மிஸ்டர் IT

KINDLY NOTE:
This story is only about my imagination.... all incidents and characters are not real...

if your browser doesn't support Tamil font.
please do the following.

1. Compose a new email
2. Copy and Paste the Blog Content
3. You'd be able to see Tamil letters.

Cheers
-Vivek




Chapter I




காட்சி 1

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ...இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ...
மெல்லிய  ரிங்க்டோன் ஒலித்தது. காலை 5:30 மணி, நம்ம ஹீரோ போனை எடுத்து,
"ஹலோ, யாரு?..
வேற யாரு? நான் தான்.

ஒ நீயா, சொல்லு., என்ன இவ்ளோ சீக்கிரமா போன் பண்ணி இருக்க?
ஒன்னும் இல்ல சந்துரு, எனக்கு கொஞ்சம் அவசரமா ஊருக்கு போகணும். அப்பா நேத்து போன் பண்ணி வர சொன்னாரு..

ஹே., என்ன பேசற நீ? இன்னிக்கு நாம PVR போகலாம்-ன்னு பிளான் பண்ணினோமே? ரொம்ப கஷ்டப் பட்டு டிக்கெட் எல்லாம் அரேஞ் பண்ணினேனே?
சாரி-பா, நான் கண்டிப்பா போயே ஆகணும். அப்பா ரொம்ப முக்கியமான விஷயம்-ன்னு வர சொன்னாரு. நாம அடுத்த வாரம், கண்டிப்பா மைசூர் போலாம்; சரியா? லவ் யு டா கண்ணா; Bye, நான் போயிட்டு வர்றேன், நீ போய் மறுபடியும் முதல்ல இருந்து தூங்கு.. ;-) 

"ஹே..."...
மறுமுனை துண்டிக்கப் பட்டது.

"ச்சே..", "காலங்கதால, மூட அப்செட் பண்ணிட்டாளே?",,,,
மறுபடியும், தூங்க முயற்சிதான், முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தான்.




காட்சி 2

பொண்ணை சீக்கிரம் கூட்டிட்டு வாங்க.......! மாப்பிள்ளை ரொம்ப வெட்கப் படுறாரு இல்ல? ஹா..ஹா.ஹாஹா.... கூட்டத்தில் இருந்து ஒரு பெருசு குரல் கொடுத்தது;

சில பல பர்மாளிடிகள் முடிந்தவுடன், வீணாவும், ரமேஷ்-ம் தனியே கலந்து உரையாட அனுமதிக்கப் பட்டனர்.

ரமேஷ்: ஹாய்.,
வீணா: ஹலோ!

ரமேஷ்: நீங்க பெங்களுருல எங்கே வொர்க் பண்ணிட்டு இருக்கீங்க?
வீணா: மைக்ரோசாப்ட் ல கிலௌட் கம்பியுடிங் கன்சல்டண்டா இருக்கேன்! 

ர: அப்படியா....?.... நீங்க ஹனிவெல்-ல குப்பை கொட்டுறதா உங்க அப்பா சொன்னாரு?..
வீ: தெரியுதுல்ல? அப்புறம் எதுக்கு கேட்குறீங்க?

ர: ஏன் இப்படி கோவப் படுறீங்க?...
வீ: ரமேஷ்...., நான் வீனா உங்க டைம்-அ வேஸ்ட் பண்ண விரும்பல, எனக்கு இந்த ப்ரோபோசல்ல விருப்பம் இல்ல. 
ப்ளீஸ் என்னை இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க!

ர: ஹ்ம்ம்.,......
.................ஓகே. இதுக்கு நீங்க என்னை இவ்ளோ தூரம் வர சொல்லி இருக்க வேண்டியது இல்ல.
வீ: எனக்கே நேத்து இவினிங் தான் விஷயம் தெரியும். அயாம் சாரி.....

ர: ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுங்க. ஏன் உங்களுக்கு இந்த ப்ரோபோசல் பிடிக்கல?
......................
.............................
வீ: எஸ்.நான் வேற ஒருத்தரை விரும்பறேன்.....






காட்சி 3

டேய் மச்சான், ஒரே போர்டா; இந்த வீகென்ட் புல்லா பிளான் பண்ணி வச்சு இருந்தேன், லாஸ்ட் மினிட்ல அவ சொதப்பிட்டாடா! எங்கேயாவது வெளிய போலாமா? மிகுந்த கவலையுடன், சந்துரு அவனுடைய ரூம் மேட்டிடம் கேட்டான்.

விவேக்: சரி விடு மாமே, நீதான் PVR ல டிக்கெட் புக் பண்ணி வச்சிருக்கே இல்ல, நாம அங்கேயே போவோம்! ;-)
சந்துரு: அது ஒன்னும் இல்லடா மச்சான்., விண்ணைத் தாண்டி வருவாயா பார்ட் 2 அவளோட உட்காந்து முதல் தடவையே பார்க்கணும்-ன்னு பிளான்... -என்று தயங்கினான்.

விவேக்: ங்கொய்யாலே., ஏன்டா இப்படி இருக்கறீங்க? அவ உனக்கு என்னிக்காவது ஒரு நாள் பெரிய ஆப்ப்பா வைக்க போறா. பாத்துக்க., அப்புறம் தனியா உட்காந்து புலம்ப போற. பொண்ணுங்கள நம்பக் கூடாது மச்சாn; அவளுங்க தேவைக்கு நம்மள யூஸ் பண்ணிட்டு அப்புறம், டாட்டா காட்டிட்டு போய்டே இருப்பளுக.
சந்துரு: டேய் இல்லைடா மச்சான். நீ சொல்றது எல்லாத்துக்கும் பொருந்தாது. என்னோட வீணா அப்படியெல்லாம் பண்ண மாட்டாள். ஏதோ அவசரமான வேலை. அதனாலதான் இவ்ளோ சீக்கிரமா ஊருக்கு போயிருக்கா; எங்க காதல் தைவீகமானதுடா!... இது எல்லாம் உனக்கு எங்கே புரியப் போகுது? உனக்கும் இந்த மேட்டருக்கும் ரொம்ப தூரம்டா.

விவேக்: நாங்க கொஞ்சம் தூரத்துலேயே நின்னு வேடிக்கை பாக்குறோம். நீங்க கோதாவுல இறங்கி விளையாடுங்க. சரி இவினிங் என்னோட பிரண்ட் வீட்ல ஒரு சின்ன வேலை இருக்கு, அவங்க வீடு ஷிப்ட் பண்றாங்க, அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்-ன்னு இருக்கேன். நீயும் வரியா?
சந்துரு: ஹ்ம்ம்., சரிடா மச்சான். நானும் வர்றேன். பட் வழக்கம் போல எல்லா வேலையும் என் தலையில கட்டிடாதே!

விவேக்: ஹா ஹா .... டேய் டம்மி பிஸு, உனக்கு எதுக்குடா இவ்ளோ பில்டப்பு? சரி வா, இப்போதைக்கு, ராபின்ஹூட் படம் டவுன்லோட் ஆயிடுச்சு., அதை போய் பார்க்கலாம்.






காட்சி 4


என்னை பந்தாட பிறந்தவளே.... சன் ம்யுசிக்-கில் ஓடிக்கொண்டு இருந்தது. பார்பதற்கும், கேட்பதற்கும் யாருமில்லை. அனைவரும், மொட்டை மாடியில் வீணா-விடம் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்பா சொன்னார், உனக்கு என்ன ஆச்சும்மா? ஏன் அந்த பையன வேண்டாம்-ன்னு சொல்லிட்டே?

அம்மா: பொண்ணா, லட்சணமா, வீட்ல இருன்னு சொன்னா கேட்கணும்., அதை விட்டுட்டு, நானும் படிக்கறேன், வேலைக்கு போய் கிழிக்கறேன்..-ன்னு ஆடிகிட்டு போனா இப்படிதான் நம்ம பேச்சை கேட்க மாட்டாள்.

அக்கா: ஹே வீணா? என்னடி ஆச்சு உனக்கு? இந்த பையனுக்கு என்னடி குறைச்சல்? மாமாவ விட நல்லா ஸ்மார்டா இருக்கான். US ல வேலைல இருக்கான். உன்னையும் அங்கே கூட்டிட்டு போறேன்-ன்னு சொல்றான். இது உனக்கு நல்ல சான்ஸ் தானே, அப்பறம் ஏன் வேண்டாம்-ன்னு சொல்றே?

வீணா: ப்ளீஸ் என்னை கொஞ்சம் தனியா விடுங்க. எனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? என்னால யாரோ ஒருத்தரை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. பார்த்து பேசி பழகினவரோட தான் என்னால மேனேஜ் பண்ண முடியும். .....
உங்ககிட்டே நானே ரொம்ப நாளா சொல்லணும்-ன்னு இருந்தேன். நான்  ஒருத்தரை லவ் பண்றேன். அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கபோறேன்.

வீணா சொல்லி முடிக்கும் முன், ..பளார்.... என்று அறை விழுந்தது.  

எங்கிருந்து வந்ததுடி உனக்கு இவ்ளோ தைர்யம்? நாங்க உன்னை இப்படிதான் வளர்த்தோமா? என்று அழுதுகொண்டே அம்மா கேட்டாள்








காட்சி 5

சில நேரங்களில்., வாழ்கை நாம் நினைப்பதைவிட விசித்திரமாக இருக்கிறது..... 
இவ்வளவு நாளும் கண்டிப்பான ஆனால் பாசம் நிறைந்த அப்பா இப்படி எல்லாம் இருப்பாரா? -என்ற கேள்வி நம் கதாநாயகி வீணா-வின் மனதில் எழுந்தது.

என்றும் இல்லாமல், அப்பா தன்னை தனியாக அழைத்துக்கொண்டு வாக்கிங் புறப்பட்டார், கால் மணி நேரமாகியும், எதுவும் பேசாமல் மௌனமாகவே நடந்தார்.
          அம்மா, தன்னை இனிமேல் வேலைக்கு போகவேண்டாமென்று கண்டிப்பாக சொன்னார். அனால் அப்பா அதற்க்கும் எந்த மறுப்பும் சொல்லவில்லை...
           ஏகப்பட்ட சிந்தனைகள் வீணாவின் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது..... ஒருவேளை அப்பா நம்ம லவ்-க்குக் ஓகே சொல்லலாம்-ன்னு இப்படி தனியா கூட்டிட்டு வந்து இருக்காரோ?... இல்லை எல்லா அப்பாக்களை போலவும், இவரும் ப்ரைன்வாஷ் பண்ண போறாரோ?......

என்ன அம்மா எதுவுமே பேசாம வர்றே? -அப்பா மௌனத்தை உடைத்தார்.
ஒண்ணுமில்லேப்பா., 

எனக்கு உன்னோட மனசு புரியுதும்மா!.... உன்கிட்டே கேட்காம மாப்பிள்ளை வீட்டுக் காரங்களை வரசொன்னது., என்னோட தப்புதான். 
நான் உன்கிட்டே ஒரு வார்த்தை கேட்கலாம்-ன்னு சொன்னேன்,
உங்க அம்மாவைப் பத்திதான் உனக்கு தெரியுமே............

ரொம்ப நல்ல இடமா இருக்கு., மாப்பிள்ளை US போறதுக்குள்ளே, நம்ம பொண்ணை பார்த்துட்டா., அப்புறம் எவ்ளோ சீக்கிரம் கல்யாணத்த முடிக்க முடியுமோ., அவ்ளோ சீக்கிரம் முடிச்சுடலாம்-ன்னு என் வாய அடைசுட்டாள்..... 
கடந்த ரெண்டு மாசமா அவளுக்கு உன்மேல ஒரே சந்தேகமா இருந்திருக்கு.....

அப்பா!.... (இதுக்கும் மேல அப்பாவை மொக்கை போடவைக்க வீணா விரும்பவில்லை)
சுத்தி வளைச்சு பேசாம நேர விஷயத்துக்கு வாங்கப்பா!
............
நீ யாரையோ ஒரு பையன விரும்பறது., உனக்கு வேணும்ன்னா புடிச்சு இருக்கலாம்.....
ஆனா எங்களுக்கு இதுல உடன்பாடு இல்லை. நீ படிச்ச பொண்ணு, சொன்னா புரிஞ்சுக்குவே!

என்ன சொல்லப் போறீங்க?

நீ இந்த வயசுல எடுக்கற முடிவு உன் வாழ்கையோட இறுதி வரைக்கும் உன்னை பாதிக்கும்... 

உனக்கு அந்த பையன புடிச்சு இருக்கறதுக்கு 1000 காரணம் இருக்கலாம். ஆனா, நாளைக்கு அதே பையன புடிக்காம போறதுக்கு 10000 காரணம் வரும். 
உனக்கு இன்னும் ஒரு மாசம் டைம் தர்றேன். நல்லா யோசிச்சு உன்னோட முடிவை என்கிட்டே சொல்லு. 
அப்புறம் அந்த பையன நான் பார்த்து பேசுறேன். அதுக்கு அப்புறம் என்னோட முடிவை சொல்லுறேன்.





காட்சி 6

மச்சான், நான் எதிர்பார்ததுதாண்டா...
என்னடா? ஹவுஸ் ஓனர், மண்டைய போட்டுட்டானா?

இல்லைடா...அவளை பெண் பார்க்க யாரோ வந்து இருக்காங்க.
ஒஹோ..ஓ.,..டேய், கடவுளா பார்த்து உனக்கு ஒரு நல்ல சான்ஸ் கொடுத்து இருக்காரு........ தலை முழுகிடு. உங்க வீட்ல உனக்கும் ஒரு சூப்பர் பிகுரா பார்பாங்க.
 
போடா... இவனே.. என்னோட நிலமைய., போயும் போயும் உன்கிட்டே சொன்னேன் பாரு என்னை சொல்லணும்..... நீ ஏன்டா இப்படி இருக்கே? வீணா உனக்கு என்னடா செஞ்சா?.... உனக்கு ஏன்டா அவளை பிடிக்க மாட்டேங்குது?.... 
நான் எப்போ அவளைப் பத்தி பேசினாலும், நீ ஏன் அதுக்கு எதிர்மறையாவே பேசுறே?

ஹா ஹா ஹா .... உள்ளதைச் சொல்வார், நல்லதைச் செய்வார்... என்றைக்கும் உள்ளது அமைதி....

......
சந்துரு...., உனக்கு அவளை ரொம்ப பிடிச்சு இருக்கு. 
நான் அவளைப் பத்தி மட்டும் இல்ல, எல்லாத்தைப் பதியும் ஒரே மாதிரிதான் பேசுவேன். 
ஆனா உனக்கு நான் அவளைப் பத்தி மட்டும் பேசுறது எதிர்மறையாத்தான் தெரியும். 

டேய், உன்னோட பிலாசபி இப்போ தேவைஇல்ல, எனக்கு இப்போ என்ன பண்றதுன்னே தெரியல. அவளும் திரும்ப வரதுக்கு இன்னும் 2 நாள் ஆகும். அவங்க வீட்ல என்ன செய்யப் போறாங்களோ தெரியல....  
பொறு., பொறு... பொறுத்தார் புவியாள்வார்; பொறுக்காதவர் காடாள்வார். அவள் ஒன்னும் சின்ன பாப்பா இல்ல, அவளை பொண்ணு பார்க்க வந்தவனும் உன்னை மாதிரி அரை லூசா இருக்க மாட்டான்., பார்த்தவுடனே ஓகே சொல்றதுக்கு...

டேய்... வேணாம்.. இது என்னோட வாழ்க்கை பிரச்னை. விளையாடாத....

சும்மா இரு மாமே... அவ உன் கண்ணுக்கு வேணும்னா கிளியோபாட்ரா மாதிரி இருக்கலாம்..... எங்களுக்கு எல்லாம் அது ஒரு டெலி சீரியல் சப்பை பிகருதான்.

ஹையோ., சரி அவ, அப்படியே இருந்துட்டு போகட்டும் ஆனா, அதை என்கிட்டே சொல்லாதே...

ஹ்ம்ம், ரொம்ப சூடாகதேடா.... அப்புறம் உனக்கு  BP , சுகர்-ன்னு  வந்தா, வீணாவ வச்சு என்னால எல்லாம் காப்பாத்த முடியாது... சிரித்துக்கொண்டே கூறினான்...
சந்துரு விளையாட்டாக, ஆனால் வேகமாக விவேக்கை அடிக்க வந்தான். விவேக் லேசாக நழுவினாலும், அடி பலமாகவே விழுந்தது...  பின்னர் சில பல அடி உதைகள்....
எத்தனை நடந்தாலும் இருவரும் சிரித்துக் கொண்டே இருந்தனர். நடுவில் விவேக் வேண்டுமென்றே, வீணாவைப் பற்றி கமெண்ட் அடித்தான்..
நல்ல நண்பர்கள், சற்று நேரம் சிரித்துக் கொண்டே சண்டை போட்டனர்.

விவேக் எவ்வளவுதான் விளையாட்டாக இருந்தாலும், சந்துருவுக்கு அவன் என்றைக்கும் நல்லதே நினைப்பவன். இது சந்ருவுக்கும் தெரியும்.





            இவர்கள் மூவரும் (வீணா, விவேக், சந்துரு ) ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிபவர்கள். 

வீணா, ஒரு அமைதியாக காட்சி அளிக்கும் ஹோம்லி பிகர்.
சந்துருவும் நம்ம பக்கத்துக்கு வீட்டுப் பையனை போல ஒரு நார்மலான வாலிபன்.
விவேக், நத்திங் பட், ஒரு சின்ன காமெடி பீஸ்.
சந்துருவும் வீணாவும் ஒரே டொமைன்ல இருக்காங்க. அதனால பம்சிக் பம்சிக் ஈசியா நடந்துச்சு.
விவேக்-கோடா டொமைன்ல பிகர்-ன்னு சொல்லிக்கறதுக்கு யாருமே இல்ல. 
இவங்க எல்லாரும் சேர்ந்து அடிக்கற கூத்தை இனிமேல பார்க்கலாம்.
இத்துடன் என்னுடைய கதையின் முன்னுரையை முடிக்குறேன். (ஆரம்பிக்குறேன்)





Chapter II






கண்ணோடு கண்ணோடு வந்த காதல்..
காதோடு, காதோடு பேசும் காதல்...
முணுமுணுத்த குரலில், பாடிக்கொண்டே சந்துரு படியேறி அவன் ரூமிற்கு வந்தான்.

மேலே வரும்போது, லேசான பாட்டுச் சத்தம் கேட்டது.
வந்து கதவைத் திறந்தவுடன், காதுகள் இரண்டும் செவிடுபடும்படி ரணகளமான ஒலியில் உள்ளே விவேக் பாட்டின் மெட்டிற்கேற்ப, ஆடிக்கொண்டு இருந்தான்.
சந்துருவைப் பார்த்தவுடன்., ஆடலுடன், பாடலையும் சேர்த்தான்.
......
"பந்தாட்டம் உலகம் வச்சான்., ராட்டினம்போல்  சுழல வச்சான், ஏற வச்சான், இறங்க வச்சான், சுழலவிட்டு மயங்க விட்டான்..."

சந்துரு உள்ளே வந்தவுடன், ஸ்பீக்கர்- வோல்யுமைக் குறைத்தான்.

ஏன்டா, கொஞ்சம் சௌண்ட கம்மியாதான் வச்சு கேட்குறது?
ஒ.. அப்படியா? சரி! நீயும் கொஞ்சம்  கம்மியாதான் வீணாவ லவ் பண்றது?

அயோ... உனக்கு எது எதை, எதுகூட கம்பேர் பண்றது-ன்னே தெரியாதா?...
ஏய்.,... என்னா தொகுர்ரே? உனக்கு வீணவைப் பிடிக்கும், எனக்கு கானாவைப் பிடிக்கும்... எங்க பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு, ஒரு சொறிநாய புடிக்கும்... எல்லாமே ஒன்னுதான்....


ஐயோ... சரி, ஒத்துக்கறேன். ஆளை விடு.. நல்ல மூட்ல இருக்கேன், கெடுத்துடாதே... வீணா-கிட்டே இருந்து இப்போதான் போன் வந்தது. அவள் வீட்டை விட்டு கிளம்பிட்டாளாம்...

டேய், என்னடா சொல்றே? ஓடி போக போறீங்களா?
ஐயோ.. இல்லைடா., அவள் வீட்ல இருக்கும்போது போன் பேச முடியாது. கெடுபிடி ஜாஸ்தி. வீட்டை விட்டு, பெங்களுருக்கு பஸ் ஏறினவுடனே, எனக்கு கால் பண்ணினாள்....

த்து., இதெல்லாம் ஒரு பொழப்பா?...
நீயும் லவ் பண்ணி பார்ரீ., அப்போ தெரியும்.

தெரிஞ்சே எவனாவது நாய் வாலை மிதிப்பானா? அப்படியே., மிதிக்கறதுக்கு, நான் என்ன உன்னை மாதிரி கூமட்டையா?
சரி, போதும் நிறுத்து.,  உன்கூட அர்கியு பண்ற மூட்ல நான் இல்ல,  நாளைனிக்கு அவளோட பர்த்டே., அவளுக்கு மறக்கவே முடியாத மாதிரி ஒரு நல்ல கிப்டா கொடுக்கலாம்-ன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன். உனக்கு எதாவது நல்ல ஐடியா இருந்தா சொல்லு.

-விவேக் சற்று நேரம் யோசனை செய்வது போல் பாவனை செய்து விட்டு, சந்துருவின் காதில் ஏதோ சொன்னான்.

அடச்சீ.. நீயெல்லாம் ஒரு பிரண்டாடா?.. எப்படிடா., உனக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் ஐடியா வருது? வேஸ்ட் பெல்லோ...

விவேக் சிரித்துக் கொண்டே இருந்தான்......

ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை, சந்துரு  பொருமி, பொருமி திட்டினான்...
அப்படி இவன் என்னதான் காதில் சொல்லி இருப்பான்?
அது பின் வருமாறு...
[டேய், சும்மா காசை வேஸ்ட் பண்ணி ஏதோ ஒரு கிப்ட் வாங்கி கொடுத்தி-ன்னா அவள் அதை ரெண்டு மூனு வாரத்துல மறந்துடுவா, லைப் டைம் புல்லா மறக்காம இருக்கணும்-ன்னா உன் பேர் சொல்ற மாதிரி ஒரு குழந்தைய கிப்டா கொடுத்துடு...]






தன்னுடைய PG -க்கு வந்தவுடன் முதல் வேலையாக, வார்டனிடம் சென்று, தனக்கு தகவல் எதாவது இருக்கிறதா? தன்னைத்தேடி யாரவது வந்தார்களா? என்று கேட்டாள்.

ஆமா, ரிலையன்ஸ்-ல இருந்து, போன் பில் கட்டச் சொல்லி 2 முறை ஒரு ஆள் வந்தான்.., நீ வந்தா உன்கிட்டே கொடுக்கச் சொல்லி பில்லக் கொடுத்துட்டுப் போனான். இந்தா...
"எனக்கு வேண்டாம்"... என்று கூறிவிட்டு, வீணா சட சடவென்று தனது ரூமிற்குள் சென்றாள். அவசர, அவசரமாக கிளம்பி ஆபிசிற்க்குச் சென்றாள்.

நேற்று இரவு சந்துருவுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, இணைப்பு துண்டிக்கப் பட்டது. மறுமுறை ட்ரை செய்தபொழுது,  Not Reachable -ன்னு சொன்னுச்சு. விடிய விடிய நிறைய முறை ட்ரை பண்ணினாள்., ஒரே ரெஸ்பான்ஸ்...

ஆபிஸ் போய் சேர்ந்தவுடன், முதலில் சந்துருவின் கியுபிக்களுக்குச் சென்றாள். ஆளைக் காணோம். காபிடேரியா சென்றாள். அங்கேயும் தேடித் பார்த்தாள், ஆளைக்காணோம்.

ஹெஹெஹ்ஹேஏய்...  ஹா ஹா... பலமான சிரிப்புச் சத்தம் ஒரு கூட்டத்தில் இருந்து வந்தது.
வேற யாரு? நம்ம விவேக்தான் வழக்கம்போல ஒரு அப்பாவிய புடிச்சு ஓட்டிட்டு இருந்தான்... நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
..... அப்புறம் என்னாச்சுன்ன., இவனும் அந்த பொண்ணு பின்னாடியே போனான். கடைசிலதான் தெரிஞ்சது, அவளுக்கு மாறு-கண்ணு-ன்னு
அப்புறம், பையன் கடுப்பாயிட்டான்....

மீண்டும் அனைவரும் சிரித்தனர்...

ஹாய் விவேக்., ஒரு இனிமையான குரல் கேட்டுத் திரும்பினான்.
ஹே வீணா, எப்படி இருக்கே? கொஞ்ச நாளா ஆளைக் காணோம்?
ஒன்னும் இல்ல ஊருக்குப் போயிருந்தேன்....
ஒ.. ok..
ஓகே கைஸ், நாம மறுபடியும் லஞ்ச்-ல மீட் பண்ணலாம். பாய்...... என்று கூறிவிட்டு, கூட்டத்தில் இருந்து வீணாவுடன் சென்றான்.
கொஞ்ச தூரம் சென்றவுடன்,
"பிகரப் பார்த்தவுடன் பிரண்ட்ச கழட்டி விட்டுட்டு போறான் பாரு"..  என்ற ஒரு மெல்லிய குரல் கேட்டது. பின்னர், லேசான சிரிப்புச் சத்தம்.
....................
எதாவது சாப்புடுறியா வீணா?...
இல்ல எதுவும் வேணாம்..., சந்துரு எங்கே?.. லாஸ்ட் நைட்-ல இருந்து மொபைல்  Not Reachable ல இருக்கு. காலைல அவனோட ப்ளேசுக்கு  போய்ப்பார்தேன். அங்கேயும் அவன் இல்ல...

ஒ அப்படியா... என்று கூறிவிட்டு, ஒரு சின்ன நகைச்சுவை குறும்புடன், தனது சட்டை பாக்கெட்டை திறந்து பார்த்து, "இங்கேயும் இல்ல்லையே வீணா" என்றான்.
ஹே., காமெடி பண்ணாதே., அவன் எங்கே-ன்னு சொல்லு. நாங்க லாஸ்டா மீட் பண்ணி 4 நாள் ஆகுது. சினுங்கலுடன் கேட்டாள்.
........
உனக்கு விஷயமே தெரியாதா?
வீணாவின் முகத்தில், திடீரென்று பதட்டம் பரவியது...
இல்லை. என்ன விஷயம்? ஏன் என்ன ஆச்சு? என்று பரபரப்பாக கேட்டாள்.

நீ விவரம் தெரிஞ்ச பொண்ணு-ன்னு நினைச்சேன், ஆனா இப்படி ரொம்ப வெகுளியா இருக்கியே வீணா? 
ஹே., ப்ளீஸ் டென்ஷன் படுத்தாதே.., சந்துரு-க்கு என்ன ஆச்சுன்னு சொல்லு?

நான் சொல்லிடுவேன்., அனால், அதைத் தாங்கக் கூடிய சக்தியோ, மனநிலைலயோ உனக்கு இல்ல-ன்னு நினைக்குறேன்.கிட்டத்தட்ட வீணா அழும் நிலைக்கு வந்துவிட்டாள். நமக்கு சளி பிடித்தால், எப்படி பேசுவோமோ அப்படி கேட்டாள்.
விவேக், ப்ளீஸ் சந்துரு-க்கு என்ன ஆச்சு-ன்னு சொல்லு? அவன் இப்போ எங்கே இருக்கான்?
......
ஹே வீணா, உன்ன எங்கெல்லாம் தேடுறது? - திடீரென்று சந்துருவின் குரல் கேட்டதும், சட்டென்று திரும்பிப் பார்த்தாள். வீணாவின் முகம் மலர்ந்தது.





விவேக்: ஓகே கைஸ் (Guys)., எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு., நான் கிளம்புறேன்... பாய்!வீணா: ஹே., ஒரு நிமிஷம் இரு.
-சந்துருவின் கன்னத்தில் லேசான அறை விழுந்தது.

வீணா: எங்கே போய் தொலைஞ்சே? உனக்கு என்ன ஆச்சு? நேத்து நைட்-ல இருந்து 10 நிமிஷத்துக்கு ஒரு முறை உனக்கு ட்ரை பண்ணிகிட்டே இருக்கேன். இன்னும்  Not Reachable- லாவே இருக்கு?

சந்துரு: ஒண்ணுமில்லைடா செல்லம். நேத்து நைட் உன்கிட்டே பேசிட்டு இருந்தேனா, அப்போ நான் வெளில இருந்து வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். 
வர வழியில எவனோ ஒருதான், டூ வீலர் ல இருந்தபடியே, என்னோட மொபைல பிடுங்கி, திருடிட்டு போய்ட்டான்... அதனாலதான், நாட் ரீச்சபிள்......
அது விஷயமாத்தான், போலீஸ் ஸ்டேஷன் போயி, கம்ப்ளைன்ட் பண்ணிட்டு, அப்புறம் டம்மி சிம்-க்கு அப்ளை பண்ணிட்டு வர்றேன்..


