல எந்த ஹீரோவும் அவ்வளவு வசீகரமா இல்லை. சோ, பெட்டர் நாமலே நடிசுக்கலாம்!
(நீ நடிப்பே, நடிக்கறேன்-ன்னு சொல்லிட்டு வேற எதாவது பண்ணுவே, ஆனா, எவன் பார்க்கறது..)

ஹீரோயினா யாரை போடலாம்? 
(வேண்டாம் இதோட நிறுத்திக்கோ, அப்புறம் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளிச்சு போய்டுவாங்க)

நம்ம அழகுக்கும், அறிவுக்கும், குஷ்பு மாதிரி கொஞ்சம் லீனான பொண்ணுங்கள போட்டாதான் நல்லா இருக்கும்.

(என்னாது? குஷ்பு உனக்கு பொண்ணா? ஹையோ., இந்த கொடுமைய நான் எங்கே போய் சொல்லுவேன்?)

பட் ஓகே., I can manage with Nayan thaara.(வெளிய சொல்லிடதே., டிக்கி பஞ்சராயிடும்.)
          ஒரு குத்து பாட்டு வேணுமே? (குத்து வேணும்னா கிடைக்கும்) ஓபனிங் ல நான் அப்படியே ஓடி வர்றேன்., (தியேட்டர்ல யாருமே இருக்க மாட்டாங்கடா.,) 
அங்கே தான் ஒரு சஸ்பென்ஸ். இந்த பக்கம், நயன்தார ஓடி வரா, இன்னொரு பக்கம் சிந்து துலானி ஓடி வரா, 
(அவங்க 2 பேரோட பர்ஸ அடிச்சுட்டு நீ முன்னாடி ஓடுறியா?).

திடீர்-ன்னு ஒரு குத்து பாட்டு., அப்புறம் ஒரு குட்டி பைட்டு., அப்புறம், கொஞ்சம் பன்ச் டயலாக்ஸ்., அப்புறம் (கிளைமாக்ஸ் ஆ?)
கொஞ்சம் செண்டிமெண்ட், அப்புறம், டூயட் பாட்டு, அப்புறம் கொஞ்சம் லவ், அப்புறம் கொஞ்சம் பன்ச் டயலாக்ஸ்., அப்புறம் கொஞ்சம் கலவரம்.
அப்புறம் திடீர்ன்னு ஒரே இருட்டு. அப்புறம், கொஞ்சம் வெளிச்சம், அப்புறம் கொஞ்சம் "எதாவது"., அப்புறம் தான் கிளைமாக்ஸ். 

(ஹ்ம்ம்.,ஹ்ம்ம்.,அயைஎண் அயீஆஈஈஅ... மம்மி.... மம்மி.....என்னை இந்த நாய் கிட்டே இருந்து காப்பாத்து)

         இதுல பாருங்க,. படத்தோட மொத்த கதையுமே இந்த கடைசி சீன் பார்த்தா தான் புரியும். (Butterfly Effect -பட டைரக்டர் பாவம்-டா!)
திடீர் திடீர்-ன்னு சம்பந்தமே இல்லாம புதுப்புது திருப்பங்கள்., இது எல்லாத்துக்குமே நடுவுல, வடிவேலு இல்லாட்டி விவேக் காமெடிகள். 

(படத்துக்கு ஒரு காமெடியன் போதாதா?)

இந்த மாதிரி ஒரு படம் இதுவரைக்கும் யாரும் எடுத்ததில்லை-ன்னு எல்லோரும் மூக்கு மேல விரல் வைக்க போறாங்க. 

(ஆமா, அப்படியே உனக்கும் நெத்தில ஒரு காசு வச்சுர போறாங்க!)

          அப்புறமா பாருங்க, இவனுக்கு ஒப்பரும் இல்லை, மிக்காரும் இல்லை-ன்னு தமிழ் திரையுலக சரித்திரத்திலே எனக்கு ஒரு பெரிய இடமே கிடைக்க போகுது. 
(டேய், உன்னோட காமெடி-க்கு ஒரு அளவே இல்லையா?)

           இப்படிதாங்க என்னோட கலைப் பயணம் ஆரம்பிச்சுது.... இன்னும் என்னோட படத்துக்காக, ஒரு நல்ல கதையை தேடிட்டு இருக்கேன்.
உங்க கிட்டே இருந்தா எனக்கு ஈமெயில் பண்ணுங்க.

டபிள்யு டபிள்யு  டபிள்யு  பிச்சு டாட் காம் ;-)

Tuesday, May 4, 2010

மூணாறு பயணம் முடிவிலா பயணம்

         ஊரே கேளு, நாடே கேளு-ன்னு நானும் என்னோட பிரண்ட்ஸ்-ம் முன்னார் டூர் போனோம். வெள்ளி கிழமை சாயும்காலம் கிளம்பி, டிரைன புடிச்சு, ஹோசூர் போயி, அங்கே அருசுவை உணவகத்துல வயிறு முட்ட தின்னுபுட்டு, ஒரு கேவலமான டெம்போ டிராவலர்ல ஏறி, எங்களோட பயணத்தை தொடர்ந்தோம்.

