Monday, February 14, 2011

தொப்பை....... நான் கொஞ்சம் குண்டாயிட்டேன்..

அடக் கடவுளே...
நான் ஏன் இப்படி குண்டாயிட்டேன்?

[டேய் நீ என்னைக்கு ஒல்லியா இருந்தே?]

நான் எப்பவும் போலதான் சாப்புடுறேன்.
காலையில,
  1. கால் லிட்டர் பால், 
  2. ரெண்டு இளநீ, 
  3. நாலு இட்டலி 
  4. ரெண்டே ரெண்டு வடை அவ்வளவுதான். [கொஞ்சம் தவுடு, புண்ணாக்கு?]

அதுக்கு அப்புறம், பதினோரு மணிக்கு சில பல டீ கொஞ்சமா பிஸ்கட்ஸ்

அப்புறம், ஒரு மணிக்கு ஒரே ஒரு புல் மீல்ஸ் [அதுல பத்து பதினாறு ஐடம்ஸ் தான் இருக்கும்]

அதுக்கு அப்புறம், மூனு மணிக்கு சில பல டீ கொஞ்சமா பிஸ்கட்ஸ் 

ஈவினிங் ஸ்நாக்ஸ் எதையும் விரும்பி சாப்புடுறது இல்ல..
நண்பர்கள் கூட இருந்தா மட்டும்,
  1. ரெண்டு பரோடா 
  2. ஒரு பாணி புரி, 
  3. ஒரு பிட்ஸ்சா அவ்வளவுதான்.
[அப்போ நீ விரும்பி சாப்புட்டா எவ்ளோ தள்ளுவே?]

டின்னர் கம்மியா சாப்புடச் சொல்லி டாக்டர் சொல்லி இருக்காரு.
அதனால,
  • நாளே நாலு சப்பாத்தி, 
  • இல்லன்னா, ஒரு பிளேட் சாதம் மட்டும்தான் சாப்புடுறேன்.
[சாப்புடுறதுக்கு முன்னாடியா பின்னாடியா?]

ஆனா பாருங்க... தினமும் என்னை கவனி-ன்னு என்னோட லேப்டாப் நைட் ஷோ-க்கு என்னை கூப்புடுறப்போ,தனியா படம் பார்த்தா நல்லா இருக்காது-ன்னு
  • கால் கிலோ மிக்ஸ்சர் 
  • அரை லிட்டர்  தமஸ்அப் ....
 இவ்ளோதாங்க நான் சாப்புடுறேன்...
[அது என்ன வயிரா இல்ல வண்ணான் தாளியா?]

நாளைக்கு காலைல கண்டிப்பா யோகா செய்வேன்-ன்னு தான் தினமும் படுக்குறேன். ஆனா பாருங்க ஆறு மணி அலாரம் அடிக்கும்போதுதான் தூக்கம் சும்மாசூப்பரா வருது.


ஹ்ம்ம், என்ன பண்றது? எல்லாம் இந்த பாழாப் போன ஐடி படுத்துற பாடு.
[திங்குறது எல்லாம் நீ தின்னுட்டு ஐ டீ ய ஏன்டா குறை சொல்லுற? சப்லா கட்ட வாயா]

மாப்பிள்ளை குண்டா இருக்கார்-ன்னு ஒரு பொண்ணு என்னை வேண்டாம்-ன்னு சொல்லிடுச்சு.
[ஒரு பொண்ணா.....? டேய்.... உங்க அப்பா அம்மா உனக்கு ரெண்டு வருசமா பொண்ணு பாக்குறாங்கடா... ]

நான் இதுக்கு ஒரு முடிவு எடுத்தே ஆகணும்-ன்னு ஹோட்டல் எம் டி ஆர்-க்கு போனேன்.
[யோசிக்கறதுக்கு கூட உனக்கு வேற எந்த இடமும் கிடைக்கலயா பெங்களூர்ல?]



சும்மா உட்காந்துகிட்டே.... இருந்தா யோசனை வராது-ன்னு ஒரு கோபி மன்சொரியன் ஆர்டர் பண்ணினேன்.
[அதுக்கு முன்னாடி என்னென்ன ஆர்டர் பண்ணின?]

கம கம-ன்னு ஒரு கப் நிரியா கொடுத்தான்.
கல்யாணமா இல்ல காளிப்லவரா?-ன்னு யோசிச்சேன்... [த்தூ..]

கல்யாணம்  பண்ணினா காலம் பூரா பிரச்சன..
காலிப்ளவர் தின்னா, நாளைக்கு காலைல மட்டும் பிரச்சன... [தத்துவம்ம்?]

சோ காளிப்லவரே சிறந்தது-ன்னுஒரு காளான் ரோஸ்ட்-ம் சாப்புட்டு,சும்மா ராசா மாதிரி வீட்டுக்கு வந்தேன்..
[இவன எல்லாம் ஏன்டா தெரு நாய்ங்க விட்டு வச்சிருக்கு?]

எப்புடி நம்ம டிசிசன்?
[குரங்கு கைல கிடைச்ச கொய்யாப் பழம் மாதிரி இருக்கு]

சும்மா அதிருதில்ல?

4 comments:

இவன் சிவன் said...

haha...nice one boss... especially 'naalaikku kaalaila mattum prichanao'-intha edam kalakkal...expecting more :)

Unknown said...

Kalyama illa kaliflower ah??? Nalla irukku sir...

Unknown said...

thank you Siva, Prabha
:-)

Gangaram said...

Arumai thala...
romba naal kalichu orupadhvu... Keep rocking..