Tuesday, June 3, 2014

Lenovo P780 Mobile, My Son & Water

I was proud enough to show case my mobile phone in my friends circle, whenever any debates for new mobile purchase. I was, kind of unknowingly market Lenovo P780 for its long battery backup and good picture quality.

Due to last night rain, Bangalore morning was so bleak, I was half awake, My son was playing around near me, he usually speak / shout and pretending talking in mobile phone like how we speak.

I could not recollect anything more from my conscious. after few moments, what I heard, his cough from bathroom. I suspect, he would have dunk my mobile in the bucket or pouring water on it.

Spouse noticed this scene lately and did not want to upset me in the morning, so simply she told me that the mobile was slightly wet & asked me to clean...

while cleaning I realized there were plenty of water drops coming out.

I haven't studied mobile first aid or mobile life saving do's and don'ts. so, I tried to keep it dry and kept outside in sunlight for a while.

My intelligent spouse, switched it on and found low battery, she plugged in for charge. [she's BE-ECE graduate]

The bill amount 16k change and accessories cost came in my mind for a while.

passing clouds.

Monday, May 12, 2014

புதிய தலைமுறைக்கு என் கடிதம்.

ஆசிரியர் மாலன் அவர்களே,
மாறி வரும் சமுதாயத்தில், ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இயக்கம், உண்மையானவர்.. என்ற நம்பிக்கையில் புதிய தலைமுறையை வாசிக்க ஆரம்பித்தேன்...
நான் எதையும் அதிகமாக எதிர்பார்த்தது இல்லை...
கடைசியில், புதிய தலைமுறையும் ஒரு சாதாரண தொழில் சார் நிறுவனம்தான் என்று என்னை நினைக்க வைத்து விட்டார்கள்...


அடச்சீ அரசியல்-ன்னு ஒரு கவர் ஸ்டோரி போட்டுட்டு, அப்புறம் எதுக்கு கடந்த ரெண்டு மாசமா வெறும் அரசியலாவே எழுதுறீங்க?

பொதுமக்கள் பாதி பேருக்கு யாருக்கு ஒட்டு போடணும்-ன்னு தெரியாது. அவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி ஏதாவது செஞ்சா அத வரவேற்கலாம்.

எந்த குப்பையை வேண்டுமானாலும் இந்தியாவில் விற்கலாம், ஏனென்றால், இங்கு விளம்பரம் ஒன்று மட்டுமே போதும், மக்கள் அதிகம் யோசிப்பது இல்லை. இப்படிப்பட்ட நாட்டுல இருந்துகிட்டு, அவர் அப்படி சொன்னாரு, இவரு இப்படி சொன்னாரு,  நல்லவரா இல்ல கெட்டவரா.... நூறு வருசத்துக்கு முன்னாடி இது இப்படி நடந்துச்சு.. கடந்த தேர்தல்-ல இப்படி ஆனது.. அதுக்கு முந்தைய தேர்தல்-ல இது இப்படி ஆகல... இந்திரா காந்தி காலகட்டத்துல இருந்து இது நடக்குது...சதா புள்ளி விவரமும், கருத்துக்கணிப்பும், அடச்சீ புதிய தலைமுறை-ன்னு நினைக்க வச்சிடுச்சு...

ஒரு சாமானியனை, யோசிக்க வைத்து, ஓட்டு போடக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு மாதிரி அட்டவணையை கொடுக்க வேண்டும். போட்டியிடும் அணைத்து வேட்பாளர்களுக்கும் தரம் சார் மதிப்பெண் இடும் ஒரு ஆசிரியனாக அந்த சாமானியனை மாற்றுவதே ஒரு இயக்கத்துக்கு அழகு.

கட்சிக்காக, சின்னதிற்காக, கூட்டணிக்காக ஓட்டு போடுபவர்கள் பழைய தலைமுறை... புதிய கோடி தலைமுறை-க்கு நீங்கள் எவ்வாறு ஓட்டு போட வேண்டும் என்று ஏதாவது வழி காட்டி இருக்கிறீர்களா?

பேசுறதுக்கு, எழுதுறதுக்கு, எவ்வளவோ, நல்ல விஷயம் நிறைஞ்சு இருக்குற இந்த உலகத்துல, வெறும் அரசியல் பத்தி எழுதி, உங்க பேர்ல இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பேரையும் கெடுத்துக்க வேண்டாம்.

- நான் என்ன சொன்னாலும், நீங்க யாரும் கேக்கப் போறது இல்ல.. நடத்துங்க... எவ்ளோ தூரம் போறதுன்னு பாக்கலாம்.

Friday, April 18, 2014

Few Facts about my Dad




  • He's a Chess player & History teacher
  • His historical hero is Akbar 
  • He don't teach you lessons, he prefer to let you learn from your attempts
    • e.g.., He never taught me driving cycle, so I hit one old guy's cycle with his scooter.
  • Sometimes he advice me which I would not follow anyway, but still he never stops reminding it.
  • He's silent in most of the occasions since my mom talks :-)
  • He has lot of secrets & clever enough to hide it
  • He stick with his decisions, he hardly change his mind.,(adamant)but relaxed few for me
  • His goals are short term, but he would want his result to last for lifetime
  • Mom scolds him everyday, but never see him convince her
  • He spends a lot, like me.... Wild River.
He's still fighting with me come and stay in my home. I have even asked him to pay my rent and stay. he still keep refusing. Such a tough guy.

Friday, March 21, 2014

MONEY....life expectancy

I have been worrying a lot about India nowadays....
we have had enough wealth but still begging for economic crisis.. poverty, food, shelter... etc.

Just let me ask one simple question.

why are we working for?
-Food...isn't it? 
at end of the day, all we need is just Food to fill our stomach. 
once hunger is over, we need a shelter to sleep, then to think of running a family, kids, education, work life balance, status symbol, savings, spending.. blah..blah.. blah...

what the hell is going on?
everyday, I confront lot of beggars...
everyday, I see small kids starving for food...
everyday, I read violent deaths in one or another corner of country...


scams... enormous crimes... Corruption in people mindset, corruption in lifestyle, corruption in government, corruption in law and order.. Corruption everywhere..

its all because of MONEY... MONEY... MONEY..

Here is my thought/ might be some adjustments required based on real life possibilities...

what if we give up the concept of paper currency / money and work for trading with grains and other commodities? 

what would I get as my paycheck?
2 sacks of Rice, 2 sacks of Wheat & other organic grains + special allowances 200 gm of dry fruits + incentive 500 gm of walnuts 

Let me go and buy vegetables in trade with grains

Let me pay his rent by 20kg of wheat

Let me save his grains in any bank and pay for his kids education

I am eligible to build only one house / flat. 

I am eligible for LPG, Gas and water with my ration card.

none could save more than certain limits of life expectancy.

we still work in an office, 
but our company would pay us in terms of grains/ fruits & vegetables / or some metals like gold, silver, copper. 

BUT NO PAPER Currency OR ELECTRONIC MONEY CONCEPT HERE

Here the first problem rings bell in our brain... 

-What does the Government would do? 

its a million dollar question, but my answer is simple and many fold. 
Government owns governance of activities, since we had taken out the concept of money, there wont be any crimes which are related to money.

of course, there would be crimes with respect to sexual harassment!... since police do not have any work with related to money and assets related crimes, they could handle these cases. 

-Still there are lot of clever people in our crowd, they never work, always escape from work and come only to get wages.
let them live in their way... managers would take care of them since there is no Money to buy such waste resources ;-)

-What if I fall in sick, What if I need to undergo a surgery?
same way., Since Government is taking care of all our activities, they could arrange a better treatment for us.

- No I don't trust Government hospitals, I want to do it in a reliable hospital...
Yeah, go ahead and do it, by trading few gold coins or diamonds...

-Where will I get gold and diamond?
That's the common men's mentality... What does bank do man?.. Go and apply a medical loan with doctor's certificate & bank could lend you... later to your operation come back and pay your loan.. Cool isn't it?

-No, I'm sorry I'm not comfortable with your statements... I would want to live in my luxurious way which i deserve now... Only money could make me feel safe, that's why I'm earning for
Neither Do I... but considering top most rich people and bottom most poor people, we have to do something to fix it.

let us trust government once, and see!.. they would own hospitals & staffs.. etc  there are no money.. so they are free from corruption.

those who really like to be doctor, and want to serve the people would only become doctor, they would save you... don't worry.

-OK, what about sex workers? alcoholics, drug addicts, tobacco consumers..?
since Government Owns governance of activities, it will Ban country wide tobacco, drugs, alcohols.. etc and of course will make a way to live for those sex workers... 

-No.......! I live in a cold place with less temperature, I need alcohol to survive
well in that case, you could get approval from your local collector and alcohol would be distributed in ration (which is the shop owned by government)

-What does other people will do? I have a work, I'm doing it. there are plenty of people who doesn't have any work... they simply stay in the street watching us
well, as I said early, Government owns governance of activities, it will initiate lot of projects & it will create employment for all its citizen. & moreover there is no free meals. if you want grains, you need to work.. so you would work and get your wages in terms of gold or grains...
  