விவேக்: மச்சான், எனக்கு ஒரு இம்பார்டன்ட் மீட்டிங் இருக்குடா, நாம அப்புறம் மீட் பண்ணலாம். பாய்.... வரட்டா?
சந்துரு விவேக்-கின் கையை பிடித்து நிறுத்தினான்.

ஆமா, இது எல்லாத்தையும், நான் முதல் வேலையா இவள் வந்தவுடனே, இவகிட்டே சொல்லச் சொன்னனே, நீ சொன்னியா?

ஆமாடா மச்சான், சொல்லிட்டே இருந்தேன். அதுக்குள்ளே நீயே வந்துட்டே.
- என்று கூறி மர்மமான புன்னகையுடன் சிரித்தான்.

"கொஞ்ச நேரத்துக்குள்ள, என்னை கதி கலங்க வச்சுட்டான்" என்றவாறு வீணா, அவள் கையில் வைத்திருந்த மணி பர்சினால் விவேக்கை அடிக்க முற்பட்டாள்.

ஓரிரண்டு கண்ணீர்த்துளிகளை வெளியேற்றும் அளவிற்கு வீணாவின் கண்கள் நிறைந்தது, சந்துருவைக் கண்ட மகிழ்ச்சியினால் கிடைத்த நிம்மதி ஒன்று; தான் அழப் போகிறோமே என்ற வெட்கம் ஒன்று., பின்னர், நடந்ததை ஒருவாறு சந்துருவிடம் கூறினாள்.,
ஏன்டா உனக்கு எதெதுல விளையாடுறது-ன்னு ஒரு விவஸ்தையே கிடையாதா?இவன் எப்போமே இப்படித்தான் வீணா, சீரியஸ்நெஸ் கொஞ்சம் கூட கிடையாது.

வீ: நீ மட்டும் அப்போ வரல-ன்னா..
வி: உன்னை கண்டிப்பா அழ வச்சு இருப்பேன். என்று கூறி கண்ணடித்தான்.
மூவரும் சிரித்தனர்...


வி: சரி., ஓடிப்போன உன்னோட ஆளு திரும்பி வந்திருக்கா... டிரீட் கொடு...
வீணாவும், சந்துருவும், என்ன சொல்வதென்று திகைத்தனர்.
விவேக் அந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு எஸ் ஆனான்.






அவள் அப்படியென்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை..
-சந்துரு, தன்னுடைய கியூபில் உட்காந்து பாடிக்கொண்டிருந்தான்.... சாரி வேலை செய்து கொண்டிருந்தான்.
அவள் செருப்புக்கு கூட பெயருமில்லை,.,
அடித்தால் கூட வலிக்கவில்லை..
என்று விவேக் இடைமறித்தான்..

வாடா., வெண்ணைவெட்டி., உன் மேனேஜர் ஊர்ல இல்லன்னு கேள்விப் பட்டேன். அதனாலதான் ஜாலியா சுத்திட்டு இருக்கியா?

எவனெவனுக்கு எல்லாமோ   ஸ்வைன் ஃப்ளு வருது, என் மேனேஜருக்கு வர மாட்டேன்குதுதேடா?...சரி., இந்த வாரம், நம்ம பசங்க எல்லாம் KITE படத்துக்கு போலாம்-ன்னு கூப்டாங்க., நீயும் வரியா?

ஹ்ம்ம், இல்லேடா.. I'm sorry,..... நாங்க விண்ணைத் தாண்டி வருவாயா part 2 போறோம்.

ஏன் சூரியனைத் தாண்டி வர வேண்டியது தானே?.... ஒரு நாய் உயரத்தைக்கூட நீங்க தாண்ட மாட்டீங்க, விண்ணைத்தாண்டி வரப் போறீங்களாக்கும்?
நாங்க சூரியனைத் தாண்டி இல்ல, விண்வெளியவே தாண்டி வருவோம்.

பார்த்துடா, தடுக்கி விழுந்துடாதே., அவளுக்கு கை கொடுக்க 1000 பேர் வருவாங்க. உனக்கு நீயேதான் கை கொடுத்துக்கனும், ஏன்னா, நான் KITE படம் பார்த்துட்டு இருப்பேன். 

-என்னை ஏதோ செய்து விட்டாள்... என்ற பாட்டை மெதுவாக சீக்கி அடித்துக் கொண்டே விவேக் சந்துருவை விட்டு நகர்ந்தான்....

                 ஒருவன் காதலில் இருக்கும் பொழுது, அவன் தனது சொந்த மகிழ்ச்சிக்காக, ஒரு சில தியாகங்களை செய்ய வேண்டி இருக்கின்றது. அது அவனது சொந்த மற்றும் பொது வாழ்கையை பாதிகின்றது. இது நமது பாத்திரங்களுக்கு பின்னாளில் புரியவரும். நாம் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டியது இல்லை ;-)

காதல்-ன்றது... (டேய்., போதும் நிறுத்து. படிக்கறவங்க பாவம்...)
இல்ல நான் என்ன சொல்ல வர்றேன்னா., (மதியான சாப்பாட்டுல உப்பு இல்லை-ன்னு சொல்றியா?)

ஒரு சிலருக்கு அது செடி மாதிரி. ( உன்னை மாதிரி நாயிங்க வந்து காலை தூக்கி ஒன்னுக்கு விடாம இருந்தா சரி)

ஒரு சிலருக்கு அது பூ மாதிரி. (குரங்கு கைல கிடைச்ச பூ மாதிரி... யாராவது, இவனை தூக்குங்கடா. தொல்லை தாங்க முடியல., கையில லேப்டாப் இருக்கு-ன்னு எழுதிகிட்டே இருக்குறான்.)







துப்பட்டா எதுக்கு போடுராளுங்கன்னு தெரியல, சின்ன குழந்தங்க மாதிரி கழுத்து வரைக்கும் இறுக்கி, கடமைக்குன்னு போட்டுட்டு திரியராளுங்க....-அலுத்துக் கொண்டே ரூமிக்கு உள்ளே வந்தான் விவேக்.
ஏன்டா பொலம்புற? இதை நீ இன்னைக்குதான் பாக்குறியா? -என்று  சந்துரு மறுமொழி கூறினான்.

இல்லைடா. அவள் என்னைக்கும் மாடர்னா வந்தது கிடையாது. இன்னிக்கு ஏதோ திடீர்-ன்னு டைட்ஸ் சுடிதார் போட்டுட்டு வந்து இருந்தாள்.
யார்டா?

அவதாண்டா!அவள்-ன்னா? யாரு?

சொன்னா கோவிச்சுக்க மாட்டியே? என்று கூறி கண்ணடித்தான்.
வேணாம் சொல்லாதே., நீ என்ன சொல்லுவே-ன்னு எனக்கு தெரியும்...... ஆமா., வீணா இன்னைக்கு நார்மலாதான  டிரஸ் பண்ணிட்டு வந்து இருந்தாள்,...நீ யாரைப் பத்தி சொல்லுறே..
அவதாண்டா. நம்ம தக்காளி.அவளா?

ஆமாடா...
ஒஹோ.. ரூட்டு அப்படி போகுதா? நீயும் கடைசில விழுந்துட்டியா?.... ஒரே குஷியாக கேட்டான்.
-கொஞ்ச நேரம் லேசான புன்னகை புரிந்துவிட்டு, விவேக் பலமாக சிரிக்க ஆரம்பித்தான்.

டேய் லூசு, நான் அவள் ஒருத்தியப் பத்தி மட்டும்தான் உன்கிட்டே இதுவரைக்கும் பேசி இருக்கேன். அதனால என்னையும் உன் லிஸ்ட் ல சேர்துடாதே!  அழகு எங்கு இருந்தாலும் அதை ரசிப்பவன் நான்.

ஹா ஹா... ஹா...உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா? கபடேரியா கேஷ் கவுன்டருல நிக்குற பொண்ணு-கிட்டேயே காமெடி பண்ணுறேன்ற பேருல, அரை மணி நேரம் கடலை போடுற ஆளு நீ?....
ஹா ஹா ஹா .... டேய் அது எல்லாத்தையும் நீ எப்போடா பார்த்தே? உனக்கு வீணா பக்கத்துல இருந்தா, உலகம் சுத்துறதே தெரியாதேடா?

என்னை, அண்டர் எஸ்டிமேட் பண்ணாதே மாமு....
ஹ்ம்ம், இருக்கட்டும் இருக்கட்டும்...

சரி அதை விடு, தக்காளி மேட்டருக்கு  வருவோம். எப்போ ப்ரொபோஸ் பண்ணப் போற?............
இல்லடா மச்சான். இதெல்லாம், நமக்கு ஒத்து வராது. உன்னை மாதிரி மொக்கை போடுற பசங்களுக்குத்தான் வரும். நம்மளுக்கு எல்லாம், மதுரை மரிகொழுந்து, குண்டு மல்லி, அட் லீஸ்ட் தமிழ் டீச்சர் கேரக்டர் தான் ஒத்து வரும்.....

ஹ்ம்ம்., நீயும் என்ஜாய் பண்ண மாட்டே, மத்தவங்களையும் பண்ண விட மாட்டே.
நான் என்ன உன் கைய புடிசுகிட்டு, வீணாவ லவ் பண்ணாதேன்-ன்னு சொன்னேனா? வேலையைப் பாருடா.... வந்துட்டான் வடிவேலு மாதிரி...


அப்போ, நீ எங்க காதலுக்கு தடையா இருக்கலை-ன்னு சொல்ல வர்றே?
போடா மடையா., நான் என்னைக்குமே தடையா இருந்தது இல்ல, ஆனா., வீணா, வீணா-ன்னு நீ வீணாப் போறதைதான்  தடுக்க விரும்புறேன்....

டேய்., அவள் இதுவரைக்கும் எனக்கு எந்த கெடுதலும் செஞ்சது இல்லேடா. அவளோட பிரண்ட்ஷிப் கிடைச்சதுனாலதான், என்னோட காரியர்-ல நல்லா இம்ப்ருவ்மென்ட் தெரியுது.... அவளோட காதல் எனக்கு கிடைச்ச ஒரு நல்ல கிப்ட்-ன்னுதான் நினைக்குறேன்.

........
ஹ்ம்ம். எப்படியோ நல்லா இருந்தா சரி..


விவேக்-க்கு நம்ம தக்காளி மாதிரி நிறைய பொண்ணுங்களை பிடிக்கும். ஆனா, அதை வெளிக் காட்டிக்க மாட்டான். சான்ஸ் கிடைச்சா, கடலை போட்டுட்டு, பாற்குரவங்களுக்கெல்லாம் எரிச்சல் கிளப்புவான். அவனோட கேரக்டர் அப்படி. நம்மால அவன திருத்த முடியாது.

சந்துருவும் விவேக்-கும் ஒன்னா வேலைக்கு சேர்ந்தாங்க. படிச்சது, பொறந்தது எல்லாம் வேற வேற ஊர்ல. கம்பெனி-க்கு பக்கத்துலேயே ஒரு 1 BHK வாடகைக்கு புடிச்சு, கடந்த 3 வருஷமா தங்கி இருக்குறாங்க. 

சந்துருவோட வாழ்க்கைல வீணா வந்து கிட்டத்தட்ட, ஒரு ரெண்டு வருஷம் ஆயிருக்கும்.  வீணாவோட பிரண்ட்ஸ் எல்லாருமே அவளோட சொந்த ஊர்லையே இருக்காங்க. நடுவுல கிடைச்ச பிரண்ட்ஸ்-ங்க எல்லாம் சென்னைலயே இருந்தாங்க. 

இவள் கொழுப்பெடுத்து போயி, பெங்களுரு-க்கு வேலைக்கு வந்தாள். அது ஒரு பெரிய கதை., அதை அப்புறம் சொல்லுறேன்.
  
இங்கே வந்ததுல இருந்து. ஆதி முதல் அந்தம் வரை சந்துரு, சந்துரு, சந்துரு... PG - லயும் சரி, கம்பெனி-லயும் சரி கொஞ்சம் பிரண்ட்ஸ் இருந்தாங்க.ஆனால், அவ்வளவு க்ளோஸ் இல்லே.
(டேய் கதை-க்கு வாடா, இப்போ எதுக்கு இதெல்லாம் தேவை-இல்லாம சொல்லிட்டு இருக்கே?)

ஒ ., ஓகே.. அயம் சாரி. லெட்ஸ் கம் பேக் டு த பாயிண்ட்.
வீணா, வழக்கம் போல் ஆபீஸ் முடிந்து, வீட்டுக்கு வந்தாள். சாரி PG க்கு வந்தாள். (கன்பியுஸ் பண்ட்ரானுன்கடா) வந்ததும், வராததும், அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது...





Chapter III




ஹே ஜெர்சி... எப்போ வந்தே?
-வீணா ஓடி வந்து கட்டி அணைத்தாள்.
ஹ்ம்ம்., நாங்க எல்லாம் இருக்கறது உனக்கு ஞாபகம் இருக்கா ?., இல்ல சந்துரு பக்கத்துல இருக்கறதால, வேற உலகத்துக்கே போய்டியா?...

ஹே அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல..., ஏன் ஜெர்சி ..ஒரு போன் பண்ணியிருக்கக் கூடாதா? நானே வந்து உன்னை ரிசீவ் பண்ணியிருப்பேனே?
இல்லப்பா, எனக்குதான் இந்த இடம் நல்லா
தெரியுமே... அதுதான் ஒரு surprise கொடுக்கலாம்-ன்னு வந்தேன்.
 
-வீணாவின் முந்தைய கலிக் & ரூம் மேட் ஜெர்சி. வீணாவின் முதல் கம்பெனி சென்னையில் அவளை வேலைக்கு அமர்த்தியது,
ஒரு வருடத்திற்கும் மேல் அங்கு இருந்தாள். அப்போது அவளுக்குக் கிடைத்த ஒரு நல்ல தோழிதான் இந்த ஜெர்சி.
ஜெர்சி, ஒரு சராசரியான சிட்டி கேர்ள், எந்த விஷயத்தையும் பிரக்டிகலா பாக்குற பொண்ணு. சுருக்கமா சொன்னா "ஜிகிடி".

வந்த கதை, போன கதை, சொந்தக் கதை, சோகக்கதை, எல்லா கதைகளையும் விடிய விடிய பேசினர்.
வீணாவுக்கு, அவள் வயதை ஒத்த நெருக்கமான, அந்தரங்க சினேகிதி(கள்) யாரும் பெங்களூரில் இல்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஜெர்சியை சந்தித்தால், ரொம்ப நேரம் தங்களது அந்தரங்கங்களை பரிமாறிக் கொண்டனர்.
காதல் செய்பவர்கள், அவர்கள் காதலைப் பற்றி யாரிடமாவது சொல்வது இயல்புதானே?

(டேய், மனசுல என்ன கல்கி-ன்னு நெனப்பா? மொத கதைலயே இவ்ளோ பில்டப்பு எதுக்குடா? மூடிட்டு உன்னோட ஸ்டைல்ல எழுது....)

தன்னை US மாப்பிள்ளை பார்க்க வந்தது, அதை நிராகரித்தது, பின் சந்துருவைப் பற்றி வீட்டில் சொன்னது, அப்புறம் அப்பாவின் அறிவுரைகளைப் பற்றியும் அவர் யோசிக்கக் கொடுத்த ஒரு மாத அவகாசத்தையும் கூறினாள்.

உங்க அப்பா சொன்னது நூத்துக்கு நூறு சதவீதம் கரெக்ட். காலம் கெட்டுக் கெடக்கு. இன்னிக்கு நல்லா இருக்கறவன் நாளைக்கு எப்படி இருப்பான்னு சொல்ல முடியாது. பின்னாடி வருத்தப் படுறதை விட, இப்போவே நல்லா யோசிக்கறது ரொம்ப நல்லது.

ஆனா, என்னால சந்துருவை  ஒரு துளி கூட சந்தேகப் பட முடியல. அவனோட ஒவ்வொரு அணுக்களும் எனக்காகவே துடிக்குது-ன்னு அடிக்கடி என்கிட்டே சொல்லியிருக்கான். எனக்கும் அதே உணர்ச்சிதான் இருக்குது. அவனைப் பத்தி எனக்கு தெரியாத சீக்கிரட்ஸ் எதுவுமே இல்லை. அதே மாதிரிதான் அவனுக்கும் என்னைப் பத்தி எல்லாமே தெரியும். எனக்கு எதாவது ஒன்னு-ன்னா துடி துடிச்சு போய்டுவான். எங்க சிந்தனைகள், பார்வைகள், கண்னோட்ட்டங்கள், thoughts எல்லாம் நிறைய விஷயத்துல ஒரே மாதிரி இருந்திருக்கு. ..

அப்பா கொடுத்த ஒரு மாசம் எப்போடா முடியும்-ன்னு காத்துட்டு இருக்கேன். முடிஞ்சவுடனே, சந்தருவ அப்பாட்ட கூட்டிட்டு போயி இன்ட்ரோ கொடுக்கப் போறேன்.... அந்த நாளுக்க்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.


ஹே., ஹே... கொஞ்சம் பொறு. அவசரப் படாதே!...
- தனது காதலால் உருகிய வீணாவை ஜெர்சி தடுத்து நிறுத்தினாள்.

நான், சந்துரு கெட்டவன்-ன்னு சொல்லல., அவன் எல்லா situvation லயும் நல்லவனாவே இருக்கான-ன்னு டெஸ்ட் பண்ணிப் பாரு-ன்னுதான் சொல்லுறேன். 
 
வீணா ஏதோ சொல்ல முற்பட்டாள்., அனால் ஜெர்சி விடவில்லை.
ஒரு சில situations நீயே உருவாக்கு, நார்மலா பிகேவ் பண்ணாதே., அவனோட ரெஸ்போன்ஸ் எப்படி இருக்கு-ன்னு பாரு.
வேணும்-ன்னே கோவப்படு. அவனை வெறுக்கற மாதிரி நடி, அவனைக் கொஞ்சம் அவாய்ட் பண்ணிப் பாரு. உன்னோட எல்லா டெஸ்ட் -லயும் அவனோட லவ் எப்பெக்ட் எப்படி இருக்குன்னு பாரு. அவனோட சந்தோசத்துக்கு இம்போர்டன்ஸ் கொடுக்கரானா? இல்ல உனக்காக sacrifice பண்றான-ன்னு பாரு.


[Note: Jercy is working as a Senior Test Engineer. இவளுக்கு வரப் போறவன் பாவம்-ப்பா]

வீணாவுக்கு கோவமே வந்து விட்டது.
என் சந்துரு-வைக் கனவுல கூட என்னால வெறுக்க முடியாது. அவனை நினைக்காம என்னால இருக்கவே முடியாது. அவன் என்னோட மனசு புல்லா நிறைஞ்சு இருக்கான்...
நம் கதாநாயகி உணர்ச்சிவசப்பட்டாள்.

அய்யோ வீணா, நான் சொல்றதை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. நாம எத்தனையோ சாப்ட்வேர் டெவிலப் பண்றோம்., ஆனா அதோட உண்மையான பிரச்னை கஸ்டமர் கைக்கு போனவாட்டிதான வெளிய வருது... உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். ஒரு ரெண்டு மூனு டெஸ்ட் பண்ணி பாக்குறதால உன்னோட சந்துரு ஒன்னும் தேஞ்சு போய்ட மாட்டான்.....
........
என் மனசுல தோணிச்சு., சொல்லிட்டேன். அப்புறம் உன்னோட இஷ்டம். நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு.
வா., இப்போவே மணி ரெண்டு ஆகுது. கொஞ்ச நேரமாவது தூங்கினாதான் நாளைக்கு 10 மணிக்காவது எந்திரிக்க முடியும். -என்று கூறி வீணாவை தூங்க அழைத்துச் சென்றாள்.

படுத்தவுடன், ஜெர்சி நன்றாக உறங்கி விட்டாள். பயணக் களைப்பினால் லேசான குறட்டை வேற.. பாவம், அவ வந்த வேலை முடிஞ்சிடுச்சு.. தூங்கட்டும்.....

ஆனால் வீணாவால் தூங்க முடியவில்லை.
பூங்காற்றைப் போல இருந்த  அவளுடைய உள்ளத்தில், பயம் / சந்தேகம் என்ற சூறாவளி லேசாக எட்டிப் பார்த்தது.








                 கும்மென்ற இருட்டு. வீணாவை யாரோ இழுத்துச் செல்கிறார்கள்., சந்துருவை யாரோ கட்டி வைத்து இருக்கிறார்கள், அவன் மயங்கி விட்டான். இருந்த போதிலும் வீணா, வீணா என்றே முனகிக் கொண்டு இருக்கிறான். ஜெர்சி ஏதோ சொல்ல வருகிறாள்., ஏதோ சொல்கிறாள்.., ஆனால், அவள் சொல்வது எதுவும் புரியவில்லை. அப்பா தன்னை மறுபடியும் வாக்கிங் அழைத்துச் செல்ல வருகிறார்.

                இங்கே வர வேண்டாமென்று கத்துகிறாள். அனால், அவள் சொல்வது அப்பாவின் காதில்  விழவில்லை. கைகளினால் சைகை கொடுக்க முயற்சிக்கிறாள், ஆனால், கைகளை யாரோ கட்டி வைத்தது போல இருக்கிறது, கைகளை தூக்க முடியவில்லை. 

            
              கார் வேகமாக செல்கிறது. எங்கே செல்கிறோம், யார் தன்னை இழுத்துச் செல்கிறார்கள்.. ஒன்றும் விளங்கவில்லை. சற்று நேரம் கழித்து காரின் வேகம் அதிகரிக்கிறது, நேரான பாதை மலைப்பாதையாகிறது. ஆனாலும் காரின் வேகம் குறையவில்லை.

                இரவு நேரத்தில் வரும் வாடைக் காற்றின் வேகத்தை அவளால் உணர முடிந்தது. தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை பார்க்க நினைக்கிறாள், ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை. கஷ்டப்பட்டு கண்களைத் திறந்து பார்க்கிறாள். காரின் ஹெட் லைட்  வெளிச்சத்தில் சந்துரு தெரிகிறான்.
இன்னும் ஒரு சில நொடிகளில் கார் அவன் மீது மோதப்போகிறது.

ஆஆஆஆஆஆஆ .........

என்னாச்சு வீணா?
-தூக்கத்திலிருந்து அலறிய வீணாவை ஜெர்சி ஆசுவாசப் படுத்தினாள்., அவசர அவசரமாக, படுக்கையில் இருந்து எந்திரிச்சு, வீணா அருகே வந்து உட்காந்தாள்.
வீணா பிரமை பிடித்தவள் போல இருந்தாள்.

ஹே.. உன்னைத்தான், என்னாச்சு? எதாவது கெட்ட கனவு கண்டியா? என்று கூறி, ஜெர்சி வீணாவை உலுக்கினாள்.

எங்க இருக்கிறோம், என்ன நடந்தது என்று ரியலைஸ் பண்றதுக்கு வீணாவுக்கு கொஞ்ச நேரமானது.

.... ம்ம்ம்,  ஒன்னும் இல்ல..., ஏதோ கனவு.....
சரி, சரி, ஒன்னும் இல்ல., போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா, விடிஞ்சு ரொம்ப நேரமாயிடுச்சு.,.. கீழே போய் டீ குடிக்கலாம்.....................
வீணாவிற்கு சின்ன வயசிலிருந்தே இந்த பிரச்னை இருக்குது. அமுக்கான் என்று கிராமங்களில் இந்த பிரச்சனையை கூப்புடுவாங்க.

பெங்களுருக்கு வந்தவாட்டி, இதுதான் பர்ஸ்ட் டைம்.
அன்னிக்கு சனிக்கிழமை., சந்துருவோட ஊர் சுத்துறதுக்கு ஏற்கனவே பிளான் இருந்தது.., பட் இந்த ஜெர்சி எருமை இப்படி வந்து சர்ப்ரைஸ் கொடுக்கும்-ன்னு யாரு எதிர்பாத்தா?

ஹே... இன்னும் அந்த கனவையே நினைச்சுட்டு இருக்கியா? கம்-ஆன்., கெட் ரெடி., நாம ஷாப்பிங் போலாம்....
 
-இந்த தர்மசங்கடம்-ன்னு சொல்லுவாங்க இல்ல, இப்போ வீணா அதை பேஸ் பண்றா.

நம்ம ஹீரோ பாவம்ப்பா., நேத்து நைட் எவ்ளோ ட்ரீம்ஸ்-சோட படுத்தான், ... லவ் பண்றவங்க வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா....






டேய் விவேக், இன்னிக்கு என்னடா பிளான்?
ஏன்., எதுவும் இல்லன்னா எனக்கு கால் அமுக்கிவிடப்போறியா?

டேய், இல்லடா மச்சான், நீ ப்ரீயா இருந்தின்னா., வா, எங்கியாவது வெளிய போலாம்...

[சோழியன் குடுமி சும்மா ஆடுமா?....ஆடாதே...  என்று மனதில் நினைத்துக் கொண்டே] 
ஏண்டா,... அதுகுக்ள்ளே, வீணா உன்னை கழட்டி விட்டுட்டாளா?  இது இவ்ளோ சீக்கிரம் நடக்கும்-ன்னு நான் நினைக்கலையே!....
 

ஹே., அப்படியெல்லாம் எதுவும் நடக்காதுடா., இன்னிக்கு நாம எல்லாம் சேர்ந்து ஷாப்பிங் போலாம்-ன்னு நினைச்சேன்..
இது ரொம்ப நல்லா இருக்கே., புது கான்செப்ட்-ஆ இருக்கே., நாலஞ்சு பேர் சேர்ந்து லவ் பண்றது... நாம-ன்னா யார் யார்டா மச்சான்?

வேற யாரும் இல்லைடா., வீணாவோட பழைய ரூம்-மேட் ஊருக்கு வந்து இருக்கா.,
யாரு, அந்த சப்பிப் போட்ட மாங்கொட்டை மாதிரி இருப்பாளே, அவளா?

ஆமா, எங்கியோ ஷாப்பிங் போகணுமாம்., வீணா என்னையும் கூப்பிட்டா, நான் மட்டும் தனியா எப்படி போறது-ன்னு தான் உன்னையும் கூப்பிட்டேன்.
அடி..ங்கொய்யாலே.... யார்கிட்டே., 

ஏன்டா, நீ அங்கே என்ன பண்ணுவேன்-ன்னு எனக்குக் தெரியாதா? 
எதாவது ஒரு காரணம் சொல்லி, அந்த ஜெர்சி குரங்கை என் தலைல கட்டிட்டு, நீ உன் ஆளோட எஸ் ஆயிடுவே., 
அப்புறம் என் கதி என்ன ஆகுறது?...


[சிரித்துக் கொண்டே] டேய், அப்படியெல்லாம் இல்லைடா மச்சான்.. நாம என்ன அப்படியா பழகி இருக்கோம்? நான் வேணும்-ன்னா ப்ராமிஸ் பண்றேன், உன்னைவிட்டு நாங்க தனியா போக மாட்டோம்....
இன்னிக்கு காலைல யார் மூஞ்சில முழிச்சேனோ தெரில,.. ....
வர்றேன்...

அன்று விவேக்-கிற்கு உண்மையாலுமே கஷ்ட காலம், அவன் எதிர்பார்த்தது போலவே, ஜெர்சியுடன் காலம் கழிக்க வேண்டியிருந்தது..

வீணாவும் சந்துருவும், நாலைந்து முறை இவர்களுடன் இருந்தார்கள். மற்ற நேரம் முழுவதும் எங்கேயோ மறைந்து விட்டார்கள்.

ஜெர்சி கொஞ்சம் பிகரா இருந்திருந்தலாவது, விவேக் உற்சாகமாக இருந்திருப்பான். ஆனால், அவள் விவேக்-கின் வர்ணனையை விட கேவலமாக இருந்தாள். 

ஜெர்சி கொஞ்சம் அமைதியாக இருந்தாலும் பரவாயில்லை. லொட-லொட-ன்னு பேசியே சலித்தால். 


இதுல, இவங்கன்னு பார்த்து PVR போனப்போ, நம்ம தக்காளி அவ பிரண்ட்ஸ்சோட அங்கே வந்து இருந்தாள். விவேக்கோட முக எக்ஸ்ப்ரசன்ஸ்.... அடடா.., அயோ., பாவம், பையன் ரொம்ப கஷ்டப் பட்டான்.

விவேக் எல்லோரிடமும்., மொக்கை போடுவான், ஆனா, தக்களிகிட்டே மட்டும் அவ்வளவா பேச மாட்டான். நேர்ல பார்த்தா, சிரிக்கறதோட சரி. 

