Thursday, January 8, 2015

எதோ தோணுது எழுதுறேன்...

பண சக்தி எந்த ஒரு தேர்தலிலும் முக்கிய பங்கு வகிக்குது.

மக்களால், மக்களை, மக்களே ஆட்சி செய்யும் மக்களாட்சி என்று நடைமுறைக்கு வரும்?

நான் கூட அரசியலுக்கு வரலாம், ஆனா எனக்கு உயிர் மேல ஆசை வந்துடுச்சி...

கறுப்புப் பணம்தான் எல்லாத்துக்கும் மூலம்.
ஷாப்பிங் மால் எல்லாம் யார் கட்டுறா?
அபார்ட்மெண்ட் எல்லாம் யார் கட்டுறா?
அதில இருந்து கோடி கோடியா வரும் வாடகை யாருக்கு போவுது...?
கறுப்புப் பணத்தை ஒழிச்சே ஆகணும்.
சரி, யாரு ஒழிக்கறது?

மோதி அரசு ஒழிக்குமா?
தெரியல.

வேற அரசு வந்தால் ஒழிக்குமா?
தெரியாது.

பெருக்கெடுத்து ஓடும் காட்டாறு போல சமூக நடைமுறை ஓடிட்டு இருக்கு.
அதுவே தானா ஆடி, அடங்கினால் உண்டு.

ஜாதி மத சண்டை ஒரு பக்கம்
இன வெறி அரசியல்வாதிகள் ஒரு பக்கம்
கருப்பு பணம் ஒரு பக்கம்
நீ ஒரு பக்கம்..

எல்லாரும் சேந்து இந்தியாவ பாடா படுத்துங்க...