-OK, what the hell we do with our current corrupted big fat politicians?
rule is a rule. its applicable for every living species in the planet. they would have to surrender every asset they hold to the government and start working with us. there wont be any election or change in government, since Army is executing the operations. one board of well versed team would control army with defined process (we can include six sigma or cmmi here no offense).

friends.. I want to address these such questions and analyze practical difficulties to get rid of money related issues. 
Kindly post your questions and lets discuss and try to address. one or other day, may be after a big natural disaster, human beings would realize, Money has no value to stop any disaster, it can only create more.

Thursday, March 20, 2014

புரியாத கேள்வி -1

இந்தியாவில் உற்பத்தியாகும் நெல்லும் கோதுமையும், ஆரியமும், கம்பும்.. இன்னும் இதர பல தானியங்களும், காய்கறிகளும், பழங்களும், நமது நாட்டில் உள்ள நூற்று முப்பது கோடி மக்களின் பசியைப் போக்க வல்லது...

இருந்தாலும் ஏன் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உணவில்லாமல் பிச்சை எடுக்கின்றனர்?

எனக்கு சத்தியமாக புரியவில்லை...
தயை கூர்ந்து விளக்குங்கள்

  

வசி...வசதி...அவதி

பெங்களூர்.
இன்றைய தேதி 20-மார்ச்-2014, நான் அறிந்த வரையில், ஒரு அடுக்கு மாடி குடி இருப்பிற்கு கொடுக்கப் படும் அதிக பட்ச வாடகை 40000/- ஒரு சில பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கலாம்.
குறைந்த பட்ச வாடகை 9000/- ஒரு சில பகுதிகளில் இன்னும் சற்றே குறைவாக இருக்கலாம். இது மட்டுமல்லாது பராமரிப்புக் கட்டணம் தனி.

அவரவர் வசதிக்கேற்ப சொகுசு வாழ்க்கை விற்பனைக்கு உள்ளது.
இந்திய பொருளாதாரமே உலகத்தின் சிறந்த பொருளாதாரம் என்று வர்த்தக மேதைகள் போற்றி உள்ளனர்.
-இதற்கான  தாரக மந்திரம் "சேமித்தது போக செலவு செய்" - இந்தியாவின் முதுகெலும்பு, நமது மக்களின் சேமிப்புக் கணக்கில் உள்ளது.

அதனால்தான் அனைவரும் பணத்தை தங்கத்தை வெள்ளியை, வைரத்தை, சொத்தை பதுக்குகின்றனர்.

அறியாமையும் சோம்பலும் புகுந்த கூட்டில் தெரியாமல் தோன்றுமே நோய் என்ற வள்ளுவரின் வாக்கு பிரதிபலிப்பதை எங்கும் காணலாம்.

ஒரு மென் தொழில்நுட்ப ஊழியரின் வங்கிக் கணக்கை நோக்கினால், வரிப்பணம், செலவு, ஆடம்பரம் மற்றும் இதர செலவுகள் போக மீதம் உள்ள தொகை சொற்பமே...

அனுபவித்து ஆண்ட வாழ்கையில் திருமணம் ஒரு திருப்பு  திருப்புகிறது....அவருடைய ஆசை கோபம் தாபங்கள் அனைத்தும் மாறி சேர்த்து வைக்க முனைகிறார்... (நான் இருபாலரையும் சாடுவதால் பன்மையில் அழைக்கிறேன்).

வாழ்க்கைத் துணையும் பெரும்பாலும்  ஒரே துறையில் இருப்பதால், பணப் புலக்கதிற்கும் சேமிப்பிற்கும் பங்கம் இல்லை.
வீடு வாசல் உரிமை கொண்டாடும் வெறித்தாண்டவம் ஆரம்பமாகிறது...
விளைவு நாற்பது லட்சம் கடன் வாங்கி அதனை முப்பத்தி ஆறு வருடம் என்பது லட்சமாக திருப்பி செலுத்துகின்றனர்.

நகரங்களில் வாழும் பெரும்பான்மை தம்பதியினர் மேற்கண்ட பிரிவில் உள்ளனர்.

ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு இன்னும் இதர பல உயர்வுகள் வீட்டுக் கடனை குறைந்த காலத்தில் முடிக்க உதவுகின்றது...
இங்கே மனிதனின் பேராசை ஆரம்பமாகிறது... அடுத்த முதலீட்டை ஆரம்பிக்கிறார்... தங்கம் வெள்ளி, வைரம், வீட்டு மனை அல்லது இரண்டாவது சொந்த வீடு.. என்று வாய்ப்புகளுக்கு குறைவே இல்லை.

என் படிப்பு,
என் வாய்ப்பு,
என் சம்பளம்,
நான் செலவு செய்கிறேன்...
இதை விமர்சனம் செய்ய நீ யார் என்று கேட்டால்,  என் பதில் பின்வருமாறு

சமீப காலத்தில் தாறுமாறாக உருளும் பணச்சரிவிற்கு காரணம் ஆயிரம் இருக்கலாம். அதில் மிகப் பெரிய ஒன்று நகர மக்களின் அசையாத சொத்துக் குவிப்பு.

நகர்புற வாசிகள், தற்சமயம் நகரின் ஓரப் பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளிலோ, அல்லது நகரின் வெளியே எழும் அடுக்கு மாடி குடியிருப்புகளிலோ, மிகக் குறைந்த விலையில் முதலீடு செய்கின்றனர். கண்டிப்பாக ஒரு சில வருடங்களில், முதலீட்டின் லாபம் முதலீட்டை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு ஆகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், பெருகி வரும் நகரமயமாகலும், மக்களின் பாதுகாப்பான முதலீட்டு பயமும்தான்.

ரத்தினச் சுருக்கமாக சொன்னால், எழுந்து நிற்கும் ஒவ்வொரு அடுக்கு மாடி கட்டிடமும், இந்திய பணவீக்கத்தின் அடையாளமே.

முடியும் என்பதற்காக சொத்துக்களை குவிப்பது,  நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரங்களை கொள்ளை அடிப்பதற்கு சமம்.

ஒரு  பகுதியில் குடியிருப்புகளின் விலை மதிப்பைப் பொறுத்தே, வீட்டு வாடகை நிர்ணயிக்கப் படுகிறது.

மேற்கண்ட சொத்துக் குவிப்புகளினால், குடியிருப்புகளின் தேவை அதிகமாகிறது, அதனால் விலை ஏறுகிறது, வாடகையும் விண்ணைத் தொடுகிறது.

வசிப்பதற்காக குடியிருப்பு ஒன்றை கட்டுங்கள், வாங்குங்கள்... ஆனால், முதலீடு செய்யாதீர்கள்...

உங்கள் முதலீடு இன்னொரு நடுத்தர குடும்பத்தினை பாதிக்க வேண்டாமே?...
 

-நான் நாட்டின் மேல் அக்கறை உள்ள குடிமகன்.  

Wednesday, March 19, 2014

அப்பாவின் அறிவுரைகள்

அடுத்தவர் மனம் புண்படும் வார்த்தைகளைப் பேசாதே..

அடுத்தவர் பொருளுக்கு ஆசை கொள்ளாதே...

உடற்பயிற்சி செய்... உணவைத் தவிர்க்காதே...

இழப்பிற்காக வருந்தாதே, பணம் ஒரு பொருட்டல்ல... பாடத்தைக் கற்றுக்கொள்!

எல்லோரையும் நம்பாதே... உலகில் நல்லவர்கள் மிக குறைவு!...

பேரழிவின் பிரதிபலிப்பு கடன்-வட்டி, கொடுக்காதே.. வாங்காதே... 

புண்ணியம் தேடு... ஊரோடு ஒத்து வாழ் விதண்டாவாதம் தவிர்.

தர்மத்திற்கு கட்டுப்படு, கண்ணியம் தவறாதே...

வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்... குடும்பம் தழைக்கும்!

பொது வாழ்வில் உதவி செய், உபத்திரம் உருவாகாமல் பார்த்துக்கொள்.

அவுரு இன்னும் என்னென்னமோ சொல்லி இருக்காரு... 

எங்க அப்பா சொன்னபடி கேட்டு நடக்கணும்-ன்னு எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. பட் என்ன பண்றது..? ஊழ்வினை அதோட போக்குலதான் இழுத்துட்டு போவுது. 

Tuesday, March 11, 2014

மதம்- மனிதன்- மக்கள்தொகை

இன்ன தேதியில் இது நடந்தது என்ற பதிவே வரலாறு.. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், நேற்றைய நிகழ்ச்சி இன்றைய வரலாறு... ஆனால், ஒருவனின் வாழ்க்கை சாதனைகளே சரித்திரம்...

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ?
பதில் சொல்லுங்க மக்களே...


சமீப காலமாக, நமது நாட்டின் மீதான வருத்தம் எனக்கு அதிக அளவில் எழுகிறது..
தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று எல்லோரைப் போலவும் என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை..

நாட்டில் நடக்கும் அத்துணை பிரச்சனைகளுக்கும் அரசியல் நிலவரம் தான் காரணம்..
சாதி மதம் இனம் மொழி என்ற எதை வைத்து வேண்டுமானாலும் அரசியல் நடக்கிறது...

மதம் என்பது மனிதனை ஒழுக்க நெறியில் செலுத்த உதவும் கொள்கைகளை உள்ளடக்கியது... ஆனால், இதில் வருத்தம் என்னவென்றால், கொள்கைகள் யாவும் மனிதர்களால் எழுதப் பட்டது.