ஜெர்சி-யுடன் நின்றுகொண்டிருக்கும் பொழுது, தக்காளி நேரெதிரில் வந்து விட்டாள். அதனால், ஜெர்சியை இன்ட்ரோ கொடுக்க வேண்டியதாகி விட்டது. ரொம்ப தடுமாறினான் பாவம்.

அன்றிரவு சந்துருவுக்கு பலமான அடி உதைகள் விழுந்தது. ;-) 






சந்துரு, எனக்கு அந்த கனவை நினைச்சா இன்னும் பயமா இருக்கு...
ஹே.., நீ என்ன இன்னும் குட்டிப் பொண்ணா? நாம சரியா தூங்காம இருக்கறப்போ, நம்ம செமி-கான்ஸ்சியஸ் மைன்ட் நம்மள இப்படித்தான் குழப்பி விடும். அதுக்கெல்லாம் வருத்தப் படாதேடா செல்லம்.... 
-இன்னும் தனக்குத் தெரிந்த அரைகுறை அறிவியலில் வீணாவுக்கு சமாதானம் சொல்ல முயற்சித்தான்.
ஆனாலும், அந்தக் கனவு வீணாவை ரொம்ப பாதிச்சு இருந்தது.
நமக்குத் தெரியாம, ஏதோ நடக்கப் போவுது-ன்ற இன்ஸ்டின்க்ட் அவளுக்கு இருந்தது.
வீணாவிற்கு சந்துருவின் மீது எந்தவித சந்தேகமும் கிடையாது. பட் உள்மனசுல ஏதோ உருதிகிட்டே இருந்துச்சு.
................ 
அம்மா என்றழைக்காத  உயிரில்லையே.... ரிங் டோன் ஒலித்தது... சந்துரு போனை எடுத்தான். சிக்னல்  சரியாக இல்லை, வெளியே வந்தான்.

ஹலோ..., சொல்லும்மா,..
கண்ணா, எப்படிடா  இருக்கே? சாப்டியாப்பா?

ஆச்சும்மா., இப்போதான் சாப்டேன்....
அப்படியா, சரி. ஒண்ணுமில்லேடா கண்ணு, நேத்து மாமா வீட்டுக்கு வந்திருந்தாரு...  
அம்மா, நான் உனக்கு எத்தனை முறை சொல்லறது?...
நான் சொல்றதை கொஞ்சம் கேளுப்பா.. அம்மா உன் நல்லதுக்குத் தானே சொல்லுறேன்... நீ சின்ன பையனா  இருந்தப்போவே, பிரியாவை உனக்கு கல்யாணம் பண்ண்றது-ன்னு நாங்க முடிவு பண்ணினோம். 
             ஆனா, நீ பெரியவனானவுடனே, மாறிட்டே, சொந்ததுலையே பொண்ணு வேண்டாம்-ன்னு சொல்லிட்டே, உனக்கும் வயசு ஆகுதில்லையா? பிரியா உனக்குன்னே வளர்ந்த பொண்ணு., 
            நல்லா படிச்சு இருக்கா., உன்னை மாதிரியே அவளும் வேலைக்குப் போறா. இத்தனை இருந்தும், நீ வேண்டாம் வேண்டாம்-ன்னு சொல்லிட்டே., 
           இத்தனை நாளும் மாமா,  நாம பொண்ணு கேப்போம்-ன்னு பொறுத்துப் பார்த்தாரு. நேத்து அவரே கேட்டுட்டாரு.... எப்போ பிரியாவ பொண்ணு பார்க்க வரப் போறீங்கங்கராறு?... 
           அவனைக் கேட்டுத்தான் ஒன்னும்  முடிவு பண்ணனும்-ன்னு இல்ல, எப்படியும் அடுத்த வாரம் ஊருக்கு வருவான். பையன் வந்தவுடன் நாம மேல நடக்க வேண்டியது பேசலாம்-ன்னு அப்பா சொல்லிட்டாரு.

அம்மா.... நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும்   செய்வீங்களா? நான்தான் அப்போலருந்து வேண்டாம்-ன்னு சொல்லிட்டு இருக்கேன்ல்ல?

ஏன் வேண்டாம்-ன்னு ஒரே பிடிவாதமா சொல்ற? பிரியாவுக்கு என்ன குறைச்சல்? கண்ணுக்கு லட்சணமா ரொம்ப அழகா இருக்கா... படிச்சு இருக்கா.. உன்னை மாதிரியே....

அம்மா., நான் என்னைக்கு அவளை புடிக்கல-ன்னு சொன்னேன்?
அப்புறம் அவளை ஏன் வேண்டாம்-ன்னு சொல்லுறே?
 
அம்மா, நாம 21st செஞ்சுரி-ல இருக்கோம். நெருங்கிய சொந்தத்துல எல்லாம் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. தினம் தினம் டிவி-ல டாக்டருங்க சொல்றது எதுவும் உனக்கு தெரியாதா?
அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. நூத்துல யாருக்காவது ஒருத்தங்களுக்குத்தான் குழந்தை மனவளர்ச்சி கம்மியா பொறக்குது. 
அந்த காலத்துல எல்லாம் மாமன் மச்சினன் வீட்டுப் பொண்ணுங்களை தான கட்டுனாங்க?....
அவங்க எல்லாம் இன்னிக்கு வரைக்கும் நல்லா இல்லையா?.... அவங்களுக்கு பொறந்த நாங்க எல்லாம் நல்லா இல்லையா?... சும்மா விதண்டாவாதம் பேசாதே!... ஊருக்கு வந்து சேறு. கூடிய சீக்கிரத்துல நிச்சயம் பண்ணலாம்-ன்னு அப்பா முடிவு பண்ணிட்டாரு.

அம்மா..ஏன்-ம்மா இப்போ என்னை இப்படி தொந்தரவு பண்றீங்க? எனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்?
-இது வரைக்கும் லவுட் ஸபீக்கரில் கெட்டுக் கொண்டிருந்த அப்பா, போனைப் பிடுங்கி,
ஆமாடா, இப்போ பண்ணாம, பின்னே எப்போ பண்ணப் போற? உனக்கு எதெது எப்பெப்போ பண்ணனும்-ன்னு எங்களுக்கு தெரியும். ஒழுங்கு மரியாதையா ஊருக்கு வந்து சேறு. என்று சொல்லி போனை அணைத்து விட்டார்.
.......................



என்னாச்சு சந்துரு?
வீணா இப்போ இருக்கற நிலமையில, பிரியா மேட்டர்-அ சொன்னா, இன்னும் பயப் படுவா.-ன்னு நினைச்சுட்டு, முதல் முறையாக வீணாவிடம் பொய் சொன்னான்.
ஒன்னும் இல்ல வீணா, அம்மாவுக்கு லைட்-ஆ உடம்பு சரியில்லையாம். அப்பா இந்த வீகென்ட் ஊருக்கு வரச் சொன்னார்.

ஏன்? அத்தைக்கு என்ன ஆச்சு? - வீணா பரபரப்பானாள்
இல்ல வீணா, பெருசா ஒன்னும் இல்ல, சுகர் கொஞ்சம் அதிகமாயிடுச்சு..இப்போ நல்லாத்தான் இருக்காங்க. - ஏதோ சொல்லி சமாளித்தான், ஆனால் வீணா விடுவதாக இல்லை.

என்ன சந்துரு பேசுறே? நாளைக்கு ஃப்ரைடே. லீவ் போட்டுட்டு இன்னிக்கு நைட்-ஏ ஊருக்கு கிளம்ப வேண்டியதுதானே..?

அவ்வளவு ஒன்னும் அவசரம் இல்ல வீணா... ஏதோ சொல்ல வந்தான். அனால் வீணா கேட்கவில்லை. அவனை ஊருக்கு புறப்படச் சொன்னாள். சரியென்று சந்துருவும் கிளம்பினான்.

வீணாவிடம் இருந்து விடை பெறும்போது, உள்ளுக்குள் ஏதோ உறுத்தியது. ஏதோ தப்பு செய்யப் போற சந்துரு-ன்னு அவனோட உள்மனசு சொன்னது.
- சந்துருவின் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். சந்துரு-வுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அம்மாதான். எப்படியாவது அம்மாகிட்டே வீணா பத்தி சொல்லி, அப்புறம் அப்பாவை கன்வின்ஸ் பண்ணனும். நிலைமை அவளுக்கு மீறி போச்சுன்னா, பிரியா-கிட்டே விஷயத்தை சொல்லிட வேண்டியதுதான்.  என்று நினைத்தவாறு பஸ் ஏறினான்.

எந்த பிரச்னையும் தனியாக வருவதில்லை....
சந்துருவுக்கு பக்கத்துக்கு சீட் காலியாகவே இருந்தது. பஸ் எடுக்கும் வரை யாரும் வந்து உட்காரவில்லை. சந்துருவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ஐ -போடில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான்..... பஸ் எடுத்தவுடன், டிரைவர் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார்.  என்னவென்று எல்லோரும் வெளியில் பார்த்தார்கள்.,அவசர அவசரமாக ஒரு பெண் பஸ்-சிற்குள் வந்தாள்.
சாரி...... என்று கொஞ்சும் குரலில் டிரைவர்-டம் சொல்லிவிட்டு உள்ளே வந்தாள், நேரே சந்துரு அருகில் வந்து, "எக்ஸ்க்யுஸ் மீ" என்றாள்,
நான்கு கண்களும் ஒரு நொடி நேரம் ஸ்தம்பித்தன.



Chapter IV







ஸ் ர வ ந் தி....

ச ந் து ரு....

இருவரும், ஒருவர் மாற்றி ஒருவரை மெதுவாக அழைத்தனர்.

யாரிந்தப் பெண்? ஸ்ரவந்தி. அழகான பெயர், பெயருக்கேற்றவாறே அவளும் அவ்வளவு அழகாக இருந்தாள். பார்த்தாலே சொல்லிவிடலாம், இவள் ஒரு தெலுங்குப் பெண் என்று.
இவளை யாரென்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் சந்துருவின் வாழ்க்கைப் புத்தகத்தை கொஞ்ச வருடங்கள் பின்னோக்கித் திருப்ப வேண்டும்.....






பூ சா கோ  பொறியியல் கல்லூரி -  11-Feb-2002 காலை 11 மணியளவில்.,
Hi Sravanthi,
Hey Chandru, how are you?

Yeah, fine, how about you?
I'm cool... as usual... so whats up....

[ஆங்கிலத்தில் உரையாடல் தொடர்ந்தது.....]

இன்னிக்கு உனக்கு எத்தனாவது பர்த்டே?
ஹே., கம் ஆன், பொண்ணுங்க கிட்டே ., வயசைக் கேட்கக் கூடாது... என்று கூறி கண்ணடித்தாள்.

ஹ்ம்ம்., சரி இந்தா. - என்று கூறி ஒரு கலர் காகிதப் பொட்டலத்தையும் ஒரு கவரையும் கொடுத்தான்.
பர்த்டே கிப்ட் என்று கூறிவிட்டு சென்று விட்டான். சாரி ஓடி விட்டான்.

ஸ்ரவந்தி அதை மெதுவாக பிரித்துப் பார்த்தாள்.
ஏதோ ரெண்டு பூனைக்குட்டிங்க, ஒரு ஹார்டின் படம் போட்ட டேபிள் டாப் ஐடம்- கிப்ட்., அப்புறம் கவர்ல காலேஜ் பசங்களுக்கு புடிக்கற மாதிரி 4 இங்கிலீஷ் லைன்.  அதுக்குக் கீழே., வித் லவ் - சந்துரு-ன்னு கையெழுத்து போட்டிருந்தான்.

அது அவர்களது காலேஜ் வாழ்கையின் இரண்டாமாண்டு.

ஸ்ரவந்தி, ரொம்ப நல்லா படிக்கற பொண்ணு.,
இன்டெர்-மீடியேட்-ல ஸ்டேட் பர்ஸ்ட்,
காலேஜ்-ல எல்லா சப்ஜெக்ட்ஸ்-லயும் டாப்பர்.
ஏரோனட்டிகள் இன்ஜினியரிங் படிப்பதற்காகவே, PSG -யில் சேர்ந்திருந்தாள்.
பர்ஸ்ட் இயர் இனாக்ரேஷன்-ல  சந்துருவும், ஸ்ரவந்தியும் பக்கத்துக்கு பக்கத்துக்கு சீட்ல உட்காந்து இருந்தாங்க. அப்புறம் பார்த்தா, ஒரே கிளாஸ்.

ஆயிரம் ரோஜாவில் நான் பார்த்த முதல் ரோஸ் நீதான், என் பட்டு ரோஸ்-ன்னு வாயில, கையில வந்தது எல்லாத்தையும் டைரில எழுத ஆரம்பிச்சுட்டான். அந்த ஒருதலைக் காதல் தான், மேற்கண்ட கிப்ட்-ஆ ஸ்ரவந்தி கைல இருக்கு.


அடுத்த நாள், காலைல கிளாஸ்-க்கு போறப்போ, ஸ்ரவந்தி எதிர்ல வந்தாள். லேசான வெட்கத்துடன் சிரித்தான்..,
ஸ்ரவந்தி எந்த ரெஸ்பான்ஸ்-ம் கொடுக்கவில்லை. சிரிக்காமலே சென்று விட்டாள்.

அன்று மாலை காண்டீனில் மறுபடியும் சந்தித்தான்.,

ஸ்ரவந்தி, உன்கிட்டே கொஞ்சம் பேசணும்...
அவள் மௌனமாக நின்றாள்.
ஏதோ கஷ்டப்பட்டு, தன்னுடைய காதலை மறுபடியும் சொன்னான்.

I'm sorry Chandru. உன்னை எனக்கு ஒரு ப்ரண்டா புடிச்சு இருக்கு.., நாம நல்ல பிரண்ட்ஸ்-ன்னுதான் இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தேன். பட் நீ இப்படி தப்பா பழகி இருப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கல.
கிப்ட்-ஐயும் கார்டையும் டேபிள் மீது வைத்து விட்டு சென்று விட்டாள்.

ஒரே வகுப்பில், கூட படிக்கற பொண்ணை லவ் பண்ணுனா., என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கனுமோ அத்தனையும்  பேஸ் பண்ண்ணினான். காலேஜ் என்ஜாய்மென்ட்ஸ் எல்லாத்தையும் இழந்தான். மத்த பசங்க மாதிரி அவனால, கிளாஸ்ல நார்மலா இருக்க முடியல. தினம் தினம் ஸ்ரவந்தி-யை நினச்சு பீல் பண்ணினான். 

பொதுவா, பசங்க பொண்ணுங்க கிட்டே ப்ரப்போஸ் பண்ணினா., ஓகே சொல்ற வரைக்கும் விட மாட்டானுங்க.

பட், சந்துரு கொஞ்சம் வித்தியாசமானவன்.
காதல் ரெண்டு சைடு-ல இருந்தும் சரி பாதி வரணும்., நாம போர்ஸ் பண்ணி வர வச்சா, அதுல புல் எக்ட்டசி  இருக்காது-ன்னு நினைப்பவன்.
                 ஸ்ரவந்தி வேண்டாம்-ன்னு சொன்னதால, அவளை மறுபடியும், இவன் தொந்தரவு பண்ணல. அவ பக்கத்துல வந்தாலே, இவன் விலகிப் போயிடுவான். அது வெட்கமா இல்ல அவமான உணர்சியான்னு அவனுக்கே சரியா தெரியல.

3rd இயர் பாதி வரைக்கும் ரொம்ப வருத்தப் பட்டான். அதுக்கு அப்புறம், வாழ்க வளமுடன் - மனவளக்கலை மன்றத்தோட தொடர்பு கிடைத்தது. யோகா, தியானம்-ன்னு மனசு வேற உலகத்துக்கு போனதால, அவனோட வாழ்க்கைல அது ஒரு பெரிய திருப்பு முனையா இருந்துச்சு. 

ஆறாவது செமெஸ்டர்-ல இருந்து ஒரு புது சந்துரு-வாவே   மாறினான். எல்லா அரியர்ஸ்-ஐயும் கிளியர் செய்தான்.

உன்னுடைய வினைப் பதிவிற்கேற்ற வாழ்க்கைதுணைதான் உனக்கு வந்து அமையும்-ன்னு வேதாத்ரி மகரிஷி சொன்னதை சந்துரு, முழு மனதாக நம்பினான்.

ஸ்ரவந்தி மிகவும் அழகானவள். ரொம்ப சுருசுருப்பானவள், எல்லா விஷயத்துலயும் பர்ஸ்ட்-ஆ இருப்பவள்.,
சந்துருவைப் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். ஒரு நார்மல் லுகிங் மேன் அண்ட் அவரேஜ் ஸ்டுடென்ட்.

அதனால, ஸ்ரவந்தி நமக்கு சரியான பொருத்தமில்லை-ன்னு நினைச்சு, அவளை மறக்க முயற்சி பண்ணினான்,

முதல்ல முடியல. நாளாக ஆக, கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டான், அவளை நினைவு படுத்துற எல்லா பொருட்களையும், (ஹேர் பின், ஸ்ட்ரா, சாக்லேட் கவர், ஹெர்பேரியம் பண்ணி வச்ச ரோஸ்... etc ) அவனோட ரூம்-ல இருந்து தூக்கிப் போட்டான். அதுக்கு அப்புறம் அவளை சந்திப்பதைத் தவிர்த்தான். 

இந்த மாதிரி ஒரு வழியா, காலேஜ் லைப் ஓடியது. நல்லா படிச்சு, காம்பஸ் இண்டர்வியுவுல நிறையா கம்பனில செலக்ட் ஆனான்.

அப்புறம் ப்ராஜெக்ட் ட்ரைனிங்-க்காக பெங்களுருக்கு வந்தான். அதுக்கப்புறம் பெங்களூர் புடிச்சு போயி, அங்கேயே செட்டில் ஆயிட்டான்.
சந்துருவோட திருப்பு முனைக்கு அப்புறம், ஸ்ரவந்தியை நினைத்து அவன் அவ்வளவா வருத்தப்படுல.

பேர்-வெல் பார்ட்டி-ல கூட, அவன் ஸ்ரவந்திய பார்க்க விரும்பல. ஆட்டோகிராப் கூட வாங்கல, ஸ்ரவந்தியே இவன்கிட்டே வந்து அவளோட ஆட்டோகிராப் நோட்-ஐ கொடுத்தாள். இவன் எதுவுமே எழுதாம திருப்பிக் கொடுத்து விட்டான்.

ஸ்ரவந்தி மேல சந்துருவுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. பட் அவளை கம்ப்ளீட்டா மறக்க விரும்பினான்.

BE கோர்ஸ் முடிஞ்சு, சந்துருவோட ஜாப் பெர்மனன்ட் ஆனது.
அப்புறம் ரெண்டொரு வருஷம் கழிச்சு, அவனோட வாழ்க்கைல வீணா என்ட்ரி ஆனாள். லைப் ரொம்ப ஸ்மூத்தா போயிட்டு இருந்துச்சு. ......

இந்த  5  வருஷத்துல ஸ்ரவந்தி-ன்னு ஒரு பொண்ணை அவன் வாழ்க்கைல சந்திச்சதையே முழுசா மறந்திருந்தான். 

பட் இப்போ பஸ்-ல பக்கத்துல பார்த்தவுடன்., அவனோட மனசு முருகப் பெருமான், மயில் மேல ஏறி உலகத்தையே ஒரு நொடில சுத்தி வந்த மாதிரி, ரொம்ப வேகமா காலேஜ் லைப்-ஐ போய் எட்டிப் பார்த்துட்டு வந்தது....

ரொம்ப நாளைக்கு அப்புறம், பார்த்ததால , ரெண்டு பேரால்-ஐயும் சட்டுன்னு பேச முடியல...


ஸ்ரவந்தி தான் முதலில் ஆரம்பித்தாள்.

how are you chandru?
சந்துருவுக்கு பேச்சே வரவில்லை. [உரையாடல் ஆங்கிலத்தில் தொடர்ந்தது...]
ம்ம், நல்லாத்தான் இருக்கேன். நீ எப்படி இருக்கே ஸ்ரவந்தி? 
ம்ம்ம், நானும்தான். நீ பெங்களூர்-ல வொர்க் பண்றதா கேள்விப் பட்டேன்...

 ஆமா.
ஆனா, நீ என்னைப் பத்தி இன்னும் எதுவும் தெரிஞ்சுக்க விரும்பல., கரெக்ட் ஆ? 

 ..........................

orkut -ல உன்னோட ப்ரொபைல் பார்த்தேன். நிறையா தமிழ்k கவிதைகள் எழுதி இருந்தே., நான் என்னோட பிரண்டை ட்ரான்ஸ்லேட் பண்ணச் சொல்லி கேட்டேன், எல்லாமே ஆசம் (awesome)..... 
உனக்கு Orkut ல பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்பி இருந்தேன், 
பட் எந்த ரெஸ்பான்ஸ்-ம்  இல்ல... நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா?

இல்ல, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல,.. நான் கொஞ்சம் பிஸியா இருந்திருப்பேன்.. கவனிக்கல.
..............

நான் உன்னோட ப்லாக்ஸ் எல்லாத்தையும் பார்த்தேன். உன்னோட கவிதைகள் எல்லாமே எனக்கு புடிச்சு இருந்தது. பர்டிகுலரா,
மழை நின்ற போதும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
... போஸ்ட் எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு...


நோ, அது நான் எழுதுனது இல்ல, எனக்கு புடிச்ச எல்லா சினிமா பாடல்களோட முதல் நாலு வரியை என்னோட ப்ளாக்-ல போட்டு, அதைப் பத்தி எதாவது கமெண்ட்ஸ் எழுதுவேன். தட்ஸ் இட்.

ஓ.. அப்படியா, நீ என்னைப் பத்தி தான் அப்படி எழுதினேன்-ன்னு நினைச்சேன்... பட் எல்லாமே ரொம்ப நல்லா இருந்துச்சு...
நான் உன்னை காண்டாக்ட் பண்ணனும்-ன்னு நிறையா வாட்டி  ட்ரை பண்ணினேன். பட் என்னோட பிரண்ட்ஸ் யார்கிட்டேயும் உன்னோட புது நம்பர் இல்ல.


-சந்துரு தன்னுடைய பிசினஸ் கார்டை கொடுத்தான். அவளும், தன்னுடைய பிசினஸ் கார்டை கொடுத்தாள்.

ஸ்ரவந்தி, ரிசர்ச் அசோசியேட் HAL.....
ஓ, நீ பெங்களூர்-ல தான் இருக்கியா?

ஆமா கொஞ்ச நாளா..... BE -க்கு அப்புறம் M.Tech பண்ணினேன், IIT- கான்பூர்-ல,
அப்புறம், பிட்ஸ் -ல கொஞ்ச நாள் இருந்தேன்.,
இப்போ., PHD பண்ணிட்டு இருக்கேன்...
 

ஓ.. ஓகே..
................

நான் உன்னை எதுக்காக காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணினேன்-ன்னு கேட்க மாட்டியா?..............
-சந்துருவின் ஹார்ட் பீட்-ல ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான்.
..........................
ஆக்ட்சுவலா நான் உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா, சாரி கேட்கலாம்-ன்னுதான், உன்னை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணினேன்.
..... சாரி கேட்குற அவளுக்கு நீ எந்த தப்பும் பண்ணலையே...


பின்னே ஏன் நீ என்னோட ஸ்க்ராப்- புக்ல எதுவுமே எழுதாம கொடுத்துட்டே?
நீயும் உனோட ஆட்டோகிராப் என்கிட்டே ஏன் வாங்கல...
............

கொஞ்ச நேர மௌனம்......
........................

அது 2 + 2 AC வோல்வோ பஸ். சந்துருவின் கையை ஸ்ரவந்தி தன் இடது கையால், பிடித்தாள், 

நான் உன்னோட ப்ரொப்போசல ரிஜெக்ட் பண்ணியிருக்கக் கூடாது. -என்று சொல்லி, சந்துருவின், வலப்பக்கத் தோளில் லேசாக சாய்ந்தாள்....
...................

என்ன்கிட்டே எத்தனையோ பசங்க ப்ரொபோஸ் பண்ணினாங்க, பட் அவங்க யாரும் உன்னை மாதிரி டிசண்டா நடந்துக்கல. 
நீ ஒருத்தன் மட்டும்தான், என்னோட கனவுகளுக்கு மதிப்பு கொடுத்து, என்னை எந்தத் தொந்தரவும் பண்ணாம இருந்தே.... 
உன்னோட ப்ளாக்-ல இருந்த கவிதைகள் எல்லாம் நீ, எனக்காகவே எழுதினது-ன்னு நான் நினைச்சேன்....


-சந்துருவின் உள்ளம் உருக ஆரம்பித்திருந்தது..... அவள் சொன்னதில் பாதி உண்மை... ஏனெனில், வீணாவை சந்திக்கும் முன்புவரை, அவனுடைய கவிதைகள் அனைத்தும், ஸ்ரவந்திக்க்காகவே எழுதப் பட்டது.

கொஞ்ச நேரம் போன பின்புதான் சந்துரு, தான் எங்கு இருக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சுதாரித்துக் கொண்டான்.

புஷ் பேக் சீட்டிலிருந்து முன் வந்தான். அவன் தோளில் இருந்து ஸ்ரவந்தி நகர்ந்தாள், கைகளையும் விடுவித்தான்.
.,
நாம காலம் தாழ்த்தி எடுக்கற முடிவுகள்., நம்மல மட்டுமில்ல, நம்மைச் சார்ந்தவங்களையும் பாதிக்கும்,
நாம பிரிஞ்சு, 4,.. 5  வருஷம் ஆயிடுச்சு.. அதுல நிறையா விஷயங்கள் நடந்திடுச்சு..
............
நீ என்னை ஹர்ட் பண்ணினதுக்காக சாரி கேட்க ட்ரை பண்ணினே,
பட், நான் இப்போ உன்னை ஹர்ட் பண்ணப் போறதுக்காக சாரி கேட்குறேன்.

ஸ்ரவந்தி.., 

நான் உன்னை உண்மையாலுமே மறக்கறதுக்குதான் ட்ரை பண்ணினேன். அதனாலதான் உன்னை அவாய்ட் பண்ணினேன்.
பெங்களூர் வந்தப்புறம் வீணாவோட பிரிஎண்ட்ஷிப் இதுக்கு ஹெல்ப் பண்ணுச்சு.. இப்போ.. நானும்..
..

ஸ்ரவந்தி கண்களிலிருந்து, கண்ணீர் துளிர்த்தது.. முகத்தை வேறு பக்கம் திருப்பிk கொண்டாள்.
..........
நீ உண்மையாலுமே என்னைப் புரிஞ்சுக்கிட்டுதான், என்னைவிட்டு விலகி இருந்தே-ன்னு நினைச்சேன், பட் நீ என்னை மறக்கதான்  ட்ரை பண்ணியிருக்கே......
.................

இந்த 4,.. 5 வருஷத்துல என்னை சுத்தமாவே மறந்துட்டியா? ஒரு நிமிஷம் கூட என்னைப் பத்தி நினைக்கலையா?..
..
எனக்கு பொய் சொல்லணும்-ன்னு அவசியம் இல்ல...
முதல்ல உன்னை நினைசுக்கிட்டுதான் இருந்தேன்...
வீணா என்னோட வாழ்க்கைல வந்தப்புறம், உன்னோட நினைவுகள், என் மனசை விட்டு கொஞ்ச கொஞ்சமா போக ஆரம்பிச்சுடுச்சி... ஆனா, இப்போ மறுபடியும் எல்லாமே சேர்ந்து வந்துடுச்சு..


-எந்தவொரு பெண்ணும், தன்னைக் காதலித்தவன் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதை  விரும்புவதில்லை..
..........
எனக்குத் தெரிந்ததெல்லாம், உன்னோட பாஸ்ட்-டென்ஸ்-தான் சந்துரு,
நீ இப்போ, எப்படி, யார்கூட இருக்கேன்னு எனக்கு தெரியாது,
நான் அதைப் பத்தி கவலைப் படவும் இல்ல....!
.............
இப்போ நீ மட்டும்தான் என் மனசுல இருக்கே., உனக்கு யார் வேணும்-ன்னு நீயே முடிவு பண்ணிக்கோ.
...............
எனக்கு இங்கே குப்பூர் ஏர்போர்ட்-ல தான் வேலை, நான் இந்த வீகென்ட் இங்கேயே இருக்கலாம்-ன்னு முடிவு பண்ணியிருக்கேன். -என்று கூறி, டிரைவர் அருகே சென்று ஏதோ சொன்னாள். ஐந்து நிமிடம் கழித்து, குப்பூர் பிரிவு ரோட்டில் வண்டி நின்றது. அங்கு அவளுக்காகவே, ஏர்போர்ட் இன்னோவா காத்திருந்தது. அவள் அதில் ஏறிச் சென்று விட்டாள்.