         எங்க நேரம் உச்சியில இருந்திருக்கணும். நாங்க வண்டி எறுனவுடனே, மழை கொட்டோ கொட்டு-ன்னு கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. எங்களுக்கு வாச்ச  டிரைவர் ஒரு அவிஞ்ச மண்டையன். அவனுக்கு பகல்லயே பசு மாடு தெரியாது, இதுல இருட்டுல எங்கே எருமை மாட்டை பாராது வண்டி ஓட்டப்போறான்?
        டவுன் பஸ்-அ விட, ஸ்லோவா ஒட்டிகிட்டே போய், ராத்திரி ஒன்றை மணிக்கு, எங்க வீட்டுல நிறுத்தினான். நான் எங்க வீட்ல தூங்கிட்டு இருந்த எல்லோரையும் எழுப்பி, இதுதான் என்னோட சினேகிதிகள், சிநேகிதர்கள்-ன்னு அறிமுகம் செஞ்சு வச்சு, அவங்க போட்டு தந்த டிதண்ணிய குடிச்சுபுட்டு, மறுபடியும், அதே வண்டியில ஏறினோம். அவனோட வண்டியில உருப்புடியா வெளில சொல்ற அளவுக்கு ஒண்ணுமே இல்ல. ஆடியோ செட்-அ போட்டா, தலை வலி மட்டும் தான் வருது, பாடு வர்ற மாட்டேனுது, வீடியோ-வ பார்த்தா, வாந்தி வருது, டான்ஸ் வர்ற மாட்டேங்குது. அதா, இத-ன்னு ஒரு வழியா உடுமலை போய் விடிய காலைல சேர்ந்தோம். 
           
          அப்புறம் தான் அவன் சொல்றான், நாம பொள்ளாச்சி போய், போர்டர்-க்கு போய் கேரளா பெர்மிட் போட்டுட்டு வரணும்-ன்னு. சரிட போய்த்தொலை-ன்னு சொன்னேன். அதுக்கு ஒரு முப்பத்தஞ்சு கிலோமீட்டர் வேஸ்ட். அப்புறம் போன வழியிலே திரும்பி வந்து, பார்டர கடந்து, கேரளா-வுல கால் வைக்கலாம்-ன்னா அதுக்கு வரிசையா 3 செக் போஸ்டு. அவனவனுக்கு ஒரு 50 ரூபாவா அழுதுட்டு, அப்புறம் மெதுவா, அந்த ஒத்தை ரோட்ல காட்டை கடந்தோம்.

           மலை ஏற ஆரம்பிக்கும் போதே, மணி பத்துக்கு மேல ஆய்டது. அந்த அவிஞ்ச மண்டையன் எங்களை மூனு மணிக்கு தான் கொண்டு போய் முன்னார்ல விட்டான். அப்புறம் எங்களுக்காக எங்க கைடு காத்துகிட்டு இருந்தாரு. அவரு இன்னும் ஒரு 13 கிலோமீட்டர் எங்களை கொட்டிட்டு போய், ஒரு ஹோம் ஸ்டேல விட்டாரு. 

           சும்மா சொல்லக் கூடாது. that was really lovable place to relax.
எங்களுக்கு அந்த இடம் ரொம்ப புடிச்சு போச்சு. நாங்க உள்ளே போனவுடனே மழை பெய்ய ஆரம்பிச்சது. ஒரு மூணு மணி நேரம். விடாம கொட்டுச்சு. அப்புறம் சிறு தூறல். நாங்க அதுக்குள்ள, குளிச்சுட்டு ரெடி ஆயிட்டோம். அப்புறம் அந்த சிறு தூறல் மழைல வெளில வந்து கொஞ்ச நேரம் விளையாடிட்டு இருந்தோம். அப்புறம் மறுபடியும் மூணாருக்கு போய் டின்னெர் சாப்புடலாம்-ன்னு போனோம். அன்னபுர்ணா-ன்னு ஒரு ஹோட்டெல பார்த்து உள்ளே போனோம்.
            உள்ளே போனவாட்டி தான் தெரிஞ்சது, அது ஒரு மார்வாடி நடத்துற ஹோட்டல்-ன்னு. சரி, இதை விட்டா வேற வழி இல்லன்னு ஏதோ சாப்புட்டு, ஹோம் ஸ்டே-க்கு போயி சும்மா குப்பு-ன்னு படுத்ததுதான் தெரியும். அப்புறம் ஞாயிற்று கிழமை காலையில 6 மணிக்கு தான் சுய நினைவே வந்துச்சு. குளிச்சுட்டு, மூனாரை சுத்தி பார்கலாம்-ன்னு கிளம்பினோம்.