உலகத்தில் எங்கும் இல்லாத வளம் இந்தியாவில் இருந்திருக்கிறது...
நம் முன்னோர்கள் கொண்ட ஆசையினால் உலகெங்கும் உள்ள செல்வங்களை இங்கே கொண்டு குவித்தார்கள்.

ஆனால், நாம் கடுமையான சாபத்திற்கு ஆளாகி இருக்க வேண்டும். இல்லையேல் தற்சமயம் இவ்வளவு துயரத்திற்கு அவதிப்பட வேண்டியது இல்லை. இந்திய தீபகற்பம் மிகவும் மோசமான சூழலில் உள்ளது.

மதம் என்ற பெயரில் தீவிரவாத சக்தியை சொந்த நாட்டிலே வளர்க்கும் கும்பல் ஒரு பக்கம்.

உலகெங்கும் எங்கள் மதம் மட்டுமே இருக்க வேண்டும்.. என்று கண்டோர், கேட்போரையெல்லாம் மத மாற்றம் செய்யும் கும்பல் ஒரு பக்கம்.

மதமே இல்லை என்று, இருக்கும் மத நம்பிக்கைகளை எல்லாம் வாயில் வந்த மொழியில் தூற்றும் கூட்டம் ஒரு பக்கம்.

நாடு இழந்து, வீடு இழந்து, சாலையோரங்களில் வாழும் ஏராளமான கூட்டங்கள் ஒரு பக்கம்...

அறிவே இல்லாமல் வெறும் கூலிப்படைகளையும் பண பலத்தையும் விதண்டா வாதம் செய்யும் திறமையும் மட்டுமே உள்ள அரசியல்வாதிகள் கொண்ட கூட்டம் ஒரு பக்கம்...

நடப்பதை எல்லாம் பார்த்தும், நாளை வெட்டப்படுவோம் என்று தெரிந்திருந்தும், ஆட்டு மந்தைகளாய் வாழும் சாதாரன அப்பாவி [ஓட்டு போடுவதற்கே பிறந்த] மக்கள் ஒருபக்கம்.. 

வயிறை மட்டும் நிரப்பி, தனக்கென ஒரு கூட்டை கடன் வாங்கி வாழ்நாள் முழுதும் வரி செலுத்தும் கணினித் துறை சார்ந்த இயந்திரங்கள் ஒரு பக்கம்..

மேற்கண்ட தொந்தரவுகளினால், என்ன செய்வது என்றே தெரியாமல், எனக்கும் இதற்கும் சமந்தம் இல்லை, நான் பிறப்பால் மட்டுமே இந்தியன்.. ஆனால் உண்பது, உடுப்பது, உறவு கொள்வது என்று அனைத்திற்கும்  மேலை நாட்டை பின்பற்றும் பெரும்பான்மையினர் கூட்டம் ஒரு பக்கம்...



செல்லும் திசையறியாது திக்குமுக்காடும் இளங் கன்றிற்கும் மேற்கண்ட பிரிவைச் சார்ந்த கூடங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

வளர வேண்டிய குழந்தைகள் வாடிக் கிடக்கின்றன...
உணவுப் பற்றாக் குறை..
கல்லாமை..
கடன் வறுமை...
அரசியல் வன்முறைகள்... அத்துமீறல்கள் 
இது எல்லாத்தையும் கூட பொறுத்துக்கலாம்....

ஆனா வீட்ல குழந்தைக்கு சோறு இருக்காது... பொண்டாட்டி ஏதோ வேலை செஞ்சு சம்பாதிக்கற காசையும்  புடுங்கி, கொண்டுபோய்  குடிக்கிறான் பாருங்க.. என்னால தாங்க முடியல...

தட்டி கேக்க வேண்டிய அரசாங்கமே ஊத்திக் கொடுக்குது...

என்னுடைய இயலாமைய நினைச்சு வருத்தப் படுறேன்...
இந்த மாதிரி ஒரு மோசமான நாட்ல பிறந்ததிற்காக வருத்தப் படுறேன்.

நான் கால வெள்ளத்தில் பின்னோக்கிச் சென்று, ப்ருத்விராஜனுக்கும் சம்யுக்தாவிற்கும் நல்ல முறையில் திருமணம் ஏற்பாடு செய்ய ஆசைப் படுகிறேன்... அவர்களின் கந்தர்வத் திருமணம், பின்னாட்களில் நடந்த சரித்திரச் சரிவிற்கு மிகப் பெரிய காரணிகளாக இருக்கின்றன.

சும்மா இருக்குற சங்கை ஊதி  கெடுத்த மாதிரி, உள்ளூர் வைஸ்ராய்களே சேர்ந்து, இந்திய கலாச்சாரம் என்ன என்று அறியாத ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தனர், வீரம் பொருந்திய மன்னனாகவே இருக்கட்டும், சொந்தமா நாடே இல்லாமல் நாடோடியாய் வாழும் வெளிநாட்டு மன்னனுக்கு ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க வைத்திருக்காங்க.

ஒரு சின்ன உதாரணம்... தற்சமயம் 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருக்கும் சட்ட திட்டங்களோ, அரசியல் நிலைமையோ, பொருளாதாரமோ சரிஇல்லை என்பதற்காக, அமெரிக்காவை இங்கே வந்து ஆட்சி அமைக்க கூப்புடுவீங்களா?

உள்ளூர் நிலவரம் சரியில்லை... அதற்காக இந்திய கலாச்சாரம் என்ன என்று அறியாத ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தல் ஒரு சரியான தீர்வு அல்ல.. அதற்கான பின்விளைவுகளைத்தான் நாம் இப்போது நேரிட்டுக் கொண்டிருக்கிறோம்...

மதம் சார்ந்த மக்கள்தொகை பெருகி வருகிறது... இதற்கு, மதவாத, மதப் பெருக்கக் கொள்கைகளை இயற்றிய மதவாதிகளே காரணம்...

மதம் என்பது மனிதனின் மனதில் பரவ வேண்டியது...
விதவிதமான உணவுப் பண்டங்களாலும், கல்வி, கல்லூரி, மருத்துவ சலுகைகளாலும் ஈர்க்கப் பட வேண்டியது அல்ல.

மேலை நாட்டு மதத்தலைவர்களின் பேச்சுத் திறமை அபார சக்தி வாய்ந்தது... சாதாரன குடிகளின் பலகீனத்தை நல்லா தெரிஞ்சவங்க...
ரொம்ப சாமர்த்தியமா அப்பாவி ஏழை எளிய மக்களை ரொம்ப சுலபமா மதம் மாற வச்சாங்க... இன்னும் மாத்திட்டுதான் இருக்காங்க..

இந்து மதம் ஆயிரம் காலத் தொன்மை வாய்ந்தது...
அதில் இருக்கும் சாதிகளுக்கும், கிளை சாதிகளுக்கும் அளவே இல்லை எண்ணிக்கையில் அடங்காது...
நீங்கள் செய்வது எல்லாம் மூட நம்பிக்கை...
எங்கள் மதத்தை தழுவுங்கள்...
உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்...
நீங்கள் அனைவரும் சமமாகக் கருதப் படுவீர்கள்.. என்று கூறி பெரும்பான்மையான இந்துக்களை வேறு மதத்திற்கு மாற்றினார்கள்..,
கடைசியில், அந்த மேலை நாட்டு மதத்திலும் மேற்கூறிய சாதிகளும், கிளை சாதிகளும், சாதி உட்பிரிவுகளும்... எண்ணிக்கையில் அளவிட முடியாத அளவில் உருவாகி இருப்பதை சாதிச் சான்றிதல்கள் பறை சாற்றுகின்றன..

ஊரில் வசிக்கும் ஆயிரம் மக்களில் வருடத்தில் நூறு குழந்தை பிறக்கும் நாற்பது பெரியவர்கள் இறப்பார்கள்.
2001-ம் ஆண்டில் இருந்த 80% இந்துக்கள் தற்பொழுது இந்தியாவில் பாதிக்கும் மேல் வேறு மதங்களுக்கு மாறி விட்டார்கள் என்று சொன்னால், நம்பாமல் இருக்க முடியவில்லை.
இல்லை என்று வாதாடினால், 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின், மத வாரியான அறிக்கையை இந்திய அரசாங்கம் ஏன் இன்னும் வெளியிட மறுக்கிறது என்று பதில் கூறுங்கள்...

போனத பேசி ஒரு புண்ணியமும் இல்ல. இனி என்ன செய்ய-ன்னு பருப்பு மாதிரி கேள்வி மட்டும் கேக்குறாங்கயா.. பதில் தெரிஞ்சா பண்ணி இருப்போமல்ல...

இந்தியாவின் மாபெரும் சக்தியான மக்கள்தொகையே இந்தியாவை முன்னேற விடாமல் தடுக்கும் தொல்லையாக இருக்கின்றது..

மக்கள் தொகையைக் குறைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்....

ஒரு மனிதனுக்கு எத்தனை மனைவி-ன்னு கணக்கு எடுக்கறத விட்டுட்டு, ஒரு தாய்க்கு எத்தனை குழந்தைகள் இருக்கலாம்-ன்னு சட்டம் போடுங்க...

ஒரே குழந்தை போதும்-ன்னு குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கரவங்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் கொடுங்க... சிறப்பு சலுகைகளுக்கு உங்களுக்கு சொல்லியா தரணும் ?