சற்று நேரம் கழித்து, சந்துரு-வும் டிரைவர் அருகே சென்று ஏதோ சொன்னான். ஓமலூர் சுடுகாட்டின் அருகே (பைபாஸ் பிரிவு) வண்டி நின்றது. அவனும் இறங்கி வீட்டுக்கு நடந்தான்.


இங்கே என்ன நடக்குது-ன்னு நான் கொஞ்சம் சொல்ல விரும்புறேன்.
             சந்துரு காலேஜ்-இல் பார்த்த முதல் பெண் ஸ்ரவந்தி. எந்த ஒரு மனிதனும், அவனுடைய முதல் காதலை சாகும் வரை மறப்பதில்லை., நடுவில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை....

           ஸ்ரவந்தி, அவளோட வாழ்க்கை லட்சியங்களுக்காக ரொம்ப கஷ்டப் பட்டு நல்லா படித்தாள்., அதற்கான பலனும் அவளுக்குக் கிடைத்தது.
அனால் அதற்கு அவள் கொடுத்த விலை = அவளுடைய சொந்த வாழ்கையின் எல்லா சுக, துக்கங்கள். அவள் இதுவரை சந்தித்த ஆண்களில் அவளுக்கு பிடித்த ஒரே நபர் நம்ம சந்துரு. சந்துரு அவளை விட்டு விலகிப் போனதால்தான் ஸ்ரவந்தி, சந்துருவை கவனிக்க ஆரம்பித்தாள்... அனால் சந்துரு கூச்சத்தினால், அதைக் கவனிக்கவில்லை.
             கல்லூரி வாழ்கையின் கடைசி நிமிடம் வரை சந்துருவை கவனித்தாள்., பெண்களின் கண்கள் பொதுவாக யார் மீது இருக்குமென்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு மிகப் பெரிய ரகசியம்.
           அதனாலதான், அவனைப் பார்த்தவுடனே, தன்னுடைய பழைய வாழ்க்கைக்குப் போய் அங்கிருந்த காதலை மறுபடியும் இங்கே கூட்டிட்டு வந்துட்டாள்.




Chapter V





............
வீணா எதுக்காக அப்படி ஒரு கனவு கண்டா? நான் ஏன் என்னைக்கும் இல்லாம அவகிட்டே பொய் சொன்னேன்?
வீணா எதுக்காக, என்னை இப்படி அவசரமா கிளப்பி ஊருக்கு அனுப்பனும்?
நான் ஏறின அதே பஸ்ல எதுக்கு ஸ்ரவந்தி ஏறனும்?
எப்படி இருக்கே-ன்னு கேட்டுட்டு பேசாம போய்டுவா-ன்னு பார்த்தா, அவள் என்னை இப்படி ஆக்கிட்டுப் போயிட்டாளே?
இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன?

என்னோட பழைய காதல் வீண் போகலையா?

நான் அவளையே நினைச்சு ரொம்ப நாள் உருகினதால, இப்போ என்னோட thoughts அவளை காதலிக்க வச்சுடுச்சா?...

ஸ்ரவந்தி.. உன்னோட ஓர்குட் ரெக்வெஸ்ட்-அ நான் அவாய்ட் பண்ணியது எவ்வளவு பெரிய தப்பா போய்டுச்சு?

நீ என்னை மறுபடியும் ப்ரண்டா இருக்க சொல்லி அட்வைஸ் பண்ணுவேன்-ன்னுதானே உன்னை விட்டு நான் விலகிப் போனேன்?

உன்னோட மனசுல என்ன இருந்தது-ன்னு எனக்கு தெரியாம போயிடுச்சே.......

ஐயையோ.... நான் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கறேன்?
இத்தனை நாளா, நான் வீணா, வீணா-ன்னு என்னோட ஒவ்வொரு மூச்சையும் அவளுக்காக விட்டேனே? அது எல்லாம் இப்போ காத்துல பறந்து போயிடுச்சா? என்னுடைய முதல் காதலுக்கு அவ்வளவு சக்தி இருக்குதா?...
வீணாவினால், இத்தனை நாளா, நான் அனுபவித்த காதலை, ஸ்ரவந்தி என் தோள் மீது சாயும் ஒரே நொடியில் உணர்ந்தேனே?....

ஐயோ.. நான் ஏன் இப்படி ஆயிட்டேன்? என்னோட மனசு முழுவதையும் வீணா-கிட்டே கொடுத்திருந்தேனே., ஸ்ரவந்திய பாத்ததும், இப்போ மூளை குழம்புதே....

சந்துருவின் எண்ண ஓட்டங்கள், அவனை தள்ளாடச் செய்தன..


வீட்டிற்கு சென்றவுடன், யாரிடமும், அவ்வளவாக பேசவில்லை. அப்பா கேட்ட கேள்விகளுக்கோ, எனாதானோ என்று பதில் சொன்னான்.
கடைசியில் ப்ரியாவைப் பத்தி பேசினப்போதான்., ஓரளவுக்கு புத்தி தெளிந்து பதில் சொன்னான்.
முதல்ல வீட்டுக்கு வந்த வேலைய முடிக்கலாம். அப்புறம் ஸ்ரவந்தியப் பத்தி யோசிக்கலாம்.

சந்துரு...ஏன்டா கண்ணு ஒரு மாதிரி இருக்கே? உடம்புக்கும் ஏதும் முடியலையா?
ஒன்னுமில்லம்மா... நல்லாதான் இருக்கேன்...

சரிப்பா, நாளைக்கு வெள்ளிக்கிழமை, ரொம்ப நல்ல நாள். நாம எல்லாம் போயி முறைப்படி ப்ரியாவ பொண்ணு பார்த்துட்டு வந்துடலாம். ....
அம்மா உன்கிட்டே எப்படி சொல்றது-ன்னே தெரியல, நான் என்கூட வேலை பாக்குற பொண்ணை விரும்புறேன், - என்று கூறி, அம்மாவின் கையை பிடித்துக் கொண்டான்.

ஐயோ, என்னடா சொல்றே? அப்பாவைப் பத்தி தெரிஞ்சிருந்தும், நீ இந்த மாதிரி ஒரு காரியம் பண்ணலாமா? அவரு ஊருக்கே புத்திமதி சொல்றவராச்சே.... நாளைக்கு நம்மளைப் பார்த்து ஊரு சிரிக்காதா? .... இந்த காதல் கத்திரிக்காஎல்லாம் நமக்கு வேண்டாம்ப்பா...

அம்மா., நீ என்ன சொன்னாலும் சரி. என்னால ப்ரியாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது.
மனசுல ஒருத்திய வச்சுக்கிட்டு இன்னொரு பொண்ணோட என்னால வாழ முடியாது. நீதான் அப்பாகிட்டே சொல்லி, சம்மதிக்க வைக்கணும்....
.................

அப்பா., வானத்துக்கும், பூமிக்கும் குதித்தார். விடிய விடிய சந்துரு-வை திட்டினார்....

அந்த பொண்ணுதான் வேணும்-ன்னா அவனை இந்த வீட்டை விட்டு கிளம்பச் சொல்லு, நான் ஒரே அடியா தலை முழுகிடுறேன்... அப்புறம், நான் செத்தா கூட அவன் இங்கே வரக் கூடாது சொல்லிவை.


சந்துரு, ஸ்ரவந்தியை காதலித்த விஷயம் வீணாவுக்குத் தெரியும்.
பெரும்பாலானவர்களோட முதல் காதல் சக்செஸ் ஆனதில்ல.., அதை நினச்சு வருத்தப் படுறது வேஸ்ட்-ன்னு ஆறுதல் சொன்னாள்.
:-)
ஆனா, வீணாவிற்கு முதல் காதல் சந்துருவோடதான்.


சந்துரு வீணா, ரெண்டு பேருமே கேடிகள்.
ஊருக்கு போனா, போன் பண்ணி வழக்கம் போல பேசிக்க மாட்டாங்க..
ரொம்ப நல்லா புள்ளைங்க போல நடிச்சுட்டு வந்துடுவாங்க. ஏன்னா வீட்ல கெடுபிடி அதிகம்.

அப்பப்போ, சந்து கிடைக்கறப்போ, sms அனுப்புவாங்க, ரொம்ப தேவைப் பட்டா கால் பண்ணிக்குவாங்க.
சந்துரு ஊருக்கு கிளம்புனதுல இருந்து, வீணாவிற்கு எந்த காலும் பண்ணல, மெசேஜ்-ம் அனுப்பல.
அம்மிக்கல்லு மாதிரி சும்மாவே உட்காந்திருந்தான்.

டாக்ஸி டாக்ஸி..நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி..  மொபைல் ஒலித்தது..

டேய் மச்சான், என்னோட அண்டர்வேர காணோம்-டா., நீ எங்கேயாவது பார்த்தியா? காலைல எட்டு மணிக்கே வந்து பொங்க வச்சாதான், என் மேனேஜர்-க்கு ரொம்ப புடிக்குமாம், நான் சீக்கிரம் ஆபிஸ் போகணும். சொல்லுடா..... நீ எங்கேயாவது பார்த்தியா?..

........................
நடந்ததெல்லாம் ஒரு வழியாக விவேக்கிடம் சொல்லி முடித்தான்.

டேய் நான் வேணும்-ன்னா ஒரு ஐடியா சொல்லட்டுமா?
சொல்லு..

மன்மத ராசா பாட்டை போட்டு, ரெண்டு பேத்தையும் ஆட விடு ... யாரு நல்லா ஆடுறாளோ அவளை கழட்டி விடு... 
இல்லாட்டி.,ரெண்டு பேத்தையும் கழட்டி விட்டுட்டு, ப்ரியாவை கல்யாணம் பண்ணிக்கோ...  
போடா..ஆஆஆஆஅ... நல்லா எதாவது சொல்லிடப் போறேன்.

பின்னே என்னடா.. வீணா-ங்குறே, ஸ்ரவந்தி-ங்குறே, மாமா பொண்ணுங்குறே..... அவனவனுக்கு பொண்ணே கிடைக்கறது இல்லன்னு எவ்வளவோ வருத்தப் படுறான்.
டேய் மச்சான், நான் இப்போ என்ன பண்றது-ன்னு எனக்கே தெரியலடா.
..........
மச்சி... இது உன்னோட வாழ்க்கைப்  பிரச்சன, உன்னால யார்கூட இருக்க முடியுமோ அவங்க கூட இருக்கறது கெத்து இல்ல,  
யார் இல்லாம உன்னால இருக்க முடியாதோ, அவங்க கூட இருக்கறதுதான் கெத்து....... 

உன்னால ரெண்டு பேரும் இல்லாம இருக்க முடியாது-ன்னா ரொம்ப சிம்பிள், ரெண்டு பேத்தையும் கட்டிக்கோ.
-சந்துரு, மொபைலை கட் பண்ணினான்... 

ச்சே..நேரங்காலம் தெரியாம இவன் வேற காமெடி பண்றான்...





நான் இப்போ என்ன பண்றது?
ஸ்ரவந்தி... என்னோட வாழ்க்கைல ஏன் வந்தே?
என்னதான் பழைய காதலா இருந்தாலும், வீணா., அவளோட குழந்த மனசை, என்கிட்டே கொடுத்துட்டா.... அவளை என்னால இழக்க முடியாது. 
ஸ்ரவந்தியை நான் ஏற்கனவே மறந்துட்டேன். அவளே இப்போ வந்து மறுபடியும் ஞாபகப் படுதிட்டுப் போயிட்டாள்., இருக்கட்டும், அதுக்காக எல்லாம் என்னோட மனசை வீணாகிட்டே இருந்து பறிக்க முடியாது...

பேசுகிறேன், பேசுகிறேன்., உன் இதயம் பேசுகிறேன்.... சந்துருவின் உலாப்பேசி அழைத்தது. (இது சந்துருவோட டீபால்ட் ரிங் டோன்)
ஹலோ.,
மறுமுனையில் ஸ்ரவந்தியின் அதே கொஞ்சும் குரல்.
ஹாய் சந்துரு...
........................
உங்க ஊரு சேலத்துக்குப் பக்கத்துலதான்-ன்னு எனக்கு தெரியும். நீ ப்ரீயா இருந்தா, இன்னைக்கு சாய்ந்தரம் மீட் பண்ணலாமா?

சரி, நான் வர்றேன். என்று சொல்லி கட் பண்ணிட்டான்.
மனம் மீண்டும் வேகமாகத் துடித்தது...
இப்போ என்ன சொல்லப் போறாளோ... அவள்கிட்டே என்ன சொல்லப் போறேன். ...
அன்று, சாயும்காலம் வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பினான். பிள்ளையார் கோவிலின் அருகே தானாகவே வண்டி நின்றது.
ஊருக்கு வரும்போதெல்லாம், எனக்கும் வீணாக்கும் எந்தத் தடையுமில்லாமல் கல்யாணம் நடக்க வேண்டும்-ன்னு வேண்டுவான். இன்னைக்கு ஏதோ வேண்டினான்.., ஆனா ரொம்ப நேரமா சாமி கும்பிட்டான்.

குப்பூர் பிரிவு ரோடை நெருங்கினான்.
சிவப்பு நிற ஏர்போர்ட் இன்னோவா சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது. கிட்டே போயி வண்டிய நிறுத்தினான்.
உள்ளே இருந்து ஸ்ரவந்தி வெளியே வந்தாள்.

அங்கே ஒரு லோக்கல் பஸ் ஸ்டாப் இருந்தது.. ஆனா அவ்வளவு கூட்டமிருக்காது.
நின்னுகிட்டு இருந்த எல்லாரும் ஸ்ரவந்தியவே பார்த்தாங்க.
அந்த ஊரு பக்கம் இவ்வளவு அழகா ஒரு பொண்ணை இதுவரைக்கும் யாருமே பார்த்தது இல்ல.
யாரோ சினிமா நடிகை போல இருக்கு என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்.

மெயின் ரோட்டில் இருந்து ஏர்போர்ட் நான்கைந்து கிலோமீட்டர் தள்ளி இருந்தது. சந்துருவும் ஸ்ரவந்தியும் நடக்க ஆரம்பித்தார்கள்.

........ 10 நிமிட நேரம் மௌனத்தில் கரைந்தது...
எப்படி இருக்கே ஸ்ரவந்தி...?
உண்மைய சொல்லட்டுமா?
.................
உன்னோட இஷ்டம்
.....
நேத்து உன்னைப் பார்த்தவுடனே, எனக்கு ஏதோ மாதிரி இருந்தது.... ராத்திரி முழுசும் தூங்கல... 
நான் இங்கே வந்த வேலை முடிஞ்சிடுச்சு. என்னோட கைட் என்னை உடனே பெங்களூருக்கு வரச் சொன்னாரு. 
ஆனா எனக்கு போகறதுக்கு மனசே இல்ல, உன்னைப் பார்த்து பேசிட்டு போகலாம்-ன்னு யோசிச்சேன். 
நாளைக்கு கிளம்பி வர்றேன்-ன்னு சொல்லிட்டேன்.
....................
நான் நிறைய அச்சீவ் பண்ணினேன் சந்துரு.
இதுவரைக்கும் 78 பேப்பெர்ஸ் பப்ளிஷ் பண்ணியிருக்கேன்.
நிறையா இன்னோவேஷன் அவார்ட்ஸ் வாங்கியிருக்கேன்.
8 பேட்டண்ட்ஸ் என் பேர்ல இருக்கு...
எல்லாம் இருந்தும், என்னோட லைப்ல ஏதோ மிஸ் பண்ற மாதிரி பீல் பண்ண்ணினேன். அப்போதான், நெட்ல உன்னைப் பத்தி சர்ச் பண்ண ஆரம்பிச்சேன்.... உன்னோட ப்லாக்ஸ் போஸ்டிங்ஸ்  எல்லாத்தையும் பார்த்தேன்.... இம்ப்ரசிவ்....
அப்புறம்தான், நான் ஏன் உன்னோட ப்ராப்போசல ஏத்துக்கக்கூடாது-ன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.... எனக்கு இந்த மாதிரி thoughts வந்து ஒரு வாரம்தான் இருக்கும். அதுக்குள்ளே, நீயே என்னைத் தேடி வந்தே...


... - சந்துரு ஏதோ சொல்ல வாயெடுத்தான்.... ஆனால் எதுவும் சொல்லவில்லை.

நீ வழக்கமா, வீகென்ட் தான ஊருக்கு போவே, நேத்து எதுக்காக கிளம்பினே? இன்னிக்கு ஒன்னும் ஹொலிடே இல்லையே?..

...............
அது வேற பிரச்னை... அப்புறமா சொல்லுறேன்..

எனக்கு எதையும் சுத்தி வளைச்சு பேசத் தெரியாது சந்துரு... 
நான் எல்லாத்துலயும் எவ்வளவு ஸ்பீடா இருப்பேன்-ன்னு உனக்கே நல்லா தெரியும்....
ஸ்ரவந்தி... எனக்கு கொஞ்சம் பேசுறதுக்கு டைம் கொடு..
நான் இப்போ தனி ஆள் இல்ல..
என் மனசுல இப்போ நீ மட்டும் இல்ல, ...
இல்ல, என் மனசுல இப்போ நீ இல்லவே இல்ல. ....
நான் வேற ஒரு பொண்ணோட மனசுல இருக்கேன்.....
I'm very sorry.... 

உன்னை எனக்கு எவ்ளவோ பிடிச்சு இருந்தது. பட் அது எல்லாம் இப்போ என்னோட வாழ்க்கையோட இறந்த காலம்....
.......................
 
சப்போஸ், நேத்து நீ என்னை பார்க்காம இருந்திருந்தா, எண்ண பண்ணியிருப்பே?
.......
பட் நான் பார்த்துட்டேனே? .................இன் கேஸ் உன்னை நான் பார்க்காம இருந்து இருந்தா, இந்த நேரத்துக்கெல்லாம் என்னோட அடுத்த ரிசர்ச் பேப்பர எழுத ஆரம்பிச்சு இருப்பேன். உன்கூட இப்படி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருந்திருக்க மாட்டேன்...

தென் ப்ளீஸ் டூ இட். என்று கூறி கிளம்ப முற்பட்டான்.

அப்போ, நான் உன் மனசுல இல்லன்னு சொல்றியா?

அய்யோ ஸ்ரவந்தி... என்னை கொல்லாதே!..... உன்னைப் பார்த்த நிமிஷத்துல இருந்து, நீ என்னை வேண்டாம்-ன்னு சொல்ற வரைக்கும் அனுபவிச்ச வேதனைய, நேத்து ஒரே நைட்ல  அனுபவிச்சேன்.

.... then whats stopping you? come on, lets continue our love. 
In fact., later period of our college life., I was also in love with you... 
but I wasn't realize when i was with you.. 
Now, its the correct time to take right decision.... 
I've taken mine.. & waiting for yours...

No Shravanthi.... 
I've believed that, I wasn't deserved for you.... 
still I'm not able to believe this moment is true..
but one thing is true., My love... My love, when I was loving you... That WAS true... & I have given the same love to Veenaa. now this love., the same love is also true....
...............
Shravanthi.. please try to understand me...
I'm with Veenaa now. 
I cannot leave her as such., & frankly speaking I don't wanna leave her... its neither my fault nor hers.

Yep... Yes... The fault is Mine. I'm an Idiot., I didn't give respect to your love., I've given only response for my career... I'm truly an idiot., not the genius people like normal college gals....( லேசான அழுகையுடன்..)

No Shravanthi... all mistakes are mine... if my love is true about you, I shouldn't have given up.... & the big mistake I made is, I've given my love to another girl.... Please forgive me... I cannot accept your proposal.....

-ஸ்ரவந்தி மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்.






Chapter VI





எனக்கென ஏற்கனவே.. பிறந்தவள் இவளோ.... ரிங் டோன் உருகியது.....
வெள்ளிக் கிழமை இரவு 12 மணிக்கு மேல் இருக்கும்....

சந்துரு, சேலம் அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு மூலையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.

ஸ்ரவந்தியை பிடிச்ச கண்டம்., சாரி, ஸ்ரவந்தி-ன்ற ஒரு கண்டம் பிடிச்சதுல இருந்து., பையன் ரெண்டு நாளா, சரியா தூங்கல.

வீணாவோட "சோ ச்சுவீ" -ன்னு சொல்லுற முகம் மட்டும் காலர் ஐடியில் தெரிந்தது.....
..................
-ஸ்ரவந்தியப் பத்தி இவகிட்டே சொல்லலாமா-ன்னு ஒரு நொடி யோசிச்சான்,.. இல்ல, அவ ஏற்கனவே பயந்திருந்தா...

இப்போதைக்கு வீட்டுல நடந்ததை மட்டும்  சொன்னா போதும். பஸ்ல நடந்தத அப்புறம் பார்த்துக்கலாம்.

வீட்ல நடந்ததா.. அதுவும் அவளுக்குத் தெரியாதே... அம்மாக்கு உடம்பு சரியில்லன்னுதான அவ நினைச்சுக்கிட்டு இருக்கா...

எதாவது சொல்லி சமாளிக்கணும்.

சொல்லுடா செல்லம்...
.................
ஹே... வீணா., என்ன எதுமே பேச மாட்டேன்குற?..... என்ன ஆச்சு? 
ஏண்டா ஒரு மெசேஜ் கூட அனுப்பல? .......
நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?..
சந்துரு.,
நான் நேத்துலருந்து, தூங்கவே இல்லடா... உன்னை வீட்டுக்கு அனுப்பின போதுலருந்து, எனக்கு என்னவோ ஒரு மாதிரியாவே இருந்துச்சுடா....
நேத்து ரொம்ப மோசமான கனவெல்லாம் வந்துச்சு..
எனக்கு ஒரே பயமா இருக்குடா.....
சீக்கிரம் ஊருக்கு வா...



உனக்கு என்ன சொல்லி சமாதானம் பண்றதுன்னே, எனக்குத் தெரியல......
எனக்கு ஒன்னுமில்லடா.. செல்லம், நான் நல்லாத்தான் இருக்கேன்...
நீ எதுக்கும் கவலைப் படாதே...

ஐயோ.. அத்தை எப்படி இருக்காங்க?.. அதைக் கேட்க மறந்துட்டேனே... 

அம்மாவுக்கு ஒன்னும் இல்ல, நல்லாத்தான் இருக்காங்க....

-அந்த நேரம் பார்த்துதானா, நம்ம டியூட்டி நர்ஸ் உள்ளே வரணும்?
பெல் அடித்தது..

வீணா, நான் கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன் -என்று சொன்னவாறே, மொபைலை அணைத்தான்...
பின்னர் பெஞ்ச்-ல இருந்து எழுந்தான்.
கதவைத் தாழ்பாள் போடாமலே விட்டிருந்ததால, நர்ஸ் நேரே உள்ளே வந்துட்டாங்க...

இவங்க, எந்திரிசாங்களா?
இல்ல.


டின்னெர் கொடுத்தீங்களா?
இல்ல எதுவுமே சாப்புடல., வேண்டாம்-ன்னு சொல்லிட்டாங்க...


ஓ கமான்.., இவங்க வேண்டாம்-ன்னு சொன்னா விட்டுடுவீங்களா? உடம்புல ஸ்டாமினா இல்லன்ன மருந்து எப்படி வேலை செய்யும்?........
 

ஹலோ, மிஸ் ஸ்ரவந்தி, ..... ஹலோ... மிஸ் ஸ்ரவந்தி..... ப்ளீஸ் கொஞ்சம் எழுந்திரிங்க...
-கண் விழித்த ஸ்ரவந்தி., யாரென்று பார்த்தாள்.
இல்ல அவங்களுக்கு தமிழ் தெரியாது...


Please take some food., This dosage is powerful., you need to have something in your stomach....
No., I'm not feeling hungry..
 

its ok. please take something...

ம்ம்ம், நீங்க இவங்களுக்கு என்ன வேணும்?
.......ம்ம், பிரண்ட்... கிளாஸ் மேட்.
 

(சிரித்துக் கொண்டே..) இட்ஸ்.. ஓகே... ரொம்ப நல்லா பார்த்துக்கறீங்க... நீங்க எதாச்சும் சாப்டீங்களா?...
ம்ம்ம், இல்ல... எனக்கும் பசிக்கல...

ஹ்ம்ம்ம்... ஓகே, இவங்கள எதாச்சும் சாப்புட சொல்லிட்டு, டேபிலட்ஸ் எடுத்துக்க சொல்லுங்க.
நாளைக்கு டாக்டர் வந்து பார்த்தவுடனே, டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்.
ம்ம், ஓகே தேங்க்ஸ்.
 

நீங்களும் எதாவது சாப்புடுங்க. ரொம்ப டல்லா இருக்கீங்க...
ம்ம்ம்.,

-ஸ்ரவந்தி, படுக்கையின் மீது இரண்டு கால்களையும் மடக்கி, கைகளால் அணைத்து, தாடைக்கு முட்டுக் கொடுத்தவாறு உட்காந்திருந்தாள். வேறு ஏதோ பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்..

ஸ்ரவந்தி, ப்ளீஸ், கொஞ்சம் சாப்புடு...
சத்தம் கேட்டவுடன், சந்துருவைப் பார்த்தாள். பின்னர், மறுபடியும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்....
அருகே வந்தான்.

ஸ்ரவந்தி, ப்ளீஸ், நான் சொல்றத கொஞ்சம் கேளு.........
நாம, நாளைக்கு பெங்களுருக்கு கிளம்பலாம்.
 
.
கிளம்பி..........?

உன்னை HAL -ல ட்ராப் பண்றேன்....
........ மறுபடியும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்....

ப்ளீஸ். நான் சொல்றதை புரிஞ்சுக்கோ... நான் வீணாக்கு என்ன பதில் சொல்லுவேன். அவள் ஏற்கனவே, ரொம்ப பயந்திருக்கா..............
ப்ளீஸ், என்னை வதைக்காதே, .. நான் சொல்றத கேளு. நீ என்னைப் பார்க்கவே இல்லன்னு நினைச்சுக்கோ...
உன்னோட காரியர் ரொம்ப நல்லா அமைஞ்சு இருக்கு.
என்னை நினச்சு உன்னோட டைம வேஸ்ட் பண்ணாதே....
.............
நீ இந்த மாதிரி செய்யறதால, உன்னைவிட எனக்குத்தான் வலி அதிகம்....
நீ என்னைக் காதலிக்க ஆரம்பிச்சு எவ்வளோ நாள் ஆகுது? மீறினா ஒரு மாசம் இருக்குமா?
ஆனா நான் உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சு ஒன்பது வருஷம் ஆகுது...


-சந்தர்பங்களும் சூழ்நிலைகளும், ஒரு மனிதனை பலப் பல வேதனைகளுக்கு உள்ளாக்கினாலும், அது தரும் பாடங்கள், வாழ்க்கைல ரொம்ப பெரிய தத்துவத்தைக் கொடுக்குது.

"ஸ்ரவந்தி, என்னைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்" என்று சந்துரு இத்தனை நாளா நினைத்து வந்தான். பட் நடந்தது என்ன?...

"சந்துரு தன்னோட காதல எப்படியும் ஏத்துக்குவான்" -ன்னு ஸ்ரவந்தி நினைச்சுட்டு இருந்தா. பட் நடந்தது என்ன?

இதுவரைக்கும் நடந்த சிச்சுவேசன்களுக்கெல்லாம், நம்ம கதாப் பாத்திரங்கள் யாருமே காரணம் இல்ல. எல்லாமே எதேச்சையாவே நடந்துச்சு.

அதே மாதிரிதான்.... சந்துரு,  மொபைல் டிஸ்ப்ளே எரிந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். எடுத்துப் பார்த்தால், கால் டைமர் ஓடிக்கொண்டிருந்தது...

-நர்ஸ் உள்ளே வந்த அவசரத்தில், மொபைலோட ரெட் பட்டனை நல்லா அழுத்தாம அப்படியே பெஞ்ச் மேல வச்சுட்டான். அதை இப்போதான்  பார்த்தான்...

ஓஒ. மை காட்...
ஹலோ வீணா, ..... நீ இன்னும் லைன்ன தான் இருக்கியா?
ஆக்ட்ச்வலா என்ன நடந்துச்சுன்னா...


மறு முனையில் அழும் குரல் கேட்டது..

ஹே வீணா., ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளு..
இணைப்பு துண்டிக்கப் பட்டது.

மறுபடியும் ட்ரை செய்தான், ......சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளது.

- ஸ்ரவந்தி மயக்கம் போட்டு விழுந்தவுடன், அவளை அருகே இருந்த ஏர்போர்ட் பர்ஸ்ட் எய்ட் சிகிச்சைப் பிரிவுக்கு தூக்கிப் போனான்.