            அந்த கொடுமைய எப்படி என் வாயால சொல்லுவேன். எங்கே போனாலும் கூட்டம். எந்த பக்கம் பார்த்தாலும் கூட்டம். யானை சவாரி செய்யலாம்-ன்னு முதல்ல மாட்டுபட்டி ரூட்டுல கிளம்பினோம். அங்கே போய் கூட்டம் அதிகமா இருக்கு-ன்னுட்டு, டேம் பார்த்துட்டு, போட் ரைடிங் பண்ணிட்டு பிறகு யானை மேல சவாரி செய்யலாம்-ன்னு டேம்-க்கு போனோம். அங்கே போய் பார்த்தா, ஒட்டு மொத ஊரே திரண்டு வந்து, நானும் போட்ல போறேன்-ன்னுட்டு நின்னுக்கிட்டு இருந்துச்சு. என்னடா கொடுமை இது-ன்னு எக்கோ பாயிண்டுக்கு கிளம்பினோம். அங்கே ரொம்ப டிராபிக் அதிகமா இருந்ததால, வேண்டாம்-ன்னுட்டு யானை சவாரி செய்யற இடத்துக்கே திரும்பி வந்தோம்.
           எங்க நேரம் நல்ல இருந்ததால, கூட்டம் அவ்வளவா இல்லை. ரூ. 350 தலைக்கு மொய் எழுதிட்டு, எல்லாரும் யானை மேல ஏறி அரை மணி நேர சவாரி செஞ்சோம். அது ஒரு சூப்பரான எக்ஸ்பிரியன்ஸ். யானையோட முதுகெலும்பும், என்னோட இடுப்பு எழும்பும் சேர்ந்து ஒரே நேரத்துல ஆடுச்சு. லைட்டா வலி. பட் ஓகே. நான் அதை என்ஜாய் பண்ணினேன்.
அப்புறம், ஷாப்பிங் பண்ணலாம்-ன்னு மூணு மணிக்கு எல்லோரும் மூணாறு பஸ் ஸ்டாண்ட்ல புறப்பட்டோம். 4 , நாலரைக்குதான் கொஞ்சமா ஒரு 4  கிலோ சாக்லேட் வாங்கிட்டு திரும்பி வந்து, எங்களோட வீணாப்போன வண்டியில மறுபடியும் ஏறினோம். தேனீ வழியா போங்க, போறப்ப, வியு நல்ல இருக்கும்-ன்னு எங்க கைடு சொன்னாரு. சரி ஓகே-ன்னு நாங்களும் தேனீ ரூட்டுல மலைய விட்டு கீழே இறங்கினோம்.

              ரொம்ப அருமையா இருந்துச்சு. எங்கெங்கு காணினும் பசுமை. தேநீர் தோட்டங்கள் நிறைந்த பாதை. ஒரு சில இடங்களில் நீர் வீழ்ச்சிகள். ஒரு வழியா 3 மணி நேர பயணத்துக்கு அப்புறம் போடி-(போடிநாயக்கனூர் )-க்கு வந்தோம்.
               அப்புறம் தேனிக்கு போய் டின்னெர் முடிச்சுட்டு கிளம்பினோம். அங்கே ஒரு கூத்து. 
             ஒரு வயசான ஆளு, எங்களை இளநீர் சாப்புட சொல்லி வற்புறுத்தி சீவி சீவி கொடுத்துகிட்டே இருந்தான். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்கலை அவன் பாட்டுக்கு சீவிகிட்டே இருந்தான். அப்புறம் நான் போயி, அந்த ஆள்கிட்டே., போதும். எவ்வளவு ஆச்சு-ன்னு கேட்டேன்.  200 கொடுங்க-ன்னு சொன்னான்.  எனக்கு வந்தது பாருங்க கோவம்,  மொத்தம் 8 இளநீர் தான் குடிச்சு இருக்கோம், எதுக்கு இவ்ளோ கேட்குறீங்க-ன்னு கேட்டேன். இப்போ எல்லாம் சீசன் இல்லீங்க, இளநீர் கிடைக்குறதே கஷ்டமா இருக்கு. சரி, ஒரு இளநீர் 15 மேல போட்டு, 150  கொடுங்க-ன்னு கேட்டான். நாங்க உன்கிட்டே இளநீர் வேணும்னு கேட்டோம, நீயா வந்து எங்களை வற்புறுத்தி கொடுத்துட்டு, எதுக்கு இப்படி காசு கேட்குரே-ன்னுசத்தம்
  போட்டுட்டு, 100 ரூபா கொடுத்துட்டு வந்து வண்டி ஏறினோம்.