அங்க சுத்தி, இங்க சுத்தி, எங்க வந்தாலும்., கடைசில அது இ.பி.கோ -வை மாத்தி எழுதுரதுலதான் வந்து முடியுது...

ஆமா... மாத்திதான் ஆகணும்.... வருஷம் ஒரு முறை காதலிய மாத்துறதுக்கு யாரும் இங்கே வருத்தம் தெரிவிக்கல... கடந்த நூற்றாண்டில் இயற்றிய சட்ட திட்தத்த மாத்த சொன்னா மட்டும் கோவம் வருதோ?

என்னால முடீலப்பா.....
எவ்வளவோ கஷ்டம் இருந்தாலும், வேதாத்திரி மகரிஷி இதுக்கு ஒரு மருந்து கொடுத்துட்டு போயிருக்காரு... தினமும் வாழ்த்துங்க..-ன்னு கீழ்க்கண்ட ஸ்லோகத்தை அருளிட்டு அவுரு போயிட்டாரு... அவர் போட்டுக்கொடுத்த ரூட்ல தான் என்னால நடக்க முடீல.

உலகப் பொது நல வாழ்த்து 
உலகமெல்லாம் பருவமழை ஒத்த படி பெய்யட்டும்...
உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்...
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்..
பகுத்தறிவில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கழகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும்..
கல்லாமை, கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்..
நல வாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி  வீசட்டும்...
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்...
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்...
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்...

மறந்த சரித்திரம்... மறைத்த தந்திரம்

சுமார் ஐயாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு...
இந்திய மன்னர்கள் தங்களின் பராக்ரமங்களை உலகம்தோறும் விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்த்திக் கொண்டிருந்த காலம்..

 மழை என்றால் என்ன? செழுமை எப்படி இருக்கும் என்று தன வாழ்நாளிலே காணாமல் தவித்த மக்கள் கூட்டம் ....இந்தியா தவிர மற்ற நிறைய நாடுகள்ல இருந்துச்சு..  இவிங்க எல்லாத்துக்கும் இந்தியா மேல ஒரு கண்ணு..
நம்முளுக்குன்னு ஒரு சமயம் கிடைக்கும்.. அப்போ இந்தியாவ நாம கைப்பற்றி ஆளலாம்..ன்னு தினம் தினம் கனவு கண்டுட்டே இருந்தாங்க..

அதுல ஒருத்தன்தான் இந்த சரித்திர சாகச நாயகன்-ன்னு விஜய் மாதிரி காசு கொடுத்து பட்டப் பெயர் வாங்கின ஹீரோ. அலெக்ஸாண்டர்


எத்தனையோ வம்சங்களாக கிரேக்கர்கள் அடிபட்டு அவர்க்கள் இந்தியாவை பழி வாங்குவதற்காக பல வழிகளில் சிந்தித்துக் கொண்டிருந்தனர்...
அவர்களின் வம்சாவளி வந்த அலெக்ஸாண்டர் அரிஸ்டாட்டிலடம் சூளுரைத்தான்... [in the year 336 B.C.E]
நான் ஒரு நாள் இந்தியாவை என் காலடியில் கொண்டு வருவேன்...

பாவம், பயபுள்ள, கஷ்டப்பட்டு வந்து போரஸ் என்ற பஞ்சாப் மன்னர்ட்டே தர்ம அடி வாங்கி ,  இந்திய மண்ணில் விளைந்த ஒரு புண்ணிய அம்பினால் அடிவயிற்றில் தைக்கப்பட்டு, உசரு உனக்காச்சு கொசுரு எனக்காச்சு-ன்னு ஓடினான்..
ஓடுனவன் செத்தான்-ன்னும் தெரியல, பொலைசான்-ன்னும் தெரியல..

ஆனா, அதப்போயி நம்ம வரலாற்று ஆசிரியர்கள் அவனை ஒரு மாவீரனா சித்தரிச்சு பிரபலப் படுத்திட்டாங்க...

இந்தியா எவ்ளோ பெருசு-ன்னு யாருக்குமே தெரியாது..

சமீப காலத்துல (ஒரு அம்பது அறுவது வருசத்துக்கு) பாகிஸ்தான் பிரிஞ்ச மாதிரி நிறைய அண்டை நாடுகளின் தொகுப்பே இந்தியா..

வெறும் வாயில சொன்னா நம்ப மாட்டோம்.. எனக்கு ஆதாரம் வேணும்-ன்னு நீ கேட்டீன்னா,  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..

Prof. Dinesh Agrawal 
Address: 156 Aberdeen lane, State College, PA 16801 USA 
Tel: (814)-234-3558 (Home), (814)-863-8034 (Office) 

Who had written the post "Alexander, The Ordinary"


போனத பேசி புண்ணியமில்ல,
பொறாம புடிச்சா கண்ணியம் இல்ல..
ஆனால் மக்களே,

நம் பண்டைய மன்னர்களின் வரலாறு மறுக்கப் படுகிறது.. மறைக்கப் பட்டிருக்கிறது.

எங்கே இவனுங்களோட முன்னோர்களைப் பாத்து இவனுங்களுக்கும் வீரம் வந்துட்டா, நாம அவ்ளோதான்-ன்னு பயந்து,
வரலாற்றை மாத்தி எழுத முடியாது, அதனால, புறக்கணிச்சுட்டாங்க..

பள்ளிப் புத்தகங்கள், ஒரு பாடத் திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு இருக்கும். அந்தப் பாடத்திட்டத்தில், ஒரு தமிழ் மன்னரைக் கூட நான் படித்ததாக ஞாபகம் இல்லை. ஏன் என்று ஆராய்ந்தால், பாடத் திட்டம் ஆங்கிலேயர்களால் வகுக்கப் பட்டது, அதை யாரும் இன்னும் மாற்ற முன்வரவில்லை..
விடிய விடிய தமிழ், தமிழ்-ன்னு கூவி என்ன புண்ணியம்... தமிழ் வரலாறு பாடப் புத்தகத்தில் இல்லையே?

ஒரு சின்ன உதாரணம்..
சோழர் கொடி பறக்காத போர்க் கப்பல் இல்லை,
அவை போகாத தீவும் இல்லை...

இராசேந்திர சோழர் உலகத்தையே ஆட்டிப் படிச்சவர்.. அவருக்கு இல்லாத வீரமும் கௌரவமும் அலெக்ஸாண்டருக்கு வழங்கப் பட்டு இருக்கு.
இதுக்கு காரணம் யாரு-ன்னா, நமது பெயரும் புகழும் வாய்ந்த, பொறுப்பில்லாத, கல்வி கேள்வி இல்லாத, ஒரு தொலைநோக்கு சிந்தனை இல்லாத அரசியல்வியாதிகளே..

தஞ்சை-ல இராஜராஜ சோழர் ஒரு கோயில் கட்டாம விட்டிருந்தா, சோழர்-ன்னு ஒரு வம்சம் இருந்ததையே மறைச்சு இருப்பாங்க..

வடக்கில் ஹர்ஷவர்த்தனர் என்ற பெயரைக் கேட்டாலே கதி கலங்க வைத்த வீரர் பிறந்த புண்ணிய பூமி இது..

சத்ரபதி சிவாஜி வர்றார்-ன்னு சொன்னாலே ஒன்னுக்கு போற மன்னர்கள் ஏராளம்..

அடுத்தவன் நாட்டை கெடுக்கரதுல கை தேர்ந்த ஆங்கிலேயர்கள்.. இந்தியாவை விட்டு வெளியேறும் பொழுது, சும்மா போகல,
இவனுங்க காலத்துக்கும் அடிசுகிட்டே இருக்கட்டும்-ன்னு ரெண்டு நாடா பிரிவினைய  உண்டு பணிட்டு போயிட்டானுங்க..

அப்போ அவனுங்க பத்த வச்ச கொல்லி இன்னும் கொழுந்து விட்டு எரிஞ்சுட்டுதான் இருக்கு..
அவனுங்க அன்னைக்கு போட்ட விதைதான் இன்னைக்கு வெறுப்பு-ன்னு ஒரு பெரிய மரமா வளந்து காய் காத்து, கணியல, ஆனா ஊருபட்ட குட்டி போட்டு அங்கங்கே வெடிச்சு கிட்டே இருக்கு..


நீங்களும் ஆடுங்கடா, அதை வைத்து நாங்க அரசியல் பண்ணிக்கறோம்-ன்னு சாமர்த்தியமா, ஆட்சிக்கு வர்ற எல்லா கட்சிகளுமே.. டாஸ்மாக் மாதிரி உறுதியா இருக்காங்க..

இல்ல-ன்னு சொன்னா, மத நல்லிணக்கத்துக்காக, எந்த அரசாவது,  ஏதாவது ஒரு நடவடிக்கையாவது எடுத்து இருக்குதா? எங்கே, எந்த ஒரு பிரச்னை நடந்தாலும், அதுல கட்சிக்கு என்ன லாபம், எனக்கு என்ன லாபம், என் சின்ன வீட்டுக்கு என்ன லாபம்-ன்னு நினைக்கும் ஆட்கள் இருக்கும்வரை, இந்தியாவ, இன்னும் 2000 சுபாஸ் சந்திர போஸ் வந்தாலும் காப்பாத்த முடியாது..