அங்கே இருந்த டாக்டர்,
இவளுக்கு ஒன்னும் பிரச்னை இல்லை... 
பட் இருந்தாலும், BP அதிகமா இருக்கு. 
ஹார்ட் அட்டாக் வந்தாலும் வர்றதுக்கு சான்ஸ் இருக்கு. 
பெட்டெர் நீங்க இன்னைக்கு நைட் ஹாஸ்பிடல்ல இருந்துட்டே போயிடுங்களே-ன்னு சொன்னாரு.

சந்ருவுக்கும் அது சரியென்று பட்டது. எதாவது சொல்லி ஸ்ரவந்திய சமாதானப் படுத்தி ஊருக்கு அணுப்பி வச்சுடலாம். என்று நினைத்தான்.

என்னதான் இருந்தாலும், ஸ்ரவந்திகூட இருக்கறதுக்கு அவனும் கொஞ்சம் ஆசைப் பட்டான். அது அவளை சமாதானப் படுத்துறதுக்காக இருந்தாலும், பழைய காதல் அவன் மனசுல லைட்-ஆ டான்ஸ் ஆடிக்கிட்டேதான் இருந்துச்சு.

ஸ்ரவந்தி ஒரு ரெண்டு மணி நேரம் மயக்கத்துல இருந்தா. அந்த கேப்ல சந்துரு வீட்டுக்கு வந்து ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுட்டு,  செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு வர்றேன் அம்மா-ன்னு சொல்லிட்டு, மறுபடியும் ஹாஸ்பிடல் வந்துட்டான்.

மயக்கம் தெளிஞ்சும், ஸ்ரவந்தி எதுவுமே பேசல... ஏதோ சிந்தனைலேயே இருந்தா.

அப்புறம் தூங்கிட்டா... அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னுதான் இப்போ நாம பார்த்தோம்.

சந்துரு, ரூமை விட்டு காரிடருக்கு வந்தான்... வீணாவோட மொபைலுக்கு மறுபடியும், மறுபடியும் ட்ரை பண்ணினான்.. ஒரே ரெஸ்போன்ஸ்... சுவிட்ச் ஆப்....

நல்ல வேலையா, ஜெர்சியோட நம்பர் அவன்கிட்டே இருந்தது. ஜெர்சி-க்கு போனைப் போட்டான். அவ, போனை எடுத்து நான், ஊருக்கு கிளம்பி வந்துட்டேன்-ன்னு சொன்னாள்.

சந்துருவுக்கு என்ன பண்றதுன்னே தெரியல... நேரம் வேற ஆயிட்டு இருந்தது...
உள்ளே போயி.

ஸ்ரவந்தி, நான் இப்போ வீட்டுக்கு கிளம்புறேன். நாளைக்கு காலைல வந்து உன்னைப் பார்க்குறேன். 

தேவையில்ல. நானே என்னைப் பார்த்துக்குவேன். நீ உன்னோட வேலையைப் பாரு......................

-இதுக்கும் மேல, அங்கே இருக்க விரும்பாதவனாய், வீட்டுக்கு கிளம்பினான்.
வந்து வீட்டில் படுக்கும் பொழுது மணி மூனுக்கும் மேல ஆனது.

சந்துரு ஒரு நார்மலான ஆளா இருந்திருந்தா, ரெண்டு நாளா தூங்காம, சரியா சாப்புடாம இவ்வளோ ஸ்ட்ரெஸ்-சோட சுத்துனதுக்கு,  அவனோட மூளை குழம்பி பைத்தியம் பிடிச்சு இருக்கும்...
பட் அவன் IT ல வேல பாக்குறான். அதனாலதான், அவனால எவ்வளோ அடிச்சாலும் தாங்க முடியுது. ..


இவன் ரொம்ப ந ல் ல வ ன் -ப் பா............ ;-)


காலைல எழுந்திருக்கும் பொழுது மணி பத்துக்கும் மேல ஆனது.
நடந்தது எல்லாம் கனவு மாதிரியே இருந்தது....
எல்லாம் கனவாவே இருந்துட்டா ரொம்ப நல்லா இருக்கும்-ன்னுட்டே எழுந்திரிச்சான்.

கிளம்பிய முதல் வேலையாக ஹாஸ்பிடல்-க்கு போனான்.

-அப்பா கோவப் படுவாறேன்னுதான் பையன் வீடு தங்க மாட்டேன்ங்குறான் -ன்னு அம்மா நினைச்சாங்க. (என்ன இருந்தாலும் தாய்க்குலம் இல்ல?)

-ஸ்ரவந்தி அவனுக்காக காத்திருக்கவில்லை. டாக்டரிடம் சொல்லிவிட்டு, அவளே அவளை டிஸ்சார்ஜ் செய்து கொண்டு கிளம்பி விட்டாள்.

சரி கால் பண்ணி பார்க்கலாம்-ன்னு மொபைலை எடுத்தான். அப்போதான் புதுசா ரெண்டு மெசேஜ் இருந்ததை பார்த்தான்.

ஒன்னு வீணாகிட்டே இருந்து காலைல 6 மணிக்கு வந்திருந்தது. -
நான் கிளம்புறேன். உன்னோட வாழ்க்கைல இருந்து. ஆல் தி பெஸ்ட்...


இன்னொன்னு, ஸ்ரவந்திகிட்டே இருந்து 7 மணிக்கு.. -
நான் கிளம்புறேன். உன்னோட வாழ்க்கைல இருந்து. ஆல் தி பெஸ்ட்..
.

என்ன இது சொல்லி வச்ச மாதிரி ரெண்டு பேரும் ஒரே மாதிரி மெசேஜ் அனுப்பியிருக்காளுங்க .?
......................






ஜிமெயில், தினமலர் வெப்சைட், பாடல்.காம், இன்னும் பல விண்டோஸ் அடங்கிய மொசில்லா ப்ரௌசெரில் விவேக் நீந்திக் கொண்டிருந்தான். காதில் hp ஹெட் செட் அணிந்திருந்தான். ...
"என் காதல் சொல்ல நேரமில்லை" பாட்டு ஓடிக் கொண்டிருந்தது...

விவேக்கின் கியூபிக்கல் ஒரு கார்னரில் இருப்பதால், யார் வருவதும் போவதும் அவனுக்கு எளிதில் தெரிந்துவிடும்.

லேசான நறுமணம் காற்றில் கலந்தது...

மெல்லிய பேச்சுக்குரல் அப்புறம் லேசான சிரிப்புச் சத்தம்....

Fa நறுமணத்திலேயே வருவது யாரென்று தெரிந்து விட்டது....

Windos + D கொடுத்து , ALT + Tab -இல் Visual Studio 2008 Project விண்டோ-க்கு மாறினான். ரொம்ப சின்சியரா வேலை பார்ப்பது போல நடித்தான்...

இன்டெர்னல் கம்யுனிகேட்டரில் பக்கத்தில் இருக்கும் நண்பனிடம், சிக்னல் கொடுத்தான்,

டேய்., பீர்பால்,  தக்காளி என்னைப் பார்க்குறாளா-ன்னு பாரு. 
ஹ்ம்ம்.,

-தக்காளி, அவள் சிநேகிதியுடன், விவேக்கைத் தாண்டி, பக்கத்தில் உள்ள ஒரு பெரிய மீட்டிங் ரூமிற்குள் சென்று விட்டாள்.
உள்ளே போகும் முன், லேசாக விவேக்கைப் பார்த்தாள்.,
நம்ம பீர்பால் ஸ்பை தக்காளிய பார்த்தான்...
இல்ல, தக்காளி விவேக்கை பார்குறதைப் பார்த்தான்.

ஆமாடா., உன்னைப் பார்த்தாடா.....
 
ஹே...எஸ்.... மச்சி, உனக்கு ட்ரீட்... இன்னைக்கு சாயும்காலம் காபிடேரியா போலாம்...

டேய், என்னடா நடக்குது இங்கே?... 
நீ காதலுக்கு மரியாதை படம் பாக்கலையா?

பார்த்தேனே,..
அப்போ, இங்கே மறுபடியும் பாருடா.. வென்று....
என்னைத் தாளாட்ட வருவளோ.....
 
போதும். நிறுத்து. இதே மாதிரிதான் அன்னிக்கு ஒரு ஆண்டி உன்ன பாக்குறாங்கலான்னு பாக்க சொன்னே... 
டேய்., ங்கொய்யாலே....... என்னோட முன்னால் காதலிய ஆண்டி-ன்னா சொல்றே.,..

அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுடா... 
அதனாலதான் என்னோட முன்னால் காதலி-ன்னு சொன்னேன்.

இல்லன்னா.,  
பைப் லைன் காதலி-ன்னு சொல்லுவேன்.

எத்தனை டா..... 
அதெல்லாம் யாருடா கணக்கு வச்சுக்கறா?  -என்று கண்ணடித்தான். மறுபடியும் தன் வேலையைத் தொடர்ந்தான்.
................
.......................

டேய்., அவள் மறுபடியும் வர்றாடா...
ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்தில், மொசில்லாவில் இருந்து, ப்ராஜெக்ட் விண்டோ-க்கு மாறினான். மறுபடியும் சின்சியர் முகம்.

ஹாய்.. டூ யு ஹேவ் மார்க்கர் பெண்?
ஹே.. யா.. ஐ கெஸ்.. எஸ்.. -என்றவாறே, ஒரு பேனாவை, விவேக் எடுத்துக் கொடுத்தான்.
தேங்க் யு...

விவேக்கின் 32 பற்களும் முக்கால் வாசி தெரிந்தன..

டேய்., போதும் டா. அவ போயி ரொம்ப நேரமாயிடுச்சு... 
ஈஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ..,

ஆமா, நீ ஏன் அவள எப்போ பாத்தாலும் சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி பல்லைக் காட்டுறே? நீ நார்மலா அப்படி பண்ண மாட்டியே? 
:-D ...ஈஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ..

என்னமோ நடக்குது..... நடத்து நடத்து...
ஈஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ..





விவேக், சந்துருக்கு என்ன ஆச்சு?.....ராடன் ராதிகா-வின் (சந்துருவின் மேனேஜர்) குரல் கேட்டு திரும்பினான்.

ஒன்னுமில்ல ராதிகா... அவங்க மாமா பொண்ணு, வயசுக்கு வந்திருக்கும்., அதுதான் அங்கேயே டேரா  போட்டிருப்பான்-ன்னு நினைக்குறேன்.. என்று கூறி சிரித்தான்.

ஒஹ் இஸ் இட்? என்கிட்டே காலைல போன் பண்ணி ஒன் வீக் லீவ் வேணும்-ன்னு கேட்டான்.
நீங்க கொடுத்திருக்க மாடீங்களே!....


ஆமா. இங்கே நிறைய வேலை இருக்கு... எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வர சொன்னேன்.
ஒஹ்.. ஓகே.

உடம்பு சரியில்ல-ன்னு சொன்னான்... வாய்ஸ்-ம் ரொம்ப டல்லா இருந்தது...
ஒஹ்.. அப்படியா, எனக்கு எதுவுமே தெரியாதே...

ஓகே கைஸ்.. பாய்.. ஐ ஹேவ் டு ரஷ் போர் எ மீட்டிங் .... என்று கூறிவிட்டு ராதிகா சென்றார்.
........................................


டேய், என்னடா ஆச்சு அவனுக்கு? 
ஒன்னுமில்லடா, சரக்கை மாத்தி அடிச்சிருப்பான்., அதுதான் வாந்தி வந்திருக்கும். ... அதை சாக்கா வச்சு ராடன் ராதிகா காதுல பூ சுத்தியிருப்பான்...


ஒஹ்.. அவன் ஆளையும் எங்கேயோ கானோமேடா....
 அவளும் சரக்கை மாத்தி அடிச்சிருப்பா.. . உனக்கு எதுக்குடா இதெல்லாம். அவங்களை பத்தி கவலைப் படாதே மாமு... உன் ஆளைப் பாரு இன்னைக்கு காலைல எவனோ வறுத்துட்டு இருந்தான்.... 


என்னோட ஆளா.. யாருடா அது?.. 
அதுதாண்டா. நம்ம பேரழகன் ஸ்னேகா.....


டேய், நீ அடங்கவே மாட்டேடா., - என்று சொல்லி பீர்பால், விவேக்கின் மீது கைக்கு கிடைத்த எதையோ எறிந்தான்...




அன்றிரவு, விவேக்கின் மொபைலில்.,
டேய், சந்துரு என்னடா ஆச்சு?....
 
................ மீண்டும் நடந்தது எல்லாத்தையும் சொன்னான்.

சரி விடுடா மச்சான்... நீ வீணாகிட்டே மட்டும் தானே பொய் சொல்லி இருக்கே?.. ஸ்ரவந்திகிட்டே சொல்லுல இல்ல?

இல்லடா....

ஓகே. விடு., வீணாவ நான் சமாதானப் படுத்துறேன்... அவளுக்கு நான் போன் பண்ணினேன். PG ல தான் இருக்கா. நான் போய் அவளை பார்க்குறேன். நீ இந்த விஷயத்தை என் கிட்டே விட்டுடு...

.......
 

ஆமா, அப்புறம் பிரியா மேட்டர் என்ன ஆனுச்சு? 
அதை அப்புறம் சொல்றேன்-டா. முதல்ல வீணாவ சரி பண்ணனும்.
நான் இப்போ கிளம்பலாம்-ன்னா அப்பா, எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டுப் போ-ன்றாரு. வீணா போட்டோ காமிச்சேன்., அம்மா ஓகே சொல்லிட்டாங்க... அப்பாதான் ரொம்ப பிரச்சன பண்றாரு...

சரி விடுடா... வீணா
கையால ஒரு காபி போட்டு கொடுக்க சொன்னா, ஓகே சொல்லிடுவாரு...
---
ரெண்டு பேரும் சிரித்தார்கள்..




Next Day..
ராடன் ராதிகாவோட எக்ஸ்டென்சன் என்னன்னு பார்த்து, அவங்களுக்கு இன்டெர்-காம் மூலமா கால் பண்ணினான்.

ஹலோ ராதிகா,
எஸ்..

நான்தான் விவேக்.
சொல்லு விவேக்.

டெஸ்டிங் எஞ்சினியர் ரவி இருக்காரு இல்ல, 

அவரு வீடு என் ரூமுக்கு பக்கத்துலதான். அவரு வீட்ல இருந்தே வொர்க் பண்றாராம். 
இன்னீக்கு உங்க ப்ராஜெக்ட் ஸ்பிரிண்ட ரிலீஸ் பண்ணச் சொன்னாரு. வீட்ல இருந்தே டெஸ்ட் பண்றாராம். உங்க கிட்டே சொல்லச் சொன்னாரு.

ஓஒ. அப்படியா. சந்துருவும் ஊர்ல இல்ல, அவனோட பேக்கப் வீணாவும் உடம்பு சரியில்ல-ன்னு இன்னிக்கு வரல. 


ஓகே., நான் வீணாவ நாளைக்கு வரச் சொல்றேன். அவ வந்து இந்த ஸ்பிரிண்ட ரிலீஸ் பண்ணுவா...

ஓகே ராதிகா... பாய்.





அப்புறம், ரவிக்கு போனைப் போட்டான்.
சொல்டா விவேக். என்னா திடீர்ன்னு போன் பண்ணியிருக்கே?

ஒன்னுமில்லடா மச்சான்.. நம்ம ராடன் ராதிகா உன்கிட்டே என்னா கேட்டாலும் ஆமா-ன்னு சொல்லு. வேற எதுவும் இல்ல. 

ஓகே டா மச்சான். பாய்.





-அடுத்த நாள், வீணா ஆபீஸ்-க்கு வந்தா. காலைல காபிடேரியாவுலையே அவளை மடக்கினான்.
 
ஹே வீணா, எப்படி இருக்கே? 
ஹ்ம்ம்,

அப்புறம் சந்துரு என்னா ஆளையே காணோம்...
 
ஏன் உன்னோட ரூம் மேட் தானே, உனக்கு தெரியாதா?
 
இல்லையே., அவன் மாமா பொண்ணு வயசுக்கு வந்திருக்கா -ன்னு தான் நான் இங்கே ஒரு புரளிய கிளப்பி விட்டிருக்கேன். உன்கிட்டே கேட்ட வேற எதாவது இன்போர்மேசன் கிடைக்கும்-ன்னு பார்த்தேன். 
இல்ல., எனக்கு எதுவும் தெரியாது.

சரி., நான் ஸ்ரவந்தி கிட்டேயே கேட்டுக்கறேன்.
 
என்னா...
 
... ஒன்னும் இல்ல. 
இல்ல நீ ஏதோ சொன்னே.

-
குறும்புப் புன்னகையுடன்
நான் ஸ்ரவந்தி கிட்டேயே கேட்டுக்கறேன்-ன்னு சொன்னேன்.
 
ஒஹ்.. உனக்கும் எல்லாமே தெரியுமா? என்று கிளம்ப எழுந்திரிச்சா...
 
உட்காரு வீணா. உன்கிட்டே நான் கொஞ்சம் பேசணும்.... 
நீ ஒன்னும் உன்  பிரண்டுக்காக ஆர்கியு பண்ண வேண்டியதில்ல...
 

நான் அப்படி எதாவது சொன்னேனா?... 
சரி சொல்லு, என்ன பேசணும்?
 

இப்போ உனக்கு என்ன பிரச்சன-ன்னு சொல்லு.
.........
அதெல்லாம் உனக்குத் தேவை இல்ல... நான் கிளம்புறேன்.

ஹே கமான்... ஓகே. நீ எதுவும் சொல்ல வேண்டியது இல்ல.
நான் சொல்றத மட்டும் கேட்டுட்டுப் போ..
...........
நீ அப்படி என்னதான் கனவு கண்டே? பயப்படுற அளவுக்கு.?..
 
ஒஹ்.. இதெல்லாம் கூட உன்கிட்டே சொன்னானா. ஸ்டுபிட்....

அங்கே தான் பிரச்சன...
நீ ரொம்ப பயந்திருந்ததாலதான் உன்கிட்டே பிரியா பத்தி எதுவுமே சொல்லாம கிளம்பிட்டான்.
 
எந்த பிரியா?
 

அவனோட பியான்சி .. 
என்ன?..
 
மாமா பொண்ணு-ன்னு சொல்ல வந்தேன்.
அக்ட்சுவலா, அவனுக்கும் பிரியாவுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணத்தான் அவங்க அம்மா அவனை ஊருக்கு வரச் சொன்னங்க. நீ ஏற்கனவே, பயந்திருந்ததாலதான், உன்கிட்டே அதைப் பத்தி எதுவும் சொல்லாம ஊருக்குப் போயிட்டான்.
.............
அவன் வீட்ல உன்னைப் பத்தி சொல்லிட்டான்.....
......-
நடந்தது எல்லாத்தையும் சுருக்கமா சொன்னான்...

அவன் உன்கிட்டே இதுவரைக்கும் எந்த பொய்யும் சொன்னது கிடையாது. அது உனக்கே தெரியும்.

இப்போ நடந்தது எல்லாம் ஏதோ ஒரு சின்ன அக்சிடென்ட் மாதிரி... இதுக்கு யாரையும் குத்தம் சொல்ல முடியாது.
நீ அவனுக்கு ஒரு முறை போன் பண்ணி பேசு.... எல்லாம் சரியாயிடும்...

அவன் உனக்காகத் தான் ஸ்ரவந்திய வேண்டாம், ப்ரியாவும் வேண்டாம்-ன்னு சொல்லிட்டு, அவங்க அப்பா கிட்டே சண்டை போட்டுட்டு வீட்ல உட்காந்திருக்கான்...

நான் சொல்றதை சொல்லிட்டேன். அதுக்கப்புறம் உன்னோட இஷ்டம்...

ஆனா, சந்துரு ஒரு பொழைக்கத் தெரியாதவன்...
ஸ்ரவந்தி மட்டும் என்கிட்டே அப்படி ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நான், தக்காளியும் வேண்டாம், ஒரு சொரக்காயும்  வேண்டாம்-ன்னு அவ பின்னாடியே போயிருப்பேன்.... ச்ச்சே.. எனக்கு மட்டும் ஏன் அப்படி ஒரு சான்ஸ் கிடைக்க மாட்டேங்குது....


-அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, பீர்பால் அந்தப் பக்கம் வந்தான்.

இந்த பீர்பாலோட ஆள்தான் என்னைப் பார்த்து சிரிக்குது... நான் என்ன பண்ணட்டும்..
 
-பீர்பால் அவர்களைப் பார்த்து ஹாய் சொல்ல வந்தான். ஆனால் விவேக் அவனை பேச விடவில்லை.
 

வாடா மச்சான், உன்னோட ஆளு பேரழகன் ஸ்னேகா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா.. நாம போலாம்...
 

- என்று பீர்பாலை இழுத்துக் கொண்டு நகர்ந்தான்.

வீணா முகத்தில் யோசிக்கும் அறிகுறி தென்பட்டது...



டேய்., இன்னிக்கு காலைல இருந்து அவளுக்கு போன் பண்ணினியா? 
இல்லடா..


ரொம்ப நல்லது.
வெயிட் பண்ணு... அவளே உனக்கு போன் பண்ணுவா.
 
எப்படிடா.


நான் அவகிட்டே இன்னைக்கு ரொம்ப நல்லவன் மாதிரி பேசியிருக்கேன். பாக்கலாம்.
 ஹ்ம்ம்..  சரிடா..






Chapter VII



சந்துரு ஸ்ரவந்தி, பேசியதை ஒட்டுக் கேட்டவுடன், வீணாவின் மன அழுத்தம் அதிகமானது...
சந்துரு, வீணாவிற்கு சாதகமான முடிவை எடுத்து இருந்தாலும், "நீ இப்படி பண்றதுல, உன்னைவிட எனக்குதான் வலி அதிகம்"-ன்னு ஒரு டயலாக் தெரியாம சொல்லிட்டான்... பட் அந்த வார்த்தை மட்டும் வீணாவின் மனதைப் போட்டு வாட்டி எடுத்தது..

நான் மட்டும், சந்துருவின் வாழ்கையில் வந்திரா விட்டால், அவன் இந்த நேரம் என்ன செய்திருப்பான்.
உன்னை விட எனக்குதான் வலி அதிகம்-ன்னு சொன்னானே... அப்படின்னா, அவனுக்கு ஸ்ரவந்தி கூட இருக்கறதுதான் ரொம்ப பிடிச்சிருக்கா? நான் இருக்கறதாலதான், அவன் ஸ்ரவந்திய வேண்டாம்-ன்னு சொல்லிட்டானா

அதுவுமில்லாமல், அன்று (வெள்ளிக் கிழமை) இரவு 8 . 30 ஷோ-வில்  "உன்னாலே உன்னாலே" படம் பார்த்து, சதா காரக்டரில் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி இருந்தாள்,
சந்துரு மட்டும் அன்னிக்கு தாரைமங்கலத்தில், என்னைப் பார்க்கலன்னா என்ன செஞ்சிருப்பான்-ன்னு யோசிச்சாள்... அதுதான், அடுத்த நாள் காலைல உணர்ச்சி வசப் பட்டு, அப்படி ஒரு மெசேஜ் அனுப்பிட்டு, வழக்கம் போல அப்புறமா பீல் பண்ணினாள்..

நினைவுப் பார்வை காலத்தின் பின்னோக்கிச் சென்றது...
இரண்டு வருடங்களுக்கும் மேலிருக்கும்....

அது கல்கியின் சரித்திரப் புதினங்களைப் படித்து, அதில் லயித்து, அந்தக் கால சிற்ப அதிசயங்களை, நேரில் சென்று பார்க்க ஆரம்பித்தக் காலம்....

நாம் எத்தனையோ கோவில்களுக்குச் சென்றிருக்கிறோம்., அதிலுள்ள தூண்களையும், அதன் சிற்பங்களையும், ஏதோ அலங்காரப் பொருட்கள் என்று நினைத்து, அசட்டையாக நகர்ந்திருப்போம். {நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை }

ஆனால், சிற்பங்களுக்கும் ஒரு பாஷை உண்டு...

ஒரு கலைஞனின் கலைப் பார்வையில் மட்டுமே அது புலப்படும்.... வீணா, இந்த ரகசியங்களை எல்லாம் கொஞ்சக் கொஞ்சமாக கற்க ஆரம்பித்தாள்.

அது அவளுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது.

அதே மன நிலையில் உள்ள ஒரு தோழியையும், அத்தோழியின்  மனம் கவர்ந்த நாயகனையும் அழைத்துக்கொண்டு, தமிழ் நாட்டின், சில முக்கிய பகுதிகளைப் பார்க்க திட்டமிட்டாள்...
அதில் வடிகட்டிய மூன்று இடங்கள். 1 . மாமல்லபுரம், 2 தஞ்சை , 3 . தாரைமங்கலம்
ஒரு நல்ல கோடை விடுமுறையில் கிளம்பினார்கள்.

[நல்லாதானடா இருந்தே, திடீர்-ன்னு ஏன் வைரமுத்து மாதிரி பேசுற?]

மாமல்லபுரத்து சிற்ப அதிசியங்களைப் பார்த்தவுடன், வீணா அடைந்த ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை... ஒவ்வொரு சின்ன, சின்ன சிற்பங்களையும் பார்த்து பார்த்து பிரம்மிதாள்.,

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள வேலைப் பாடுகளை... அப்பப்பா என்னவென்று சொல்வது.... எனக்கு தெரியல, நீங்க வீணா-கிட்டேயே கேட்டுக்கோங்க.

[அப்போ நீ எதுக்கு இங்கே இருக்கே, நாங்க எல்லாத்தையும் வீணா- கிட்டேயே கேட்டுக்கறோம் ]

கடைசியாக, தாரைமங்கலதுக்கு வந்து சேர்ந்தார்கள். அது, சேலம்-ஓமலூரில் இருந்து, பத்தே கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.... {ம்ம்ம், கதைக்கு பக்கமா வந்துட்டோம்...}

அப்பப்பா, இந்தக் கோவிலை எப்படித்தான் கட்டினார்களோ? என்று மலைத்தாள்... அளவில் தஞ்சை பெரிய கோவிலை விட சிறியதாக இருந்தாலும், இதன் வேலைப் பாடுகள் மற்றும் அமைப்பு , இதுவரை எங்கும் காணாததாக இருந்தது....

அந்தக் கோவிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள, ஒரு கைடைத் தேடினார்கள்.

அங்கிருந்த, ஒரே ஒரு கைடும், பிசியாக யாருக்கோ, வேக வேகமாக சொல்லிக் கொண்டிருந்தார்... வீணாவிற்கு அந்த கைடைப் பிடிக்கவில்லை...
[கைடை என்ன கல்யாணமா பண்ணிக்கப் போறா?.. புடிக்கலையாம்..]

என்ன செய்யலாமென்று யோசித்துக் கொண்டிருந்தாள்.  சுற்றும் முற்றும் பார்த்தாள்...

பாதாள லிங்க அறையிலிருந்து, ஒரு கை லேசாக வெளியே வந்தது..பின், ஒரு அழகான குழந்தையை வெளியேற்றியது., பின்னர், இன்னொரு குழந்தையையும் வெளியேற்றியது... பின்னர், இரண்டு கைகளையும் ஊன்றி, தானும் மேலே ஏறியது....

ஆனா, அந்த உருவத்தின் முதுகுப் பகுதி தான் வீணாவுக்குத் தெரிந்தது..

வீணாவின் மனசில் லேசான ஒரு சலனம்..
இது யாரா இருக்கும்?..

மாமா, பாருங்க பாபி அந்தப் பக்கம் ஓடுரா... -என்ற குரலைக் கேட்டு, வீணாவின் மனம் ஆர்ப்பரித்தது.. ஏனென்றால், அந்தக் குழந்தைகள் அந்த வாலிபனுடையது அல்ல.

ஹே பாபி, எங்கே போற, இங்கே வா...- என்று அந்த வாலிபன் லேசாக அதட்டினான். அதட்டினாலும், அன்புடனே இருந்தது.

அந்த வாலிபனைப் பார்க்க ஆசைப் பட்டாள்... அவனைப் பின்தொடர்ந்தாள்.

சந்துரு, அவன் அக்காகுழந்தைகளைக் கூட்டிக் கொண்டு கர்பக் கிரகத்தை விட்டு வெளியே வந்தான்.
இங்கே பாரு ஜோ, இங்கே பாரு பாபி,... இந்த சிங்கத்தோட வாய்க்குள்ளே ஒரு உருண்டைக் கல்லு இருக்கு. ஆனா அது வெளிய வராது. நாம சுத்தி விட்டா, அது சிங்கத்தோட வாய்க்குளேயே சுத்தும்....  என்று கூறி, அந்த உருண்டைக் கல்லை, சுழற்றிக் காண்பித்தான்.

அதிசயம், அனால் உண்மை... சிற்பக் கலையின் சிகரம் இது. என்று வீணா மனதில் நினைத்தாள்.