             அப்புறம் தேனீ பஸ்-ஸ்டான்ட்ல வண்டிய நிறுத்திட்டு, போய், நல்ல CD, DVD வாங்கி வந்தோம். டிராவலர் அதிர்ர மாதிரி குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடிகிட்டே எங்களோட பயணத்தை தொடர்ந்தோம். அதுவும் கொஞ்ச நேரம் தான். ஹிந்தி பாட்டு போடா சொல்லி நார்த் இந்தியன்ஸ் எல்லாம் கம்பல் பண்ணினாங்க. சரி-ன்னு ஹிந்தி பாட்டை போட்டால், எந்த பாடும் டான்ஸ் ஆடுற மாதிரி இல்லை. சோ, ஒரு அரை மணி நேரம் டான்ஸ் ஆடிட்டு, அப்புறம் எல்லாம் பிளாட் ஆயடுசுங்க.
           அந்த அவிஞ்ச மண்டையன், ஒழுங்காவே வண்டி ஓட்டுல, ரொம்ப கேவலமான ஸ்பீட்ல பை பாஸ் ரோட்ல வந்துட்டு இருந்தான். அதிகபட்சமான வேகம் அவன் போனது 70 kmph  கூட இருக்காது.
அந்த மாட்டு வண்டிய கிருஷ்ணகிரி வரைக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு இழுத்துட்டு வந்து, ஒரு கால் மணி நேரம் ரெஸ்ட் எடுத்துகிட்ட-ன்னு கேட்டான். சரி போய்த்தொலை-ன்னு நாங்களும் சரி-ன்னு சொன்னோம். ஒரு மணி நேரம் நல்லா தூங்கிட்டான். அப்பறோம் நாங்க அவனை எழுப்பி, மறுபடியும் அவனை வண்டி ஓட்ட சொல்லி, பெங்களுருக்கு இழுத்துட்டு வந்தோம்.
இங்கே இல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போகறதுக்கு, 7 மணியாயிடுச்சு.
அப்புறம் வழக்கம் போல, ஒரு 3 மணி நேரம் குட்டி தூக்கம் போட்டுட்டு, ஆபீஸ்-க்கு எழுந்து ஓடிட்டோம்.
  
will include the photographs soon.

Munnar Trip.

We had been to Munnar on this May first weekend.
We’ve started from office at 7 PM we got the passenger at Bellandur and Karmelaram railway station.
We’ve reached hosur at 8.30., our cab was little late to pick up us from there. Then, we had a very good, delicious dinner at “Arusuvai Unavagam” in Hosur. After that,


We’ve started our journey. It was also started raining heavily in that night. We were not able to drive fast in that rain. We reached Salem, Palladam, Udumalai, then Permit for Pollachi border, then crossed TamilNadu Border., went into the forest route single road. It was fully dried forest. But ok., we can enjoy that path.



Slowly we reached Munnar by 12 Noon but got stuck in traffic. At last we reached munnar bus stand by Saturday 3 PM. Luckily our guide Devaraj has arranged an accommodation in White Peach Home stay. It was a lovely & affordable place to relax. It's located in Chithirapuram 13KM away from Munnar towards Kochin road. We love that place very much. We’ve paid 3500 for 4 double bedded rooms. Once we board in to the home stay., it was started raining heavily there. We’ve enjoyed that rain and played little outside & taken some snaps.
A new atmosphere, different environment what we see in movies. A place which anyone love to live there.



Next morning., we have started our tour. We had been to some view points towards Mattupatty.
Elephant Trekking was awesome. Your backbone aligned with Elephants bone and shakes when it moves around. That also uphill journey for a while. Really fantastic experience. 350 per head for 20 min ride is little more, but ok., we enjoyed it. Then we were not able to step in Mattupatty Dam boating as it was fully crowded, traffic was terrible.
Then we came back for shopping., spices homemade chocolates, nuts… etc. all are awesome.
We took the down lane via Theni Route. What can I say? Everywhere tea estates. Full of greenery.. within half an hour our return journey, it has started raining again.
Raining, fogs, green estates, little sunlight reflected in some pure white clouds… cool air in the vehicle., Lovely experience.
We have taken around 2 hours to get down from the hill station. Then there was no rain. Temperature become normal, soon it became hot. Our Cab Driver., he is an ________., he didn’t even drive more than 60 KM per hour. He drove the Tempo traveler like a government bus. Also he slept in the middle of the journey. I and Shivani sat next to him and keep on speaking till we reach Bangalore. But still that guy was in drowsy mood only. At last we reach our home in Monday morning around 6 AM.




3 interesting things I like in this entire trip are,


-    Home Stay in Chithirapuram
-    Elephant Ride
-    My friends.

 
3 things which I got fed up in this trip are,
•    Cab Driver
•    Silver Spoon Food,
•    Crowd.