Conclusion:

  1. தமிழ் மற்றும் இந்திய சரித்திர நாயகர்களின் பராக்ரமங்கள், பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட வேண்டும்.
  2. பொய்யான, வரலாறு பதிவுகள் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப் பட வேண்டும்.
  3. பள்ளிகளில் மாணவர்களுக்கு மதம் சார்ந்த பிரார்த்தனை திணிக்கப் படக் கூடாது.

Thursday, March 6, 2014

தேன்மொழி

எனக்கு தமிழில் எவ்வளவோ எழுத வெண்டுமென்று ஆசை...
ஆனால் எழுதக் கொடுத்து வைக்கவில்லை..
[எனக்கு கூடதான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிக்கணும்-ன்னு ஆச... ]

அதாகப் பட்டது என்னவென்றால், ஒரு தமிழ்க் குடிமகனாகப் பிறந்தவன், தன்னுடைய வாழ்நாளில் சாதிக்க வேண்டிய சில ...
[டேய்.. நிறுத்து..இப்போ என்னா சொல்ல வர்ற?]

தேன்மொழி என் தேன்மொழி அவள் மொழி, தேன்மொழி...
[உன்னோட படைப்புத் தொல்லைக்கு ஒரு அளவே இல்லையாடா?]

என் தேன்மொழி, அவள் விழி மலர்விழி
காதலி அவள் என் காதலி..

மைவிழி, அவள் என்னைப் பார்க்கும் மார்கழி
பைங்கிளி பஞ்சை ஒத்த, பருவத்து சங்கிலி
[நீ ஒரு பெருச்சாளி.. அவ ஒரு செத்த எலி..]

என்னவள்..
தீராத வானத்தில் தினம் ஒரு நட்சத்திரம்...
காணாத வண்ணத்தில் தீட்டாத பெண் சித்திரம்...

தேன் தெவிட்டி, வாய் கசந்த உயிருக்கு
வாடாத வெண்ணிலா வெள்ளம்.
[ஸ்ட்ராபெர்ரி , பட்டர் ஸ்காட்ச் எல்லாம் இல்லையா?]

....இந்தக் கவிதை தொடரும்...

[இந்த உலகத்துலேயே, கவிதைக்கு டெலி சீரியல் மாதிரி தொடரும்...போட்ட ஒரே ஆளு நீதாண்டா.. எழுத முடீல-ன்னு ஒத்துக்கோ...  ]

Tuesday, March 4, 2014

நாட்டு நடப்பு...

ஒரு சாதாரணனின் அன்றாட மனநிலை-பிரதிபலிப்பு..

அதாவது மஹா ஜனங்களே... 
[யாருடா இவனுக்குள்ள தூங்கிட்டு இருந்த மிருகத்த எழுப்பி விட்டது..?]

நான் என்ன சொல்ல வர்றேன்னா...
[நீ ஒண்ணுமே சொல்ல வேணாம்..]

சமுதாயத்துல ஏகப்பட்ட அட்டூழியம் நடக்குது..
[ஆமா நீ எழுதுறது உட்பட]

நிம்மதியா தூங்க முடியல..
நல்லா சாப்புட முடியல 
[ஆங்... எங்கேடா இன்னும் மேட்டருக்கு வரலியே-ன்னு நினைச்சேன்..]

யார் யாரெல்லாமோ அரசியல்ல நிக்குறாங்க.. புதுசு புதுசா கட்சி ஆரம்பிக்குறாங்க..

பேஸ்புக்கு-ங்குறாங்க, டேட்டிங்-ங்கறாங்க..
[டேய், உனக்கே ஓவரா தெரியல.. நீயே  200 fake அக்கவுண்ட் வச்சிட்டு திரியுற..]

கலாசாரம் சீரழியுது..
மனைவிகளை கட்டுப் படுத்தவே முடீல... அடங்க மாட்டேன்குறாங்க..
[நீ எதுக்குடா அடுத்தவன் மனைவிய கட்டுப்படுதுற?]

விஜய் டிவி பாத்து நிறைய கெட்டு போறாங்க.. (மாமி)யாருக்கும் மரியாதை கொடுக்கறது இல்ல. 
எதிர்த்து பேசுறாங்க.. 
வீட்டு வேலைகளை எதுமே செய்ய மாட்டேங்குறாங்க... 
சினிமா, பார்க், பீச், ஷாப்பிங் கூட்டிட்டு போக சொல்லி தொந்தரவு கொடுக்குறாங்க..
கார், வீடு வச்சிருந்தா மட்டுமே கல்யாணம் பண்ணிக்குறாங்க..
இல்லைன்னா வாங்க சொல்லி உயிரை எடுக்குறாங்க..
[நீ எப்பவுமே ஞாயித்து கிழமை மட்டும்தான இப்புடி பொலம்புவ, இன்னைக்கு உனக்கு ன்னா வந்துச்சு?]

எல்லா விலையும் ஏறுது, விலைவாசிய கட்டுப்படுத்த முடியல..
[டாபிக்க மாத்தாத, மேட்டர் என்னன்னு மட்டும் சொல்லு  ]

.......என் பொண்டாட்டி, நான் சொல்ற பேச்சை கேக்க மாட்டேன்றா.. அவ அம்மா பேச்சை தான் கேக்குறா..
....
[இவ்ளோதானா... இது உனக்கு மட்டும் இல்ல சாணி மண்ட, தாலி கட்டுனவன் எல்லாருக்குமே இதே சிச்சுவேசன்தான்.. 
பொலம்பறத விட்டுட்டு, போய் மூஞ்சி கழுவீட்டு வந்து வேற வேலை ஏதாவது இருந்தா பாரு...]

....சிறிது நேரம் கழித்து ...

படிக்குற பசங்க எல்லாம் இப்போ அதிகமா காதலிக்குறாங்க...
[டேய், எங்கே அந்த மூஞ்சிய காட்டு...9-ம் கிளாஸ் லேயே 12 பொண்ணுங்க பின்னாடி சுத்தின நாயி இது, இப்போ வருத்தப் படுறியா...] 

இளைய சமுதாயம் சீர் குழையுது... அவங்கள வழி நடத்த யாரும் இல்ல..
[அதான், நீ இருக்கியே..]

சமுதாயம் உருப்படனும்-ன்னா அதுக்கு உடனடியா சில சட்டதிட்டங்கள மாத்தியே  ஆகணும்..
[எங்கே, என் கன்னுகுட்டி, நீ போயி மாத்து பாக்காலாம்.. ஜட்டி பணியன கூட மாத்த முடியாது, இவன்லாம் வாய் பேசுறான்..]

எந்த ஒரு மாற்றமும் மீடியா கிட்டே இருந்துதான் ஆரம்பிக்குது.. அதனால, சின்னத்திரை, வெள்ளித்திரை, விளம்பரம், தினசரி மற்றும் நாள், வார, மாதஇதழ்கள் உட்பட அணைத்து ஊடகத்திற்கும் டிரஸ் கோடு உடை கட்டுப்பாடு கொடுக்கணும்.. 
பெண்களை கவர்ச்சிகரமா, தரக்குறைவா எந்த ஒரு ஊடகமும் காட்டக் கூடாது... 
[அப்படீனா, சினி-மினி இண்டஸ்ட்ரில யாருமே பொழைக்க முடியாது...]

இந்த சட்டம் இந்தியநாடு முழுவதும் நடைமுறைப் படுத்தனும்.. நம்ம கலாசாரத்தை மீடியா சீர்குலைக்காம இருந்தாலே போதும்... மத்தது எல்லாம், தன்னால விடியும்..



Thursday, February 27, 2014

சமீபத்தில் நான் விரும்பி ரசித்த குறுங்கதை..

தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வரை.