இங்கே பாரு பாபி, எறும்பு இந்த கிளியோட மூக்குல போயி, முயலோட காதுல வந்து, யானையோட வால்ல வரும் பாரு -என்று கூறி, அங்கே உள்ள ஒரு அலங்காரத் திட்டின், ஒரு சிறு குழியில் ஒரு எறும்பை விட்டான்., மற்றொரு குழியில், ஒரு சிறு சாக்லேட் துண்டை வைத்தான்.
என்ன அதிசயம், எறும்பு இரண்டு மூன்று துவாரங்களில் வெளியே வந்து, கடைசியாக, இனிப்பை அடைந்தது.

ஹை.. என்று குழந்தைகள் கை கொட்டின.

வீணாவிற்கு, மயக்கமே வரும் போல இருந்தது..
அங்கே இருந்த அதிசயம் அப்படி... எப்படித்தான் செதுக்கி இருப்பர்களோ தெரியவில்லை... மரத்திலோ, அல்லது, சுண்ணாம்பினாலோ  இதை ரொம்ப ஈஸியா செஞ்சுடலாம். ஆனா கல்லில் செய்றது, ரொம்ப கஷ்டம்...

இதுவரைக்கும், வீணா சந்துருவின் பின்னாடியே நின்று கொண்டிருந்தாள்.

Excuse Me...  - ஒரு இனிமையான குரலைக் கேட்டுத் திரும்பினான்.
இருவரின் மனதிலும் ஒரே எண்ணம்.

இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கோமே?...

அரை நிமிட நேரம் மௌனத்தில் கரைந்தது...

மாமா, வாங்க போலாம்.- என்று  பாபி தான் அவர்களை சுய நினைவுக்குக் கொண்டுவந்தாள்..

வீணாவின் தோழியும், தோழியின் கணவரும், அங்கு வந்து சேர்ந்தார்கள்..வீணா பேச ஆரம்பித்தாள்.

நாங்க ரொம்ப தூரத்துல இருந்து இங்கே வந்திருக்கோம். எங்களுக்கு இந்த சிற்பக் கலை மேல ரொம்ப ஆசை.
அந்த கைட் சொல்றது எதுவுமே எங்களுக்குப் பிடிக்கல..நீங்க எங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்றீங்களா?
- தட்டுத்தடுமாறி கேட்டாள்.

வீணாவிற்குப் பிடித்த இந்த கலைப் பைத்தியம், சந்துருவுக்கு ஏற்கனவே பிடித்திருந்தது.
BE முடித்த பின், பெங்களூரில் புதுப் புது சிநேகங்கள் கிடைத்தன.

ராடன் ராதிகா கலை ஆர்வம் மிக்கவர்.
சந்துருவுக்கு கல்கியின் படைப்புகளை அறிமுகம் செய்து வைத்தார்.

சந்துரு அதுவரை படித்திருந்ததெல்லாம்., வெறும் க்ரைம் நாவல்கள்தான்.. அதுவும் ரொம்ப குறைவான நாவல்களே..

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைப் படிக்க ஆரம்பித்தான்.
முதல் மூன்று அத்தியாயங்கள் நகரும் பொழுதுதான், டைம் போறது தெரிஞ்சது.
அதுக்கப்புறம், காலை ஆறு மணி அலாரம் அடிக்கும் போதுதான் மறுபடியும் கடிகாரத்தைப் பார்த்தான்... அந்த நேரம் வரை, சரியாக, முதல் பாகத்தை முடித்திருந்தான்...

உடலில், மனதில், ஏதோ ஒரு புத்துணர்வு... ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான்.
இத்தனை நாளாக, தன் மனதைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று விலகியதாக நினைத்தான்... அது என்னவென்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.

பொன்னியின் செல்வனில் கல்கி செதுக்கியிருந்த உயிர்களில், குந்தவை, சந்துருவின் மனதைக் கொள்ளை கொண்டாள். ஏனென்றால், சந்துரு தன்னை வந்தியத் தேவனாகவே பாவித்து, அந்த சரித்திரப் புதினத்தைப் படித்தான்...

ஒரு கேவலமான ஆதர்  புக்-கைப் படித்து விட்டு,  working with C - Yashwant P Kanithkar புக்-கைப் படிக்கும் பொழுது, நமக்கு ஏற்படும் பிரம்மிப்பு, அவனுக்கு இப்போது ஏற்பட்டது.

ராதிகாவிடம் அன்று லீவ் சொல்லி விட்டு, உடனே சேலம் புறப்பட்டான். அஜந்தா-புக் சென்ட்டர் போயி, அங்கிருந்த கல்கியின் எல்லா பதிப்புகளையும் ஒரு காபி வாங்கிக் கொண்டு நேரே பெங்களூர் ட்ரைன் ஏறினான்...

ஒவ்வொரு நாளும், சாரி, இரவும் இரண்டு, இல்லாட்டி மூனு மணி வரைக்கும் படிச்சிட்டுதான் தூங்கினான்.

நாம எந்தக் கதையைப் படிச்சாலும், அதிலுள்ள பாத்திரங்களை நம் மனம் உருவகப் படுத்திக் காட்டும். நாமும், அந்த உருவங்கள் பேசுவது போல பாவிச்சு, கதைய படிப்போம்.

சந்துருவின், மனக் கண்ணில், குந்தவை தேவிக்கு ஒரு உருவத்தை கொடுத்திருந்தான்,
அந்த உருவம்தான், அவனோடு இப்போது பேசிக் கொண்டிருப்பதாக உணர்ந்தான்...


வீணாவை ஒரு நார்மல் ஹோம்லி  பிகர் என்று மட்டும்தான், நமக்குத் தெரியும். ஆனால், சந்துருவின் கலைப் பார்வையில், அவள் சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய சாத்வீகப் பெண்மணி... சாக்ஷாத் குந்தவைப் பிராட்டியே நேரில் வந்து தன்னிடம் ஏதோ பேசுவதாகவே கொஞ்ச நேரம் நினைத்தான்.

வாங்க மாமா, போலாம் என்று ஜோ-வும் கூப்பிட்டவுடன் தான், எங்கே இருக்கிறோம், என்று உணர்ந்தான்.
...இருடா,,, என்று அவனை அதட்டி விட்டு,

எனக்கே அவ்வளவா எதுவும் தெரியாதுங்க...
ஏதோ இங்கே, குழந்தைங்களுக்கு விளையாட்டு காமிக்கலாம்-ன்னுதான் கூட்டிட்டு வந்தேன்.


Its ok.,  உங்களுக்கு எவ்ளோ தெரியுமோ சொல்லுங்க, எங்களுக்கு அதுவே போதும். உங்களுக்கு இஷ்டமில்லைன்ன வேண்டாம்...


சந்துருவிற்கு, நகர்வதற்கு மனமில்லை.
சரியென்று சொல்ல ஆரம்பித்தான்.
  • ரிஷி பத்தினி முக பாவங்கள்,  அவள் தோளில் இருக்கும் பிரசாதம், அதைக் கொத்த வந்த கிளி, அந்த நேரம் பார்த்து அவிழ்ந்த சேலை,  கிளியை விரட்டாமல், மானத்தைக் காத்த அழகிய கைகள்... இவை எல்லாமும் ஒரே சிற்பத்தில், ஒரே கல்லில், செதுக்கப் பட்டிருந்தது...
{ தாரமங்கலத்தின், அதிசயங்களை சந்துருவின் வாயினால், கிட்டத்தட்ட, மூன்று மணி நேரம், வீணா கேட்டுக் கொண்டிருந்தாள்.,  கலை ரசம் சொட்டும் உட்பிரிவு என்பதால், கதையின் சுவாரஸ்யத்தை மனதில் கொண்டு  அதனைத் தனித்து வெளியிடுகிறேன்.... அப்புறமா }

ஒரு தேர்ந்தெடுத்த, கைடைப் போல, மிகவும் பொறுமையாகவும், அழகாக தமிழிலும்,  விவரித்தான். ஆனால், வீணாவின் கண்களைப் பார்க்கும் பொழுது மட்டும் தடுமாறினான்...

இதுவரை, வீணா, தனது வாழ்கையில் அந்த மாதிரி ஒரு அனுபவத்தை உணர்ந்ததே இல்லை... ஏதோ வித்தியாசமாக ஆனால், இனிமையாக, லேசான பதைபதைப்புடன் இருந்தது.

சந்துரு-விடமிருந்து, விடை பெறும் நேரம் வந்தது....
வீணாவின் மனம் பேச ஆரம்பித்தது.
ஹே வீணா, உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி பித்துப் பிடிச்சது போல இவன் பின்னாடியே திரியுற?
நீ யாரு? எங்கே இருக்கே-ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு..

இன்னொரு மனம் பேசியது. வீணா, இவர்தான் உனக்கு சரியான துணை. இவர்கூட உன் வாழ்நாளைக் கழிக்க சான்ஸ் கிடைச்சா, உன்னைவிட கொடுத்து வச்சவ, இந்த உலகத்துல யாரும் இல்ல...

சந்துரு-வுக்கோ, தான், எதையோ இழப்பது போல இருந்தது.
ரெண்டு பேருமே எதையோ சொல்ல முடியாமல் தவித்தார்கள்...

நீங்க தப்பா எடுத்துக்கலன்னா, உங்களைப் பத்தி கொஞ்சம் சொல்றீங்களா?.. உங்களை எங்களுக்கு ரொம்ப புடிச்சு இருக்கு.
-வீணாவின் தோழியும், அவர் கணவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, ஏதோ அர்த்தத்துடன் சிரித்துக் கொண்டனர்.

சந்துரு, அவனைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சான்..

டோஸ்ட் மாஸ்டர்ஸ் கிளப்-இல் ஐஸ் பிரேக்கர் ஸ்பீச்-ல் கூட அவ்வளோ நல்லா அவனைப் பத்தி சொல்லல. பட் இப்போ, வீணாகிட்டே பிச்சு உதறி தள்ளினான்.

காலைல பதினோரு மணிக்கு ஆரம்பிச்ச, இவங்க சந்திப்பு, அன்னதான மண்டபத்தில்  மதிய உணவு முடிந்தும்,  மூன்று மணி வரை தொடர்ந்தது.

கடைசியில், சந்துருவுடனும்  , அவனுடைய அக்கா குழந்தைகளுடனும், சில பல போட்டோக்கள் எடுத்துவிட்டு, வீணாவின் தோழி அவளை, வலுக்கட்டாயமாக, இழுத்துச் சென்றாள்.

அன்றிரவு, இருவருமே தூங்கவில்லை....

அடுத்த நாள், அவனால் வீட்டிலேயே இருக்க முடியவில்லை. மறுபடியும் தாரமங்கலம் சென்றான்.
என்ன அதிசயம், வீணா அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்....

மறுபடியும் ரொம்ப நேர மொக்கை. அவர்கள் என்ன, என்னென்ன பேசியிருப்பார்கள் என்று, உங்களின் கற்பனையிலேயே விட்டு விடுகிறேன். இருந்தாலும், நம்ம சந்தானம் மாதிரி ஒன்னும் தெரியாத சின்னப் பசங்களுக்காக,  அவர்கள் என்னென்ன டாபிக் பத்தி பேசினார்கள் என்று இங்கே குறிப்பிடுகிறேன்....
[ங்கொய்யாலே!.... ஷூட்டிங் பிஸில இருக்கேன், வந்தேன்னா தெரியும்..]
  • வேலை, காரியர்
  • சொந்த பந்தங்கள்.... நண்பர்கள்.
  • படிச்சது, படிக்காதது
  • பிடிச்சது, பிடிக்காதது
  • தெரிஞ்சது, தெரியாதது
  • புரிஞ்சது, புரியாதது
  • அறிஞ்சது, அறியாதது
  • கடிச்சது, கடிக்காதது
  • விழுந்தது, விழாதது
அன்னைக்கு சந்துரு வருத்த கடலைல, தாரமங்கலமே, புகை மண்டலமா மாறிடுச்சு.

கஷ்டப் பட்டு வீட்டுக்கு போனாங்க...
அதுக்கும் மேல வீணாவால சென்னைல இருக்க முடியல... ரிசைன் பண்ணிட்டு பெங்களுருக்கு வந்துட்டா.
சந்துரு டீம் ல ஒரு வேகன்சி இருந்தது. (உருவாக்கினான்) சந்துருவும் வீணாவ ரெபர் பண்ண, ராடன் ராதிகாவும், அவன நல்லவன்னு நம்பி, வீணாவ ரெக்ரூட் பண்ணினாங்க.....

இந்த மாதிரி ஒரு வழியா, இவர்கள் காதல் நல்ல முறையில் மலர்ந்தது...






நானு கன்னடா கலிதா இதினி  
டேய், என்னடா சொல்றே?

நானு கன்னடல்லி  மாதட்தினி  
அதுக்கு..

நீனு  நன்னா  ஜோதே மாதட பேக்கா-ந்தரே கன்னடல்லி மாதாடு.... 
போடா.... இவனே.. வேற வேல இல்ல. வந்துட்டான் வாஸ்கோடகாமா மாதிரி.

மச்சா, ஒருத்தன், புதுசா, எதாவது செஞ்சா, அதைப் பாராட்டனும்...
 
நீ., இங்கே வந்து எத்தன வருஷம் ஆகுது?

கிட்டத் தட்ட, மூனு.. 
இத்தனை நாளா கத்துக்காம, இப்போ ஏன் கத்துக்கறே?


ஈ ஈ.ஈ.ஈ ஈ ஈ ஈ ....
 
யாருடா,..... தக்காளியா?.... அடப் பாவி....
வேண்டாம்டா.... அவ பாக்கறதுக்குத்தான் தக்காளி மாதிரி இருக்கா....... நீ ப்ரொபோஸ் பண்ணினே, அப்புறம் பத்ரகாளியா மாறிடுவா.


ஒஹ்...... அப்படியா? .............சரி மாறட்டுமே........... யாரு வேண்டாம்-ன்னு சொன்னது?

 டேய்,., நான் சிரியசா சொல்றேன்... விட்டுடு.

உனக்கு ஏன் மச்சா ரொம்ப அனல் அடிக்குது? நீ ட்ரை பண்ணிப் பாத்தியா?... 
இல்ல, பட் எனக்குத் தெரியும்.
 
என்ன தெரியும்?
அவளைப் பத்தி..
 
எவ்ளோ தெரியும்? 
டேய், வேண்டாம் எரிச்சல கிளப்பாதே...
 
ஏன்டா மச்சா, டென்ஷன் ஆகர?
உன் நல்லதுக்குத்தாண்டா சொல்றேன்...
 
நானும் உன் நல்லதுக்குத்தாண்டா சொல்றேன்...,  
என்ன சொல்றே?
 
தக்காளிய மறந்துடு-ன்னு சொல்றேன்.. 
டேய்,  நானா இப்போ கன்னடா கத்துக்கறேன்?
 
இல்ல?
அப்புறம் எதுக்கு, என்னை தக்காளிய மறக்க சொல்றே?

சரி, மறக்காதே.. 
நான் எதுக்கு அவள நினைக்கணும்?
 
சரி, மறந்துடு....
அய்யோ... உனக்கு இப்போ என்னடா வேணும்..
 
தக்காளி.
-பீர்பால், மயக்கம் போட்டு விழுந்தான்.... விவேக் மறுபடியும், கன்னடத்தில் பேச ஆரம்பித்தான். அது ஒன்னும் இல்ல, அமாவாசை பக்கமா வந்தா பையன் இப்படித்தான், கொஞ்சம் லைட்-ஆ ........





ஹே, கேன் யு ப்ளீஸ் டெல் மீ வாட் இஸ் தி மீனிங் ஆப் தி வோர்ட் "தக்காளி"?
-தக்காளி அவள் தமிழ் சிநேகிதியிடம் கேட்டாள்.

"தக்காளி" மீன்ஸ் "டொமாடோ"... ஒய்.. வாட் ஹேப்பன்?..
நோ... நத்திங்.. சிம்ப்லி ஐ ஆஸ்க்ட் ....

-மனசுக்குள்.. [ இவன் ஏன் என்னை டொமாடோ-ன்னு சொன்னான்?... ]

இன்டெர்னல் கம்யுனிகேடரில், தக்காளி விவேக்கை பிங் பண்ணினாள்.


hi Vivek,
hey.. how's going

yep, fine., how about you?..
cool... so whats up?

mm., I need lil help in Intellisense concept.. people suggested you, since you are .net expert..
ha ha.. not at all. but I can help u a lil.. tel me what do u want?

can i come to your place...
all the time.. :-)


சந்தோஷத்தில், விவேக் கியுபிகளில் இருந்து, எழுந்து குதித்தான்...

டேய், பீர்பால், தக்காளி இங்கே வர்ரப் போறா., உன்னோட இடத்த சுத்தம் பண்ணி வை.
எதுக்குடா.

இல்லாட்டி, ரெஸ்ட் ரூம்-க்கு ஓடி போயிடு.

முடியாது., நீ வேணும்-ன்னா அவளை ரெஸ்ட் ரூம்லையே போய் பாரு. 

போடா இவனே..

-என்று கூறி, அவசர அவசரமாக, தனது இடத்தை சுத்தம் செய்தான்.

ஒரு ஐந்து நிமிடம் கழித்து, அதே fa நறுமணம்... விவேக் பரவசமானான்..

வந்தாள்... கொஞ்ச நேரம் டெக்னிகல் விசாரணை,  விவேக்கிற்கு தெரிந்ததை விட அனுமானத்தின் அடிப்படையில், பிச்சு உதறினான்,.. தக்காளி, சிரித்துக்கொண்டே அதை ரசித்தாள்...
பிறகு வந்த வேலை முடிந்தது., கிளம்ப முற்பட்டாள்.

.....Vivek, if you don't mind, can you please tell me why are you calling me "Thakkali" ?
:-)....you got the meaning?

yep.. my friend told me.... am i looking like a tomato?
nope., not at all..

then why are you calling me?...
hmm., if I like someone..., I'll name them with the words i like...

... you mean.. you like me...
a lot.

but dont call me "Thakkali"... I'm not comfortable with this name..
ok., tell me your nick name...

No Nick Names,
then have mine....?

இல்லை முடியாது -என்று சிரித்துக் கொண்டே அவனை விட்டு நகர்ந்தாள்.....

situation song: கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்.. என்னைக் கட்டி இழுத்தாய்......
[டேய், உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல..? என்ன படம் காட்டுறியா?]
[எஸ்....]
[பாருங்க மகா ஜனங்களே... அடுத்தவன் லவ்-க்கு, அதுவும் இந்த கதை ஹீரோவோட லவ்வுக்கு  இவன் எதாவது பாட்டு போட்டானா? இல்ல ஒரு situation தான் நல்லா சொன்னானா?,
ஆனா இப்போ பாருங்க, இவனோட லவ்வுக்கு மட்டும் டூயட் போடுறான்... டான்ஸ் ஆடுறான்... இதெல்லாம் கேட்கறதுக்கு ஆளே.. இல்லையா?...]







விவேக்கிடம் பேசிவிட்டு வந்த வீணா, அன்று முழுவதும் யோசனையிலேயே இருந்தாள்.
சரி கொஞ்சம் வேலை செய்யலாம் என்று நினைத்து,  ப்ரோஜெக்டைத் திறந்தாள்.
ஒரு பட்டனுக்கு, எக்ஸ்செல் ஐகான் கொடுப்பதற்காக, மை பிக்ஸ் ஐ திறந்தாள்.

thumbnails view- இல் இருந்ததால், ஒரு படம் மட்டும் அவளைக் கவர்ந்தது.
அது, சந்துரு வீனாவுக்குக் கொடுத்த ரிசன்ட் பர்த்டே கார்டு. அதை அவனே தயாரித்து இருந்தான்



வீணாவின் கண்களில் சில துளி கண்ணீர் வழிந்தது ...

ஒரு வேலை, சந்துரு என்னைத் தாரமங்கலதுல பாக்கலன்னா என்ன செஞ்சிருப்பான்?..

இல்ல நான், இந்த மாதிரி யோசிச்ததே தப்பு.

இந்த ரெண்டு வருஷமா, நான், அவன், ... இல்ல நாங்க வாழ்ந்த வாழ்க்கை, நரசிம்ம பல்லவரும், சிவகாமி தேவியும் வாழ்ந்த வாழ்க்கைக்கு சமம்.

நான் எவ்வளவோ பக்கத்துல இருந்தப்பையும், சந்துரு எல்லை மீறியது இல்ல....

அவன் இதயத்துல இருக்கற எல்லாமே, எனக்குத் தெரியும். எங்களோட ப்ரீக்குவன்சி ஒரே வேகத்துல இருக்கறதுனாலதான் அவனுக்கு ஏதோ ஒரு கஷ்டம்-ன்னா, எனக்கும் ஏதோ கஷ்டப் படுற மாறி பீல் பண்ணினேன்.

இந்த மாதிரி ஒரு ஆபர் கிடைச்சா, வேற யாராவதா இருந்திருந்தா, சத்தியமா, என்னைக் கழட்டி விட்டுட்டு, ஸ்ரவந்தி பின்னாடியே போயிருப்பானுங்க... இதை விவேக்கே சொன்னான்.

இதுக்கும் மேல சந்தருவ நான் சந்தேகப் படக் கூடாது.
என்னது, சந்தேகமா? இல்லவே இல்ல, சந்துரு என்கிட்டே எதையோ மறைச்சுட்டான்-ன்னுதான் அவன் மேல எனக்குக் கோவம்...
வீணா மொபைலை எடுத்தாள், சந்துருவுக்கு போன் பண்ணினாள்....

....

சந்துரு, ப்ரியாவின் வீட்டில் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை போல் குடும்பத்துடன் அமர்ந்திருந்தான்.









ChapterVIII






என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு,
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த  அர்த்தம் தருவேன்...
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடும் முன்,  செய்தி அனுப்பு....ஊ ஊ ஊ ஊ ஊஉ

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்,
உன்னிடத்தில் கொண்டுவரத் தெரியவில்லை...
காதல்தனை கொண்டுவர வழி தெரிந்தால், சொல்லியனுப்பு... ஊ ஊ ஊ ஊ ஊஉ


வீட்டில், விஜய் டிவி-யின் காதலிக்க நேரமில்லை டைட்டில் சாங் ஓடிக் கொண்டிருந்தது...
பட்டுக்குட்டி ப்ரியா, அவளுடைய ரூமில் ஆடிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய கட்டிலின் அருகில் உள்ள டேபிள்-இன் மீது, சந்துருவின் மடியில் பிரியா, குழந்தையாக இருந்த பொழுது, மொட்டை அடித்து காது குத்திய செரிமெனியில் எடுத்த ஒரு அழகான போட்டோ...

ஆடிக் கொண்டே, அந்த போட்டோவை எடுத்து, அதில் இருக்கும் குட்டி சந்துருவைப் பார்த்து பாட ஆரம்பித்தாள்....

இதை, ப்ரியாவின் அப்பா, எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதன் விளைவுதான், அவர் அன்று சந்துருவின் வீட்டுக்கு வந்து, எப்போ பொண்ணு பாக்க வரீங்க-ன்னு கேட்டாரு.

இன்னைக்கு சந்துருவோட அப்பா, அவனை வலுக் கட்டாயமா இழுத்துட்டு வந்து இங்கே உட்கார வச்சு இருக்காரு.

ப்ரியாவைப் பத்தி, நான் இங்கே கொஞ்சம் சொல்லணும்.
ஓமலூர் அருகே ஜிஞ்சிணக்கா பாளையம்-ன்னு ஒரு ஊரு, அந்த ஊருல பிரியா ரசிகர் மன்றம்-ன்னு ஒரு சின்ன, இளைஞர்கள் நற்பணி மன்றம் ரகசியமா செயல் பட்டுகிட்டு இருக்கு.

அந்த ஊருல இதுவரை பொறந்த பொண்ணுங்கலிலேயே, ரொம்ப அழகான பொண்ணு நம்ம பிரியா-ன்னு மன்றத்தோட உறுப்பினர்கள் அனைவரும் முழுமனதாக, தரைல அடித்து சத்தியம் பண்ணி இருக்காங்க.

பிரியா படிச்சது சேலம் சோனா காலேஜ் ஆப் டெக்னாலஜி,
[அவ பக்கத்துக்கு வீட்டு பையன் பேரு பாலாஜி. அவங்க கணக்கு வாத்தியாரு பேரு நேதாஜி. கெமிஸ்ட்ரி வாத்தியாரு பேரு ராஜாஜி..]

அவளுக்காக, ஒரு தனியார் பஸ் அந்த ஊரில் காலையில் மட்டும் நிற்கும், மற்ற வேளைகளில் நிற்காது.

ஒரு குரூப்ல பத்து பொண்ணுங்க இருந்தாங்கன்னா, அதுல பிரியா மட்டும் தனியா தெரிவா, ஏன்னா அவளோட முகம் ஒரு பெஸ்ட் போடோபிசியல் பேஸ்.

அவளுக்கு ரொம்ப பிடிச்சது, கணக்கு டீச்சர் வேலை. அதுக்காக, BSc Mathematics படிக்க ஆசைப் பட்டா. பட், சந்துரு BE படிச்சதால, அவங்க வீட்ல அவளையும் BE படிக்க சொன்னாங்க, இவளும் சரி-ன்னு ஒத்துக்கிட்டா.

கிராமத்துப் பக்கங்கள்ல எல்லாம், மாமா பசங்க, அத்தை பொண்ணுங்க.. இந்த மாதிரி உறவு இருக்கறவங்க, அவ்வளவா பேசிக்க மாட்டாங்க. இப்போ, ப்ரியாவ எடுத்துக்குவோம், அவ சந்துரு கிட்டே அவ்வளவா பேசவே மாட்டா., ஆனா, மத்த சொந்தக் கார பசங்ககிட்டே பேசுவா, அதேமாறிதான், சந்துருவும்.

பிரியா காலேஜ் போயி படிச்சிருந்தாலும், அவளுக்கு சிட்டி பசங்களைக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. நாலஞ்சு பேரு தைர்யமா ப்ரொபோஸ்  பண்ணினாங்க... பட் இவ, ஒபெனா சொல்லிட்டா, எனக்கு உங்கள பிடிக்கல. நான் எங்க அப்பா அம்மா சொல்றவங்கலதான் கல்யாணம் பண்ணிப்பேன். (அப்பா அம்மா, சின்ன வயசுல இருந்தே, சந்துரு தான் உனக்கு மாப்பிள்ளை-ன்னு கிண்டலுக்கு நிறையா தடவை சொல்லி இருந்தாங்க)

ப்ரியாவும் கிட்டத்தட்ட சந்துரு தான் நமக்கு-ன்னு முடிவே பண்ணி இருந்தா... அதனாலதான் அப்பப்போ, டான்ஸ் ஆடுறது, போட்டோ கிட்டே பேசறது... etc மாதிரியான குறும்புத்தனத்துல எல்லாம் ஈடுபட்டா.

அவ, சந்துரு கிட்டே கடைசியா பேசி, ஒரு நாலஞ்சு வருஷம் இருக்கும்.

அந்த நாலஞ்சு வருஷத்துல தான், நம்மாளு,  ஜில்பான்ஸ், கில்பான்ஸ் வேலை எல்லாம் பண்ணி இப்போ ஓஞ்சு, டயர்டா இருக்காரு.




சந்துரு இப்போ, "ப்ரோபப்ளிட்டி அண்ட் குஇங் தியரி"  குவெஸ்டின் பேப்பரை விட கேவலமான மனோ நிலைல இருந்தான்.

அப்பாகிட்டே எவ்வளவோ எடுத்து சொன்னான். வீணாவோட போட்டோவைக் கூட காமிச்சான். மொபைல் டிஸ்ப்ளே உடைஞ்சதுதான் மிச்சம்.

எங்க பேச்சைக் கேக்கற மாதிரி இருந்தா இங்கே இரு, இல்லாட்டி நடைய கட்டு-ன்னு ஒரே வார்த்தைல சொல்லி முடிச்சிட்டாரு.

எனக்கு வீணாதான் வேணும், நீங்க சொல்றதை என்னால கேட்க முடியாது-ன்னு அவன் சொல்லிட்டு கிளம்பி வர்றதுக்கு, அவனுக்கு ரொம்ப நேரம் ஆகாது. பட் "அப்பா அம்மா சம்மதம் இல்லாம நீ எது செஞ்சாலும் அது உனக்கு நன்மையைத் தராது" -ன்னு  அவனோட குரு அவனுக்கு அட்வைஸ் பண்ணி இருக்காரு. அவன் அதை இது நாள் வரைக்கும் மீறியது இல்ல.

எப்படியாவது அப்பா கிட்டே பெர்மிசன் வாங்கிடலாம்-ன்னு தான் இந்த நிமிஷம் வரைக்கும் நினைச்சுகிட்டு இருக்கான்.