நான் வீட்டிலிருந்து பெங்களுருக்கு கிளம்பினேன்.
ஒரே பஸ்-ல் ஏறாமல், தர்மபுரி வந்து, கிருஷ்ணகிரி வந்து, ஓசூர் வந்து பெங்களூர் வந்தேன்.
தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வண்டியில் ஏறினேன். இடம் இல்லாத காரணம் ஒன்று, தனியார் வாகன மோகம் இரண்டு, வேகமாக செல்லக்கூடிய வாகனங்களில் பயணம் செய்ய எனக்கு ஆசை.....
பாதி தூரம் சென்றவுடன் ஒரு பெண் வாந்தி எடுத்து விட்டாள். நான் சற்றே தூரமாக நின்று கொண்டிருந்ததால் என் மீது படவில்லை.
ஆனால்., அப்பெண்ணைச் சுற்றியுள்ளவர்களின் மீது நல்லாவே பட்டுடுச்சு. அதுல ரொம்ப அதிகமா பாதிக்கப் பட்டவர், ஒருவர்.,
அவர் தன் மனைவி குழந்தைகளுடன் உட்கார்ந்து இருந்தார். அந்த வாந்திப் பெண்மணி அடுத்த ஸ்டாப் லையே இறங்கி விட்டார். நம்ம ஆளு கொஞ்ச நேரம் பொருத்து பார்த்தாரு, அப்புறம் காலை கொஞ்சம் சுத்தம் பண்ணலாம்-ன்னு அடுத்த ஸ்டாப் ல இறங்குனாரு., பட், அவரு சுத்தம் பண்ணிட்டு ஏற்றதுக்குள்ள டிரைவர் வண்டிய எடுத்துட்டாரு.... அவரோட மனைவி கொஞ்ச நேரம் கழிச்சு தான் ரியலஸ் பண்ணி சவுண்ட் கொடுத்தாங்க. பட் வி ஹவே க்ராசுடு சம் கிலோ மீட்டர்'ஸ். குழந்த வேற அழுதுகிட்டே இருனுன்தது.. நாங்க எல்லாம் சேர்ந்து கொஞ்சம் சமாதானப் படுத்தி கிருஷ்ணகிரி வரைக்கும் கூட்டிட்டு போயிட்டோம். பஸ் ஸ்டான்ட் வந்த வுடனே., எல்லோரும் சட்டு புட்டுன்னு இறங்கி ஓடிட்டாங்க., நான் அந்த அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணி., பிளாட் போரம் ல இறக்கி விட்டேன். அவங்க கணவர் வரும் வரை கூட இருந்து வழியனுப்பலாம்-ன்னு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினேன். 30 மினுட்ஸ் ஆகியும் அந்த ஆளைக் காணோம். அப்புறம் மைக் ல அவர் பேரு சொல்லி கூப்பிடு பார்த்தேன். அந்த அம்மா-கிட்டே அவரோட போன் நம்பர் இல்லே. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு, அவங்க, அவங்களை சைக்கிள் ஸ்டான்ட் ல கொண்டு பொய் விட சொன்னாங்க. நானும் சரி-ன்னு அவங்களை கூட்டிட்டு நடந்தேன்.
கொஞ்ச தூரம் நடந்தவுடன், யாரோ யாரையோ அடிக்கற மாதிரி சத்தம் கேட்டது. நான் என்னடா-ன்னு திரும்பி பார்த்த., அந்த அம்மாவோட வீட்டுக்காரன் அவங்களை அடிச்சுட்டு கண்டபடி திட்டிட்டு இருந்தான். அந்த வார்த்தைகளை என்னால் இங்கே சொல்ல முடியாது. அப்புறம், என்கிட்டேய நடந்ததை சொன்னான். நான் அவன்கிட்டே, "நானும் அதே பஸ் ல தான் இருந்தேன்"-ன்னு சொல்லி அவங்க கிட்டே குழந்தைய ஒப்படைச்சுட்டு பஸ் ஏறினேன்.

என்ன உலகம்டா இது?
யாருமே கண்டுக்காம இருந்தவங்களுக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணினேன். எனக்கு நன்றி சொல்லலன்னாலும் பரவாஇல்லை ஆனா, அந்த ஆள்-ன்னால கண்டு புடிக்க முடியலன்னு அந்த அம்மாவை கண்டபடி திட்டுனது, எனக்கு புடிக்கல.
காரணம் என்னன்னா?, நாங்க பஸ் இறங்குன இடத்துலேயே, உட்காந்துட்டு இருந்தோம், ஆனா அந்த ஆளு சைக்கிள் ஸ்டான்ட் + பஸ் ஸ்டான்ட்-க்கு வெளியல எல்லாம் தேடிட்டு இருந்து இருக்கான்....
சரி வாழ்க வளமுடன்னு அவங்களை என் மனசுக்குள்ளே வாழ்த்திட்டு நான் என்னோட பயணத்தை தொடர்ந்தேன்.
இதுல ஒரு மணி நேரம் எனக்கு செலவானது தான் மிச்சம்.

சிறைகளும் சிறகுகளும்


இந்த வார புதிய தலைமுறை இதழில் வெளிவந்த சிறைகளும் சிறகுகளும் -கட்டுரைக்கு என்னுடைய கருத்து...

ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் அறைகிறான்?  நாட்டில் பெரும்பாலும் ரத்தக் கொதிப்பு ஆண்களுக்கே அதிகம்..... 
பெரும்பான்மையான காரணம்: குடும்ப மன அழுத்தம். 
ஒரு பெண்- தாய் தான் செய்ய வேண்டிய கடமையில் சரியாக இருந்து, அவளை அரசு மதுபானக் கடையில் குடித்து விட்டு வந்து அடிப்பது வன்முறை! 
அதற்கான சட்ட திட்டங்களைத் தெளிவு படுத்தியதற்கு நன்றி.  
ஒரு ஆண்/ அப்பா  சரியாக, பொறுப்பாக, மரியாதையாக, மானத்துடன் இருந்து,  அவருடை மனைவி கலாச்சார சீரழிவுடன், கற்பை மறந்து சமுதாயத்தைக் கெடுத்தால் ஏதாவது சட்டம் அவளை தடுத்து நிறுத்துகிறதா? தயை கூர்ந்து மன உளைச்சலுடன் வாழும் மணமகன்களுக்குத்  தெரிவு படுத்துங்கள்...

என்னுடைய பார்வையில் 
நிறைய  ஆண்களும் சரியில்லை; நிறைய பெண்களும் சரியில்லை... ! 
- ஒரு யதார்த்தமான உண்மை!... 
இதில் அவ்வையாரின் கல் உண்ணும் பழக்கைத்தை புலிகளின் புதல்வர்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்த கவிஞரும்., சமுதாய சீர்கேடுக்கு ஒரு சிறு  பங்கு வகிக்கிறார். 
ஆதி  காலம் முதல் ஒருவனைப் பார்த்தே ஒருவன் கற்கிறான், வாழ்கிறான் -  இதுதான் நாகரீகம்... 
அந்த காலத்து ஒளவையாரே தண்ணி அடிச்சிருக்காங்க, நாம ஏன் அடிக்கக் கூடாது-ன்னு நம்ம வீட்டு வயசுப் பொண்ணுங்க எல்லாம் கிளம்பிட்டாங்க- ன்னா என்ன பண்றது? 
டிவி சீரியலில் வரும் கூத்துக்கள் எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடக்கின்றது. நகர குடும்பங்களில் [கடந்த 5 ஆண்டு அளவில் திருமணமான வீடுகளில்] முடிந்தால் ஒத்து வாழ்வது, இல்லையேல் விவாகரத்து... இதுதான் இப்போ ட்ரெண்டு.. 
நீ வேலைக்குப் போறியா? நானும் வேலைக்குப் போறேன்!.. நீ ஊர் சுத்துறியா? நானும் ஊர் சுத்துறேன்!... நீ அடிக்கறியா? நானும் அடிக்குறேன்!... எல்லா விதங்களிலும் எல்லா வேலைகளும் பெண்கள் செய்யறாங்க...

பத்து பொண்ணுங்களை லவ் பண்ணிட்டு, ஊர் சுத்திட்டு ட்டேடிங் போயிட்டு, நாம நல்ல பிரண்ட்ஸ் ஆவே இருக்கலாம்-ன்னு பிரிஞ்ச பையனும், ஊருக்கு குறைந்த பட்சம் இருபது பேர்  கூட ட்டேடிங் போன பெண்ணும் கலியாணம் கட்டிக்குறாங்க... அப்புறம் எப்புடி விளங்கும்? 
எந்த ஒரு மாற்றத்திலும் பயனும் இருக்கு. பங்கமும் இருக்கு... உதாரணம்:  கணினி, உலா பேசி, இன்டர்நெட், மக்களாட்சி, நாகரீக வளர்ச்சி, .. இன்னும் எத்தனையோ இப்புடி மாற்றங்கள் இருக்கு.
எல்லாம் கலி படுத்துற பாடு-ன்னுட்டு போக வேண்டியதைத் தவிர, எங்களால் வேற எதையும் செய்ய முடியல. 
ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம்  எடுக்கனும்-ன்னு நான் விரும்புறேன் 
  • மது ஒழிப்பு
  • கள்ள நோட்டு ஒழிப்பு
  • விலை மகள் விடுதிகள் ஒழிப்பு 
  • எந்த ஒரு மக்கள் தொடர்பு சாதனத்திலும் கவர்ச்சி [ஆடைக்குறைப்பு] ஒழிப்பு 
எப்படியும் யாரும் என்னோட இந்த அறைகூவல மதிக்கப் போறது இல்ல.. இருந்தாலும் எழுதி வைக்கிறேன்....

மனம் என்னும் நோய்


மனம் என்னும் நோய்... 

சிலர் என்ன சொன்னாலும் ஏற்க முடிவதில்லை, 
சிலரைப் பிரிந்து இருக்க முடிவதில்லை,
சிலரை மறக்க முடிவதில்லை,
சிலரை வெறுக்க முடிவதில்லை

மறந்தாலும் காயம் மறைவதில்லை 
எவ்வளவோ தூரம் தள்ளி இருந்தாலும் கோபம் குறைவதில்லை 
நல்லவை நூறு இருப்பினும், அல்லவை நாட்டம் விடுவதில்லை..
.....
மொத்தத்தில் நிம்மதி இல்லை, 

அறிவே மருந்து.. அன்பே நிவாரணம்.
மாற்று மருந்து வேறு இல்லை..

கடைசி வரை காலி டப்பா

வெறும் ஓசை ஒலியாகி, சத்தம் கானமானது.... ஒரு மாற்றம்.

அரும்பு மீசை காதலாகி, தாடி திருமணமானது ..... ஒரு மாற்றம்.

வந்தவளும் சரியில்லை வாயய்தவளும் சரியில்லை... வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை.. ஒரு மாற்றம்.

மேற்கு வடக்காகி, தெற்கு கிழக்காகி, பருவம் பாழானது.. ஒரு மாற்றம்.

வருஷம் போனா, வயசு போகுது, வாலிபம் போயும் வருத்தம் போகலியே... ஒரு மாற்றம்.

இதுவே நான் செய்த கடைசி தவறு,.. அது போனமாசம்-ன்னு பொழுது போகுதே.. ஒரு மாற்றம்.  

எத்தனை முறை முடிவு எடுத்தாலும், கடைசி நொடி வரை நிம்மதி இல்லையே.. ஒரு மாற்றம்.

அறிவியல் பூர்வமான ஒரு உண்மை...
உன் மனம் என்று எதுவும் இல்லை. ஏனெனில் நீ ஒரு காலி டப்பா 


பெண்ணுக்கும் பொன்னுக்கும் பெண்ணே காரணம்

ஆணை விட பெண்ணும், பெண்ணை விட ஆணும் உயர்ந்தவர் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர்!....

ஆணும் பெண்ணும் சமம் அல்ல....

பெண் ஒரு சிறப்பு..

ஆணும் ஒரு சிறப்பு...

சாதாரண மொழில சொன்னா,
தேன் துளிக்கும், இளநீருக்கும் இருக்கும் சிறப்பு அம்சங்களும் ஆணிடமும் இருக்கு, பெண்ணிடமும் இருக்கு.

இதை புரிஞ்சுக்காம, மகளிர் முன்னேற்றக் குழு, பெண்கள் சுய உதவிக்குழு... இதர பல அமைப்புகள் தேவையே இல்லாம ஆணும் பெண்ணும் சமம்-ன்னு விவாதம் பண்றதை பார்த்தால், எனக்கு சிரிப்புதான் வருது.

சமுதாயத்தில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு...
ஆனால், அந்த  பிரச்சனைக்கு மூல காரணம் என்னவென்று, பிரச்சனையின் வேர் எங்கு உள்ளது என்று கண்டு அதனைக் களைய வேண்டும். இல்லையேல் பிரச்சனை தவளைக்ளைப் போல் மீண்டும் தோன்றும்...

சமீப காலங்களில் நடந்த பாலியில் வன்புணர்வு நிகழ்ச்சிகள், பல கோடி நெஞ்சங்களை பாதித்தது. இன்னும், எங்கோ ஒரு மூலையில் அசம்பாவிதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன...
பாதிக்கப் பட்டவரின் நண்பர்களும், உறவினர்களும், நீதி கோரி போராட்டத்தில் இறங்குகின்றனர்...

தனி நபரோ, அல்லது கும்பலோ தவறிளைத்தவர்கள் தண்டனைக்குரியவர்கள்.... அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் பெருகி வரும் பாலியல் வன்புணர்வுகளுக்கு மூல காரணம்தான் என்னவென்று  ஆராய எவரும் இல்லை.. யாருக்கும் நேரமும் இல்லை.
ஏதோ என் மனதில் தோன்றியதை இங்கே முன் வைக்கின்றேன்... முடிந்தால் ஏற்கவும். இல்லையேல், தங்கள் பணியினை தொடரலாம்... விவாதம் செய்ய நான் தயாராக இல்லை.

ஊடகம்: 

"..நீரோடும் வைகையிலே... நின்றாடும் மீனே.."...பாடலில் நடிகர் திலகம் அவர்கள் புகை பிடித்துக் கொண்டே தொட்டிலை ஆட்டுவார்...
திரை உலகம் தோன்றிய காலம் முதல் சராசரி மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் திரையில் வரும் கதா பாத்திரங்கள் முக்கிய காரணம் வகிக்கின்றன.
சினேகா சேலை, நயன்தார சேலை, விஜய் சட்டை, அஜீத் பேன்ட், என்ன நீங்க இவ்வளோ  சின்னதா கழுத்து வச்சி துணி போடுறீங்க? இப்போ இது எல்லாம் பாஷீன் கிடையாது... நல்லா டிரெண்டா டிரஸ் பண்ணுடா.. -என்ற வசனங்களும், அறிவுரைகளும் திரையில் இருந்து மக்களின் மூளைக்கு விரைவில் பயணிக்கின்றன.

சின்னத்திரையாகட்டும் பெரியத் திரை ஆகட்டும்...எந்த ஒரு கண்டுபிடிப்பிலும் உள்ள பின்விளைவுகளுக்கு விதி விளக்கு அல்ல.

.."நாங்க ஒன்னும் இல்லாதது எதையும் காட்டுல... நாட்டுல என்ன நடக்குதோ, அதையேதான் நாங்க படத்துல காட்டுறோம்"...-ன்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேட்டி கொடுக்கிற திரையுலக படைப்பாளிகளை நினைத்து சிரிப்பதா அழுவதா-ன்னே  எனக்கு தெரியல..

நான் ஒரு வாகனத்தை அறிமுகப் படுத்த வேண்டுமா?
நான் ஒரு நிறுவனத்தை அறிமுகப் படுத்த வேண்டுமா?
நான் ஒரு புதிய பொருளை அறிமுகப் படுத்த வேண்டுமா?
நான் ஒரு படம் எடுத்து சம்பாதிக்க வேண்டுமா?
நான் எந்த ஒரு தொழில் தொடங்க வேண்டுமானாலும், எனக்கு என்னை விளம்பரம் செய்ய ஒரு பெண் வேண்டும். நவ நாகரீக யுவதி வேண்டும்... அவள் கண்ணில் அனைவரும் சொக்க வேண்டும்...
உலகத்தை திரும்பி பார்க்க வைக்க பெண்ணால் மட்டுமே முடியும்.
அவளை நம்பியே அனைத்து தொலைகாட்சி நிறுவனங்களும் உள்ளன. ஊடகங்களும், ஊடகம் சார்ந்த தொழில் நிறுவனங்களும், கவர்ச்சியை நம்பியே இருக்கின்றன. இதுவும் ஒரு வகையில் விபச்சாரமே..

சரி பிரச்சனைய சொல்லியாச்சு.. அதுக்கு என்ன தீர்வு?
1.ஊடகத்திற்கான சட்டதிட்டங்கள் கடுமையாக்க வேண்டும்.
2. பெண்ணை தரக் குறைவாக, கவர்சிகரமாக சித்தரிக்க தடை செய்ய வேண்டும்.
எரியுறத புடுங்கு... கொதிக்கறது தன்னால அடங்கும்..

பெண்களை கடவுளாக காட்டுங்க..தேவதையாக காட்டுங்க...அப்போதான் சாதாரண மக்களும் பெண்களை கடவுளா மதிப்பாங்க... நீங்க எப்புடி காட்டுறீங்களோ அப்பட்டிதான் மக்கள் பார்ப்பாங்க..
ஒரு வருடத்தில் இந்த மாற்றத்தை கண்கூடக் காணலாம்.

மதம் சார்ந்த நாகரீகம்:  
xxxxxx மதம் இந்தியாவிற்கு வரும் வரை நாகரீகம் என்பதே என்ன என்று அறியாத நாடு இந்தியா. என்று ஆரம்பப் பள்ளியில் வரலாற்றுப் பாடம் உள்ளது. (In International School Syllabus).

பழையன கழிதலும்.. புதியன புகுதலும், சமுதாயத்திற்கு நன்மையே...
எனவே, தொண்டு தொற்று வந்த நமது பழைய நாகரீகமான, மனிதர்களை மதிப்பது, பசி என்றவருக்கு உணவளிப்பது... ஜீவகாருண்யம், சக உயிர்களை நேசிப்பது... போன்ற அனைத்து பழக்கங்களையும் கைவிட்டு, குளிக்காமல் உண்பது..மதத்தை பரப்புவதே தலையாய கடமை, நாள் கிழமை சுத்தம் அசுத்தம் என்று பார்க்காமல் இருப்பது.. யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் உறவு வைத்துக்க் கொள்வது.. போன்ற புதிய நாகரீகத்தைக் கடைபிடிப்போமாக. [because God is there to forgive them for all their sins...]

அனைத்து xxxxxx மத  பள்ளிகளிலும் xxxxxx மத விளையாட்டுகளுக்கு, பயிலும் அனைத்து மாணவர்களும் கட்டாயப் படுத்தப் படுகின்றனர். பிரார்த்தனை வகுப்புகள், xxxxxx மத மரம், நட்சத்திரம், அலங்காரப் பொருட்கள்.. இன்னும் பல்வேறு அம்சங்கள் பொருந்திய நம்பிக்கையை பிஞ்சு மனதில், xxxxxx மத பள்ளிகள்  விதைத்து விடுகின்றன... இதுவும் xxxxxx மத மாற்றத்திற்கு ஓர் தூண்டுகோலே..
பாமரன் ஈர்க்கப் படுகின்றான்...

நீ மிகவும் தாழ்த்தப் பட்டவனா? என் மதத்திற்கு  மாறு, உன் ஜாதிச் சான்றிதழ் SC, ST - யில் இருந்து BC-க்கு மாற்றப்படும்..
 இல்லை என்று மறுத்தால்,  மக்கள் எண்ணிக்கை எப்போதுமே குறைவாக உள்ள, ஊட்டி, ஏற்காடு, கோடை, கொல்லி மலை போன்ற மலைப் பிரதேசங்களில், ஆள் அரவம் அற்ற காடுகளில் கூட xxxxxx மத தேவாலயங்கள் தோன்ற காரணம் என்ன என்று கூறுங்கள்?..