பெருசுங்க எல்லாம் சேர்ந்து பேச ஆரம்பிச்சதுங்க...

சந்துரு, பிரியா வீட்டுக்கு வந்ததில் இருந்தே மூஞ்சத் தூக்கி வச்சுக்கிட்டு இருந்தான்.

ப்ரியாவோட அப்பா, அந்த ஊரு தாசில்தார். ஒருத்தனப் பாக்கும் போதே அவனோட மனசுல என்ன இருக்கு-ன்னு சொல்லிடுவாரு.

சந்துரு இப்படி, இஞ்சி தின்ன குரங்கு மாதிரி உட்காந்துட்டு இருக்கறதப் பார்த்தவுடனே, அவரு தெரிஞ்சுகிட்டாரு... சரி. பையனுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல போல இருக்குது.. -ன்னு

சந்துருவோட அப்பாகிட்டே பேச்சு கொடுக்க ஆரம்பிச்சாரு...

அப்புறம் மச்சான், மாப்பிள்ளை என்ன சொல்றாரு?
அவனுக்கு என்னங்க மச்சான்  அவன் என்ன சொல்லப் போறான்?.... கட்டறா தாலிய-ன்னா கட்டிட்டு போய்டுவான்.

அது எல்லாம் அந்தக் காலம் மச்சான், இந்த காலத்து பசங்க நிறையா எதிர்பாக்கறாங்க. பொண்ணு படிச்சிருந்தா மட்டும் பத்தாது, வேலைக்கும் போகணும், கை நிறையா சம்பாதிக்கணும்-ன்னு நினைக்கறாங்க.
அதுதான், நம்ம பிரியா டாட்டா கம்பெனி ல செலக்ட் ஆயிருக்கா இல்ல, அப்புறம் என்ன வேணும்?

வேலை, ஒரு பக்கம் இருக்கட்டும் மச்சான், நம்ம பசங்க என்ன நினைக்குறாங்க-ன்னு அவங்ககிட்டேயே ஒரு தடவ கேட்டுடுவோம்?
என் பையன் கிட்டே எல்லாம் ஒன்னும் கேட்க வேண்டியதில்ல.. நீங்க வேணும்-ன்னா பிரியா கிட்டே கேட்டுட்டு சொல்லுங்க.

இன்னும், அந்த காலத்துலேயே இருக்காதீங்க மச்சான்... காலம் மாற மாற, நாமளும் மாறனும் இல்ல?

அதுக்குன்னு சின்னப் பசங்க கிட்டே போயி உட்காந்து பஞ்சாயத்து பண்ண சொல்றீங்களா?  நமக்குத் தெரியாதா? இவங்களுக்கு எது எது நல்லது-ன்னு?

ஹ்ம்ம், நீங்க என்ன சொன்னாலும் அப்படியேதான் இருப்பீங்க.... சரி நாமலே பேசிட்டு இருந்தா எப்படி? இது அவங்க வாழ்க்கை, அவங்களும் கொஞ்ச நேரம் பேசிப் பாக்கட்டுமே?....

-சந்துருவின் அப்பா ஏதோ சொல்ல வந்தாரு... ஆனா ப்ரியாவோட அப்பா அவரை பேச விடல.

சந்துரு, நீ போயி, பிரியா கிட்டே உனக்கு என்ன பேசணுமோ பேசு. ப்ரியாவும் உன்கிட்டே ஏதோ கேட்கணும்-ன்னு நேத்து என்கிட்டே சொன்னா...


இதுதான் சாக்கு-ன்னு நம்ம ஹீரோ படார்ன்னு பிரியா கிட்டே போயிட்டான்.
{ என்ன யோசிக்கறீங்க? எங்கே போய் இவங்க பேசிக்கறாங்க-ன்னா? ரோஜா படத்துல அரவிந்த்சாமி வைஷ்ணவிக்கிட்டே பேசுற, அதே லோகேசன் தான்.}

[எவன் எவனுக்கோ, ஊர்ல பாடை கட்டுறானுங்க, உனக்கு எவனும் கட்ட மாட்டேன்-ங்குரான்களேடா!]

பிரியா, நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்...
அதுவரைக்கும், பிரியா ரொம்ப சந்தோசமாதான் இருந்தா. இப்போ மூஞ்சி மாறிடுச்சு.

உன்கிட்டே சொல்றதுக்கு என்ன?........ நான் என் கூட வொர்க் பண்ற ஒரு பொண்ணைத்தான் விரும்புறேன். பட் அப்பா ஒதுக்க மாட்டேன்குராறு... நீதான், மாமா கிட்டே சொல்லி எனக்கு ஹெல்ப் பண்ணனும்.

பிரியா எதுவும் பேசவில்லை. மௌனமாகவே சென்று விட்டாள்.

சந்துருவோட அப்பா, மறுபடியும் பேச்சை ஆரம்பிச்சாரு.

அப்புறம், எப்போ நிச்சயம் பண்ணலாம் மச்சான்?
கொஞ்சம் பொறுங்க மச்சா..  இப்போதான தை பொறந்திருக்கு... கூடிய சீக்கிரம் வழியும் பொறந்துடும். நீங்க சந்துரு கிட்டே வீட்டுல கூட்டிட்டு போயி கலந்து பேசுங்க, நாங்களும் பிரியா கிட்டே பேசுறோம். எல்லாமே சுபமா இருந்துச்சுன்னா, மாசி மாசத்துலயே முடிச்சுடலாம்...
எல்லோரும் கிளம்பிய பிறகு, ப்ரியாவிடம் பேசினார்.

பட்டுக்குட்டி, சந்துரு கிட்டே, நல்லா பேசுனியாம்மா?.. நீ என்ன சொன்னே, அவன் என்ன சொன்னான்?
............
ஏம்மா, இப்படி இருக்கே? எதாவது பேசு?
...........

பிரியா சந்துரு கூறியதை, ஒரு வார்த்தை கூட இடறாமல் திருப்பிச் சொன்னாள்.

ஓ, அப்படியா, நான் ஒரு வகைல எதிர்பாத்ததுதான்.
உங்க அம்மா கூட பொறந்தவர்தானே, அதுதான், அவளை மாதிரியே, புடிச்சா ஒரே புடிவாதமா இருக்காரு.

ஆனா, மாமாவுக்கு உன் மேல பாசம் அதிகம்.. அதுனாலதான், சந்தருவ உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்றாரு.

ஆனா அவன் அப்படி இல்லையே? அவன் வேற யாரையோ இல்ல விரும்புறான்....

சரி விடு, நீ ஒன்னும், மனசைப் போட்டு குழப்பிக்காதே,...
அவன் இப்போவே இது எல்லாத்தையும் உன்கிட்டே சொன்னது ரொம்ப நல்லதா போச்சு...

என்ன, உனக்குத்தான் கொஞ்சம் வருத்தமா இருக்கும்...
நாங்க எல்லாம் அவனைத் தான் உனக்கு கல்யாணம் பண்றதா ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தோம், 

சரி விடு, அதைப் பத்தி பேசி இப்போ என்ன புண்ணியம்?
சந்துரு கொடுத்து வச்சது அவ்வளவுதான். நம்ம வீடு மஹா லக்ஷ்மிய வேண்டாம்-ன்னு சொல்லிட்டு போறான்... இருக்கட்டும்.

உனக்கு இவனை விட சூப்பரான மாப்பிளையா, நான் பார்குறேனம்மா ., நீ ஒன்னும் கவலைப் படாதே...


இந்த பாருடி,
(ப்ரியாவின் அம்மாவை அதட்டினார்)
உங்க அண்ணன் கிட்டே நீயே, எதாச்சும் சொல்லி சரி பண்ணிடு. மறுபடியும், அவரு இங்கே வந்து இதைப் பத்தி பேசக் கூடாது.

அன்றிரவு, ப்ரியாவின் தலையணையில் ஒரு சில கண்ணீர்த் துளிகள்....


பிரியா, நிறையா பசங்களோட ப்ரோபோசல வேண்டாம்-ன்னு சொன்னா, அதனால, அவள் எதிர்பார்த்த இந்த ப்ரோபோசல் விலகிப் போனது- அப்படின்னு சொல்றதுக்கு, என் மனம் இடம் கொடுக்கவில்லை...

சின்னக் குழந்தங்க மனசுல நாம, இந்த மாதிரி ஆசைகளை விதைக்கக் கூடாது.. அது பின்னாளில், அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும்.
எவ்வளவுதான், படிச்சு இருந்தாலும், இன்னும் நாம அப்படியேதான், விளையாட்டுக்காக பேசிட்டு இருக்கோம்.

[டேய், என்ன மெசேஜ் சொல்றியா? ஒன்னு வுட்டேன்னா தெரியும். அத்தைப் பொண்ணு வேணாம், அத்தையே கட்டிக்கறேன்-ன்னு சொன்ன நாயி நீ, இங்கே பெரிய உத்தமன் மாதிரி பேசுறியா?]

அதுக்கப்புறம், ப்ரியாவோட அப்பா, பின்வாங்கிட்டாறு...

சந்துருவோட அப்பா, இன்னும் கோவம் அதிகமாயி, வீட்ல கத்திட்டு இருந்தாரு.
சந்துரு தன்னோட, கடைசி ஆயுதத்தை எடுத்தான்.

படார்-ன்னு கால்ல விழுந்துட்டான்.

அப்பா, என்னை புரிஞ்சுக்கோங்கப்பா... வீணா இல்லாம என்னால இருக்கா முடியாதுப்பா-ன்னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டான்.
அம்மாவும் வந்து அப்பாவை சமாதானப் படுத்தினாங்க....

ஏங்க, நமக்கு இருக்கறது ஒரே பையன், அவனுக்கு புடிச்ச மாதிரி தான் சந்தோசமா இருந்துட்டுப் போகட்டுமே..
அவனை ஏன் இப்படி போட்டு தொந்தரவு பண்றீங்க...
உங்க தங்கச்சி பொண்ணு மட்டும்தான் உங்களுக்கு ஒசத்தியா?
அவன் பார்திருக்கறதும் நல்லா பொண்ணாதான் தெரியுறா?
கண்ணுக்கு லட்சணமா, அழகாதான் இருக்குறா... சரி-ன்னு சொல்லுங்க...


ஹ்ம்ம், நீங்க எல்லாம் முடிவு பண்ணிட்டு, என்னை ஒரு ஒப்புக்கு சப்பான் ஆக்கிடீங்க....இருக்கட்டும், இருக்கட்டும்., நல்லா இருந்தா சரி... போடா... , போயி, உனக்கு எந்த பொண்ணைப் புடிச்சு இருக்குதோ, அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ போ....

மிக நீண்ட மன உளைச்சளுக்குப் பிறகு, சந்துருவின் முகத்தில் லேசான புன்னகை....




ப்ரியாவின் வீட்டிற்கு சென்றிருந்ததால், சந்துரு மொபைலை வீட்டிலேயே, மறந்து விட்டுட்டு போய்ட்டான்.
நம்ப மாட்டீங்க, 255 மிஸ்ட் கால் வீணா-கிட்டே  இருந்து, வந்திருந்துச்சு...

[டேய், நீ சொன்னதை, இதுவரைக்கும் யாருமே நம்புனதில்லடா...]

சந்துரு, இந்த நல்ல விஷயத்தை, வீணா-கிட்டே சொல்லலாம்-ன்னு ஆசப் பட்டான். போனை எடுத்தான். வீணா-க்கு கால் பண்ணினான், கால் போனது, வீட்ல கரண்ட்-ம் போனது. மொபைலில் சார்ஜ்-ம் தீந்து போனது.

_____________________________________________________________________

விவேக், கம்பெனி-யின் மெயின் கேட்-ல், கேபிற்காக நின்று கொண்டிருந்தான்.
அந்த நேரம் பார்த்து, தக்காளியும், அவளது தோழியும் அங்கே வந்தனர்.
இல்ல, அவங்க வருவாங்க-ன்னு தெரிஞ்சே, இவன் கால் மணி நேரத்துக்கு முன்னாடி போயி நின்னுகிட்டு இருந்தான்.

ராடன் ராதிகா, தன்னுடைய சான்ட்ரோவில் வந்தாங்க.
விவேக்கைப் பார்த்ததும், வண்டிய நிறுத்தினாங்க... இவன் அதைக் கவனிக்காதது மாறியே நடிக்க ட்ரை பண்ணி, வேற எங்கேயோ பார்த்துக்கிட்டு இருந்தான்.

வண்டி ஹார்ன் அடிச்சு கூப்பிட்டாங்க.
ச்சே.....என்னோட நல்ல மூடை கெடுக்கறதுக்குன்னே காலங்காத்தால வந்துடுச்சு.. என்று அலுத்துக் கொண்டே,
ஹாய் ராதிகா... என்று கூறி, வண்டியில் ஏறினான்.
என்ன ஒரு சர்ப்ரைஸ்? தக்காளியின் தோழி, ராதிகாவுடன் முன் சீட்டில், தக்காளி மட்டும் பின் சீட்டில், இப்போ, இவனும் போய் ஜோதில ஐக்கியம் ஆய்ட்டான்.

வளைவுகள் நிறைந்த ரோடு...  ஒரு சைன் வேவ்,  லெப்ட், ரைட், லெப்ட், ரைட், ரைட், மறுபடியும் லெப்ட், அப்புறம் பார்கிங்.... அட அட அட... எத்தன வளைவு...
பட் தக்காளி இவனை இடிக்கவே இல்ல. இவனும் அவள இடிக்கவே இல்ல, ரெண்டு பேரும் கதவுக்கு மேல இருந்த கைபிடிய பிடிச்சுக்கிட்டே, உட்காந்துட்டு இருந்தாங்க.
பட், இதுல ரசிக்கக் கூடிய விஷயம் என்னன்னா, இவங்க எல்லாரும் காருக்கு உள்ளே ஏறினவுடனே., கண்கள் இரண்டால் சாங் ப்ளே ஆக ஆரம்பிச்சது.... இது ஒரு தற்செயல்....

[த்தூ... இதெல்லாம் ஒரு பொழப்பா?]



நாட்கள் நகர்ந்தது....
சந்துரு, வீணாவின் வீட்டில் உட்காந்திருந்தான்...
பார்த்தவுடன், யாருக்கும், சந்துருவைப் பிடிக்கவில்லை.
பார்க்க பார்க்கத்தான் லேசாக பிடிக்க ஆரம்பித்தது.

ம்ம்ம், அப்புறம் தம்பி, எங்கே படிச்சீங்க?...
PSG கோவை அங்கிள்.. 2005 passed out.

ஓ, அப்படியா, எப்படி சீட் வாங்குனீங்க, மெரிட்டா இல்ல காசு கொடுத்து...
இல்ல அங்கிள், மெரிட் தான்.

ஓ.. நல்லது. நல்லது... அப்புறம், மேற்கொண்டு என்ன பண்ணலாம்-ன்னு இருக்கறீங்க, மேல படிக்கற மாதிரி எல்லாம் ஐடியா இல்லையா?
ஆமா அங்கிள். MBA படிக்கலாம்-ன்னு பிளான் பண்ணி இருக்கோம்...

ம்ம்ம்ம்., நீங்க வீட்ல எத்தன பேரு?  கூட பொறந்தவங்கல்லாம் எங்கே இருக்காங்க?..
ரெண்டு அக்காங்க அங்கிள், அவங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சு.

ம்ம், அப்பா என்ன பண்ணிட்டு இருக்காரு?...
கவர்ன்மென்ட் செர்வன்ட் அங்கிள், ரிடயர்ட் ஆய்ட்டாரு...

ஒஹ்..., சரி, சொந்தமா வீடு வாசல் எல்லாம் இருக்கா?
இருக்கு அங்கிள்...

ஹ்ம்ம், சரி.. வீணா எங்களுக்கு ரெண்டாவது பொண்ணு....
தெரியும் அங்கிள்... சாரி., சொல்லுங்க...

... எங்களுக்கு பையன் இல்ல... வீணாவோட பெரியம்மா பையன் தான் ஒருத்தன் இருக்குறான். அவனும் பெங்களூர் ல தான் வேலைல இருக்குறான்., அவனும் வந்து உங்களைப் பார்த்து பேசணும்-ன்னு சொல்றான்...

சரி அங்கிள்....
...


இன்னும் எவ்வளவு டீடைல்ஸ் கறக்க முடியுமோ அவ்வளவும், கறந்துட்டு, நாங்க கலந்து பேசிட்டு,  வீணாகிட்டே எங்க முடிவை சொல்லி அனுப்புறோம்-ன்னு மொக்கையா ஒரு பதில சொல்லி பையன வெறும் கையோடவே அமிச்சுட்டாங்க....




சந்துருவின் மொபைலில்..
ஹலோ,
ஹாய், நான் வீணாவோட பிரதர், தருண் பாலாஜி....

அஆங்... சொல்லுங்க தருண்.
நான் உங்ககிட்டே நிறையா பேச வேண்டி இருக்கு... உங்க வீடு எங்கே இருக்கு..

- அட்ரஸ் கொடுத்தான்...


ஒஹ்... நீங்க ஆபிஸ்-க்கு பக்கத்துல தான் தங்கி இருக்கீங்களா?
ஆமா.

ஓகே., நான் நாளைக்கு ஒரு பதினோரு மணி அளவுல, உங்களை ஆபிஸ்ல வந்து பாக்குறேன்.
ஓகே.




காலங்காத்தால, 7  மணிக்கு போன் வந்தது....
ஹலோ, எனக்கு அந்தப் பக்கமா வர்ற வேண்டிய வேலை இருந்தது., நான் இப்போ பெலந்துர் பஸ் ஸ்டாப் ல தான் நின்னிட்டு இருக்கேன்.

ஒஹ்.. ஓகே, நேரா உள்ளே வாங்க, ஒரு வோடாபோன் ஷாப் இருக்கும், அதுக்குப் பக்கத்துல, இருக்கற பில்டிங் ல ரெண்டாவது ப்ளோர்...
பரஸ்பரம் விசாரித்து விட்டு., பேச ஆரம்பித்தார்கள். கிட்டத் தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல பேசினார்கள், அதுல ஒரு சில சுவாரஸ்யமான டயலாக்ஸ்  மட்டும் இங்கே...

உங்களுக்கு எதாவது பியுச்சர் பிளான் எதாவது இருக்கா?
சாரி.

ஐ மீன், பின்னாடி, எதாவது பிசினஸ் ஆரம்பிக்கற மாதிரி?..
இல்ல, இது வரைக்கும் இல்ல.

நீங்க 10 வருஷம் கழிச்சு எப்படி இருப்பீங்க?., உங்கள நீங்க எந்த இடத்துல பார்பீங்க?
[அது, உன் தங்கச்சியோட தலை எழுத்தைப் பொருத்து... இவன எங்க இருந்துடா புடிச்சிட்டு வந்தீங்க?]
.... சாரி, எனக்கு அந்த மாதிரி கோல் செட்டிங்க்ஸ் எதுவும் இல்ல.

உங்களுக்கு நிறையா பணம் சம்பாதிக்கணும்-ன்னு ஆசை இல்லையா?
.......
இல்ல, நான் எதுக்கும் அவ்வளவா ஆசைப் பட்டது இல்ல..

உங்களுக்கு கெட்ட பழக்கம் எதாவது இருக்கா?
என்னோட 16 வயசுல, நான் பதினாறு ரிசொலுசன் எடுத்தேன்,... அதுல ஒன்னு, தம், தண்ணி  அடிக்கறது இல்ல,.. இது வரைக்கும் காப்பாத்திட்டு வர்றேன். ஆனா, என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் அடிப்பாங்க.

ஒஹ்.. ஓகே.... நானும் அப்படிதான், என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் அடிப்பாங்க...
............
சப்போஸ், உங்களுக்கு ஒரு கோடி ரூபா நேர்மையான வழில கிடைக்குதுன்னா, அதை வாங்கிகுவீங்களா?...
..
எனக்கு CTC அவ்வளோ கொடுக்கற அளவுக்கு, எந்த கம்பெனி-யும் இங்கே இல்ல, அப்படி கொடுக்கற மாதிரி இருந்தா, நான் ஏத்துக்குவேன்..

நீங்க ஏன், நான் வெஜ் சாப்புடுறது இல்ல?
ஜீவகாருண்யம்,.. என்னோட கொள்கைகள்ல ஒன்னு...


--- இவனும், எவ்வளவு டீடைல்ஸ் கறக்க முடியுமோ அவ்வளவும், கறந்துட்டு, நாங்க கலந்து பேசிட்டு,  வீணாகிட்டே எங்க முடிவை சொல்லி அனுப்புறோம்-ன்னு மொக்கையா ஒரு பதில சொல்லிட்டு கிளம்பிட்டான்.




அப்புறம் சந்துருவோட ஜாதகத்தைக் கேட்டாங்க...
அதுலயும் பொருத்தம் எல்லாம் ரொம்ப அருமையா இருந்துச்சு....

சந்துருவை, வேண்டாம்-ன்னு சொல்றதுக்கு எந்தக் காரணமும் கிடைக்கல....
கடைசில, வீணாவோட அப்பா, சந்துருவைத் தனியா கூப்பிட்டு பேசினாரு...

என்னென்னமோ காரணம் சொல்லி, சந்துருவோட மெடிக்கல் ரிப்போர்ட் கேட்டாரு.

சந்துரு உடைஞ்சு போய்ட்டான்.....

மெடிக்கல் ரேபோர்ட்டைப் பார்த்துதான், உங்க பொண்ணை எனக்குத் தரனும்-ன்னா, அவ்வளவு தூரம், நீங்க ரிஸ்க் எடுக்க வேண்டியது இல்ல -ன்னு ஒரே வார்த்தைல சொல்லிட்டு முடிச்சிட்டான்.

இந்த விஷயம், வீணாக்கு தெரிஞ்சப்போ, அவளுக்கு வந்த கோவத்துக்கு அளவே இல்ல....
அப்பா-ன்னு கூட பாக்காம, கண்டபடி திட்டிட்டு, என்னைத் தலை முழுகிடுங்க-ன்னு சொல்லிட்டு, அவளும் பெங்களுருக்கு வந்துட்டா.




Chapter IX







 ........

காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை., அவரவர் மன நிலைமைக்கேற்ப, மாற்றம் நிறைந்த தோற்றத்தை அளிக்கின்றது.

பெங்களூரில் உள்ள ஒட்டு மொத்த காதலர்கள் அனைவரும் ஒரே இடத்தில கூடி இருந்தாலும், அவரவர்களுக்கு லால்பாக் ஒரு தனித் தீவாகவே தோன்றியது.

இந்த கட்டம் போட்ட சட்டையையும், நீலக் கலர் சுடிதாரையும் நாம எங்கேயோ பாத்திருக்கோமே?....

அட, நம்ம சந்துரு., பக்கத்துல யாரு வீணா மாதிரியே இருக்கே.,....
[இல்ல, வீணாவோட பாட்டி]

சந்துரு வீணாவைத் தோளோடு அனைத்துக் கொண்டிருந்தான்.
வீணா, சந்துருவின் சட்டையை, கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தாள்.

ஒரே ஐபாடின் இயர் போனை இருவரும் ஒவ்வொரு காதில் கெட்டுக் கொண்டே நடந்து கொண்டிருந்தனர்....

இளையராஜாவின் தேர்ந்தெடுத்த கலக்சன்ஸ்....

என்னைத் தேடும் தென்றல் காற்றே..,
ஜன்னல் திறந்து உன்னைப் பார்த்தேன்..
பூவில் உரசி மோட்சம் கொண்டாயோ...

வாசம் வீசும் வண்ணப் பூவே!...

நேசம் கொண்டு உன்னைப் பார்த்தேன்..
தென்றல் உரச வெட்கம் கொண்டாயோ.....

இளவேனிற் காலம்,.இளவேனிற் காலம்,.
இனிதாக வேண்டும்., இனிதாக வேண்டும்.,
இளவேனிற் காலம்,காலம், .இனிதாக வேண்டும், வேண்டும்
பூவாக வேண்டும் வேண்டும்,..புதிதாக வேண்டும் வேண்டும்...

{என்னைத் தேடும்...}


வீணா, இன்னும் அதையே நினச்சு அழுதுட்டு இருக்காதே!...
இல்ல சந்துரு., என்ன இருந்தாலும், எங்க அப்பா உன்கிட்டே அப்படி கேட்டு இருக்கக் கூடாது. இப்போ நினைச்சாலும், எனக்கு வெறுப்பு வெறுப்பா வருது...
எங்க அப்பாவுக்காக, நான் உன்கிட்டே சாரி கேக்குறேன்..
-அவள் சொல்வதற்கு முன் வாயை அடைத்தான்

ஹே., என்ன இது.,., உங்க அப்பா மேல எனக்கு வருத்தம்தான். பட் அதுக்கு நீ ஒன்னும் பீல் பண்ண வேண்டியது இல்ல... அவருக்கு, டைம் பதில் சொல்லும்....
கடைசியா உன்கிட்டே என்னதான் சொன்னாங்க?

அவங்க, என்னை உன்கிட்டே இருந்து பிரிக்கரதுக்குதான் இத்தனை நாளா முயற்சி பண்ணினாங்க.... இதுக்கும் மேல எங்க வீட்ல சம்மதத்தை எதிர்பாக்குறது முட்டாள் தனம்.

ஆனா, உங்க வீட்ல எவ்வளவோ பரவால்ல சந்துரு, உன்னோட விருப்பத்துக்கு எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க....


வான் முகிலே, வான் முகிலே,  மழையதைத் தந்துவிடு.
பூங்காற்றில், நீரூற்றி, பூவனம் செய்து கொடு.....
அழகாம் வானவில்லில், என்னை நிறமாய்க் கரைத்துவிடு..
அடடா, இலை நுனியில், சொட்டும் துளியாய் இரைத்துவிடு..
வண்ணப் பூவிதழ் அழைக்கிறதே.. வண்ணத்துப் பூச்சியாய் மாற்றிவிடு....


{என்னைத் தேடும்...}

...ம்ம்ம்ம்
உங்க அண்ணன், என்கிட்டே வந்து என்னென்னமோ கேட்டானே, அவன் என்ன சொன்னான்?

அவனைப் பத்தி கேட்காதே...
அவன் ஒரு அரைப் பைத்தியம்....
உனக்கு எதிர்காலத்துல அக்கறை இல்லையாம்.,
நீ எப்படி இருப்பேன்-ன்னு உனக்கே தெரியாதாம்.... இன்னும் வேற என்ன என்னமோ சொன்னான்... அவன் என்னமோ, பெரிய பருப்பு மாதிரி....
இன்னும் ஒரு நல்ல கம்பெனில வேலைக்கு சேரல, வருஷத்துக்கு ஒவ்வொரு கம்பெனி மாறிட்டு இருக்கான். நீ மட்டும் போயி அவன் வீட்டைப் பாரு, உன்னோட ரூமே தேவலாம் போல இருக்கும். வாடகை கம்மி-ன்னு ஒரு சந்துக்குள்ளே பொண்டாட்டியோட குடியிருக்கான்... வேஸ்ட் பெல்லோ..

சரி விடு., இப்போ என்ன பண்ணலாம்? எங்க அப்பா அம்மாவை, உங்க வீட்டுல வந்து பேச சொல்லட்டுமா?
தயவு செஞ்சு அப்படி ஒரு தப்பை மட்டும் பண்ணாதே... அத்தை மாமா -க்கு என் மேல இருக்கற கொஞ்சநஞ்ச பாசமும் போயிடும்....
நீ உங்க வீட்டுல சொல்லி, சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு... என்னால நிம்மதியாவே  இருக்க முடியல...

நீ ஒன்னத்துக்கும் பயப்படாதேடா.... இன்னும், கொஞ்ச காலம் வெயிட் பண்ணிப் பாப்போம், உங்க வீட்ல இருக்கறவங்க மனசு மாறும்...
எது, எப்படி இருந்தாலும், நான் இந்த ஜென்மத்துல உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்றதில்லை-ன்னு முடிவு பண்ணி ரொம்ப நாளாகுது...

 
வீணாவின் கண்களில் மறுபடியும் கண்ணீர்...


நீற்குமிழே,  நீற்குமிழே, நீ ஒரு புதிரல்லவா,
நீர் மோதி, நீ.., காற்றில் உடைவதும் அழகல்லவா....
புதிதாய்ப் பிறந்த நதியில், நான் படகைப் மிதந்திடவா?
அழகாய் அசைந்த கிளையில், நான் இலையாய் பிறந்திடவா?
காற்றில் சிறகுகள் முடிந்திடவா, காதல் பூமியில் பறந்திடவா?...


{என்னைத் தேடும்...}

நான் உண்மையாலுமே, ரொம்ப கொடுத்து வச்சவ சந்துரு...