இந்திய நாட்டின் கலாச்சார சீரழிவிற்கு மதம் சார்ந்த மாற்றங்களும் ஒரு காரணமே. நீ ரோமில் இருக்கும்போது ரோமானியனாக இரு...இந்த பழமொழி இந்தியாவில் மட்டும் விதிவிலக்கு... நீ இந்தியாவில் இருக்கும்போது நீ என்னவாக வேண்டுமானாலும் இரு...

பெண்மை:
பெண்ணிடம் கவர்ச்சி உள்ளது. பெண் ஒரு மாபெரும் சக்தி,
பெண் ஆடைக் குறைப்பைப்  பற்றி கூறினால், ஆண்களின் கண்களில் காமம் உள்ளது, என்னை உடை மாற்றச் சொல்ல நீ யார்? என்று கேள்விகள் எழுகின்றன...
http://amandadandrea.wordpress.com/2013/11/25/dress-codes-slut-shaming-and-the-male-gaze/ 
ஆனால், ஒரு பெண்ணுக்கு நிகழும் வன்புணர்விற்கு காரணம் இன்னொரு பெண்ணே... என்பது என் கருத்து. மதுவின் மயக்கத்தில், போதையில், தான் செய்வதறியாது செய்தவன் ஒரு கருவியே.... அவனை தூண்டியது, அவனுக்கு பெண்ணின் மீது  சபலம் ஏற்படுத்தியது இன்னொரு பெண்ணே...

ஆகையால்.. பெண்களாய் பார்த்து திருந்தாவிட்டால், பெண்களுக்கு எதிராக நடக்கும் அசம்பாவிதங்களை குறைக்க, தடுக்க.. எதுவுமே முடியாது.

நான், இந்த காமக் கொடூரர்களின்  செயல் குற்றம் அல்ல என்று கூறவில்லை கணம் நீதிபதி அவர்களே, இவர்கள் தண்டனைக்கு உரியவர்களே ... ஆனால் இது போன்ற பெண்ணுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு மூல காரணம் வேறு ஒரு பெண்ணே என்று விளக்க முயற்சிக்கிறேன்.  

Tuesday, June 11, 2013

நான் ஏன் பிறந்தேன்.?

நானு, ஓசூருக்கு  போயி திரும்பி வந்தேனா,
அப்போ வழியில, 
நான் மெதுவாத்தான் போயிட்டு இருந்தேன்.. 

எனக்கு எதிர்ல ஒரு லாரி வந்தது.. 
அந்த லாரியை மீத்துறேன்-ன்னு   ஒரு சின்னப் பையன் என் காரை வந்து உரசிட்டான்... 

அவனோட வண்டிக்கு ஒன்னும் ஆகல, அவனுக்கும் ஒன்னும் ஆகல. என்னோட வண்டிக்கு ஹெட் லைட் போயிடுச்சி.. பானட் ஒடுங்கிடுச்சு, டோர் தொறக்க முடீல... ஏகப்பட்ட சேதாரம்...

இப்போ, நம்ம பொதுமக்கள், மது மக்கள் அனைவரும் எங்கிருந்துதான் வந்தானுங்களோ தெரியல. ஒரு கூட்டம் கூடி எங்களை மிரள வச்சுட்டானுங்க....



நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேனுங்கறாங்க.... 

108-க்கு போன் பண்ணி, அது வரதுக்கு முன்னாடியே வேற ஒரு அம்புலன்ஸ் வச்சு, அந்த பையன கொண்டி போயி GH-ல சேத்தி-ட்டாணுங்க.
அடுத்த கட்ட நடவடிக்கையா காவல் துறை,
அவங்க வந்து என்னோட காரையும் அந்த எச்செல் சூப்பர் வண்டியையும் தூக்கிட்டு போயிட்டாங்க ...

இந்த கலவரத்துல என்னோட மொபைல் போனையும் காணோம் [இப்போதான் வாங்கினேன் Rs.16000]

அடுத்த நாள் காலையில அந்த பையன் யார்கிட்டேயும் சொல்லாம ஓடி போயிட்டான், விசாரிச்சதுல, அடி ஒன்னும் இல்ல சின்ன சிராய்ப்புதான். ஊர் பேர் முகவரி எதுவும் சரியா கொடுக்கல அந்த பையன் காலைலேயே கிளம்பிட்டான்ன்னு  சொன்னாங்க...
காவல் துறை உதவி ஆய்வாளர் அவர்கள், இதை ஒப்புக்கொள்ள மறுத்தார்...
நாளைக்கு அந்த பையன் வக்கீலோட வருவான்.. யாரு பதில் சொல்றது?-ன்னு கேட்டார்...
இதுக்கு மாட்டரு என்ன-ன்னா லஞ்சம் 5000

ஒரு 24 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நானும் என் குடும்பமும் வீடு வந்து சேர்ந்தோம்.

இழப்பு மதிப்பீடு சுமார் 50000
மொபைல் 16000
போலீஸ் 5000
கார் ரிபய்ர் 25000 - இன்னும் பட்டறை-ல தான் இருக்கு...

இதுல ஒரு காமெடி என்ன-ன்னா, அது என்னோட மாமா காரு. ஹெட் லைட் டூம் மாத்துறேன், பெங்களூருல கம்மியா இருக்கும்-ன்னு நான் அவரோட காரை எடுத்திட்டு வந்தேன்.
புதுசா மாதத்தின ஹெட் லைட் டூம்-தான் மொதல்ல உடைஞ்சது....

டேய் நரி எங்கே ஒரு ஊளை  விடு....



Monday, June 10, 2013

First Lost, made me to realize India

I used to advice people not to invest much on mobiles.. but not sure why did I choose to buy Micromax Canvas HD A116 for Rs.14000 Change and extra accessories.,

I bought it for a while and enjoyed using 3G and stayed connected in all Social networking portals.
I had some good moments with my mobile not more than 3 weeks.
ALAS... I didn't expect, that this would end by a mobile thief.

I have lost it in Hosur, Housing Board Area. I have left it in my car dashboard and went up to my sister's home for not more than 2 min to drop one curtain. thats it... I have realized my loss after half an hour,

Realization:
I could remember the last received call from my dad, I have seen it while driving and i left on top of my dashboard when I was near to my sister's home.
I have dropped one games box in my sister's home and started my journey with my parents. we were talking in general.. and we were in traffic, about to join NH.

One Minor boy with Excel Super Heavy duty, was about to overtake one goods lorry, he smashed my Car right side headlight and full side body line...

The moment, I have seen him coming towards me, I've stopped my car. so he's still alive.
He hit my car, he scratched with his vehicle, and he end up with minor scratches in his leg and knees. he woke up and started walking towards the corner.

I didn't know, from where the hell that many people came from. so many people surrounded me asked me to park my car in road side.
few people came to me and asked me to leave that, the boy is safe.
few people asked me to take the boy to the hospital.
few people told me that its that boy's mistake, that Nothing I've to do with.

Here the Quarrel begins. I didn't realize there was a government BAR which is nearby. all those drunken bastards started asking me to take that boy to hospital. I told him I will call 108, let the ambulance and police come..

This moment, I have realized that somebody flicked my mobile. [first surprise...]
Those drunken idiots have never want to realize.. they keep scolding me and my father with most vulnerable Tamil Bad words.. [My second pain, that I have never heard of these words in my life history]

after few hours, police arrived the spot, they have taken control over the situation...

they have taken my car and two wheeler,
they have taken my Key, Driving License.. etc whatever I have.. they asked me to come and meet them Saturday Morning...


My journey has stopped, My Mobile was lost, My car was seized.. more than that My Elderly Parents were much upset with this incident.

Legally, I should have filed a case on that two wheeler, and get clearance from RTO and I must clear my titles and leave the place. In order to achieve this in practical government Law and Order, I need to wait for one full month with my car parked near Police station [expected to be with many of missing parts] and I have to spend lot of money to Lawyer and police.

No use, my surroundings and subject matter experts advised me to go with compromise mode...

I agreed...

The next day morning, the boy was missing in GH. hence there is no one to give any case or complaint against me. I was happy that I can leave easily.. but I didn't expect, that the Sub-Inspector was much Greedy.
from Morning 10AM till 3PM he dragged us here and there for Rs.5000 Bribe.

I have no choice, I had given him the money and one full set of all proof copies. and left for the day.

the story is not finshed yet, now coming the Third Pain, I took my car to the garage. asked for estimation, its around Rs.20000, I spoke with Insurance people, they denied to refund without FIR.
I didn't argue, I disconnect the call and asked Garage people to start repair and returned home.

I must be happy to announce myself as the citizen of India.

"India is my country and all Indians are my brothers and sisters. 
I love my country and I am proud of its rich and varied heritage. 
I shall always strive to be worthy of it.
I shall give respect to my parents, teachers and elders and treat everyone with courtesy.
To my country and my people, 
I pledge my devotion.In their well being and prosperity alone, lies my happiness."

I'm known as Outspoken Guy in my surroundings...
F__K Government of India