என்றைக்கும் இல்லாம, ஒருத்தன் புதுசா பார்மல் டிரஸ் போட்டுக்கிட்டு, ஷுவை பாலிஷ் பண்ணி, அதைவிட அதிகமா முகத்தை பாலிஷ் பண்ணி, ஆபிஸ்-க்கு கிளம்பினான்.

பஸ் ஸ்டாப்-பில் இருக்கும் எல்லோரும், அவனையே பார்க்குற மாதிரி, அவனுக்கு மட்டும் ஒரு பீலிங்...

சில்லறை வாங்கியும் டிக்கெட் கொடுக்காத பஸ் கண்டக்டர் மேல கூட, அவனுக்கு இன்னைக்கு கோவம் வரல.

பாட்டுல வர்ற மெட்டை மட்டுமே, இத்தனை நாளா, ரசிச்ச பையன், பாட்டுல இருக்கற வரிகளையும் ரசிக்க ஆரம்பிச்சிருக்கான்....

அவன் பக்கமா உருவாக்கின ஒரு ப்ளே லிஸ்ட் இதுக்கு ஒரு நல்ல உதாரணம்
http://www.paadal.com/playlist/vivekraj/LoveMelodies

இதுக்கு எல்லாத்துக்கும் ஒரே ஒரு காரணம் தான்.

நீங்க ஏன் எப்போவும் ஜீன்ஸ்லயே வரீங்க? -ன்னு தக்காளி ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் கேட்டாள்.
அடுத்த நாளே, பையன் இப்படி மாறிட்டான்.

அன்னிக்கு, பையன் வருத்த கடலைல காபிடேரியாவே கதி கலங்கிடுச்சு....

உங்களுக்கு இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு.
தும்பா (ரொம்ப)...தேங்க்ஸ்.

நான் சும்மாதான் நேத்து உங்ககிட்டே கேட்டேன். அதுக்குன்னு ஒரே நாள்-ல இப்படி மாறிட்டீங்க?
ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ..

நான் என்ன சொன்னாலும் செய்வீங்களா?
என்ன சொன்னாலும் செய்ய முடியாது., என்னால முடிஞ்சதை சொன்னா செய்வேன்...

ஹ்ம்ம்ம்., என்ன சாப்புடீங்க?
ராகி தோசை., அப்புறம் ஒரு ராகி மால்ட்

உங்களுக்கு ராகி ரொம்ப பிடிக்குமா?
ஆமா,. கன்னடா ஸ்டைல் பூட் எனக்கு ரொம்ப பிடிக்கும்... ரொம்ப ஹெல்தி...

ஒஹ்.. பட் எனக்கு தமிழ்நாடு இட்லி, வடா.. சாம்பார் தான் ரொம்ப பிடிக்கும். இங்கே தமிழ்நாடு ஸ்டைல் பூட் சரியா கிடைக்கறது இல்ல.
ஒன்னும் கவலைப் பட வேண்டியது இல்ல. எங்க வீட்டுக்கு வாங்க. எங்க அம்மாவோட ப்ரிப்பரேசன் அவ்ளோ நல்லா இருக்கும்...

ஒஹ்.. சூர்.. கண்டிப்பா வர்றேன். எதாவது ஒரு சான்ஸ் கிடைக்கும் இல்ல, அப்போ வர்றேன்...
ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ..  ஓகே.

ஹ்ம்ம்., நீங்க கன்னடா கத்துகிறதா கேள்விப் பட்டேன்.
ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ.. ஆமா...

ஏன்..எதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?
ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ.. இல்ல.

ஹே., கமான், சொல்லுங்க...
அப்புறமா சொல்லுறேன்.. முடிஞ்சா கன்னடாவுலையே சொல்லுறேன்.

:-)..... கூல்... இருக்கட்டும்.. நானே அதைக் கண்டு பிடிக்குறேன்.,
ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ..  பிடிங்க பிடிங்க,... நல்ல கண்டு பிடிங்க.... ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ..


situation song: இதுவரை இல்லாத உறவிது... from கோவா 





ஹே வீணா.,
ஹே..ஜெர்சி.. எப்படி இருக்கே?

ஹ்ம்ம், நல்லாத்தான் இருக்கேன். அப்புறம் ஒரு சூப்பரான குட் நியூஸ்... எனக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சு இருக்கு... நாம மறுபடியும் சேர்ந்து இருக்கப் போறோம்..
வாவ்.. சூப்பர்.. வா, வா சீக்கிரம் வா.

ஹ்ம்ம், அப்புறம் சந்துரு எப்படி இருக்கான்?
ஹ்ம்ம், நல்லாத்தான் இருக்கான்.

சரி, அன்னிக்கு நம்ம கூட ஷாப்பிங் வந்தானே யார் அவன்?
யாரு விவேக்கா?

ஆமா, அவன்தான், அவன் எப்படி இருக்கான்?
ஹ்ம்ம்.. அவனும் நல்லாத்தான் இருக்கான்.. என்ன திடீர்ன்னு அவனை எல்லாம் விசாரிக்கற?

ஹே., ஒன்னும் இல்லப்பா.. சும்மாதான் கேட்டேன்.
அன்னிக்கு புல் டே என்கூடவே இருந்தான் இல்ல., நான் என்னென்னமோ பேசினேன், பட் பையன் ரொம்ப சைலண்டாவே  இருந்தான்., அதுதான் சும்மா கேட்டேன்.
ஹ்ம்ம், இருக்கட்டும் இருக்கட்டும்..


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

டேய் மச்சான், நம்ம ஏரியா-வுல எதாவது வீடு காளியா இருக்காடா?
.........
டேய் உன்னைத்தாண்டா..
..........

-சந்துரு விவேக்கை உலுக்கினான்.

டேய்.. என்னா ஆச்சு உனக்கு?
..
.........ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ..

ஏன்டா இப்படி இருக்கே?
...ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ..


டேய், உன்னத்தான்டா.. கேக்குறேன்..
ஈ ஈ ஈ ஈ.. ஆமா என்னா கேட்ட?...

சுத்தம்.... நம்ம ஏரியா-வுல எதாவது வீடு காளியா இருக்காடா-ன்னு கேட்டேன்.
ஒஹ்.. எதுக்குடா? சின்ன வீடு எதாவது செட் பண்ணிட்டியா?

டேய், இல்லடா.. அந்த ஜெர்சி இல்ல,
யாரு... அந்த சப்பிப்..

ஆமா, அதே சப்பிப் போட்ட மாங்கொட்டை தான்...
அவளுக்கு என்னா இப்போ?

ஒன்னும் இல்லடா. அவளுக்கு இங்கேயே வேலை கிடைச்சுடுச்சாம்.,
ச்சி., எந்த நாயிடா., அவளை எல்லாம் வேலைக்கு எடுத்தது..

சரி அதை விடு., இப்போ அவளும் வீணாவும் சேர்ந்து ரூம் எடுத்து தங்கணுமாம்.
டேய், அவ கூட என்னால ஒரு நாலு மணி நேரம் கூட இருக்க முடியல. வீணா பாவம்டா... அவ கூட எப்படி நாள் முழுசும் இருப்பா?..

இல்லடா., அவங்க ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ஸ்..
என்ன கருமமோ போ...

அவங்க ஏற்கனவே சென்னைல ஒன்னா தங்கி இருந்தவங்க.... இங்கே நம்ம ஏரியாவுலையே ஒரு நல்ல இடமா பார்த்தா., அவங்களுக்கும் நம்மளுக்கும் கண்வினியன்ட்..
அடிங் கொய்யாலே.,
கொன்னே புடுவேன்... அவளுங்கள இந்த ஏரியா பக்கமே தலை வச்சு கூட படுக்க வேண்டாம்-ன்னு சொல்லி வை.
யாருக்குடா கண்வினியன்ட்..? உனக்கு மட்டும் தான்... எனக்கு இல்ல.,
வீணா மட்டும் தனியா வர்ரான்னா, எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.
பட் அவ ஒரு பிரச்சனையையே கூட்டிட்டு வர்றேன்றா... அதுதான் ப்ரோப்லம்..



[சந்துரு பழைய வாழ்க்கைக்கு வந்துட்டானாம்., அதைதான் இவ்ளோ கேவலமா சொல்ல ட்ரை பண்றான்.. ]

ஜெர்சி விஷயத்தில், விவேக் என்ன நினைத்தாலும், அதற்கு மாறாகவே நடக்குது.
அவங்க பக்கத்துத் தெருவுலே, ஒரு நல்ல வீடு காலியா இருந்துச்சு, அந்த வீட்டையே, சந்துரு வீணாக்காக வாடகைக்கு எடுத்துக் கொடுத்தான்.
வழக்கம் போல அவங்க வீடு ஷிப்ட் பண்றதுக்கு விவேக்கும் போக வேண்டியதா போச்சு.
பாவம் பையன் ரொம்ப வருத்தப் பட்டான்.

வீடு எல்லாம் புதுசா குடி வந்தவாட்டி., ஜெர்சியும் வீணாவும், வழக்கம் போல பழைய கதை எல்லாம் பேச ஆரம்பிச்சாங்க...

இந்த முறை, ஜெர்சி வீணாக்கு எதுவும் அட்வைஸ் பண்ணல.... அடிக்கடி விவேக்கைப் பத்தி பேசினாள்.
கடைசில விவேக் ரொம்ப நல்லவன் பா, இன்னைக்கு, நமக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணினான்.-ன்னு சொன்னாள்.

அன்று இரவு., ஜெர்சியின் தூக்கத்திற்கு முன் வரும் நார்மலான யோசனைகளில் சில..
எப்படியும் விவேக் ஒரு நாள் என்கிட்டே ப்ரொபோஸ் பண்ணுவான்.
அப்போ, நான் கண்டிப்பா அதை உடனே ஒதுக்கக் கூடாது.,
அவன் உண்மையாலுமே நல்லவனா-ன்னு டெஸ்ட் பண்ணி பாக்கணும்...


[இதுங்களை எல்லாம் திருத்தவே முடியாதுடா....]




நாட்கள் சென்றன., மாதங்கள் நகர்ந்தன....
என்றுமே காணாத அளவில், ஒரு சிறிய... சாரி, எளிய திருமணம்... தாரமங்கலம் கைலாச நாதர் கோவிலில்.,

சந்துரு, வீணாவின் மிக நெருங்கிய சொந்தங்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள்... மொத்தமாக ஒரு நூறு பேர் கூட தேற மாட்டார்கள்....

இருந்தாலும், விவேக் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான்...கல்யாண வீட்டுல வேலை செய்யுறதுல அவ்வளவு ஒரு சந்தோசம் அவனுக்கு.

தம்பதியின் முகங்களில் வெற்றிப் புன்னகை...

கல்யாணத்துக்கு ஆகுற செலவை, எங்க கைல கொடுத்திடுங்க... அதை ஒரு நல்ல ஆசிரமத்திற்கு மாதா மாதம், அனுப்புற மாதிரி ஏற்பாடு பண்ணுறோம்-ன்னு சந்துருவும் வீணாவும் பிடிவாதமா சொல்லிட்டாங்க.


சந்துருவின் முகத்தில் அப்படி ஒரு கலை... ஒரு லேசான அனுபவ முதிர்ச்சி..
.
வீணாவிற்கு, எங்கிருந்தோ வந்து வெட்கம் ஒட்டிக் கொண்டது.
தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமே சொந்தமான நாணம் அவளை என்றும் இல்லாத அழகுடன் காட்டியது.

சந்துருவைப் பார்ப்பதற்கு கூட வெட்கப் பட்டாள். முக்கால்வாசி நேரம் குனிந்த தலை நிமிரவே இல்லை.

மாங்கல்ய முழக்கம் கேட்டது....

எல்லாம் வல்ல அருட் பேராற்றலே,
நீ நிறைஞ்சு இருக்குற இந்த கோவில்ல தான் நாங்க முதன் முதல்ல சந்திச்சோம்.
இன்னைக்கு எங்க கல்யாண வைபவத்துக்கும் நீதான் காரணம்.
இதுக்கு மேல எங்க வாழ்க்கைல நடக்கப் போற எல்லாத்தையும் நீதான் பார்த்துக்கணும். -
என்ற எண்ணம் இருவரின் மனதிலும் ஒரே நேரத்தில் எழுந்தது. 

வீணாவின் கழுத்தில் தாலி ஏறியது...

கோவில் குருக்கள் உட்பட அங்கிருந்த, அவர்களைப் பார்த்த எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை.


"அருமையான ஜோடிப் பொருத்தம்"








Chapter X










ரகசியம் ஒன்று சொன்னான்.....நெஞ்சில் காதல் வந்ததென்று.....
ஒரு நொடி, இந்த இதயமே, நின்று துடிதத்தின்று.....

..........

மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

இதில் என்ன சொல்ல வர்றான்? .........

எதுக்கு இந்த சாங்-ஐ எனக்கு ப்ளூ டூத் ல  டிரான்ஸ்பர் பண்ணி என்னை கேட்க சொன்னான்? ..........


சாங் ரொம்ப நல்லா இருக்கு. பட் இதுல என்ன மீனிங்-ன்னு எனக்கு சரியா புரியலையே... ......


ஒரு வேலை., ப்ரொபோஸ் பண்ற சாங் ஆ?...
இல்லையே., லேடி வாய்ஸ் தானே கேட்குது.


தக்காளி சிந்தனையில் ஆழ்ந்தாள்...

ஒரு எழு எட்டு முறை சொதப்பி, கடைசில வேற வழியே இல்லாம, இப்படி ஒரு கேவலமான முறைல விவேக் கஷ்டப்பட்டு அவனோட லவ்வை தக்காளி கைல ஒப்படைசான்.

இத்தனை நாளா, அவங்க பிரண்ட்ஷிப் நல்லா டிவலப் ஆகி இருந்தது.
தக்காளி மனசுலயும் இவனைப் பத்தி ஒரு நல்ல அபிப்ராயம் உருவாகி இருந்தது.

அந்த பாட்டை, பத்தாவது முறை கேட்கும் பொழுது, தக்காளிக்கு ஓரளவுக்கு அர்த்தம் புரிந்தது. இருந்தாலும் அதை சரி பார்த்துக் கொள்ள, தன்னுடைய தமிழ் சிநேகிதியிடம் ரகசியமாக அந்த பாட்டின் அர்த்தத்தைக் கேட்டாள்.

சிரித்துக் கொண்டே அர்த்தத்தை கேட்டாள்....சந்தோசம் தாங்க முடியவில்லை., பிறகு ஓடி விட்டாள்...

ஷுருவாய்து நின்னா ப்ரீத்தி- என்ற கன்னடா சாங்கை மீண்டும் மீண்டும் ரசித்து, ரசித்து கேட்டாள்.

அவளுடைய தூக்கம், விவேக் என்ற தூக்கம் கொள்ளைக் காரனால் பறிக்கப் பட்டது.

[டேய் நீ காமெடியன்-ன்றத மறந்துடாதே!...]

விடியற்காலை சுமார் மூன்று மணியளவில்., போனை எடுத்தாள். விவேக்-கிற்கு தான்,

அவனும் அவளுடைய பதிலை எதிர் பார்த்துக் கொண்டே ஒரு மணி வரை விழித்திருந்தான்.
பிறகு அவனுக்கே தெரியாமல் உறங்கி விட்டான்.
கனவிலும் தக்காளிதான்,
அவளுடன் இவன் ஏதோ கன்னடத்தில் பேசிக் கொண்டிருந்தான்.....

டாட தட்டுன் டாட டைன்........டாட தட்டுன் டாட டைன்.... கரகாட்டக்காரன் ரிங் டோன் ஒலித்தது.

கனவில் தக்காளியுடன் பேசிக் கொண்டிருந்த நினைப்பிலேயே, போனை எடுத்து,
சொ.. ல்.. லு...... டா..ர்..லி..ங்...
வாட்?
 
ஏ..ன்...... தி..டீ..ர்..-ன்..னு...... பே..ச.. மா..ட்..டே..ங்..கு..றே..?....... க..மா..ன்.........., நா..ம.. வி..ட்..ட..... இ.ட.த்.து.ல..... இ.ரு.ந்.தே.... க.ண்.டி.னி.யு...... ப.ண்.ண.லா.ம்......
சாரி ஐ கான்ட் அண்டர்ஸ்டான்ட்...

-கொஞ்ச நேரம் கழித்து தான், நினைவே வந்தது... அப்புறம்தான் உண்மையாலுமே தக்காளி கூட போன்-ல பேசிட்டு இருக்கான்-ன்னு அவனுக்கு தெரிஞ்சது...

அப்புறம்தான் ரியலைஸ் பண்ணி, கொஞ்ச கொஞ்சமா, வழிஞ்சுகிட்டே, அவன் கண்ட கனவையும், அவனோட காதலையும்  புரிய வைத்தான்....

அதையும், வழக்கம் போல தக்காளி சிரித்துக் கொண்டே ரசித்தாள்...

இப்படி, ஒரு வழியாக இதுங்க லவ் பண்ண ஆரம்பிச்சுதுங்க....

situation song: சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா? இன்னும் இருக்கா? என்னவோ மயக்கம்....

[தில்லு இருந்தா தக்காளியோட பேரை சொல்லுடா., அவகிட்டே போயி, இதெல்லாம் உண்மையா-ன்னு நாங்க கேட்குறோம்...]
[சின்ன க்லூ..... அவள் ரொம்ப அழகா இருப்பா, நல்ல கலர்ஆ இருப்பா, பார்க்குறதுக்கு நம்ம தக்காளி மாதிரியே இருப்பா....நல்ல உயரமா இருப்பா... ]

[நீ சொல்ற அடையாளம் எல்லாம், டேபிள் துடைக்குற பொண்ணுக்கு கூட பொருந்தும் ...  பெங்களூர்ல நூத்துக்கு என்பதெட்டு பொண்ணுங்க அழகாதான் இருப்பாங்க.., இதுல அடையாளமா சொல்ற நீ?  இரு, இரு,,, உங்க வீட்ல போட்டுக் கொடுக்கறேன். ]




ப்ரியாவுக்கு திருவனந்தபுரத்துல போஸ்டிங் கிடைத்தது.
கொஞ்ச நாளிலேயே, ஆன்-சைட் போகும் வாய்ப்பு கிடைத்தது.
பிறகு, அவளுக்கு அமெரிக்காவில் இருந்து வருவதற்கு மனமே இல்லை...
நம்ம, தாசில்தார், அவளுக்கு ஒரு அமெரிக்க மாப்பிள்ளையையே பார்த்து மனம் முடித்து வைத்தார்.

_____________________________________________________________________________________
 

ஹேக்கர் மதி., ஒரு மிகப்பெரிய மறைமுக எதிகல் ஹேக்கர்....
அவருடன் விவேக் பேசிக் கொண்டிருந்தான்.

தல, நான் அன்னிக்கு உங்ககிட்டே ஒன்னு கேட்டிருந்தேனே., அது என்னாச்சு?
ஹ்ம்ம்., பெரிசா ஒன்னும் அப்டேட் இல்ல. அந்த பொண்ணு, இப்போ Tessa ல இருக்கா. பர்சனல் கால்ஸ் எதுவும் பெருசா எங்கேயும் போகல. அப்பப்போ ஏதோ ப்ளாக் படிக்கறா. அப்புறம் நிறையா பேப்பர்ஸ் பப்ளிஷ் பண்ணியிருக்கா....

அவளை நாசா-க்கு வர சொல்லி நிறையா ஈமெயில்ஸ் வந்திருக்கு, பட் அவ எந்த ரெஸ்போன்ஸ்-ம் பண்ணல.

வீக்லி ஒன்ஸ் வீட்டுக்கு பேசுறா. அவ்வளவுதான்...

அவளோட ஆன்லைன் ஸ்டேடஸ் அப்புறம் லாகின் டைமிங்க்ஸ்அ வச்சு பார்த்தா, பொண்ணு ரொம்ப பிஸியா இருக்கா போல இருக்கு.

ராக்கெட் சம்பந்தமா ஏதோ ரிசர்ச் பண்ணிக்கிட்டு இருக்கா-ன்னு நினைக்குறேன்.

ஒஹ்.. ஓகே தல. ரொம்ப நல்ல இன்போர்மேசன் தான் கொடுத்து இருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ்...
இருக்கட்டும்ம்பா, யாரு அது? அதுக்கும் உனக்கும் என்ன லிங்க்கு?

ஈ  ஈ ஈ ... அது ஒரு பெரிய ஸ்டோரி தல. அதை அப்புறமா சொல்லுறேன். வேற எதாவது சுவாரஸ்யமான தகவல் கிடைச்சா எனக்கு இன்போர்ம் பண்ணுங்க.

ஹ்ம்ம்., ஓகே.




ஜெர்சி, விவேக் தன்னிடம் ப்ரொபோஸ் பன்னுவானென்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து., கடைசியாக, பொறுமை இழந்து அவனிடம் கேட்டே விட்டாள்.
அதுக்கு விவேக் என்ன சொன்னானோ தெரியவில்லை.
அடுத்த மாசமே, பெங்களுரை விட்டு வேறு எங்கோ சென்று விட்டாள்.
பூனாவில் இருப்பதாக, அவளுடைய linked In Profile தெரிவிக்கிறது.

 



Bangalore HSR Layout.... 17th Cross- இல் ஒரு அமைதியான தனி வீடு.

தங்கச் சங்கிலி, மின்னும் பைங்கிளி, தானே, கொஞ்சியதோ.....

விவேக் வாங்கிக் கொடுத்த சோனி ஸ்டீரியோ செட் மெதுவான குரலில் பாடிக் கொண்டிருந்தது.

அதைவிட இனிமையான குரலில், வீணா, அந்த பாடலுடன் முனுமுத்துக் கொண்டே சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

இடுப்பில் ஏதோ ஊறுவது போல இருந்தது., என்னவென்று பார்ப்பதற்காக லேசாக அசைந்தாள்., அவளை திரும்ப விடாமல், சந்துரு பின்புறமிருந்து கட்டி அணைத்தான்.

நீ ரொம்ப நல்லா பாடுற..
ச்சீ,., தள்ளிப் போங்க., எனக்கு நிறையா வேலை இருக்கு.
- கல்யாணத்துக்கு அப்புறம் வீணாவிடம் ஏற்பட்ட மாற்றங்களில், இதுவும் ஒன்று. சந்துருவை மரியாதையுடன் அழைப்பது.

என்ன வேலை-ன்னு சொல்லு, நானும் ஹெல்ப் பண்ணுறேன்.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்., அத்தைக்கு தெரிஞ்சா என்னைத் திட்டுவாங்க... நீங்க போயி உங்க வேலை எதாவது இருந்தா பாருங்க.

அம்மாக்கு தெரிஞ்சா தானே, நானும் சொல்ல மாட்டேன், நீயும் சொல்லாதே.
அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீங்க நகருங்க...

இல்லடா செல்லம், உன்கிட்டே கொஞ்சம் பேசணும்...
சொல்லுங்க..

நல்ல நியூஸ் தான்.
ம்ம்.,

சும்மா சொல்லு-ன்னு சொன்னா எல்லாம், சொல்ல முடியாது, எதாவது கொடுத்தாதான் சொல்லுவேன்.
என்ன வேணும்-ன்னு சொல்லுங்க., கொடுக்கறேன்.

இங்கே மட்டும் ஒன்னே ஒன்னு கொடு.,
என்று கன்னத்தைக் காண்பித்தான்.
கைல கொடுத்தா போதுமா, இல்ல தோசைக் கரண்டில வேணுமா?

இல்ல, உன்னோட லிப்ஸ்ல கொடு., பிடிக்கலன்னா, என்னோட லிப்ஸ்லையே கொடு..
ச்சி... நாட்டி பாய்..

// sensor.... scenes

ம்ம்ம், இப்போவாது சொல்லுங்க.
எனக்கு ஆன்-சைட் ஆபர் வந்திருக்கு. ஒரு மாசம்.,  போயி ரிக்வயர்மேன்ட்ஸ்  கலக்ட் பண்ணிட்டு வரணும். அவ்வளவுதான்.

கண்டிப்பா போயி ஆகணுமா?
ஏன்டா, உனக்கு வர்றதுக்கு இஷ்டம் இல்லையா?

நானுமா?
பின்னே, உன்னை விட்டுட்டு, நான் மட்டும் அங்கே போயி என்ன பண்ணட்டும்?

எனக்கு லீவ் கிடைக்குமா?
ராதிகா-கிட்டே நான் ஏற்கனவே பேசிட்டேன். அவங்க ஓகே சொல்லிட்டாங்க.

வாவ்வ்வ்... எனக்கு ரொம்ப ஹாப்பிஆ இருக்கு...

// sensor.... scenes

of course we are also happy...




இப்படியே., ஒரு வழியாக., நமது கதாப் பாத்திரங்கள் அவர்களுடைய வாழ்கையின் வெவ்வேறு அத்தியாயங்களில் சென்றனர்.
அவர்களின் பயணம் இனிதே முடிய, எல்லாம் வல்ல அருட்பேராற்றல் துணை புரிய வேண்டுமென்று., நாமும் விடை பெறுவோம். நன்றி, வணக்கம்.

வாழ்க வளமுடன்.



மை கமெண்ட்ஸ்.

1. தமிழ் எனக்கு மிகவும் பிடித்த பாடம். என்னுடைய பரீட்சைத் தாள்களில் எழுத்துப் பிழைகளைக் காண்பது அரிது. அனால், இங்கே கூகிள் IME யை வைத்து ஆங்கிலத்தில் டைப் செய்து, அதுக்கு கலர் அடித்து என்னுடைய ப்ளாக்-இல் வெளியிட்டிருக்கிறேன். அதில் ஏற்பட்ட பிழைகளை மன்னித்துப் படித்ததற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

2. என்னை ஊக்குவித்த, எழுத்தாளர் மதி அவர்களுக்கும், எனது நண்பர்கள் திலகா, பிரபாகரன், கங்காரம், சுகன்யா, வசந்தா, ஷேய்க், பிரபு,  மற்றும், உங்கள்டைய நேரத்தை ஸ்பென்ட் பண்ணி படித்த உங்களுக்கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

3. அடுத்த கதைக்கான கரு கிடைத்து விட்டது,  கூடிய விரைவில் எழுத ஆரம்பிக்கிறேன்.

மீண்டும் உங்களை என்னுடைய கிறுக்கல்களோடு சந்திக்கிறேன்,


- விவேக் (a)  கொலம்பஸ்



as I've consolidated all my pages in to one., I'd like to paste some interesting comments below....


Gangaram said...
Really Interesting... not able to stop reading till i reach the 5th episode. :).. Waiting for the next one.. keep me posted

Gangaram said...
It was really a nice post...I enjoyed it reading.. you are making me too keep following the story... keep rocking.... when is the next post :)
Gangaram said...
The story goes in a good direction & the narration of the story keeps me enjoying reading. one thing i noted down in this is. regarding the dialog delivery of the correctors it will be better if it is delivered as story like not like drama .. this is just a comment i feel like conveying. it is up to you as an author of the story you can do :). which will create much impact to the readers.
Prabhakaran said...
Good sir.. moving in a good and right direction... But i confused lil when the storey moved to the flashback where Chandru and Veena met... but all the otherthing are perfect... Padama edutha romba nalla irukku.. bcoz story la niraya flash back varutha, namum konjam (drooonnnggg - music pottu) visualize panna vendiyatha irukku.. :)

9 comments:

Rishi said...

well done !! waiting for the next story...

Thilaka said...

Appada oru vali ya mudinchuduchu...:-) Just kidding....it was so interesting to read....if i start reading..i couldn't stop reading it till the end...:-) always waiting for your next story!!!...

Really funny and superb!....

Enjoyed reading your story!....

Thilaka said...

Really funny and superb!....

Sari antha Thakkali yaru....:-)

Appreciate your effort in writing this nice story!!!...

Unknown said...

Thanks sukku & thilaka for your valuable comments.
I've given enough clues for recognizing Thakkli ;-)

Unknown said...

Boss,



The story is really coolll… Nan kooda eppadi mudikka porrengalonnu nenachaen, but you have completed in a simple way.. I didn’t expect this could be completed as short and with this climax… I have a thought this will take some more weeks to get complete… You done a great job.. However, the only concern in my view is, you have not informed that how Chandru and Veena convinced Venna’s family JJ

Unknown said...


Same dirty techniques only…
This happens with all families.,
If girl and boy are strong enough in their love, that’s more than enough…
Any have, she took the decision and ready to run with Chandru.

Veena’s parents have no other choice ;-)

Thanks prabhakar for your valuable comments.

Unknown said...

Some funniest impact of my story:

I gave my blog link to one bride who recently came for me...

it had been around a week.. still no reply from her... not even any response from her family..

its good appreciation for me:
I've played myself a better lover boy with Thakkali Character.

pretty interesting... lets c who is next.

Lakshmi Narayanan G said...

Awesome story Mr.Vivek!!! Will help me a lot in future :) :P

Unknown said...

Thanks a lot Lakshmi Narayana.